#16 (b). வேதத்தின் பொருளை உரைத்தது.
குரு வடிவெடுத்து வந்த யுவ சிவன்,
அருள் வேண்டிய முனி புங்கவருடன்
சிவ லிங்கத்தின் திரு முன்பு அமர்ந்து,
சிறந்த பொருளை உரைக்கலானார்.
"உத்தமர்களில் எல்லாம் உத்தமன் சிவன்;
தத்துவ வடிவாக விளங்குபவன் அவன்;
நித்திய வேதத்தின் ஆதி காரணன் சிவன்;
சுத்த அத்வைத ஸ்வயம் பிரகாசன் அவன்.
பராபரன் சிவன்; ஸ்வயும்புவாக வந்தவன்;
நிராமயன் அவன்; விஞ்ஞான கனரூபன்;
பர பிரம்ம ஸ்வரூபன் ஆன மூர்த்தி
பரம சிவனே அன்றி வேறு எவருமல்ல!
வேதத்தின் திருவுருவே சிவ லிங்கம்;
வேதமே சிவ லிங்கத்தின் நுண்பொருள்;
வேதம் வேறு சிவ லிங்கம் வேறு அல்ல!
வேதமே லிங்கம், லிங்கமே வேதம் ஆகும்!"
சிவலிங்கத்தின் தத்துவங்களையும்,
சிவ குரு விரிவாக எடுத்து உரைத்தார்;
அகார, உகார, மகார தத்துவங்கள்,
அழகிய பிந்து, நாதங்களின் பெருமை;
சீரிய காயத்திரியின் தனிச் சிறப்புக்கள்,
சிவாகமங்கள் இருபத்தெட்டின் சிறப்பு,
நான்கு வேதங்கள் தோன்றியது எப்படி,
கன்ம, ஞான காண்டங்களின் உற்பத்தி;
நித்திய, நைமித்திக, காமிய கர்மங்கள்;
முக்திஅளித்திடும் சிவன் முன் செய்தால்;
வேதப் பொருளை விரும்பியபடியே,
வேத நாயகன் விரித்து உரைத்தான்!
மருட்சி நீங்கி மகிழ்ச்சி அடைந்தவர்களை,
அருட் கரத்தால் அன்புடன் தடவினான்;
சிவ யுவ குரு ஆலயக் கருவறையில் புக்கு,
சிவலிங்கத்துடனே ஒன்றிக் கலந்தான்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ராணி.
குரு வடிவெடுத்து வந்த யுவ சிவன்,
அருள் வேண்டிய முனி புங்கவருடன்
சிவ லிங்கத்தின் திரு முன்பு அமர்ந்து,
சிறந்த பொருளை உரைக்கலானார்.
"உத்தமர்களில் எல்லாம் உத்தமன் சிவன்;
தத்துவ வடிவாக விளங்குபவன் அவன்;
நித்திய வேதத்தின் ஆதி காரணன் சிவன்;
சுத்த அத்வைத ஸ்வயம் பிரகாசன் அவன்.
பராபரன் சிவன்; ஸ்வயும்புவாக வந்தவன்;
நிராமயன் அவன்; விஞ்ஞான கனரூபன்;
பர பிரம்ம ஸ்வரூபன் ஆன மூர்த்தி
பரம சிவனே அன்றி வேறு எவருமல்ல!
வேதத்தின் திருவுருவே சிவ லிங்கம்;
வேதமே சிவ லிங்கத்தின் நுண்பொருள்;
வேதம் வேறு சிவ லிங்கம் வேறு அல்ல!
வேதமே லிங்கம், லிங்கமே வேதம் ஆகும்!"
சிவலிங்கத்தின் தத்துவங்களையும்,
சிவ குரு விரிவாக எடுத்து உரைத்தார்;
அகார, உகார, மகார தத்துவங்கள்,
அழகிய பிந்து, நாதங்களின் பெருமை;
சீரிய காயத்திரியின் தனிச் சிறப்புக்கள்,
சிவாகமங்கள் இருபத்தெட்டின் சிறப்பு,
நான்கு வேதங்கள் தோன்றியது எப்படி,
கன்ம, ஞான காண்டங்களின் உற்பத்தி;
நித்திய, நைமித்திக, காமிய கர்மங்கள்;
முக்திஅளித்திடும் சிவன் முன் செய்தால்;
வேதப் பொருளை விரும்பியபடியே,
வேத நாயகன் விரித்து உரைத்தான்!
மருட்சி நீங்கி மகிழ்ச்சி அடைந்தவர்களை,
அருட் கரத்தால் அன்புடன் தடவினான்;
சிவ யுவ குரு ஆலயக் கருவறையில் புக்கு,
சிவலிங்கத்துடனே ஒன்றிக் கலந்தான்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ராணி.