VINAAYAKA PURAANAM 1
29b. சண்டாள ஸ்த்ரீ
பாவங்களுக்கு உழன்றாள் நரகத்தில்,
பாவம் கழியவில்லை காலம் கழிந்தும்.
தண்டனையைப் பூர்த்தி செய்ய மீண்டும்
சண்டாளப் பெண் ஆனாள் மண்ணுலகில்.
காலையில் எழுந்ததும் கள் அருந்தினாள்;
காலைப் பொழுது கழிந்தது போதையில்!
போதை தெளிந்ததும் அகோரப் பசியால்
போனாள் உணவைத் தேடிய வண்ணம்.
தெருவில் வந்து விழுந்தன நிறைய
விருந்து உண்ட எச்சில் இலைகள்.
பசிக்கு ஏது ருசியும் பல விதிகளும்?
புசித்தாள் எச்சில் உணவைத் திரட்டி!
சதுர்த்தி விரதம் நடந்திருந்தது அன்று;
பொதுவாகக் கேட்டது கணபதி நாமம்.
“கணபதி! கணபதி! ” என்றாள் அவளும்!
கணபதி அருளுக்குப் பாத்திரம் ஆனாள்!”
கணங்கள் உரைத்தன இந்த விவரத்தை;
கணங்களை வேண்டினர் தூதுவர்கள்.
“மண்ணில் இறங்கிய இந்திரன் விமானம்
விண்ணில் எழும்ப உதவிட வேண்டும்!”
“வேலை தருபவர் வேழமுகன் ஒருவரே!
வேலை நடுவில் வேண்டாம் தடங்கல்!”
சென்றனர் விமானம் ஏறிய கணங்கள்,
பெண்ணின் பார்வை விழுந்தது தரையில்.
என்ன விந்தை நடந்தது அங்கே காண்பீர்!
எழும்பியது விமானம் அவள் பார்வையில்!
சண்டாளப் பெண் அல்லவே அவள் இப்போது!
விண்ணுலக வாழ்வை வென்றுவிட்ட பெண்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
29b. சண்டாள ஸ்த்ரீ
பாவங்களுக்கு உழன்றாள் நரகத்தில்,
பாவம் கழியவில்லை காலம் கழிந்தும்.
தண்டனையைப் பூர்த்தி செய்ய மீண்டும்
சண்டாளப் பெண் ஆனாள் மண்ணுலகில்.
காலையில் எழுந்ததும் கள் அருந்தினாள்;
காலைப் பொழுது கழிந்தது போதையில்!
போதை தெளிந்ததும் அகோரப் பசியால்
போனாள் உணவைத் தேடிய வண்ணம்.
தெருவில் வந்து விழுந்தன நிறைய
விருந்து உண்ட எச்சில் இலைகள்.
பசிக்கு ஏது ருசியும் பல விதிகளும்?
புசித்தாள் எச்சில் உணவைத் திரட்டி!
சதுர்த்தி விரதம் நடந்திருந்தது அன்று;
பொதுவாகக் கேட்டது கணபதி நாமம்.
“கணபதி! கணபதி! ” என்றாள் அவளும்!
கணபதி அருளுக்குப் பாத்திரம் ஆனாள்!”
கணங்கள் உரைத்தன இந்த விவரத்தை;
கணங்களை வேண்டினர் தூதுவர்கள்.
“மண்ணில் இறங்கிய இந்திரன் விமானம்
விண்ணில் எழும்ப உதவிட வேண்டும்!”
“வேலை தருபவர் வேழமுகன் ஒருவரே!
வேலை நடுவில் வேண்டாம் தடங்கல்!”
சென்றனர் விமானம் ஏறிய கணங்கள்,
பெண்ணின் பார்வை விழுந்தது தரையில்.
என்ன விந்தை நடந்தது அங்கே காண்பீர்!
எழும்பியது விமானம் அவள் பார்வையில்!
சண்டாளப் பெண் அல்லவே அவள் இப்போது!
விண்ணுலக வாழ்வை வென்றுவிட்ட பெண்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.