DEVI BHAAGAVATAM - SKANDA 5
5#35b. சக்தி ஆராதனை (2)
காட்சி தந்தாள் தேவி திருவுளம் கனிந்து,
“கேட்கும் வரம் தருவேன் கேளுங்கள்!” எனக்
“கைப்பற்றினர் என் நாட்டை, என் பதவியை.
கைப்பட வேண்டும் என் நாடும், பதவியும்!”
சுரதன் கேட்டான் தேவியிடம் – இந்த
வரத்தைத் தன் உள்ளக் கிடக்கையாக!
“செல்வாய் உன் நாட்டுக்கு நீ மீண்டும்
வெல்வாய் நீ உன் பதவியை மீண்டும்!
ஆள்வாய் நெடும்காலம் நல்லாட்சியாக;
வாழ்வாய் ராஜபோகங்களுடன் நெடுநாள்.
சேர்வாய் சூரியனுடன் உன் கால முடிவில்;
தோன்றுவாய் பூவுலகில் ஒரு மனுவாக”
போற்றினான் சுரதன் தேவியின் கருணையை;
போற்றினான் வணிகனும்; கூறினான் இவ்வாறு.
“நான் வேண்டுவது இவைகள் தான் தேவி.
நான் வேண்டுவது ஞானம், வைராக்கியம்.
துக்கம் தருகிறது உலகில் சம்சார பந்தம்;
நித்திய சுகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
விடுவிப்பாய் சம்சார பந்தங்களில் இருந்து;
விடுவிப்பாய் பாசத் தளையிலிருந்து என்னை!”
சடுதியில் அடைந்தான் ஞான, வைராக்கியம்;
விடுபட்டான் கல்பித உலக வாழ்விலிருந்து!
மறைந்தருளினாள் தேவி வரங்கள் தந்த பின்பு;
நிறைவுடன் திரும்பினர் இருவரும் குரு முன்பு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
5#35b. சக்தி ஆராதனை (2)
காட்சி தந்தாள் தேவி திருவுளம் கனிந்து,
“கேட்கும் வரம் தருவேன் கேளுங்கள்!” எனக்
“கைப்பற்றினர் என் நாட்டை, என் பதவியை.
கைப்பட வேண்டும் என் நாடும், பதவியும்!”
சுரதன் கேட்டான் தேவியிடம் – இந்த
வரத்தைத் தன் உள்ளக் கிடக்கையாக!
“செல்வாய் உன் நாட்டுக்கு நீ மீண்டும்
வெல்வாய் நீ உன் பதவியை மீண்டும்!
ஆள்வாய் நெடும்காலம் நல்லாட்சியாக;
வாழ்வாய் ராஜபோகங்களுடன் நெடுநாள்.
சேர்வாய் சூரியனுடன் உன் கால முடிவில்;
தோன்றுவாய் பூவுலகில் ஒரு மனுவாக”
போற்றினான் சுரதன் தேவியின் கருணையை;
போற்றினான் வணிகனும்; கூறினான் இவ்வாறு.
“நான் வேண்டுவது இவைகள் தான் தேவி.
நான் வேண்டுவது ஞானம், வைராக்கியம்.
துக்கம் தருகிறது உலகில் சம்சார பந்தம்;
நித்திய சுகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
விடுவிப்பாய் சம்சார பந்தங்களில் இருந்து;
விடுவிப்பாய் பாசத் தளையிலிருந்து என்னை!”
சடுதியில் அடைந்தான் ஞான, வைராக்கியம்;
விடுபட்டான் கல்பித உலக வாழ்விலிருந்து!
மறைந்தருளினாள் தேவி வரங்கள் தந்த பின்பு;
நிறைவுடன் திரும்பினர் இருவரும் குரு முன்பு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
