• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


ஆயுத பூஜை...


வான் மழை கொட்டித் தீர்த்ததால், வெளியில்
நான் செல்லத் தயங்கினேன் எட்டு நாட்களாக!

நேற்று வானம் தெளிந்ததால், மன மகிழ்வுடன்,
நேற்று மாலை ஒரு சுற்றுச் சுற்றியும் வந்தேன்!

சிங்காரச் சென்னைத் தெருக்கள் நிலவு போல;
அங்கங்கே தேங்கிய மழை நீர்க் குட்டைகள் பல!

துள்ளுந்து ஓட்டுனர்கள் பாடு கொண்டாட்டம்; நம்
உள்ளூர் மக்கள் பாடு திண்டாட்டாம், செலவால்!

கேட்ட பணம் கை மாறினால், அந்த ஓட்டுனர்கள்,
ஓட்டுவார் கொஞ்சம் நிதானமாக! இல்லையேல்,

போகும் வேகத்தால், நம் சில எலும்புகள் முறிந்து
போகும் என்ற அச்சம் நம் மனதில் வரும் எழுந்து!

பொறி கடலை, அலங்காரப் பொருட்கள், பூக்கள்,
பெரிய பூசணிக் காய்கள், பழ வகைகள், இவைகள்

விற்பனையில் கொடி கட்டிப் பறக்க, முட்டி மோதி,
பற்பல இன மக்கள் மும்மரமாக அவற்றை வாங்க,

வண்டிகள் சுத்தமாய் மின்ன, அவற்றில் சந்தனம்,
வேண்டிய வடிவங்களில் தெளித்திருக்க, மாலை,

சின்ன வாழை மரங்கள், தோரணங்களோடு இருக்க,
சிதறிய பல திருஷ்டிப் பூசணிக்காய்களும் கிடக்க,

எலுமிச்சம் பழங்களை வண்டிச் சக்கரங்கள் நசுக்க,
பல விதக் காட்சிகள் இருந்தன கண்களை நிறைக்க!

வண்ண வண்ண உடைகளில் மக்கள் குழுமியிருக்க,
எண்ண எண்ண இனிக்கும் ஆயுத பூஜை நினைவுகள்!

:thumb:

 
During the vedic period, they had planned many things in relation to the sanctity.
Ayudha pooja is celebrated since ancient days on the ninth day after Mahishasuran
was destroyed by Goddess Durga - Chamundeshwari by using her weapons. Only with this in
view, the weapons that She used were kept aside and worshipped. That is why one
worship the tools and weapons that are used for earning the livelihood. Another importance of
Ayudha Puja - Arjun took back his weapons on the Vijayadasami day which he had hidden
under a Vani tree as he was not all happy with the War. There is also a belief that a
person who begins or renovates his learning to work on the Vijayadasami day will
secure a grand success as Arjuna did in the war of Kurushektra. There is a traditional
practice to clean all the tools and weapons and place it before the God applying Sandal
and Kumkum and decorate it with flowers. This is a conscious effort to seek the divine
blessings in the tools and objects that one uses each day so as to get assignments without
any hindrance. This is rather an expression of gratitude to God.


Balasubramanian
Ambattur
 

இது சாமர்த்தியம்!


கொலு வைப்பவர்கள், ஒவ்வொரு ஆண்டும்

கொலுவை அலங்கரிக்க, புது பொம்மைகள்

தேடித் தேடி வாங்கிடுவார்; பல கடைகளை,
நாடி நாடி அலைந்திடுவார்! ஆனால் சிலரோ

யானை விலை விற்கும் சில பொம்மைகளை,
பூனை விலையில் வாங்க வழியை அறிவார்!

நவராத்திரி வரும் முன்னே உள்ள விலைகள்,
நவராத்திரி முடிந்ததும், சரிந்து விழுந்திடும்!

விற்றால் போதும் என்ற நோக்கத்தில், அவை
விற்கப்படும் பின்னர், அடி மாட்டு விலைக்கே!

இந்த நேரம் வாங்கியதை பத்திரப்படுத்தினால்,
அந்த பொம்மைகள், அடுத்த ஆண்டு உதவுமே!

