# 32. வளையல் விற்றது.
ரிஷிகள் பெரும் தவச் சீலர்கள் என்றால்,
ரிஷி பத்தினிகள் என்ன சளைத்தவர்களா?
கற்பின் கனலென வாழ்ந்து வந்தனர்;
கற்பு நிலையை சிவன் சோதிக்கும்வரை!
அற்புத வடிவை உடைய பிட்சாடனர்;
கற்பனைக் கெட்டாத மன்மத வடிவினர்;
தாருகா வனத்தில் நுழைந்த உடனேயே,
தாறுமாறு ஆயிற்று ரிஷிபத்தினிகள் நிலை.
பருவமும், உருவமும் கொண்டவர் மீது,
நிறை அழிந்து காம வயப்பட்டனர் அந்தோ!
பிக்ஷையிடும் போது விழுந்தன அத்துடன்
ரக்ஷையாகக் கைளில் இருந்த வளைகள்!
தொழுதனர் பிக்ஷாண்டியின் திருவடிகளை;
அழுதனர் தம்மை ஏற்றுக் கொள்ளும்படி;
இழந்தனர் இடையணி மேகலையையும்;
நெகிழ்ந்தனர் மானம் மறைக்கும் ஆடைகள்!
"இட்டு விடுங்கள் அவிழ்ந்த வளைகளை!
கட்டி விடுங்கள் அவிழ்ந்த ஆடைகளை!"
நுட்பமாக உணர்த்த வேண்டிய காதலை,
வெட்கத்தை விட்டு வெளிப்படுத்தினர்.
"நாளை வந்து இடுவோம்!' என்று வந்த
வேலை முடிந்ததால் மறைந்து போனார்;
பசலை படர்ந்து நின்றனர் நிறை அழிந்து,
வளை, மேகலை, நாணம், ஆடை இழந்து!
அலங்கோல நிலையினைக் கண்டதுமே
துலங்கி விட்டது ரிஷிகளுக்கு அங்கே
நடந்த நாடகத்தை அறிந்து கொண்டனர்;
நடத்தியவனையும் புரிந்து கொண்டனர்.
"கணவனைத் தவிர எவரையும் விரும்பாத
மனம் அழிந்து நிலைதடுமாறினீர்கள் நீங்கள்!
வணிகர் குலத்தின் பெண்களாக நீங்கள்
மதுரையில் சென்று பிறக்கக் கடவீர்கள்!"
"சாபம் அளித்தீர்கள் எங்கள் பிழைகளுக்கு!
சாப விமோசனம் எமக்கு எப்போது கூறும்?"
"பிறை அணிந்த பெருமான் மீண்டும் வந்து
வளை அணிவிக்கும்போது விமோசனம்!"
வணிகர் குலத்தில் பிறந்தனர் பத்தினிகள்;
பணி அணி நாதனை எதிர்பார்த்திருந்தனர்.
அணிந்திருந்த வளைகளையே மீண்டும்
அணிவிக்க விழைந்தான் சிவன் அவர்க்கு!
வளைச்செட்டி வேடம் பூண்டு அவர்கள்
வளைகளைக் ஒரு கயிற்றில் கோர்த்தான்.
"வளையல்!" எனக் கூவித் தன் வடிவால்
தொளை இட்டான் காண்பவர் மனங்களில்!
மீண்டும் காமுற்றனர் அதிசய வணிகனைக்
கண்டதும் வணிகர் குலத்துப் பெண்கள்!
கரம் பற்றி வளையல்களை அணிவித்தவன்
பெருக்கினான் மேலும் காம விகாரத்தை!
வளைகளுக்குப் பணம் தர விரும்பியவரிடம்,
"நாளை பெற்றுக் கொள்ளுகின்றேன்!" என்றான்.
வளைஅணிந்து கொண்ட பெண்கள் எல்லோரும்
வளைச்செட்டியின் ஸ்பரிசத்தால் கர்ப்பமுற்றனர்!
முருகனை நிகர்த்த அழகிய மகன்களைப்
பெறுவதில் பெருமிதம் அடைந்தனர் அவர்;
கருமவினை தீரும் வரை பூமியில் வாழ்ந்து
திருவருளால் சென்றடைந்தனர் சிவலோகம்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
ரிஷிகள் பெரும் தவச் சீலர்கள் என்றால்,
ரிஷி பத்தினிகள் என்ன சளைத்தவர்களா?
