48 (a). நாரைக்கு பக்தி கொடுத்தது.
தாமரைக் குளம் என்னும் அழகிய ஊர்,
தாமரைகள் நிறைந்த தடாகங்களுடன்.
துள்ளி விளையாடும் வண்ண மீன்கள்;
அள்ளி விழுங்கும் அவற்றை நாரைகள்.
நீரின்றி வாழாது உலகும், உயிர்களும்;
நீரின்றிப் போய்விடும் வானம் பொய்த்தால்.
வானம் பொய்த்து விட்டது அங்கே!
வானம் பொழிய மறந்து விட்டது!
நீர்நிலைகள் முற்றும் வற்றலாயின!
நீரிலுள்ள மீன்கள் எங்கே போயின?
உணவும் இல்லை, நீரும் இல்லை!
உலர்ந்த இடத்தில் செய்வது என்ன?
நாட்டை விட்டுப் பறந்தது நாரை,
காட்டை அடைந்து சோர்ந்து விழுந்தது.
ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தனர் அங்கே,
ஜீவனை போஷிக்கும் வற்றாத தடாகம்!
'அதோ தீர்த்தம்' என்ற பெயர் அதற்கு.
அதில் தீர்த்தம் வற்றவே வற்றாதாம்!
படித் துறைகள் இருந்தன அங்கே
வடிவில் சதுரம், சீரிய முறையில்!
சந்தியா மடம் ஒன்று அங்கிருந்தது!
விந்தையான இடம், மரங்கள் சூழந்தது!
நல்ல பாதிரி, வேங்கை, வஞ்சி, மருது,
வெல்லும் மணம் வீசி மலர்ந்திருந்தன!
தண்ணீரிலே முங்கிக் குளிப்பார்கள்
தண்ணருள் பெற்ற ஜீவன் முக்தர்கள்.
முடிக் கற்றைகள் நீரில் புரளும் போது,
ஒளிந்து விளையாடும் மீன் கூட்டம்!
"புண்ணிய சீலர்களைத் தீண்டுவதற்கு
என்ன தவம் அவை செய்திருந்தனவோ?
உணவே இன்றி உயிரே போனாலும்
உண்ணக்கூடாது புண்ணியசாலிகளை!"
சந்தியா மடத்தில் நடக்கும் தினம்
சத்சங்கம் ஜீவன் முக்தர்களின்!
மதுரையைப் பற்றிப் பேசுவதற்கு
மதுரமான விஷயங்கள் எத்தனை?
மதுரைப் புராணத்தை ஓதுவார்,
மதுரையின் சிறப்பை அலசுவார்.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
கீர்த்திகள் பெற்றது மதுரையம்பதியே!
வயிற்றுக்கு உணவு இல்லாது போயினும்
செவிக்கு உணவு கிடைத்தது நிறையவே.
கேட்கக் கேட்க வயிற்றுப் பசி மறைந்து
கேட்கக் கேட்க அறிவுப்பசி நிறைந்தது!
அறியாமை இருள் அகன்று போயிற்று!
அறுந்து போனது இருவினைத் தொடர்பு!
கர்மவினைகளைத் தொலைத்து நாரை,
சர்வமும் அறிந்து சிவபக்தி பெற்றது!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
தாமரைக் குளம் என்னும் அழகிய ஊர்,
தாமரைகள் நிறைந்த தடாகங்களுடன்.
துள்ளி விளையாடும் வண்ண மீன்கள்;
அள்ளி விழுங்கும் அவற்றை நாரைகள்.
நீரின்றி வாழாது உலகும், உயிர்களும்;
நீரின்றிப் போய்விடும் வானம் பொய்த்தால்.
வானம் பொய்த்து விட்டது அங்கே!
வானம் பொழிய மறந்து விட்டது!
நீர்நிலைகள் முற்றும் வற்றலாயின!
நீரிலுள்ள மீன்கள் எங்கே போயின?
உணவும் இல்லை, நீரும் இல்லை!
உலர்ந்த இடத்தில் செய்வது என்ன?
நாட்டை விட்டுப் பறந்தது நாரை,
காட்டை அடைந்து சோர்ந்து விழுந்தது.
ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தனர் அங்கே,
ஜீவனை போஷிக்கும் வற்றாத தடாகம்!
'அதோ தீர்த்தம்' என்ற பெயர் அதற்கு.
அதில் தீர்த்தம் வற்றவே வற்றாதாம்!
படித் துறைகள் இருந்தன அங்கே
வடிவில் சதுரம், சீரிய முறையில்!
சந்தியா மடம் ஒன்று அங்கிருந்தது!
விந்தையான இடம், மரங்கள் சூழந்தது!
நல்ல பாதிரி, வேங்கை, வஞ்சி, மருது,
வெல்லும் மணம் வீசி மலர்ந்திருந்தன!
தண்ணீரிலே முங்கிக் குளிப்பார்கள்
தண்ணருள் பெற்ற ஜீவன் முக்தர்கள்.
முடிக் கற்றைகள் நீரில் புரளும் போது,
ஒளிந்து விளையாடும் மீன் கூட்டம்!
"புண்ணிய சீலர்களைத் தீண்டுவதற்கு
என்ன தவம் அவை செய்திருந்தனவோ?
உணவே இன்றி உயிரே போனாலும்
உண்ணக்கூடாது புண்ணியசாலிகளை!"
சந்தியா மடத்தில் நடக்கும் தினம்
சத்சங்கம் ஜீவன் முக்தர்களின்!
மதுரையைப் பற்றிப் பேசுவதற்கு
மதுரமான விஷயங்கள் எத்தனை?
மதுரைப் புராணத்தை ஓதுவார்,
மதுரையின் சிறப்பை அலசுவார்.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
கீர்த்திகள் பெற்றது மதுரையம்பதியே!
வயிற்றுக்கு உணவு இல்லாது போயினும்
செவிக்கு உணவு கிடைத்தது நிறையவே.
கேட்கக் கேட்க வயிற்றுப் பசி மறைந்து
கேட்கக் கேட்க அறிவுப்பசி நிறைந்தது!
அறியாமை இருள் அகன்று போயிற்று!
அறுந்து போனது இருவினைத் தொடர்பு!
கர்மவினைகளைத் தொலைத்து நாரை,
சர்வமும் அறிந்து சிவபக்தி பெற்றது!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.