:decision:
 
dear RR !(post 1564 )
முழு பத்தியை படிக்காது ஒரு வரியை மட்டும் மனதில் வைத்தால் இது போலதான் விமர்சனம் வரும் வரிக்களுக்கு நடுவே படிப்பது
without reading the entire parah, if we keep some line in our mind
we will receive or pass such comments .reading in between lines.
if we watch the sorrow ,we will know the reason for the sorrow and will not commit such mistake
guruvayurappan
 
....... if we watch the sorrow ,we will know the reason for the sorrow and will not commit such mistake ....
Dear Guru sir,

Even if they suffer by mistakes done in their previous birth, by seeing people in sorrow, we will

know that God has given us a much better life! And we will be happy with what we have! :)
 
Dear Ravi Sir,

Your Tamil posts very refreshing to read and so too the thoughts that has been expressed. This is the first time i am reading your tamil post. Is this a new attempt?
Cheers.
 

சஞ்சலம்...

மனம் அமைதியாய் இருந்தால், நமக்கு
மனதில் எண்ண அலைகள் எழுந்திடும்!

மனம் சஞ்சலமாய் போது, எண்ணங்கள்
மனதில் புதிதாய் எழுந்திடத் தயங்கிடும்!

வேறு எந்த விஷயத்திலும் நாட்டமிலாது,

ஒரு சிந்தனையே மனதை நிறைத்திடும்!

என் மனச் சஞ்சலம் தீர்ந்த பின், பதிப்பேன்
என் புதிய எண்ண அலைகளைத் தவறாது!

:typing:

 
அலைகள் என்பதே ஆரவாரம் தானே?
அலைகள் அமைதியில் எப்படி எழும்பும்?
சஞ்சலச் சிந்தனை விடுத்து உங்கள்
வஞ்சமில் வரைவினைத் தொடர்வீர் தடையின்றி.
 
Sri. Guruvayurappan, Greetings.

I did not read between the lines. I made a comment when I read " என்றுமே ஆனந்தம் தேவையெனக் கேட்க, அன்றே காண்பித்தான் சோகமான பலரை!". There is no reading between the line because, that line was only that much. Sir, i never get ஆனந்தம் when I see சோகமான பலரை. That is me. Always I felt sad for them and tried to do something to help them. In my line of work I come across சோகமான பலர்on daily basis. No Sir, I don't try to find their fault from themselves for that situation either. Most often than not, those people could be sad due to depression caused by chronic pain. I always check if they have enough pain relief on board and talk to them to reassure them. I don't know, since I empathise others sadness as much as possible, whenever it is possible, try to alleviate such sadness.

Cheers!
 
Last edited:

செல்லக் குரல்!


தமிழகத்தின் செல்லக் குரலைத்
தமிழகம் தேர்ந்தெடுத்துவிட்டது!

இளம் பிஞ்சுப் பாலகன் வந்ததுமே
உளம் களித்த கரகோஷ அலைகள்!

மனம் மயக்கும் செல்லக் குரல்தான்;
மனம் மயக்கும் குரல் வளமும்தான்!

தன் மானசீக குருவையே நினைத்து,
தன் செல்லக் குரலால் மயக்கினான்!

விடலைப் பருவம் வந்தால், குரலும்
உடைந்திடும் அபாயம் இருந்தாலும்,

இத்தனை உன்னத இசை பாடுபவன்,
எத்தனை உயரத்தையும் எட்டுவான்!

எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு,
நல்லாசிகள் தொடர்ந்து வழங்குவான்!

:angel:
 
Hello RR Mam,wow ,it was a wonderful & happy experience to watch it.myself & my family members had nice time.all the kids were too good in their performance.I dnt feel like to comment on each kids performance,as its too tough to give a such a lovely direct show ,that too in that age group.hats off to their talent.:yo::cheer2:
 

Dear Dr. Narayani,

I watched the program only up to midnight and then went to :sleep:

This morning, I saw the program on youtube to know the result and felt happy!

P. S: The speed at which the program is uploaded is amazing! :high5:
 

ஆழமில்லா அன்பு!


அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேலென
உலக வழக்கு ஒன்று உள்ளது என அறிவோம்!

