• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


அம்மா என்றா
லே
...

அம்மா என்றாலே அன்பு! இனிய

அம்மாவைக் கண்டாலே தெம்பு!

எத்தனை வயது ஆனாலும், நான்
எப்போதுமே அவளின் செல்லம்!

இரு நாட்கள் இருப்பேன் அவளது
அருகில்; அதுதானே என் இன்பம்!

இப்போதே மன
த்தினில் துள்ளல்;
தப்பாது செல்வேன் இன்றிரவில்!


:car: . . . :dance:

 

அடாது மழை பெய்தாலும்...


முன்பதிவு நான்கு மாதங்கள் முன்னே என்று

முன்பதிவு நாட்களை மாற்றிய பின்பு, வந்தது

என்றுமே இட நெருக்கடி ரயில்களில்! இதனால்,
என்றுமே நீண்ட பயணம் பேருந்தில் செல்லாத

எத்தனையோ பேர்களுக்குப் பேருந்துப் பயணம்!
அத்தனை பேருந்துகளிலும் கடைசி நொடியிலும்

எளிதாக இருக்கைகள் கிடைக்குமே! இந்த முறை
தனியாக நான் பயணித்தேன் இரவுப் பேருந்தில்.

இரு நாட்கள் மட்டும் ஊரில் என்பதால், எனக்காக
ஒரு சிறு கைப்பயை மட்டுமே வைத்திருந்தேன்!

துள்ளுந்துகள் வீதியில் வரவில்லை! கொஞ்சம்
செல்லலாம் நடந்தே என எண்ணியபடி, நாங்கள்

இனிய இல்லத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில்,
கனிவுடன் காலிறங்கிக் கன மழை கொட்டியது!

அடிக்கும் காற்றில் குடையே மடிந்து போய்விட,
அடிக்கும் பெரு மழை உடையை நனைத்துவிட,

கொட்டும் மழையிலே நனைந்தோம், துள்ளுந்து
கிட்டும் என்ற நம்பிக்கையுடன்! ஒன்று வந்தது!

சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஓடிட, நிலவுப்
பாதைகளின் பள்ளங்கள் சேற்று நீரில் மறைந்திட,

எதிர் வரும் வாகனங்கள் வீதி நீரை இறைத்திட,
சதிராடும் இயற்கையின் பெருமழை தொடர்ந்திட,

ஒரு வழியாகப் பேருந்து நிலையத்தை அடைந்து,
ஒரு இடமும் உடை மாற்ற இல்லாது போனதால்,

ஒரு கட்டணக் கழிப்பிடத்தில் உடையைப் பிழிந்து,
மறுபடியும் அதையே அணிந்து, பேருந்தின் உள்ளே

எனது உச்சி முதல் பாதம் வரையில் ஈரப்பதத்துடன்,
எனது இருக்கையில் சென்று அமர்ந்து, குளிர் காற்று

வரும் இரு சிறு குழாய்களை மூடி, பயணம் செய்ய
வரும் நபர்களுக்கு வைத்த கம்பளியால், நடுங்கும்

என் உடலை வெப்பமாக்க முயன்று, பையிலிருந்த
சின்னக் கற்பூர வில்லைகளைப் பொடித்துப் போட்டு,

கொசுக்களுடன், ஈர உடை வாடையையும் விரட்டி,
சொகுசுப் பேருந்தில் பயணம் தொடங்கினேன்! என்

சக்தி வினாயகரின் அருள், ஜுரம் வராது காத்ததால்,
சக்தி அதிகம் விரயமாகாமல், பயணம் முடித்தேன்!


:dance:
 
Last edited:

தமிழ் ஒரு கடினமான மொழி! நகர, னகர, ணகர வேறுபாடுகள்; லகர, ழகர, ளகர வேறுபாடுகள்;

ரகர, றகர வேறுபாடுகள் என்பவற்றைச் சரியாக அறிந்துகொள்ள, சில ஆண்டுகள் ஆகும்! கேட்கும்

தமிழை வைத்துக்கொண்டு எழுதவே இயலாது!


ஒரு ஆசிரியருக்கே தமிழ் மொழி எழுதத் தகராறு! மாணவன் அவரிடம் ' 'மரம்' என்று எழுத, சின்ன 'ர'வா,

பெரிய 'ற'வா?' என்று கேட்க, அவர் சின்ன மரத்துக்குச் சின்ன ர; பெரிய மரத்துக்குப் பெரிய ற என்றாராம்!!


