6#24g.திருமணம்
இறந்து விழுந்தவர் சுற்றத்தினர்;
வருந்தி நின்றாள் வள்ளியம்மை.
சென்றான் முருகன் பொழில் நீங்கி.
பின் தொடர்ந்தாள் வள்ளியம்மை.
நாரதர் அங்கே தோன்றிக் கூறினார்;
“இறந்தவர் உயிர் பெற வேண்டும்”
பொழிலுக்கு வந்தான் முருகன்,
“எழுப்புவாய் உன் சுற்றத்தினரை!”
விழுந்தவர்கள் பிழைத்து எழுவீர்!”
விரும்பி வேண்டினாள் வள்ளியம்மை.
பிழைத்து எழுந்தனர் இறந்தவர்கள்!
தழைத்தது மகிழ்ச்சி மீண்டும் அங்கு.
திரு உருவைக் காட்டினான் வேடன்
பெருமிதம் கொண்டனர் வேடுவர்
தங்கள் ஊரிலேயே மணம் புரியத்
தாள் பணிந்து இறைஞ்சி வேண்டிட,
வேடுவர்களின் வேண்டுகோளுக்கு
வேற்படை வேந்தன் இணங்கினான்.
நாரத முனியுடன் ஊரை அடைந்தான்.
ஆறுமுகன் வள்ளியை நோக்கவும்,
மறைந்தது அவள் வேடுவக் கோலம்!
நிறைந்தது தெய்வத் திருக் கோலம்!
நீர் வார்த்து நம்பி பெண்ணைத் தர
நாரதர் செய்தார் திருமணச் சடங்கு.
பெருமானுடன் தோன்றினர் உமை,
திருமால், பிரமன், இந்திரன், தேவர்.
வாழ்த்துரை வழங்கினர் அனைவரும்
வாழ்த்தித் தூவினர் மங்கல அரிசியை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
இறந்து விழுந்தவர் சுற்றத்தினர்;
வருந்தி நின்றாள் வள்ளியம்மை.
சென்றான் முருகன் பொழில் நீங்கி.
பின் தொடர்ந்தாள் வள்ளியம்மை.
நாரதர் அங்கே தோன்றிக் கூறினார்;
“இறந்தவர் உயிர் பெற வேண்டும்”
பொழிலுக்கு வந்தான் முருகன்,
“எழுப்புவாய் உன் சுற்றத்தினரை!”
விழுந்தவர்கள் பிழைத்து எழுவீர்!”
விரும்பி வேண்டினாள் வள்ளியம்மை.
பிழைத்து எழுந்தனர் இறந்தவர்கள்!
தழைத்தது மகிழ்ச்சி மீண்டும் அங்கு.
திரு உருவைக் காட்டினான் வேடன்
பெருமிதம் கொண்டனர் வேடுவர்
தங்கள் ஊரிலேயே மணம் புரியத்
தாள் பணிந்து இறைஞ்சி வேண்டிட,
வேடுவர்களின் வேண்டுகோளுக்கு
வேற்படை வேந்தன் இணங்கினான்.
நாரத முனியுடன் ஊரை அடைந்தான்.
ஆறுமுகன் வள்ளியை நோக்கவும்,
மறைந்தது அவள் வேடுவக் கோலம்!
நிறைந்தது தெய்வத் திருக் கோலம்!
நீர் வார்த்து நம்பி பெண்ணைத் தர
நாரதர் செய்தார் திருமணச் சடங்கு.
பெருமானுடன் தோன்றினர் உமை,
திருமால், பிரமன், இந்திரன், தேவர்.
வாழ்த்துரை வழங்கினர் அனைவரும்
வாழ்த்தித் தூவினர் மங்கல அரிசியை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.