அன்புக்கும் இது போலச் சொல்ல இயலுமோ?
அன்பு ஆழமின்றி இருந்தால், தேய் பிறையோ?

குறைகள் இல்லாத மனிதர் இல்லை! அந்தக்
குறைகளை மறந்து தூய அன்பு மலராவிடில்,

ஆழ உழுது விளையும் நற்பயிர் போலல்லாது,
அகல உழுத விளைச்சல் போல, குறைந்திடும்!

:pout:
 
அலைகள் என்பதே ஆரவாரம் தானே?
அலைகள் அமைதியில் எப்படி எழும்பும்?
சஞ்சலச் சிந்தனை விடுத்து உங்கள்
வஞ்சமில் வரைவினைத் தொடர்வீர் தடையின்றி.
மிக்க நன்றி, நண்பரே!

மன அமைதி தருகின்றது
தங்களது பின்னூட்டம்!

மன அமைதியின்றி, இல்லை என் எண்ண ஓட்டம்!
! :)

 
Dear Ravi Sir,

Your Tamil posts very refreshing to read and so too the thoughts that has been expressed. This is the first time i am reading your tamil post. Is this a new attempt?
Cheers.

Shri manoharkumar,


Glad to note that you found my short kavithais with expressions of my thoughts refreshing. Thank you for your note of appreciation.

Many a times, I used to pen down my thoughts and feelings on a piece of paper in Hindi and Tamil and share with my friends, during my school and college days. While on my career path I seldom could do it. In this forum/thread my last two posts in Tamil were the first time ever.

I shall thank Shmt. RR to have initiated such a thread with a wonderful tittle - "Enna Alaigal", that inspired me to express my thoughts too in the form of a short poem.
 

கருமேகத்தின் விளிம்பில்...


புயல் வரும் முன் அமைதி எனும் ஆங்கிலம்!
புயலுக்குப் பின் அமைதி என்றிடும் நம் தமிழ்!

புயல் 'ஸான்டி' அமெரிக்காவைத் தாக்கிய பின்,
புயல் 'நீலம்' தமிழகத்தைத் தாக்கி வதைத்தது!

மரங்கள் பல வீழ்ந்து பல பாதைகளைத் தடுக்க,
மரங்கள் சில சரிந்து மின் கம்பங்களை அறுக்க,

மின்சாரம் துண்டிக்கப்பட்டது பல மணி நேரம்;
மின்சாரம் தந்தது எமது 'Inverter' கொஞ்ச நேரம்!

குளிர் சாதனப் பெட்டி நின்றது; சுடு நீர் நின்றது;
தளிர் இலைகள் கொட்டி, தோட்டம் நிறைந்தது!

எட்டாத உயரத்தில் காய்த்த மாங்காய்கள் சில
கிட்டின, மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடிட!

கணினி இயக்க அதிக மின்சாரச் செலவு; அதில்
இனி நான் சில மணி வேலை செய்யத் தடையே!

மாலை வேளை, ஒரே ஒரு குழாய் விளக்கிட்டு,
வேலை என்ன செய்திடலாம் என்று யோசித்து,

பல நாட்கள் உபயோகத்தில் நொந்து நூலாகிய,
பழம் 'டயரி' கொண்ட தொலைபேசி எண்களை,

புதிய டயரியில் எழுதி முடித்தேன்! இனிமேல்
கிழிந்த அறுதப் பழசைத் தொடவே வேண்டாம்!

தொலைக்காட்சி ஒளிபரப்பும் காண இயலாமல்,
தொலைபேசியும் கையுமாக அமர்ந்து கொண்டு,

பல நாட்கள் பேசாத நண்பிகளை அழைத்து, நான்
பல நாட்கள் எண்ணிய விஷயங்களைப் பரிமாறி,

நட்பைப் புதுப்பித்ததில் மகிழ்ந்தேன்; அவர்களின்
அன்புச் சொற்களில் நெகிழ்ந்தேன்! இதனால்தான்

'ஒவ்வொரு கருமேகத்தின் விளிம்பிலும் உள்ளது
ஒவ்வொரு வெள்ளி அகவுறை', என்று கூறுவரோ?