உன் = your; உண் = eat;

அரி = cut; அறி = know!

அரை = half; அறை = room / slap!

குலவி = கொஞ்சி
; குளவி = wasp; குழவி = அரைக்கும் கல் / infant :baby:!



ஆஹா....தமிழ் இவ்வளவு கஷ்டமான மொழியா...?


இவ்வளவு நாளாக இது தெரியாமல் போச்சே.....!!


Tvk


 
ஆஹா....தமிழ் இவ்வளவு கஷ்டமான மொழியா...?

இவ்வளவு நாளாக இது தெரியாமல் போச்சே.....!!
தவக்கவி அவர்களே!
'அழகி' கைவசம் இருந்தாலும், பழகாதவர்களுக்குத் தமிழ் மொழி கஷ்டமே! :ballchain:
 

சக்தி, நேரம், செல்வம்!

ஊர்களைச் சுற்றும் ஆவல் உள்ளோரிடம்,
ஊர்ப் பயணத்திற்கு இம்மூன்றும் தேவை!

இளம் பருவத்தில் சக்தி, நேரம் இரண்டும்
தினமும் நம்மிடம் இருக்கும். செல்வத்தை

பெற்றோர் தயவால் பெற்றிட வேண்டும்!
பெற்றோராய் நாம் மாறிய பின்போ, நாமே

செல்வமும் திரட்டியிருப்போம்; நம்மிடம்
சொல்லிக்கொள்ளுமளவு இருக்கும் சக்தி!

ஆனால் நேரம் இராது! ஆண்டுகள் இன்னும்
போனால், நமக்கு முதுமையே வந்துவிடும்!

நம்மிடம் இருக்கும் செல்வத்தின் செழிப்பு;
நம்முடைய விடுமுறையே எல்லா நாளும்!

செல்வமும், நேரமும் நம்முடனே இருந்திட,
செல்லும் சக்தி நம் உடலை விட்டு! எனவே

செல்வம் ஈட்டிய நடு வயதினரே! சுற்றுலாச்
செல்லுங்கள் உடலில் சக்தியுள்ள பொழுதே!


:car: . . . :high5:
 

எப்படி இவர்கள் இங்கு!!

பயணம் அமைதியாக இருக்கத்தான், நாம்
பயணம் செய்கிறோம் முன் பதிவு செய்து!

நம்முடன் பயணிக்கும் நபர்கள் பிறருக்குத்
தம்மால் இயன்ற தொல்லைகள் தந்திருக்க,

இப்போது வருகிறார் பல வண்ண மனிதர்,
தப்பாது ரயிலுக்குள் மேலும் கீழும் நடந்து!

முதலில் வந்தவர் டி- ஷர்ட் வியாபாரி! சரி!
முதல் போணியாக இரண்டு வாங்கினேன்.

பின் தொடர்ந்தனர் ஊசி பாசி விற்பவர்கள்,
தம் வினோத மொழியில் பேசிக்கொண்டு!

தொடர்ந்து வந்தவை சாவி வளையங்கள்,
அடர்ந்த கொத்துக்களாகத் தொங்கியவாறு!

ரயில்வே கான்டீனின் காபி, டீ மட்டுமல்ல;
ரயிலினுள் வந்தன பற்பல பழ வகைகளும்!

கொய்யா, அன்னாசி, வாழைப் பழங்கள் என
அய்யாக்கள் பலரும் வாங்கிக்கொண்டனர்!

மசாலாப் பொரி, பட்டாணிக் கடலை இவை
மசாலா தோசையைத் தொடர்ந்து வந்தன!

ஏதோ, மக்கள் பசியைத் தீர்க்க விழைகிறார்;
ஏன் தவறாக இதை நினைக்க வேண்டுமென

மனதை சமாதானம் செய்து கொண்டபோது,
தனது பாட்டுத் திறமையினைப் பறைசாற்றி

வந்தாள் ஒரு சிறுமி, தாளக் கட்டைகளோடு!
தந்தார் பலரும் சில்லறைக் காசுகளை. பின்

அங்கஹீனத்தைக் காட்டுபவர், சமூகத்தில்
அங்கம் வகிக்கத் தயங்கும் திரு நங்கைகள்

என்பதாக, பிச்சை கேட்கும் பட்டாளமே வர,
என்ன ரயில் நிர்வாகமோ இது? முன் பதிவு

செய்து, அமைதிப் பயணம் வேண்டுபவருக்கு
செய்ய முடியவில்லையே அந்த வகையில்!

