[h=1]குறும்புக்காரன்[/h] 
குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணனை
விரும்புவரே அன்றி வெறுத்திடார் எவரும்!
குறும்புகள் செய்யும் குழந்தையை இன்றும்
குறும்புக்காரக் கண்ணன் என்கின்றோமே!
எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.
முன்னே ஓடும்போதும், திரும்பிப்
பின்னே பார்த்தபடிச் சென்று விழுந்து
புழுதியும் சேறும் பூசிய பின்னும் மிக
எழிலுருவாகக் காட்சி தருவது யார்?
இடைச் சிறுவருடன் ஆட்டம், பாட்டு;
இடையிடையே வெண்ணை பூனைக்கு!
கன்றுகளின் வாலைப் பற்றிக் கொண்டு
மண் மீது வழுக்கிச் செல்வது யார்?
கறந்த பாலைக் குடிப்பது மட்டுமின்றி,
கறக்கும் முன்பே பசுவிடம் குடிப்பது;
வெண்ணை, தயிர் எல்லோர் வீட்டிலும்
வேண்டுமளவு திருடித் தின்பது யார்?
நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!
குறும்புகள் செய்தால்தான் அது ஒரு குழந்தை;
வெறும் பொம்மையே வைத்தபடியே இருந்தால்!
குறும்புக்காரக் குழந்தைகளே வளர்ந்த பின்பு
துறு துறு மனிதர்களாக விளங்கிடுவார்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணனை
விரும்புவரே அன்றி வெறுத்திடார் எவரும்!
குறும்புகள் செய்யும் குழந்தையை இன்றும்
குறும்புக்காரக் கண்ணன் என்கின்றோமே!
எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.
முன்னே ஓடும்போதும், திரும்பிப்
பின்னே பார்த்தபடிச் சென்று விழுந்து
புழுதியும் சேறும் பூசிய பின்னும் மிக
எழிலுருவாகக் காட்சி தருவது யார்?
இடைச் சிறுவருடன் ஆட்டம், பாட்டு;
இடையிடையே வெண்ணை பூனைக்கு!
கன்றுகளின் வாலைப் பற்றிக் கொண்டு
மண் மீது வழுக்கிச் செல்வது யார்?
கறந்த பாலைக் குடிப்பது மட்டுமின்றி,
கறக்கும் முன்பே பசுவிடம் குடிப்பது;
வெண்ணை, தயிர் எல்லோர் வீட்டிலும்
வேண்டுமளவு திருடித் தின்பது யார்?
நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!
குறும்புகள் செய்தால்தான் அது ஒரு குழந்தை;
வெறும் பொம்மையே வைத்தபடியே இருந்தால்!
குறும்புக்காரக் குழந்தைகளே வளர்ந்த பின்பு
துறு துறு மனிதர்களாக விளங்கிடுவார்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