குறிப்பு:

'வெள்ளி அகவுறை' என்பது Google Translate software தந்த மொழிமாற்றம்! :ranger:
 

எட்டாத உயரத்தில் காய்த்த மாங்காய்கள் சில


கிட்டின, மர
ங்களெல்லாம் பேயாட்டம் ஆடிட!

IMG_3932.JPG
 

பூவாய் மலரும் பெண்ணே
உண் ஆசைகள் தான் எத்தனை
ஓராயிரம் கனவுகளை காணும்
உண் உணர்வுகள் தான் எத்தனை
உன்னை காணும் உண் விழிகள்
பார்க்கும் பார்வைகள் தான் எத்தனை
யார் அறிவாரோ உன்னை, பெண்ணே
உனக்குள் இருக்கும் ரகசியம் எத்தனை!!


உண் எண்ணங்கள் காட்டும் உண் அழகை

பெண்ணே, நீ அறிந்து கொள்வாயோ
உலகின் சாயம் உன்னை சூழ, பெண்ணே
உனக்குள் ஏற்படும் துடிப்புகள் எத்தனை
உண் வார்தைகளில் ஏற்படும் வறுமை
பெண்ணை, நீ தான் கண்டுகொள்வாயோ
சீற்றங்கள் தாக்கும் உன்னை, பெண்ணே
உனக்குள் இருக்கும் மேன்மை, தாங்குவதோ எத்தனை!!


பூவாய் மலரும் பெண்ணே
உண் ஆசைகள் தான் எத்தனை
ஓராயிரம் கனவுகளை காணும்
உண் உணர்வுகள் தான் எத்தனை
உன்னை காணும் உண் விழிகள்
பார்க்கும் பார்வைகள் தான் எத்தனை
யார் அறிவாரோ உன்னை, பெண்ணே
உனக்குள் இருக்கும் ரகசியம் எத்தனை!!
 
Last edited:

நண்பரே,


ஒரு பெண்ணின் துடிப்பு நன்கு வெளிப்படுகின்றது உங்கள் கவிதையில்!

வரும் கவிதைகளில், எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் நலம். :typing:


நட்புடன்,
ராஜி ராம் :)

 
உன்னை காணும் உண் விழிகள்
பார்க்கும் பார்வைகள் தான் எத்தனை
யார் அறிவாரோ உன்னை,
திரு.ரவி,
கவிஞரின் பார்வையில் இந்த வரிகளுக்கு சிறிது விளக்கம் தேவை எனக்கு. நன்றி
 

இன்னும் அமைதியே!


நீலம் புயல் அடித்து ஓய்ந்த பின்னும்,
நீல வானில் பறவைகளே இல்லை!

மாம்பழம் உண்ண வரும் பட்சிகளும்,
தாம் வேறு திசை நோக்கிப் போயின!

துள்ளி விளையாடும் அணில் கூட்டம்,
துள்ளலை மறந்து ஒளிந்து கொண்டது!

மேகம் பார்த்து, கூவி அழைத்துத் தனது
தாகம் தீர்க்கும் 'அக்காப் பட்சி', இன்றும்

தாபத்துடன் கூவும் குரலை மறந்ததோ?
கோபத்துடன் எங்கேயோ மறைந்ததோ?

குரலின் கரகரப்பை எண்ணாது, மகிழ்ந்து
குரல் எழுப்பும் தவளை கூட்டம் எங்கே?

கன மழையால் அமைதியானது நகரம்;
தினம் கேட்கும் பள்ளிக் குழந்தைகளின்

குதூகலக் குரல்களும் இல்லை! ஆனால்
குதூகலம் அவர்களுக்கு, விடுமுறையால்!

:dance:
 
திருமதி ராஜி ராம், நான் google transliteration பயன் படுத்தி, தமிழில் என் சிறிய கவிதைகளை பதிவுசெய்கின்றேன்.

எனக்கு தமிழில் சிறந்த எல்லாம் தமிழ் இல்லக்கிய வார்த்தைகளும் தெரியாது.
எழுத்து பிழைகளை கண்டுபிடிப்பதும் எனக்கு தெரியாது.

எதிர்காலத்தில் கூடியவரை பிழைகள் இல்லாமம் பார்த்துகொள்கிறேன். ஏற்படும் பிழைகளை மன்னித்து விடுங்கள்


:pray:

தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி
 
Last edited:


உன்னை காணும் உண் விழிகள்
பார்க்கும் பார்வைகள் தான் எத்தனை
யார் அறிவாரோ உன்னை........

திரு.ரவி,
கவிஞரின் பார்வையில் இந்த வரிகளுக்கு சிறிது விளக்கம் தேவை எனக்கு. நன்றி

திரு மனோஹர்குமார்,

1 ) உன்னை காணும் உண் விழிகள் - என்றால்

தன் விழிகளை தாங்கும் அந்த பெண்ண, தான் யார் என்று நன்றாகவே பார்த்துக்கொள்ளமுடியும். அதாவது, அவளோடிய விழிகள் அவள் யார் என்று அவளை பிழை இல்லாமல் அவளுக்கு சுட்டி காட்டும் .


2 ) பார்க்கும் பார்வைகள் தான் எத்தனை,
யார் அறிவாரோ உன்னை - என்றால்

அந்த விழிகளை தாங்கும் அந்த பெண்மணி, மற்றவர்களை பார்க்கும் கண்நோடன்களோ பள்ளவிதம். மற்றவர்கள் அதை கண்டுகொள்ள கடினம்

நான் குடுத்த விளக்கம் தாங்கல்க்கு புரிந்துகொள்ளும்படி செரியாக எழுதி உள்ளேன் என்று நம்புகிறேன்.

நன்றி.


 
Last edited:

தமிழ் ஒரு கடினமான மொழி! நகர, னகர, ணகர வேறுபாடுகள்; லகர, ழகர, ளகர வேறுபாடுகள்;

ரகர, றகர வேறுபாடுகள் என்பவற்றைச் சரியாக அறிந்துகொள்ள, சில ஆண்டுகள் ஆகும்! கேட்கும்

தமிழை வைத்துக்கொண்டு எழுதவே இயலாது!


ஒரு ஆசிரியருக்கே தமிழ் மொழி எழுதத் தகராறு! மாணவன் அவரிடம் ' 'மரம்' என்று எழுத, சின்ன 'ர'வா,

பெரிய 'ற'வா?' என்று கேட்க, அவர் சின்ன மரத்துக்குச் சின்ன ர; பெரிய மரத்துக்குப் பெரிய ற என்றாராம்!!


உன் = Your; உண் = Eat;

அரி = Cut; அறி = Know!

அரை = Half; அறை = Room / slap!

குலவி = கொஞ்சி
; குளவி = Wasp; குழவி = அரைக்கும் கல் / infant :baby:!

 

தமிழ் ஒரு கடினமான மொழி! நகர, னகர, ணகர வேறுபாடுகள்; லகர, ழகர, ளகர வேறுபாடுகள்;

ரகர, றகர வேறுபாடுகள் என்பவற்றைச் சரியாக அறிந்துகொள்ள, சில ஆண்டுகள் ஆகும்! கேட்கும்

தமிழை வைத்துக்கொண்டு எழுதவே இயலாது!


ஒரு ஆசிரியருக்கே தமிழ் மொழி எழுதத் தகராறு! மாணவன் அவரிடம் ' 'மரம்' என்று எழுத, சின்ன 'ர'வா,

பெரிய 'ற'வா?' என்று கேட்க, அவர் சின்ன மரத்துக்குச் சின்ன ர; பெரிய மரத்துக்குப் பெரிய ற என்றாராம்!!


உன் = Your; உண் = Eat;

அரி = Cut; அறி = Know!

அரை = Half; அறை = Room / slap!

குலவி = கொஞ்சி
; குளவி = Wasp; குழவி = அரைக்கும் கல் / infant :baby:!


திருமதி ராஜி ராம்

நகைச்சுவையை களந்து நீங்கள் குடுத்த பாடம் பாராட்டுக்குரியது.

சந்தோஷம்!!!


மிக்க நன்றி
 

Latest ads

Back
Top