எல்லாப் பெட்டிகளும் நடுவில் இணைந்திட,
எல்லா வித மனிதர்களும் உள்ளே வருகை!

ஒரு பெட்டியில் பத்து ரூபாய்; பத்து எனில்
நூறு ரூபாய்; ஐந்து ரயில்களே தரும் ஐநூறு!

சுளையாக மாதம் பதினைந்தாயிரம் வருமே!
சுலபத்தில் பிச்சையை ஒழிக்க முடியுமோ?

சுதந்திர இந்தியா அல்லவா? அதனால் நாம்
சுதந்திரமாக மக்களை விட வேண்டாமோ?


இறைவன் நம்மைக் காப்பானாக! :pray:
 
Hi Raji,
have been very busy with guests, not been here, missed all yours and Mrs. Visala's postings.. as well as other veteran members.. Hope all is well...
take care.
love
Bushu :)
 
Dear Bushu,

So happy to see you. Guessed while checking number of likes!! :D

Many twists and turns in the forum recently! Now back to :peace:
 

இனிய தமிழ் மொழி!


கணினி இருப்பவர்கள், சுற்றம் நட்புடனே

இனிய தொடர்பு கொள்ளலாம் எளிதிலே!

காமரா உதவியுடன், நேரில் அவர்களைக்
காண்பது போலவே நாம் பேசி மகிழலாம்!

அஞ்சல்களைப் பார்க்கும் நேரத்தில், நமது
நெஞ்சில் வரும் எண்ணங்களைப் பகிரவும்,

நல்ல வசதி உண்டு ஜி மெயிலில்; உடனே
சொல்ல வசதிதான் அவசர விஷயங்களை!

தமிழ் மொழியில் தட்டெழுதும் சமயத்தில்,
தமிழ் மொழியிலே செய்யலாம் பரிமாற்றம்!

முன்பு இல்லாத இந்த வசதி வந்ததும், நான்
நன்கு CHAT செய்கின்றேன், இனிய தமிழிலே!

:typing: . . . :love:
 

தீபாவளித் திருநாள் ...


'ஆவளி' என்றால் வரிசை என்று பொருள்; தீப

ஆவளி என்பதே 'தீபாவளி' ஆயிற்று என்பார்!

தீபங்களை வரிசையாய் ஏற்றி, மக்கள் தங்கள்
தாபங்களைத் தீர்க்க இறையை வேண்டுவார்!

நரகாசுரனை வதம் செய்த நாள் என்று சிலரும்,
இராவணன் அழிந்த நாள் என்று வேறு சிலரும்,

கொண்டாடி மகிழ்ந்து, புத்தாடைகள் அணிந்து,
பண்டிகையாகச் சிறப்பித்தாலும், நம் மனதின்

இருளை நீக்கி, ஒளியைப் பரப்பி, இறைவனின்
அருளைப் பெறும் நாளாக நினைப்பதே சிறப்பு!

இனிப்புக்களைச் சுற்றம், நட்புடன் பகிர்வோம்;
இனிய அன்பு வட்டத்தைப் பெரியதாக்குவோம்!


:grouphug: . . . :high5:
 
To all my dear friends in this forum! :)

DSCN1698.JPG
 

இந்த தீபாவளித் திரு நாளில், அன்னை லக்ஷ்மி

அருளும், பொருளும் அனைவருக்கும் அள்ளித் தரட்டும்! :pray2:


lakshmi-devi.jpg
 

இரவில் அதிர்ந்தது!


தீபாவளிக்கு முன் தினம் வரை அமைதியே;

தீபாவளியன்று காலை வெடிகள் குறைவே!

சிவகாசியிலே பெரிய விபத்து நடந்து, பல
சிறுவர்கள் மாண்டதால், பட்டாசுகளையே

பலர் வெறுத்தார் என நினைத்தேன்! ஆனால்,
பலர் அமைதி காத்தது விலை உயர்வாலே!

நேற்று மாலை துவங்கின வெடிகள்; பற்பல
வேட்டுக்கள் எழுப்பின ஒலி - ஒளி வெள்ளம்!

