#183. அரசனும், ஆண்டியும்!
உலகையே வெல்ல விரும்பிய அலெக்சாண்டர்,
உலகினில் உள்ள சிறந்த பொருட்கள் ஐந்தை,
அரிஸ்டாடலுக்கு காணிக்கை ஆக்க விரும்பி,
அரிய படையை நடத்திப் பாரதம் வந்தார்.
கங்கைக் கரையில் அமர்ந்து மெளனமாக,
சிங்கம் போல தவம் செய்யும் சாதுக்கள்,
சந்நியாசிகளைப் பற்றிக் கேட்டு வியந்தவர்,
சந்நியாசி ஒருவரைக் காணவிரும்பினார்.
தளபதியிடம் அரசர் ஆணையிட்டார்,
தாமதமின்றி படையுடன் சென்று,
உலகம் துறந்த ஒரு சிறந்த ஞானியை,
கலகம் இன்றி அழைத்து வருமாறு!
“எமக்கு உம் அரசரிடம் என்ன வேலை?
எமது தொழில் தவம் செய்வது ஒன்றே!
உமது அரசன் என்னைக் காண விழைந்தால்
உம்முடன் நீர் இங்கு அழைத்து வாரும்!”
தளபதியின் சாந்த குணம் மாறியது;
தாளமுடியாத சினம் தலைக்கு ஏறியது;
உலகே அஞ்சும் பெரிய அரசன் இந்த
உலகைத் துறந்த ஆண்டியிடம் வருவதா?
ஆணை இட்டார் தம் வீரர்களிடம்,
“பிணைத்தாகிலும் இந்த ஆண்டியை
அரசனிடம் அழைத்து வாருங்கள்!
பிணங்கினால் விட்டு விடுவோமா?”
சென்றது ஒரு படை வீரர் கூட்டம்,
முயன்றது அந்த வீர சன்யாசியைக்
கயிற்றில் கட்டியாவது இழுத்து வர;
முயன்று முயன்று முடிவில் தோற்றது!
என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்!
எத்தனை வீரர்கள் கூடி முயன்றாலும்,
எள்ளளவேனும் நகர்த்த முடியவில்லை,
எள்ளி நகையாடும் அந்த சன்யாசியை!
“உங்கள் அரசன் மண்ணை வென்றவன்;
நானோ என் மனத்தையே வென்றவன்.
என்னை யாராலும், எங்கும், எதுவும்,
நான் விரும்பாமல் செய்ய இயலாது!”
ஆன்மீகத்தின் அரிய சக்திகளை
அனைவரும் உணர்ந்து தெளிந்தனர்.
மண் ஆளும் அரசனும் இடவேண்டும்
மண்டி, மனத்தை வென்ற ஆண்டியிடம்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
உலகையே வெல்ல விரும்பிய அலெக்சாண்டர்,
உலகினில் உள்ள சிறந்த பொருட்கள் ஐந்தை,
அரிஸ்டாடலுக்கு காணிக்கை ஆக்க விரும்பி,
அரிய படையை நடத்திப் பாரதம் வந்தார்.
கங்கைக் கரையில் அமர்ந்து மெளனமாக,
சிங்கம் போல தவம் செய்யும் சாதுக்கள்,
சந்நியாசிகளைப் பற்றிக் கேட்டு வியந்தவர்,
சந்நியாசி ஒருவரைக் காணவிரும்பினார்.
தளபதியிடம் அரசர் ஆணையிட்டார்,
தாமதமின்றி படையுடன் சென்று,
உலகம் துறந்த ஒரு சிறந்த ஞானியை,
கலகம் இன்றி அழைத்து வருமாறு!
“எமக்கு உம் அரசரிடம் என்ன வேலை?
எமது தொழில் தவம் செய்வது ஒன்றே!
உமது அரசன் என்னைக் காண விழைந்தால்
உம்முடன் நீர் இங்கு அழைத்து வாரும்!”
தளபதியின் சாந்த குணம் மாறியது;
தாளமுடியாத சினம் தலைக்கு ஏறியது;
உலகே அஞ்சும் பெரிய அரசன் இந்த
உலகைத் துறந்த ஆண்டியிடம் வருவதா?
ஆணை இட்டார் தம் வீரர்களிடம்,
“பிணைத்தாகிலும் இந்த ஆண்டியை
அரசனிடம் அழைத்து வாருங்கள்!
பிணங்கினால் விட்டு விடுவோமா?”
சென்றது ஒரு படை வீரர் கூட்டம்,
முயன்றது அந்த வீர சன்யாசியைக்
கயிற்றில் கட்டியாவது இழுத்து வர;
முயன்று முயன்று முடிவில் தோற்றது!
என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்!
எத்தனை வீரர்கள் கூடி முயன்றாலும்,
எள்ளளவேனும் நகர்த்த முடியவில்லை,
எள்ளி நகையாடும் அந்த சன்யாசியை!
“உங்கள் அரசன் மண்ணை வென்றவன்;
நானோ என் மனத்தையே வென்றவன்.
என்னை யாராலும், எங்கும், எதுவும்,
நான் விரும்பாமல் செய்ய இயலாது!”
ஆன்மீகத்தின் அரிய சக்திகளை
அனைவரும் உணர்ந்து தெளிந்தனர்.
மண் ஆளும் அரசனும் இடவேண்டும்
மண்டி, மனத்தை வென்ற ஆண்டியிடம்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.