41 (b). விறகு விற்றது.
யானை விலை குதிரை விலை என்பார்களே!
யானை விலை தான் கூறினான் விறகுக்கு!
யாருமே வாங்கிட முடியாத ஒரு விலை.
யாருமே வாங்கிடவும் இல்லை அதை.
ஊரெல்லாம் சுற்றியும் ஒரு பயனில்லை;
ஒரு விறகு கூட விற்க முடியவில்லை.
ஏமநாதனின் வீட்டை அடைந்தான்;
சேமமாகத் திண்ணையில் அமர்ந்தான்.
பொழுதைக் கழிக்கப் பாடலானான்;
பழுதில்லாத ஓர் இன்னிசைப் பாடல்;
மலரால் இழுக்கப் பட்ட வண்டானான்
இசையால் இழுக்கப்பட்ட ஏமநாதன்.
"யாரப்பா நீ?" என்றும் "உன்னுடைய
"பேர் என்ன?" என்றும் வினவினான்;
"பேர் சொல்லும் அளவுக்கு இன்னமும்
பெரியவனாகவில்லை ஐயா நான்!
பாண பத்திரனின் அடிமை நான்;
பாண பத்திரனின் பாடலுக்கும் கூட;
கற்க விரும்பினேன் கீதம் அவரிடம்,
கற்பிக்கவில்லை கீதம் அவர் எனக்கு;
வயதாகிவிட்டது போ என்று என்னிடம்
இயம்பவே விறகு வெட்டி விற்கின்றேன்!"
"மீண்டும் ஒரு முறை பாடுவாய்! கேட்க
வேண்டும் காதாற இன்னும் ஒருமுறை!"
சுருதி சேர்த்தான் தன் யாழை எடுத்து;
சுருதி சுத்தமாகப் பாடத் தொடங்கினான்.
சாதாரிப் பண் இசைப்பது என்பது ஒரு
சாதாரண விஷயமா என்ன? கூறுங்கள்!
உடல், உள்ளம், ஆவியுடன் அவன்
நாடிகள், நரம்புகள், மயிர்க்கால்கள்,
எல்லாம் மயங்கிச் சிலிர்த்தன அங்கு
வெள்ளமாக வந்த இசைமழையால்!
"வேண்டாம் என்று தள்ளியவனிடம்
யாண்டும் கேட்டிராத இசைமழையா!
இப்படி விறகு வெட்டியே பாடினால்,
எப்படிப் பாடுவான் இவன் குருநாதன்?"
இரவோடு இரவாக ஓடிவிட்டான் அவன்
அரசனிடம் கூடச் சொல்லாமலேயே!
பாணன் கனவில் தோன்றிய பிரான்,
"பண் பாடி விரட்டி விட்டோம்!" என்றார்.
ஏமநாதன் சிஷ்யர்கள் கூட்டத்துடன்,
யாமத்தில் ஓடி விட்ட விவரம் அறிந்து;
யானை மீது ஊர்வலம் செய்வித்தான்
பாண பத்திரனுக்கு பாண்டிய மன்னன்.
பரிசு மழையைப் பொழிந்தான் மன்னன்
பரிசுகளைப் பகிர்ந்தளித்தான் பாணன்;
ஈசன் புகழ் பாடிப் பூசனை செய்வதே
நேசம் மிகுந்த ஆசைத் தொண்டானது!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
யானை விலை குதிரை விலை என்பார்களே!
யானை விலை தான் கூறினான் விறகுக்கு!
யாருமே வாங்கிட முடியாத ஒரு விலை.
யாருமே வாங்கிடவும் இல்லை அதை.
ஊரெல்லாம் சுற்றியும் ஒரு பயனில்லை;
ஒரு விறகு கூட விற்க முடியவில்லை.
ஏமநாதனின் வீட்டை அடைந்தான்;
சேமமாகத் திண்ணையில் அமர்ந்தான்.
பொழுதைக் கழிக்கப் பாடலானான்;
பழுதில்லாத ஓர் இன்னிசைப் பாடல்;
மலரால் இழுக்கப் பட்ட வண்டானான்
இசையால் இழுக்கப்பட்ட ஏமநாதன்.
"யாரப்பா நீ?" என்றும் "உன்னுடைய
"பேர் என்ன?" என்றும் வினவினான்;
"பேர் சொல்லும் அளவுக்கு இன்னமும்
பெரியவனாகவில்லை ஐயா நான்!
பாண பத்திரனின் அடிமை நான்;
பாண பத்திரனின் பாடலுக்கும் கூட;
கற்க விரும்பினேன் கீதம் அவரிடம்,
கற்பிக்கவில்லை கீதம் அவர் எனக்கு;
வயதாகிவிட்டது போ என்று என்னிடம்
இயம்பவே விறகு வெட்டி விற்கின்றேன்!"
"மீண்டும் ஒரு முறை பாடுவாய்! கேட்க
வேண்டும் காதாற இன்னும் ஒருமுறை!"
சுருதி சேர்த்தான் தன் யாழை எடுத்து;
சுருதி சுத்தமாகப் பாடத் தொடங்கினான்.
சாதாரிப் பண் இசைப்பது என்பது ஒரு
சாதாரண விஷயமா என்ன? கூறுங்கள்!
உடல், உள்ளம், ஆவியுடன் அவன்
நாடிகள், நரம்புகள், மயிர்க்கால்கள்,
எல்லாம் மயங்கிச் சிலிர்த்தன அங்கு
வெள்ளமாக வந்த இசைமழையால்!
"வேண்டாம் என்று தள்ளியவனிடம்
யாண்டும் கேட்டிராத இசைமழையா!
இப்படி விறகு வெட்டியே பாடினால்,
எப்படிப் பாடுவான் இவன் குருநாதன்?"
இரவோடு இரவாக ஓடிவிட்டான் அவன்
அரசனிடம் கூடச் சொல்லாமலேயே!
பாணன் கனவில் தோன்றிய பிரான்,
"பண் பாடி விரட்டி விட்டோம்!" என்றார்.
ஏமநாதன் சிஷ்யர்கள் கூட்டத்துடன்,
யாமத்தில் ஓடி விட்ட விவரம் அறிந்து;
யானை மீது ஊர்வலம் செய்வித்தான்
பாண பத்திரனுக்கு பாண்டிய மன்னன்.
பரிசு மழையைப் பொழிந்தான் மன்னன்
பரிசுகளைப் பகிர்ந்தளித்தான் பாணன்;
ஈசன் புகழ் பாடிப் பூசனை செய்வதே
நேசம் மிகுந்த ஆசைத் தொண்டானது!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.