இந்தப் பகுதி முழுவதுமே அதிர்ந்து போனது;
வந்த புகை மண்டலம் மேகம் போல் சூழ்ந்தது!

தொலைபேசி அழைப்புக்களை ஏற்க முடியாது
தொலைந்தது அமைதி! இன்று பேசவேண்டும்!

எந்தத் தொல்லை வந்தாலும் அதிலும் நன்மை
வந்துவிடும் என்று கூறுவது என்றும் உண்மை!

மழை நீர்க் குட்டைகளில் பெருகிய கொசுக்கள்
அழிந்தன, அடர்ந்து மண்டிய புகை மூட்டத்தால்!
:boom:
 

யோகி, போகி, ரோகி!


மூதறிஞர்கள் உலக மக்களுக்காகக் கூறிய

மூதுரைகளின் ஒன்று, இம்மூன்றைப் பற்றி!

ஒரு வேளை உண்ணுபவரே 'யோகி' ஆவார்;
இரு வேளைகள் உண்ணுபவர் 'போகி' ஆவார்;

மூன்று வேளை உண்ணுபவர் 'ரோகி' ஆவார்!
'மூன்று போதாதே!' என்று கூறும் மருத்துவர்,

'ஆறு வேளைகள் பிரித்து உண்பது சிறப்பு' என
வேறு ஆலோசனை கூறுகின்றாரே, என்று என்

நண்பி என்னிடம் கூறி, 'அதைப் பின்பற்றி நாம்
உண்டால், நாம் என்ன பிரிவிலே சேருவோம்?'

என்று வினவ, நான் சொன்னேன், 'புதிய பிரிவு'
என்று! அதுவே 'பரம ரோகி' எனும் புதிய பிரிவு!

:grouphug: . . . :sick: . . . :tsk:

 

ஓ! வயதாகிவிட்டது!!


மழை நாட்களிலே செடிகளை ஊன்றினால்,

தழைத்து வளர்ந்திடும் வாடாது, வதங்காது!

நட்ட செடிகளுக்கு தினமும் தவறாது நீரை
ஊற்ற வேண்டுமே என்கிற எண்ணத்தோடு

காலை வேளை நான் போனபோது, வழியில்
காலைத் தட்டியது அழுக்கு மிதியடி ஒன்று!

'இதை நேற்றே துவைக்க மறந்தேனே!' என்று
அதைக் கொண்டு சென்றேன் சோப்பில் இட!

குளிக்கும் அறைக்குச் சென்றவுடன், சுடு நீர்
குளிக்கத் தேவை என்கிற நினைவும் வந்தது!

எட்டு மணிக்கு மின்வெட்டு ஆரம்பம்; எனவே
தட்டினேன் கீஸரின் ஸ்விட்சை அப்பொழுதே!

எண்ணெய் பாட்டில் காலியாக இருக்க, அதில்
எண்ணெய் நிறைத்து வைத்தேன் உடனேயே.

எண்ணெயைப் பார்த்ததும் பூரி செய்ய ஆவல்!
என்னவர் விரும்பும் அதைத் தயாரிக்க எண்ணி,

பக்குவமாக மாவு பிசைந்து, மசாலா செய்திட
அக்கணமே உருளைக் கிழங்கும் வேக வைத்து,

விரைவில் நீராடி, சிற்றுண்டி தயாரித்து, உண்டு,
விரைந்தேன் வெளியே வங்கி வேலை முடிக்க!

அதற்குள் உச்சி வேளை ஆகிவிட, மதிய உணவு
பதறாமல் செய்து, சூடாக உண்டு, மதிய வேளை

அன்பு அன்னையுடன் கணினி வழியே உரையாடி,
பின்பு குட்டித் தூக்கமும் போட்டு எழுந்திட, மணி

நாலு முறை அடித்தது! அப்போதுதான் உறைத்து
நான் செடிகளுக்குத் தண்ணீரே விடாது மறந்தது!

எதையோ செய்ய விழைந்தும், வேறு வேலைகள்
எதை எதையோ இதுவரை செய்துவிட்டேனே! ஓ!

வயதாகிவிட்டது எனக்கு! கண்ணில் படுவதையே
அயராது செய்கிறேன், நினைத்ததை மறந்துவிட்டு!


:decision: . . . :roll:
 

Latest ads

Back
Top