தேவி பாகவதம் - மூன்றாம் ஸ்கந்தம்
3#27b. ஸ்ரீ ராம சரிதம் (2)
பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தான் தசரதன்,
பட்ட மகிஷியின் மகன் மூத்தவன் ராமனுக்கு.
ஒப்பவில்லை இதற்கு இளைய மனைவி கைகேயி;
எப்போதோ பெற்ற இரு வரங்களைப் பிரயோகித்தாள்.
“நாடாள வேண்டும் என் மகன் பரதன் – ராமன்
காடாள வேண்டும் பதினான்கு ஆண்டுகள்!” எனத்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அல்லவா?
தம்பி, சீதையுடன் சென்றான் ராமன் வனவாசம்!
புத்திர சோகத்தால் உயிர் நீத்தான் தசரதன்;
இத்தனையும் செய்தவள் கைகேயி அல்லவா?
அரசாள அழைத்தான் ராமனை பரதன் – பின்பு
அரசனாக்கி விட்டான் ராமனின் பாதுகைகளை.
ராமனைக் கண்டு தன் வயம் இழந்தாள்;
காமன் கணைகள் தாக்கிய சூர்ப்பனகை.
சீதையை அசூயையால் பழித்த அரக்கியைச்
சேதித்து லக்ஷ்மணன் அங்கஹீனம் செய்தான்!
போருக்கு வந்தனர் அரக்கர்கள் கர, தூஷணர்;
போரில் மாய்ந்து விட்டனர் வந்த அரக்கர்கள்
ராவணனை நாடி ஓடினாள் சூர்ப்பனகை
ராவணனை மயக்கினாள் சீதையின் அழகில்
காமவயப் பட்ட ராவணன் நிச்சயித்தான்,
‘ராமனின் மனைவியைக் கடத்தி வருவேன்!’
பணித்தான் மாரீசனை மாய மானாக மாறிட,
துணிந்து விட்டான் சீதையைக் கடத்திவிட.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
3#27b. ஸ்ரீ ராம சரிதம் (2)
பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தான் தசரதன்,
பட்ட மகிஷியின் மகன் மூத்தவன் ராமனுக்கு.
ஒப்பவில்லை இதற்கு இளைய மனைவி கைகேயி;
எப்போதோ பெற்ற இரு வரங்களைப் பிரயோகித்தாள்.
“நாடாள வேண்டும் என் மகன் பரதன் – ராமன்
காடாள வேண்டும் பதினான்கு ஆண்டுகள்!” எனத்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அல்லவா?
தம்பி, சீதையுடன் சென்றான் ராமன் வனவாசம்!
புத்திர சோகத்தால் உயிர் நீத்தான் தசரதன்;
இத்தனையும் செய்தவள் கைகேயி அல்லவா?
அரசாள அழைத்தான் ராமனை பரதன் – பின்பு
அரசனாக்கி விட்டான் ராமனின் பாதுகைகளை.
ராமனைக் கண்டு தன் வயம் இழந்தாள்;
காமன் கணைகள் தாக்கிய சூர்ப்பனகை.
சீதையை அசூயையால் பழித்த அரக்கியைச்
சேதித்து லக்ஷ்மணன் அங்கஹீனம் செய்தான்!
போருக்கு வந்தனர் அரக்கர்கள் கர, தூஷணர்;
போரில் மாய்ந்து விட்டனர் வந்த அரக்கர்கள்
ராவணனை நாடி ஓடினாள் சூர்ப்பனகை
ராவணனை மயக்கினாள் சீதையின் அழகில்
காமவயப் பட்ட ராவணன் நிச்சயித்தான்,
‘ராமனின் மனைவியைக் கடத்தி வருவேன்!’
பணித்தான் மாரீசனை மாய மானாக மாறிட,
துணிந்து விட்டான் சீதையைக் கடத்திவிட.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி