உற்பத்தி காண்டம்
22b. அசுரேந்திரன்
வருந்தினான் அசுரேந்திரன் மனம் வாடி,
அருமைத் தாய் தந்தையரின் மறைவால்;
தன் சுற்றத்துடன் விரைந்துசென்றான்,
தென் கடலில் உள்ள வீரமகேந்திரபுரி!
கதறி அழுதான் சூரனைக் கண்டதும்!
பதறிப் பற்றினான் சூரனின் கால்களை!
“வருந்தாதே மகனே! நடந்ததைக் கூறு!”
பெருவீரன் அவனை ஆசுவாசப் படுத்த,
“சிவன் மகன் வந்தான் பூதப் படைகளோடு!
அவன் கொன்றான் அருமைத் தந்தையாரை.
கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்தான்,
பிரபஞ்சம் நடுங்கும் பேரொலியுடன்!”
“கிரௌஞ்சத்துடன் தாரகனை வெல்லுவதா?
பிரமை பிடித்துவிட்டதா உனக்கு மகனே?”
மேகம் போல கர்ஜித்தான் சூரபத்மன்;
நாகம் போலச் சீறிச் சினந்தான் அவன்.
மனத்தில் பொங்கியது கொடிய சினத்தீ!
கணத்தில் தோன்றின கண்களில் தீப்பொறி.
புகை வெளிவந்தது மூச்சுக் காற்றில்;
பகையால் கடித்தான் தன் உதடுகளை.
உதடுகள் துடிக்க, கண்ணீர் பெருக
நடுங்கினான் இளவல் மேல் அன்பால்!
“இளவலை அழித்த கந்தனை அழிப்பேன்!
களம் புகத் தயார் செய்யுங்கள்” என்றான்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
22b. அசுரேந்திரன்
வருந்தினான் அசுரேந்திரன் மனம் வாடி,
அருமைத் தாய் தந்தையரின் மறைவால்;
தன் சுற்றத்துடன் விரைந்துசென்றான்,
தென் கடலில் உள்ள வீரமகேந்திரபுரி!
கதறி அழுதான் சூரனைக் கண்டதும்!
பதறிப் பற்றினான் சூரனின் கால்களை!
“வருந்தாதே மகனே! நடந்ததைக் கூறு!”
பெருவீரன் அவனை ஆசுவாசப் படுத்த,
“சிவன் மகன் வந்தான் பூதப் படைகளோடு!
அவன் கொன்றான் அருமைத் தந்தையாரை.
கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்தான்,
பிரபஞ்சம் நடுங்கும் பேரொலியுடன்!”
“கிரௌஞ்சத்துடன் தாரகனை வெல்லுவதா?
பிரமை பிடித்துவிட்டதா உனக்கு மகனே?”
மேகம் போல கர்ஜித்தான் சூரபத்மன்;
நாகம் போலச் சீறிச் சினந்தான் அவன்.
மனத்தில் பொங்கியது கொடிய சினத்தீ!
கணத்தில் தோன்றின கண்களில் தீப்பொறி.
புகை வெளிவந்தது மூச்சுக் காற்றில்;
பகையால் கடித்தான் தன் உதடுகளை.
உதடுகள் துடிக்க, கண்ணீர் பெருக
நடுங்கினான் இளவல் மேல் அன்பால்!
“இளவலை அழித்த கந்தனை அழிப்பேன்!
களம் புகத் தயார் செய்யுங்கள்” என்றான்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி