# 57 (d). சுறாமீன் பிடிபட்டது!
உடும்புப் பிடியைப் போல வலையை, வலைஞன்
விடவே இல்லை ஒரு நொடிப் பொழுதும் கூட!
ஓடி ஓடிக் களைத்து விட்டது சுறாமீன் நந்தி.
தேடிப் பிடித்துக் கரையில் வீசினான் வலைஞன்.
திருமணம் நிகழ்ந்தது அவர்கள் முறைப்படி!
அருமை மணமக்களுக்கு என்ன ஆகிவிட்டது?
உமையும், சிவனும் அன்றோ அவ்விடத்தில்
அமைந்துள்ளனர் புதிய மணமக்களாக!
நந்தி தேவன் ஆயிற்று கொடிய சுறாமீன்.
நந்தியின் மீது காட்சி தந்தனர் மணமக்கள்.
கண்டவர்கள் பெற்றனர் தூய மெய் ஞானம்.
மண்டின பாவங்கள் தொலைந்து போயின.
"உம் பக்திக்கு மெச்சியே தேவி உமையை
உம் வளர்ப்பு மகளாக நாம் ஆக்கினோம்.
அன்புக்கு அடிமை ஆகிய நானும் உம்
அன்பு மருமகன் ஆகி விட்டேன் இன்று.
குபேர சம்பத்தைப் பெற்று மகிழ்வீர்!
அமோக போகங்கள் துய்த்து மகிழ்வீர்!
சிவலோக சாயுஜ்யமும் உங்களுக்காகவே
சிறந்த முறையில் காத்து இருக்கின்றது!"
உத்திர மங்கை என்னும் க்ஷேத்திரத்தை
உமை, நந்தி தேவன், பிற அடியவர்களுடன்
அடைந்தார் பிரான்; அங்கிருந்துகொண்டு
படைத்தார் மீண்டும் வேத விழுப்பொருள் .
சிவன் அடியவர்கள் கற்றுத் தேர்ந்தனர்
சிவ யோகிகளும் உடன் கற்றுத் தேர்ந்தனர்
சிவகாமியாகிய உமையுடன், அங்கே, அன்று,
சிவ உபதேசம் பெற்றனர் அறுபதாயிரம் பேர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
உடும்புப் பிடியைப் போல வலையை, வலைஞன்
விடவே இல்லை ஒரு நொடிப் பொழுதும் கூட!
ஓடி ஓடிக் களைத்து விட்டது சுறாமீன் நந்தி.
தேடிப் பிடித்துக் கரையில் வீசினான் வலைஞன்.
திருமணம் நிகழ்ந்தது அவர்கள் முறைப்படி!
அருமை மணமக்களுக்கு என்ன ஆகிவிட்டது?
உமையும், சிவனும் அன்றோ அவ்விடத்தில்
அமைந்துள்ளனர் புதிய மணமக்களாக!
நந்தி தேவன் ஆயிற்று கொடிய சுறாமீன்.
நந்தியின் மீது காட்சி தந்தனர் மணமக்கள்.
கண்டவர்கள் பெற்றனர் தூய மெய் ஞானம்.
மண்டின பாவங்கள் தொலைந்து போயின.
"உம் பக்திக்கு மெச்சியே தேவி உமையை
உம் வளர்ப்பு மகளாக நாம் ஆக்கினோம்.
அன்புக்கு அடிமை ஆகிய நானும் உம்
அன்பு மருமகன் ஆகி விட்டேன் இன்று.
குபேர சம்பத்தைப் பெற்று மகிழ்வீர்!
அமோக போகங்கள் துய்த்து மகிழ்வீர்!
சிவலோக சாயுஜ்யமும் உங்களுக்காகவே
சிறந்த முறையில் காத்து இருக்கின்றது!"
உத்திர மங்கை என்னும் க்ஷேத்திரத்தை
உமை, நந்தி தேவன், பிற அடியவர்களுடன்
அடைந்தார் பிரான்; அங்கிருந்துகொண்டு
படைத்தார் மீண்டும் வேத விழுப்பொருள் .
சிவன் அடியவர்கள் கற்றுத் தேர்ந்தனர்
சிவ யோகிகளும் உடன் கற்றுத் தேர்ந்தனர்
சிவகாமியாகிய உமையுடன், அங்கே, அன்று,
சிவ உபதேசம் பெற்றனர் அறுபதாயிரம் பேர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.