திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
8. அன்னக் குழியும், வைகை நதியும்.
பசிப்பிணி தீராமல் வருந்தும் பூதத்தின்
பசிப்பிணி தீர அருளினாள் அன்னபூரணி.
நான்கு அன்னக் குழிகளில் இருந்து அங்கு
நன்கு பொங்கியது கட்டித் தயிர்அன்னம்!
"பசி தீரும் வரை புசிப்பாய்!" என்றதும்,
ருசியான தயிர் அன்னத்தைக் கைகளால்,
அள்ளி அள்ளி உண்டு பசி முற்றும் தீர்ந்து,
உள்ளக் களிப்பு எய்தியது அந்த பூதம்.
"உடல் முழுதும் வயிரா?" என ஐயுறும்படி
உடல் முழுவதுமே நிறைந்து உப்பிவிட,
தாகம் வாட்டி வதைத்து அப் பூதத்தை!
தேகம் மூச்சு முட்டியது பாரத்தால்!
கிணறு, குளம், ஓடை, வாவி நீர் என்று
கணக்குப் பார்க்காமல் பூதம் குடித்ததில்,
நீர்நிலைகள் அனைத்தும் வற்றிவிட்டன,
நீர் வேட்கை மட்டும் தீரவேயில்லை!
மீண்டும் வந்து சரண் புகுந்தது பூதம்,
தாண்டவம் ஆடும் தில்லை சபேசனிடம்;
கங்கை நதியிடம் ஆணை இட்டார் சிவன்,
"இங்கும் ஒரு நதியாகப் பிரவகிப்பாய்!"
"அன்று எனக்கு ஒரு வரம் தந்தீர்கள்,
என்னைத் தீண்டுபவர் புனிதமடைவர்.
இன்றும் எனக்கு ஒரு வரம் தாருங்கள்,
என்னைத் தீண்டுபவர்கள் புனிதர்களாகி,
பக்தியும், ஞானமும், கல்வியும் பெற்று ,
முக்தி அடைய வேண்டும் என் ஐயனே!"
"அங்ஙனமே ஆகுக!" எனக் கருணையுடன்,
தங்க வண்ணனும் வரம் ஒன்று அளித்தான்.
வேகமாகத் தரையில் இறங்கியவள்
வேகவதி ஆறாகவே மாறி விட்டாள்.
நதியும் கூட ஓர் அழகிய நங்கையே!
மதிமுகப் பெண்மணிகளில் ஒருத்தியே!
சலசலக்கும் அலைகளே அவள்
கலகலக்கும் கை வளையல்கள்!
முத்துக் குவியலே அவளுடைய
முத்துப் பல்வரிசைகள் ஆயின.
நுரை சுழிக்கும் மேற்பரப்பே அவள்
திரை போன்ற மெல்லிய ஆடைகள்.
கருமணல் திட்டுக்களே கருங்கூந்தல்,
நறுமண மலர்களே நகை அலங்காரம்.
நதியின் கரைகளை ஒட்டியபடித் தன்
ஓதிய மரக் கைகளை நீட்டியது பூதம்.
தடைபட்ட ஆற்றுநீரை ஒரு மடுவாக்கித்
தடையின்றிப் பருகி தாகம் தீர்ந்தது!
கையை வைத்து நீரைத் தடுத்ததால்,
வைகை ஆறு என்ற பெயர் பெற்றதோ?
சிவன் செஞ்சடையிலிருந்து இறங்கி
சிவ கங்கை என்ற பெயர் பெற்றதோ?
மதுராபுரியைச் சுற்றி ஓர் அழகிய
மாலை போல் ஓடிவந்ததால் அது
க்ருதமாலை என்ற பெயர் பெற்றதோ ?
க்ருபாகரனே உண்மையை அறிவான்!
வாழ்க வளமுடன். விசாலாக்ஷி ரமணி.
8. அன்னக் குழியும், வைகை நதியும்.
பசிப்பிணி தீராமல் வருந்தும் பூதத்தின்
பசிப்பிணி தீர அருளினாள் அன்னபூரணி.
நான்கு அன்னக் குழிகளில் இருந்து அங்கு
நன்கு பொங்கியது கட்டித் தயிர்அன்னம்!
"பசி தீரும் வரை புசிப்பாய்!" என்றதும்,
ருசியான தயிர் அன்னத்தைக் கைகளால்,
அள்ளி அள்ளி உண்டு பசி முற்றும் தீர்ந்து,
உள்ளக் களிப்பு எய்தியது அந்த பூதம்.
"உடல் முழுதும் வயிரா?" என ஐயுறும்படி
உடல் முழுவதுமே நிறைந்து உப்பிவிட,
தாகம் வாட்டி வதைத்து அப் பூதத்தை!
தேகம் மூச்சு முட்டியது பாரத்தால்!
கிணறு, குளம், ஓடை, வாவி நீர் என்று
கணக்குப் பார்க்காமல் பூதம் குடித்ததில்,
நீர்நிலைகள் அனைத்தும் வற்றிவிட்டன,
நீர் வேட்கை மட்டும் தீரவேயில்லை!
மீண்டும் வந்து சரண் புகுந்தது பூதம்,
தாண்டவம் ஆடும் தில்லை சபேசனிடம்;
கங்கை நதியிடம் ஆணை இட்டார் சிவன்,
"இங்கும் ஒரு நதியாகப் பிரவகிப்பாய்!"
"அன்று எனக்கு ஒரு வரம் தந்தீர்கள்,
என்னைத் தீண்டுபவர் புனிதமடைவர்.
இன்றும் எனக்கு ஒரு வரம் தாருங்கள்,
என்னைத் தீண்டுபவர்கள் புனிதர்களாகி,
பக்தியும், ஞானமும், கல்வியும் பெற்று ,
முக்தி அடைய வேண்டும் என் ஐயனே!"
"அங்ஙனமே ஆகுக!" எனக் கருணையுடன்,
தங்க வண்ணனும் வரம் ஒன்று அளித்தான்.
வேகமாகத் தரையில் இறங்கியவள்
வேகவதி ஆறாகவே மாறி விட்டாள்.
நதியும் கூட ஓர் அழகிய நங்கையே!
மதிமுகப் பெண்மணிகளில் ஒருத்தியே!
சலசலக்கும் அலைகளே அவள்
கலகலக்கும் கை வளையல்கள்!
முத்துக் குவியலே அவளுடைய
முத்துப் பல்வரிசைகள் ஆயின.
நுரை சுழிக்கும் மேற்பரப்பே அவள்
திரை போன்ற மெல்லிய ஆடைகள்.
கருமணல் திட்டுக்களே கருங்கூந்தல்,
நறுமண மலர்களே நகை அலங்காரம்.
நதியின் கரைகளை ஒட்டியபடித் தன்
ஓதிய மரக் கைகளை நீட்டியது பூதம்.
தடைபட்ட ஆற்றுநீரை ஒரு மடுவாக்கித்
தடையின்றிப் பருகி தாகம் தீர்ந்தது!
கையை வைத்து நீரைத் தடுத்ததால்,
வைகை ஆறு என்ற பெயர் பெற்றதோ?
சிவன் செஞ்சடையிலிருந்து இறங்கி
சிவ கங்கை என்ற பெயர் பெற்றதோ?
மதுராபுரியைச் சுற்றி ஓர் அழகிய
மாலை போல் ஓடிவந்ததால் அது
க்ருதமாலை என்ற பெயர் பெற்றதோ ?
க்ருபாகரனே உண்மையை அறிவான்!
வாழ்க வளமுடன். விசாலாக்ஷி ரமணி.