#135. வரமும், சாபமும்.
சூரன் என்னும் யாதவகுலத் தலைவனின்
சீரிய புதல்வியே பிரதை என்னும் குந்தி.
குந்தி போஜனுக்குத் தத்து அளிக்கப்பட்டு,
குந்தி தேவி எனப் பெயர் பெற்றவள் அவளே.
தந்தையின் விருந்தினரான துர்வாசருக்கு,
சிந்தை மகிழ அவள் சேவை செய்ததால்,
விந்தையான வரம் ஒன்று அளித்து, அதன்
மந்திரத்தையும் உபதேசித்தார், அம்முனிவர்.
எந்த தேவனை அவள் அழைத்தாலும்,
மைந்தன் ஒருவனைத் தன் தேஜசுடன்
அளிப்பான், அந்த தேவன் அவளுக்கு.
களிப்புடன் பெற்றுக் கொண்டாள் வரம்.
விந்தையாகத் தோன்றும் இந்த வரம்,
சிந்தனை செய்யக் கூடிய எவருக்குமே!
கணவன் இருக்கும்போது பிள்ளை வரம்
வணங்கத் தகுந்த தேவர்களிடம் ஏன்?
பின்னர் நிகழ்வதை ஞான திருஷ்டியால்,
முன்னமே அறிய வல்லவர் முனிவர்.
பிள்ளைகள் இல்லை கணவன் மூலம்;
பிள்ளைகள் பெறுவாள் கடவுளர் மூலமே.
காட்டில் வாழும் ரிஷிகளும், பத்தினிகளும்
காட்டு விலங்குகளின் வடிவினை எடுத்து,
ஓடிக் களித்து, விலங்குகள் போலவே தாம்
கூடி மகிழ்வது, அப்போதைய வழக்கமாம்.
சுகித்திருந்த மான்களில் ஒன்றின் மேல்,
தகிக்கும் பாணம் எய்து வீழ்த்திய, மன்னன்
பாண்டுவுக்குக் கிடைத்தது ஒரு கொடிய சாபம்,
“மாண்டு போவாய், மனைவியைக் கூடினால்!”
வனம் ஏகினான் பாண்டு மனைவியருடன்,
மனம் சஞ்சலம் இன்றி வாழ்ந்து வந்தனர்.
பாண்டுவின் அனுமதியுடன், மனைவிகள்
பாண்டவரைப் பெற்றனர், அரிய வரத்தால்.
சாபம் அளிப்பவர் வரமும் அளிப்பார்!
சாபத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
இறை அருள் இருந்தால், தேடி வரும்
இறை அருளால் ஒரு வரமும் நம்மை!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
சூரன் என்னும் யாதவகுலத் தலைவனின்
சீரிய புதல்வியே பிரதை என்னும் குந்தி.
குந்தி போஜனுக்குத் தத்து அளிக்கப்பட்டு,
குந்தி தேவி எனப் பெயர் பெற்றவள் அவளே.
தந்தையின் விருந்தினரான துர்வாசருக்கு,
சிந்தை மகிழ அவள் சேவை செய்ததால்,
விந்தையான வரம் ஒன்று அளித்து, அதன்
மந்திரத்தையும் உபதேசித்தார், அம்முனிவர்.
எந்த தேவனை அவள் அழைத்தாலும்,
மைந்தன் ஒருவனைத் தன் தேஜசுடன்
அளிப்பான், அந்த தேவன் அவளுக்கு.
களிப்புடன் பெற்றுக் கொண்டாள் வரம்.
விந்தையாகத் தோன்றும் இந்த வரம்,
சிந்தனை செய்யக் கூடிய எவருக்குமே!
கணவன் இருக்கும்போது பிள்ளை வரம்
வணங்கத் தகுந்த தேவர்களிடம் ஏன்?
பின்னர் நிகழ்வதை ஞான திருஷ்டியால்,
முன்னமே அறிய வல்லவர் முனிவர்.
பிள்ளைகள் இல்லை கணவன் மூலம்;
பிள்ளைகள் பெறுவாள் கடவுளர் மூலமே.
காட்டில் வாழும் ரிஷிகளும், பத்தினிகளும்
காட்டு விலங்குகளின் வடிவினை எடுத்து,
ஓடிக் களித்து, விலங்குகள் போலவே தாம்
கூடி மகிழ்வது, அப்போதைய வழக்கமாம்.
சுகித்திருந்த மான்களில் ஒன்றின் மேல்,
தகிக்கும் பாணம் எய்து வீழ்த்திய, மன்னன்
பாண்டுவுக்குக் கிடைத்தது ஒரு கொடிய சாபம்,
“மாண்டு போவாய், மனைவியைக் கூடினால்!”
வனம் ஏகினான் பாண்டு மனைவியருடன்,
மனம் சஞ்சலம் இன்றி வாழ்ந்து வந்தனர்.
பாண்டுவின் அனுமதியுடன், மனைவிகள்
பாண்டவரைப் பெற்றனர், அரிய வரத்தால்.
சாபம் அளிப்பவர் வரமும் அளிப்பார்!
சாபத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
இறை அருள் இருந்தால், தேடி வரும்
இறை அருளால் ஒரு வரமும் நம்மை!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.