vyasapuja on guru purnima
29-07-2026 குரு பூர்ணிமா- வியாஸ பூஜை செய்முறை விளக்கம்.
பிறவி இலா தன்மை அடைய ப்ருஹ்ம ஸூத்ரம், பாரதம் ,பாகவதம், முதலான 18 புராணங்கள் எழுதியவரும், வேதங்க்களை
நான் கு பாகங்களாக பிறித்தவரும், மஹரிஷிகளுக்கு தலைவருமான கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வஸிஷ்டரின் கொள்ளு பேரனும், சக்தியின் பெளத்ரரும், பராசரரின் புதல்வருமான வேத வ்யாசருக்கு இன்று பூஜை செய்ய வேண்டும்.
வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பூஜை செய்யலாம். ஒரு பீடம் தயாரித்து அதில் மஞ்சள் அக்ஷதை மணடலமாக போட்டு, அதன் மேல் 45 எலுமிச்சை பழங்களை வரிசையாக வைத்து அந்த பழங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.
அக்ஷதை மண்டலத்தின் நடுவில் 5 எலுமிச்சை பழங்கள் வைத்து அதில் கிருஷ்ணர், வாசுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர்,
அனிருத்தர் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும். இந்த 5 எலிமிச்சம்பழகளுக்கு தெற்கில் 5 எலிமிச்சம்பழம் வைத்து வ்யாஸர், ஸுமந்து, ஜைமினி, வைசம்பாயனர், பைலர் என்ற ஐந்து முனிவர்கள் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.
வடக்கு பக்கத்தில் 5 எலிமிச்சை பழங்களில் ஆதி சங்கரர், ஸுரேஸ்வரர், பத்ம பாதர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகிய ஆசார்ய புருஷர்களை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு இரண்டுபக்கத்தில் 2 எலிமிச்சம் பழம் வைத்து ப்ருஹ்மா, சிவன் இருவரையும் ஆவாஹனம் செய்து, 4 திக்குகளில் 4 எலிமிச்சம்பழம் வைத்து ஸநகர், ஸநந்தனர், ஸனத் குமாரர், ஸனத் ஸுஜாதர்களையும் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும். இவர்கள் ப்ருஹ்மாவின் மானஸ புத்திரர்கள் ஆவர்.
கிருஷ்ணருக்கு கிழக்கில் 5 எலிமிச்சம்பழம் வைத்து குரு, பரம குரு, பரமேஷ்டி குரு, பராத்பர குரு ப்ருஹ்ம வித்யா ஸம்ப்ரதாய போத குருக்கள் --ஆவாஹனம், 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.
திராவிடாசார்யார்; கெளட பாதர், கோவிந்த பகவத் பாதர், ஸங்க்க்ஷேப சாரீரகாசார்யாள், விவரணாசார்யாள், சுகர், நாரதர், இந்திரன், யமன், அக்னி, வருணன், நிருருதி, வாயு, ஸோமன், ஈசானன், கணேசன், க்ஷேத்திர பாலர், துர்கா, ஸரஸ்வதி ஆகியோர் களையும் ஆவாஹனம், தனி தனியே 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.
ஒரு பொது இடத்தில் பலர் ஒன்று சேர்ந்து செய்யலாம். ஶ்ரேயஸ் அடையலாம். இதுவே வ்யாஸ பூஜை அல்லது குரு பூர்ணிமா பூஜை எனப்படும்.
29-07-2026 குரு பூர்ணிமா- வியாஸ பூஜை செய்முறை விளக்கம்.
பிறவி இலா தன்மை அடைய ப்ருஹ்ம ஸூத்ரம், பாரதம் ,பாகவதம், முதலான 18 புராணங்கள் எழுதியவரும், வேதங்க்களை
நான் கு பாகங்களாக பிறித்தவரும், மஹரிஷிகளுக்கு தலைவருமான கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வஸிஷ்டரின் கொள்ளு பேரனும், சக்தியின் பெளத்ரரும், பராசரரின் புதல்வருமான வேத வ்யாசருக்கு இன்று பூஜை செய்ய வேண்டும்.
வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பூஜை செய்யலாம். ஒரு பீடம் தயாரித்து அதில் மஞ்சள் அக்ஷதை மணடலமாக போட்டு, அதன் மேல் 45 எலுமிச்சை பழங்களை வரிசையாக வைத்து அந்த பழங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.
அக்ஷதை மண்டலத்தின் நடுவில் 5 எலுமிச்சை பழங்கள் வைத்து அதில் கிருஷ்ணர், வாசுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர்,
அனிருத்தர் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும். இந்த 5 எலிமிச்சம்பழகளுக்கு தெற்கில் 5 எலிமிச்சம்பழம் வைத்து வ்யாஸர், ஸுமந்து, ஜைமினி, வைசம்பாயனர், பைலர் என்ற ஐந்து முனிவர்கள் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.
வடக்கு பக்கத்தில் 5 எலிமிச்சை பழங்களில் ஆதி சங்கரர், ஸுரேஸ்வரர், பத்ம பாதர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகிய ஆசார்ய புருஷர்களை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு இரண்டுபக்கத்தில் 2 எலிமிச்சம் பழம் வைத்து ப்ருஹ்மா, சிவன் இருவரையும் ஆவாஹனம் செய்து, 4 திக்குகளில் 4 எலிமிச்சம்பழம் வைத்து ஸநகர், ஸநந்தனர், ஸனத் குமாரர், ஸனத் ஸுஜாதர்களையும் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும். இவர்கள் ப்ருஹ்மாவின் மானஸ புத்திரர்கள் ஆவர்.
கிருஷ்ணருக்கு கிழக்கில் 5 எலிமிச்சம்பழம் வைத்து குரு, பரம குரு, பரமேஷ்டி குரு, பராத்பர குரு ப்ருஹ்ம வித்யா ஸம்ப்ரதாய போத குருக்கள் --ஆவாஹனம், 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.
திராவிடாசார்யார்; கெளட பாதர், கோவிந்த பகவத் பாதர், ஸங்க்க்ஷேப சாரீரகாசார்யாள், விவரணாசார்யாள், சுகர், நாரதர், இந்திரன், யமன், அக்னி, வருணன், நிருருதி, வாயு, ஸோமன், ஈசானன், கணேசன், க்ஷேத்திர பாலர், துர்கா, ஸரஸ்வதி ஆகியோர் களையும் ஆவாஹனம், தனி தனியே 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.
ஒரு பொது இடத்தில் பலர் ஒன்று சேர்ந்து செய்யலாம். ஶ்ரேயஸ் அடையலாம். இதுவே வ்யாஸ பூஜை அல்லது குரு பூர்ணிமா பூஜை எனப்படும்.