• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


கல்கியின் சிலேடை!


கலைவாணர் N S K அவர்கள், என்றென்றும் நம்

கலை உலகத்திலே நிலை பெற்று நிற்பவர். தம்

துணைவி T A மதுரத்துடன், நகைச்சுவையிலே
இணையிலா ஜோடியாக உலா வந்தவர் அவர்!

ஒரு முறை கல்கி அவர்களைத் தம் இல்லத்தில்
விருந்துக்கு வருமாறு அழைத்தாராம். கல்கியும்

வந்தவுடன், 'ஏதாவது பானம் தரலாமே!', என்று
வந்த எண்ணத்தால், அவரையே வினவினாராம்,

'எந்தப் பானம் வேண்டும்? காபியா, டீயா?' என்று.
இந்தக் கேள்விக்கு பதில் வந்தது, 'டீயே மதுரம்'!!


:thumb:
 

பிராணன் எடுக்கும் பிரானா மீன்கள்!


வண்ண வண்ண மீன்களைக் கண்டாலே,

திண்ணமாய் மனதில் மகிழ்ச்சி பெருகும்.

சின்ன அளவில் உள்ள ஒரு வகை மீன்கள்
எண்ண முடியாத தீங்கு செய்ய வல்லவை!

பிரானா என்னும் வகை மீன்தான் அது, பல
பிராணங்களையும் போக வைக்க வல்லது!

நல்ல நீர் நிரம்பிய குளத்திலும், ஆற்றிலும்
உள்ளவை; தென் அமெரிக்காவில் அதிகம்!

சிறிய அளவில் இருந்தாலும், ஈட்டி போன்ற
கூரிய பற்கள் உள்ளதால், கூட்டமாய் வந்து,

தாகம் தீர்க்க வரும் பிராணிகளின் உயிரைப்
போக வைத்து, முழுவதும் தின்று, வெறும்

எலும்புக் கூட்டை விட்டு வைக்கும்; மனம்
கலங்கும் இந்த பயங்கரத்தைக் கேட்டதும்!

மனிதரும் சளைத்தவரில்லை; இவற்றின்
இனிய சுவையினை ரசித்து உண்ணுவார்!

கூரிய பற்களைத் தமது ஆயுத நுனிகளில்
சீரிய முறையில் பொருத்தியும் மகிழ்வார்!

தாடை எலும்புகளைப் பற்களோடு எடுத்து,
சோடை போகாத கத்தரிக்கோல் செய்வார்!

மனித குலத்திற்குப் பயன் தந்திடும் இவை,
இனிய உயிர்களை மாய்ப்பது மிக அதிசயம்!


பிரானா மீன் - தமிழ் விக்கிப்பீடியா

:fish:

 

Piranha-search-for-food :fear:

Source: Google images

piranha-search-for-food.jpg

 

சாவி எங்கே?


எங்கள் இனிய இல்லத்தின் பூட்டுக்களுக்கு

எங்களிடம் உள்ளன இரண்டு 'செட்' சாவிகள்.

ஒரு நாள் விடியலில் அறிந்தேன், அவற்றில்
ஒரு சாவிக் கொத்தைக் காணோம் என்பதை!

தேடலைத் துவக்கினேன், என்னவர் அறியாது!
தேடுவதை அறிந்தார், என் தவிப்பைப் பார்த்து!

கண்ணில் படும் வேலைகளில் ஈடுபடுவதால்,
பண்ண வேண்டிய வேலைகளை மறக்கிறேன்!

முன் தினம் பூட்டிய பின்பு, அதன் இடத்திலே
வந்து மாட்டியிருந்தால், வம்பே இருக்காதே!

எல்லா இடங்களையும் அலசி ஆராய்ந்த பின்,
என்னவர் கண்டார்; அது தையல் மெஷின் மீது!

என்னதான் செய்தேன் முன் தினம் என ஆராய,
என் தவறு புரிந்தது. இதோ, விவரிக்கின்றேன்!

முன் தினம் இரவு, எங்கள் வாசல் கதவுகளைச்
சென்று நான் பூட்டிவிட்டு வரும் பொழுதினில்,

ஒளிர்ந்தது மின் விளக்கு சுவாமி அறையிலே;
திறந்திருந்தது அந்த அறையின் ஜன்னல்கள்!

மின் விளக்கினை நிறுத்திய பின்னர், இரண்டு
ஜன்னல்களையும் மூட விழைந்து, சாவியை

இடக்கையில் பிடித்து, வலக்கையால் முயல,
இடக்குச் செய்தது ஜன்னல்; மூட வரவில்லை!

அருகிலே தையல் மெஷின் இருக்க, சாவியை
எளிதிலே எடுக்கலாமென, அதில் வைத்தேன்!

தொலைபேசி மணி அப்போது கிணு கிணுக்க,
அலைபாயும் நெஞ்சுடன் ஓடி எடுத்தேன்! என்

மாணவிக்கு சங்கீத வகுப்பின் நேரத்தைக் கூறி,
மாடிக் கதவுகள் மூடியுள்ளதா என்றும் பார்த்து,

ஆனந்தமாகச் சயனம் செய்யச் சென்றேன்; பின்
ஆனந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன் நான்!

இடக்கையால் ஒரு பொருளை நாம் வைத்தால்,
இடத்தை மறந்து அதைத் தேட வைத்திடுமாம்!

இதை ஒரு விளையாட்டுச் செய்தி என்றுதானே
இதுகாறும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்!


:lock1:

 
ஓ அதனால் தான் இடதுகை செய்வதை வலது கை அறியாது என்று சொல்லுகிறார்களோ?
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது!! தீவிரவாதியின் மரணம் பற்றி எதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்தேன் ராஜி மேடம்!!

Cheers
 

மனோஹர் சார்!


இடது கை செய்வதை மூளையே அறியாத போது, வல
து கை எப்படி அறியும்? :)

சமீபத்தி
ல் முகப் புத்தகம் ( Face book!) ஒரு பெண்ணையும் அவள் நண்பியையும் படுத்திய பாட்டைப் பார்த்த பின்,

நான் மோடி பற்றி எழுதிய
கவிதையையும்
எடுத்துவிட்டேன்! தீவிரவாதி பற்றி எழுதாததற்கும் இதுதான் காரணம்.

ஏற்கனவே
ஓ அமெரிக்கா ... நூலில், நான் நொந்து நூலாகிவிட்டேன்! நண்பர்கள் தயவால் தப்பித்தேன்.
ஒரு நன்மை!

திரு. குஞ்சுப்பு
சாரின் ருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது! :D
 

சாவி எங்கே?


எங்கள் இனிய இல்லத்தின் பூட்டுக்களுக்கு

எங்களிடம் உள்ளன இரண்டு 'செட்' சாவிகள்.

ஒரு நாள் விடியலில் அறிந்தேன், அவற்றில்
ஒரு சாவிக் கொத்தைக் காணோம் என்பதை!

தேடலைத் துவக்கினேன், என்னவர் அறியாது!
தேடுவதை அறிந்தார், என் தவிப்பைப் பார்த்து!

கண்ணில் படும் வேலைகளில் ஈடுபடுவதால்,
பண்ண வேண்டிய வேலைகளை மறக்கிறேன்!

முன் தினம் பூட்டிய பின்பு, அதன் இடத்திலே
வந்து மாட்டியிருந்தால், வம்பே இருக்காதே!

எல்லா இடங்களையும் அலசி ஆராய்ந்த பின்,
என்னவர் கண்டார்; அது தையல் மெஷின் மீது!

என்னதான் செய்தேன் முன் தினம் என ஆராய,
என் தவறு புரிந்தது. இதோ, விவரிக்கின்றேன்!

முன் தினம் இரவு, எங்கள் வாசல் கதவுகளைச்
சென்று நான் பூட்டிவிட்டு வரும் பொழுதினில்,

ஒளிர்ந்தது மின் விளக்கு சுவாமி அறையிலே;
திறந்திருந்தது அந்த அறையின் ஜன்னல்கள்!

மின் விளக்கினை நிறுத்திய பின்னர், இரண்டு
ஜன்னல்களையும் மூட விழைந்து, சாவியை

இடக்கையில் பிடித்து, வலக்கையால் முயல,
இடக்குச் செய்தது ஜன்னல்; மூட வரவில்லை!

அருகிலே தையல் மெஷின் இருக்க, சாவியை
எளிதிலே எடுக்கலாமென, அதில் வைத்தேன்!

தொலைபேசி மணி அப்போது கிணு கிணுக்க,
அலைபாயும் நெஞ்சுடன் ஓடி எடுத்தேன்! என்

மாணவிக்கு சங்கீத வகுப்பின் நேரத்தைக் கூறி,
மாடிக் கதவுகள் மூடியுள்ளதா என்றும் பார்த்து,

ஆனந்தமாகச் சயனம் செய்யச் சென்றேன்; பின்
ஆனந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன் நான்!

இடக்கையால் ஒரு பொருளை நாம் வைத்தால்,
இடத்தை மறந்து அதைத் தேட வைத்திடுமாம்!

இதை ஒரு விளையாட்டுச் செய்தி என்றுதானே
இதுகாறும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்!


:lock1:




"இடக்கையால் ஒரு பொருளை நாம் வைத்தால்,
இடத்தை மறந்து அதைத் தேட வைத்திடுமாம்!"


ஆஹா..என் போன்றவர்க்கு இது பொருந்தாதே....!!


Tvk
 
சலசலப்புக்கு அஞ்சும் பனங்க்காட்டு நரியா எங்கள் ராஜி மேடம்!! கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள். எங்களுக்கு தேவை தங்களின் அருமையான தமிழ் பாடல்கள். மிகவும் நன்றி.
 
......... ஆஹா..என் போன்றவர்க்கு இது பொருந்தாதே....!!
இடம் வலமாக மாறிவிடும், உங்களைப் போன்ற திறமைசாலிகளுக்கு!!
icon14.png
 
In my opinion, what is there to write about the terrorist death.. Most unfortunate what happened in Bombay Taj and other sites.. where terror reigned on that particular day.. it was similar to what happened in the US a few years before that..

Misguided youth, who lost their lives and invited such bad karma into their future lives.. what a shame.. when someone hurts in this manner, not only the family of the hurt suffers but also the guys family who lives in constant fear of his actions and the ultimate result

Nobody gains.. Instead of writing about it I would start educating the children of the world to honor and cherish one another, not to make the same mistakes their parents generation did.. NO matter where you are, never teach your children to hate.. let them embrace the different cultures and see the beauty instead of fearing it.. Educating the children is the only way the future is going to be secure for all of us..
 

சாவி எங்கே?


எங்கள் இனிய இல்லத்தின் பூட்டுக்களுக்கு

எங்களிடம் உள்ளன இரண்டு 'செட்' சாவிகள்.

ஒரு நாள் விடியலில் அறிந்தேன், அவற்றில்
ஒரு சாவிக் கொத்தைக் காணோம் என்பதை!

தேடலைத் துவக்கினேன், என்னவர் அறியாது!
தேடுவதை அறிந்தார், என் தவிப்பைப் பார்த்து!

கண்ணில் படும் வேலைகளில் ஈடுபடுவதால்,
பண்ண வேண்டிய வேலைகளை மறக்கிறேன்!

முன் தினம் பூட்டிய பின்பு, அதன் இடத்திலே
வந்து மாட்டியிருந்தால், வம்பே இருக்காதே!

எல்லா இடங்களையும் அலசி ஆராய்ந்த பின்,
என்னவர் கண்டார்; அது தையல் மெஷின் மீது!

என்னதான் செய்தேன் முன் தினம் என ஆராய,
என் தவறு புரிந்தது. இதோ, விவரிக்கின்றேன்!

முன் தினம் இரவு, எங்கள் வாசல் கதவுகளைச்
சென்று நான் பூட்டிவிட்டு வரும் பொழுதினில்,

ஒளிர்ந்தது மின் விளக்கு சுவாமி அறையிலே;
திறந்திருந்தது அந்த அறையின் ஜன்னல்கள்!

மின் விளக்கினை நிறுத்திய பின்னர், இரண்டு
ஜன்னல்களையும் மூட விழைந்து, சாவியை

இடக்கையில் பிடித்து, வலக்கையால் முயல,
இடக்குச் செய்தது ஜன்னல்; மூட வரவில்லை!

அருகிலே தையல் மெஷின் இருக்க, சாவியை
எளிதிலே எடுக்கலாமென, அதில் வைத்தேன்!

தொலைபேசி மணி அப்போது கிணு கிணுக்க,
அலைபாயும் நெஞ்சுடன் ஓடி எடுத்தேன்! என்

மாணவிக்கு சங்கீத வகுப்பின் நேரத்தைக் கூறி,
மாடிக் கதவுகள் மூடியுள்ளதா என்றும் பார்த்து,

ஆனந்தமாகச் சயனம் செய்யச் சென்றேன்; பின்
ஆனந்த நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன் நான்!

இடக்கையால் ஒரு பொருளை நாம் வைத்தால்,
இடத்தை மறந்து அதைத் தேட வைத்திடுமாம்!

இதை ஒரு விளையாட்டுச் செய்தி என்றுதானே
இதுகாறும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்!


:lock1:

Superb. Why don't you join Patti Mandrams, so that we can see
see you in Media also.

Balasubramanian
 
Sowbagyavathy Raji Ram, Greetings.

I refer to your message in post #91. I looked at your 'நொந்து நூலாகி விட்டேன்!' situation.... only few posts... I can't help it but have to remind you about one situation in the recent past that lasted for few days aimed at one new member by three or more veterans..... now can you imagine the damage that new member would have faced? Also for your very kind information, idioms and proverbs are not too far apart either!:)

Cheers!
 
Last edited:
சலசலப்புக்கு அஞ்சும் பனங்க்காட்டு நரியா எங்கள் ராஜி மேடம்!! கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள். எங்களுக்கு தேவை தங்களின் அருமையான தமிழ் பாடல்கள். மிகவும் நன்றி.

Sri. Manohar Kumar, Greetings.

It is nice to see your considering this as ' kurukshetra war' and jumping in to support Smt. Raji Ram! :) Nothing wrong in extending these kind of nice deeds to other members too!

Cheers!
 
Superb. Why don't you join Patti Mandrams, so that we can see you in Media also.
Dear Bala Sir,

Thanks a lot for your compliment. Patti Mandrams need lot of verbal fights too! I am not in favour of that.

I used to participate in music, dance, drama and patti mandram programs during my school and college days.

I was regularly playing Veena concerts for 6 years at AIR Visakhapatnam, soon after my wedding. After we

settled down in Sing. Chennai, I continue to teach vocal and veena in Carnatic music and fondly called 'PAttu Maam'

by my dear students. :)

 
........ It is nice to see your considering this as ' kurukshetra war' and jumping in to support Smt. Raji Ram!......
Dear Raghy Sir,
I have already given a name for such fights. They are called 'quotation fights'... :argue:

இதெல்லாம் forum - ல சகஜமப்பா......... :cool:

P.S: அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்!! :high5:
 

இது எப்படி இருக்கு?


இந்தியப் பண்பாட்டில் ஊறிவிட்டு,
இந்த நாட்டை விட்டு U S A சென்று,

அங்கு நான் பார்த்த பல நல்லவை,
அல்லவைகளை முன் வைத்தால்,

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்,
திரண்டு எழுகின்றது குற்றச்சாட்டு,

இந்த வலைத்தள வரம்புகளையே
அந்த எழுத்துக்கள் மீறுகிறதென்று!

என்றால், ஆஸ்கார் விருது வாங்கி,
சென்றவிடமெல்லாம் புகழ் பெற்ற,

நம் செல்லப் பிள்ளையைப் பற்றி
நாமே குறைகள் சொல்லலாமோ?

:humble:
 
I am not concerned about the reply I get. In fact, I don't even care for a reply. I just wanted to make my point. I can see, I made that. I am not intersted anymore.

Cheers!
 
Dear Raji,

Not to mean this note as advice. I have read many times that the
Best times to water the plants is the evenings after the sun
Has set.

That way the plant gets the benefit of the aqua for a good
12 hours, enough time for a maximum amount to be absorbed.

This made sense to me.

So dear lady, next time have the full benefit of your afternoon
Siesta and wake up a refreshed queen :). You may then
Daintily fill up water in a pail and make your plants happy.

Best wishes.......
 
........ Not to mean this note as advice. I have read many times that the
Best times to water the plants is the evenings after the sun has set.......
Dear Sir,

Shall remember this! Thank you. But, I have a long garden hose and do not have to carry water in a pail! :)
 
Raji Ram Madam

Normally I visit the Anjaneyar Temple at Nanganallur at frequent intervals and also visit
my b-in-l's house at Alwar Nagar. If I have the address, I would be able to drop in so
that it will give an opportunity to see a proud lady. May God bless you.

Balasubramanian
Ambattur
 

சுவாமியே சரணம்!


ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் பெருகிட,

ஐயப்பன் பாயசப் பிரசாதம் செய்வது எப்படி?

சென்ற முறை பாயச 'டின்'களின் விற்பனை
சென்றதாம் ஒரு கோடி முப்பதாயிரம் என்று!

மனிதனால் செய்ய இயலாத செயல்களை
இனிதே இயந்திரங்கள் செய்யும் அல்லவா?

ஒரு நொடிக்கு மூன்று என்கின்ற கணக்கில்,
ஒரு நிமிடத்தில் தயாராகும் நூற்று எண்பது!

இதைவிட வேகமாகத் தயாரிக்க, மெஷினை
இன்று தேடி வருவதாகக் கூறுகிறது செய்தி!

பன்னிரண்டு பக்தர்கள் ரஷ்ய நாட்டிலிருந்து!
இரண்டு பேர் மட்டும் அதில் கன்னி சாமிகள்!

ஐயப்பன் தரிசனம் மட்டும் குறிக்கோளாகும்;
ஐயப்ப பக்தர்களாக உண்டு, மண்டல விரதம்!

இந்த பக்தியை எண்ணினால் மனமகிழ்சியே;
வந்த வேற்று நாட்டினரிடம் உள்ளது பக்தியே!


:hail: . . . :pray:


 

Latest ads

Back
Top