கற்பின் கனலென வாழ்ந்து வந்தனர்;
கற்பு நிலையை சிவன் சோதிக்கும்வரை!
அற்புத வடிவை உடைய பிட்சாடனர்;
கற்பனைக் கெட்டாத மன்மத வடிவினர்;
தாருகா வனத்தில் நுழைந்த உடனேயே,
தாறுமாறு ஆயிற்று ரிஷிபத்தினிகள் நிலை.
பருவமும், உருவமும் கொண்டவர் மீது,
நிறை அழிந்து காம வயப்பட்டனர் அந்தோ!
பிக்ஷையிடும் போது விழுந்தன அத்துடன்
ரக்ஷையாகக் கைளில் இருந்த வளைகள்!
தொழுதனர் பிக்ஷாண்டியின் திருவடிகளை;
அழுதனர் தம்மை ஏற்றுக் கொள்ளும்படி;
இழந்தனர் இடையணி மேகலையையும்;
நெகிழ்ந்தனர் மானம் மறைக்கும் ஆடைகள்!
"இட்டு விடுங்கள் அவிழ்ந்த வளைகளை!
கட்டி விடுங்கள் அவிழ்ந்த ஆடைகளை!"
நுட்பமாக உணர்த்த வேண்டிய காதலை,
வெட்கத்தை விட்டு வெளிப்படுத்தினர்.
"நாளை வந்து இடுவோம்!' என்று வந்த
வேலை முடிந்ததால் மறைந்து போனார்;
பசலை படர்ந்து நின்றனர் நிறை அழிந்து,
வளை, மேகலை, நாணம், ஆடை இழந்து!
அலங்கோல நிலையினைக் கண்டதுமே
துலங்கி விட்டது ரிஷிகளுக்கு அங்கே
நடந்த நாடகத்தை அறிந்து கொண்டனர்;
நடத்தியவனையும் புரிந்து கொண்டனர்.
"கணவனைத் தவிர எவரையும் விரும்பாத
மனம் அழிந்து நிலைதடுமாறினீர்கள் நீங்கள்!
வணிகர் குலத்தின் பெண்களாக நீங்கள்
மதுரையில் சென்று பிறக்கக் கடவீர்கள்!"
"சாபம் அளித்தீர்கள் எங்கள் பிழைகளுக்கு!
சாப விமோசனம் எமக்கு எப்போது கூறும்?"
"பிறை அணிந்த பெருமான் மீண்டும் வந்து
வளை அணிவிக்கும்போது விமோசனம்!"
வணிகர் குலத்தில் பிறந்தனர் பத்தினிகள்;
பணி அணி நாதனை எதிர்பார்த்திருந்தனர்.
அணிந்திருந்த வளைகளையே மீண்டும்
அணிவிக்க விழைந்தான் சிவன் அவர்க்கு!
வளைச்செட்டி வேடம் பூண்டு அவர்கள்
வளைகளைக் ஒரு கயிற்றில் கோர்த்தான்.
"வளையல்!" எனக் கூவித் தன் வடிவால்
தொளை இட்டான் காண்பவர் மனங்களில்!
மீண்டும் காமுற்றனர் அதிசய வணிகனைக்
கண்டதும் வணிகர் குலத்துப் பெண்கள்!
கரம் பற்றி வளையல்களை அணிவித்தவன்
பெருக்கினான் மேலும் காம விகாரத்தை!
வளைகளுக்குப் பணம் தர விரும்பியவரிடம்,
"நாளை பெற்றுக் கொள்ளுகின்றேன்!" என்றான்.
வளைஅணிந்து கொண்ட பெண்கள் எல்லோரும்
வளைச்செட்டியின் ஸ்பரிசத்தால் கர்ப்பமுற்றனர்!
முருகனை நிகர்த்த அழகிய மகன்களைப்
பெறுவதில் பெருமிதம் அடைந்தனர் அவர்;
கருமவினை தீரும் வரை பூமியில் வாழ்ந்து
திருவருளால் சென்றடைந்தனர் சிவலோகம்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.