[h=1]தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.[/h] 
செறிந்த அறிவினன் ஆத்மா ஆயினும்,
சிறந்த உடலின்றி இயங்க இயலாதவன்;
துரத்தும் கரும வினைகளை அழிக்கவும்,
துறந்த மனதுடன் சித்திக்கு முயலவும்;
கடமை உணர்வுடன் உடலைப் பேணுவீர்!
உடலே ஆத்மா குடியிருக்கும் கோவில்;
“சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத”,
உடல் இருந்தால் தான் முக்திக்கு முயல!
ஊனுடன் உயிர் கலந்து வாழ்ந்திட,
தேவைகள் சில நாம் பூர்த்தி செய்குவோம்;
தேனும், பாலும் எனத் தம் தேவைகளை,
வானளவாக வளர்த்த வேண்டாம்.
எத்தனை பொருட்கள் தேவை என்போமா,
அத்தனை பொருட்களின் வசத்தில் சிக்குவோம்;
எத்தனை பொருட்கள் தேவை இல்லையோ,
அத்தனைக்கத்தனை விடுதலை அடைவோம்.
“அகழ்வாரை தாங்கும்” பூமி இருக்க,
அகன்ற கட்டில் , மெத்தைகள் எதற்கு?
திண்ணென்று இரு நீள் கரங்கள் இருக்க,
திண்டினைத் தேடி, நாடுவது எதற்கு?
கனி, காய்கறிகள் பசி தீர்க்கும் எனில்,
இனிக்கும் உணவினைத் தேடுவது எதற்கு?
பருத்தி ஆடைகளே மானம் மறைப்பதால்,
பகட்டான ஜரிகை பட்டாடைகள் எதற்கு?
புன்னகையால் முகம் பொலிவுடன் இருக்க,
பொன்னகையைத் தேடி போவது எதற்கு?
சின்ன இல்லத்தில், சீரிய வாழ்வு என்னாமல் ,
மின்னலைத் தொட்டிடும் மாளிகைகள் எதற்கு?
தன் தலைமுறை வாழ வழி செய்தாலும்,
பின் ஏழு தலைமுறைக்கு சேர்ப்பது எதற்கு?
பளபளக்கும் பேருந்து பயணம் இருக்க,
குளுகுளு வண்டிகளை வாங்குவது எதற்கு?
“மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்”
மற்ற உயிரினங்கள் முற்றும் நம்புகின்றன,
மனிதன் மட்டும் “இன்னமும் வேண்டும்”, என
மாளாத் துயரைத் தேடிச் செல்கிறான்.
தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்,
சேவையை பெருக்கிப் பாருங்கள்;
தனக்கென வாழ்பவனுக்கு தன்னிறைவில்லை,
தனக்கென வாழாதான் தன்னிறைவடைகிறான்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

செறிந்த அறிவினன் ஆத்மா ஆயினும்,
சிறந்த உடலின்றி இயங்க இயலாதவன்;
துரத்தும் கரும வினைகளை அழிக்கவும்,
துறந்த மனதுடன் சித்திக்கு முயலவும்;
கடமை உணர்வுடன் உடலைப் பேணுவீர்!
உடலே ஆத்மா குடியிருக்கும் கோவில்;
“சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத”,
உடல் இருந்தால் தான் முக்திக்கு முயல!
ஊனுடன் உயிர் கலந்து வாழ்ந்திட,
தேவைகள் சில நாம் பூர்த்தி செய்குவோம்;
தேனும், பாலும் எனத் தம் தேவைகளை,
வானளவாக வளர்த்த வேண்டாம்.
எத்தனை பொருட்கள் தேவை என்போமா,
அத்தனை பொருட்களின் வசத்தில் சிக்குவோம்;
எத்தனை பொருட்கள் தேவை இல்லையோ,
அத்தனைக்கத்தனை விடுதலை அடைவோம்.
“அகழ்வாரை தாங்கும்” பூமி இருக்க,
அகன்ற கட்டில் , மெத்தைகள் எதற்கு?
திண்ணென்று இரு நீள் கரங்கள் இருக்க,
திண்டினைத் தேடி, நாடுவது எதற்கு?
கனி, காய்கறிகள் பசி தீர்க்கும் எனில்,
இனிக்கும் உணவினைத் தேடுவது எதற்கு?
பருத்தி ஆடைகளே மானம் மறைப்பதால்,
பகட்டான ஜரிகை பட்டாடைகள் எதற்கு?
புன்னகையால் முகம் பொலிவுடன் இருக்க,
பொன்னகையைத் தேடி போவது எதற்கு?
சின்ன இல்லத்தில், சீரிய வாழ்வு என்னாமல் ,
மின்னலைத் தொட்டிடும் மாளிகைகள் எதற்கு?
தன் தலைமுறை வாழ வழி செய்தாலும்,
பின் ஏழு தலைமுறைக்கு சேர்ப்பது எதற்கு?
பளபளக்கும் பேருந்து பயணம் இருக்க,
குளுகுளு வண்டிகளை வாங்குவது எதற்கு?
“மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்”
மற்ற உயிரினங்கள் முற்றும் நம்புகின்றன,
மனிதன் மட்டும் “இன்னமும் வேண்டும்”, என
மாளாத் துயரைத் தேடிச் செல்கிறான்.
தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்,
சேவையை பெருக்கிப் பாருங்கள்;
தனக்கென வாழ்பவனுக்கு தன்னிறைவில்லை,
தனக்கென வாழாதான் தன்னிறைவடைகிறான்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி


