DEVI BHAAGAVATAM - SKANDA 4
4#20b. கர்மங்கள்
“உண்டு மூன்று உட்பிரிவுகள் ஆகாமியத்தில்;
கொண்டுள்ளது அது மூன்று இரட்டைகளை.
இன்பம், துன்பம் என்பது முதல் இரட்டை;
இரண்டாவது இரட்டை ஹிதம், அஹிதம்.
நல்வினை, தீவினை ஆகும் மூன்றாவது.
வெல்ல முடியாது இவற்றில் எதையுமே!
அனுபவிப்போம் பொருட்களைப் புலன்களால்;
அனுபவங்கள் உருவாகும் இன்ப துன்பங்களாக.
ஹிதம், அஹிதம் காராணமாகும் பிறவிகளுக்கு;
இதன் மூலம் கிடைக்கும் பிறவிக்கேற்ற உருவம்.
ஆகாமியம் விதையாகும் சஞ்சித கர்மத்துக்கு;
ஆகும் இதில் விளையும் பயிர் பிராரப்த கர்மம்.
தொடரும் இந்தச் சங்கிலித் தொடர் நீண்டு;
இடையறாது ஆன்மா முக்தி பெறும் வரை.
நல்வினைப் பயனாகும் ஸ்வர்க்க வாழ்வு
தீவினைப் பயன் ஆம் நரகத்தில் உழல்வது
பிறவிகள் தொடரும் வினைப்பயன் முடிந்ததும்;
பிறவியில் சேர்ப்போம் ஆகாமியத்தை மீண்டும்.
கர்மங்கள் நீங்கிவிடா பிராயசித்தத்தினால்
கர்ம வினைகள் தொடரும் ஜன்மாந்திரமாக
கொடுத்து விடுவோம் இவனைக் கம்சனிடம்;
கொடுத்த வாக்கைக் கெடுப்பவன் பொய்யன்.
சத்தியத்தை விடுத்தால் வீணாகி விடுவோம்;
சத்தியமும், தர்மமும் வாழ்வின் குறிக்கோள்.
சுகமோ துக்கமோ இல்லை நம் வசத்தில்!
செய்யவேண்டும் நல்ல செயல்களையே!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#20b. கர்மங்கள்
“உண்டு மூன்று உட்பிரிவுகள் ஆகாமியத்தில்;
கொண்டுள்ளது அது மூன்று இரட்டைகளை.
இன்பம், துன்பம் என்பது முதல் இரட்டை;
இரண்டாவது இரட்டை ஹிதம், அஹிதம்.
நல்வினை, தீவினை ஆகும் மூன்றாவது.
வெல்ல முடியாது இவற்றில் எதையுமே!
அனுபவிப்போம் பொருட்களைப் புலன்களால்;
அனுபவங்கள் உருவாகும் இன்ப துன்பங்களாக.
ஹிதம், அஹிதம் காராணமாகும் பிறவிகளுக்கு;
இதன் மூலம் கிடைக்கும் பிறவிக்கேற்ற உருவம்.
ஆகாமியம் விதையாகும் சஞ்சித கர்மத்துக்கு;
ஆகும் இதில் விளையும் பயிர் பிராரப்த கர்மம்.
தொடரும் இந்தச் சங்கிலித் தொடர் நீண்டு;
இடையறாது ஆன்மா முக்தி பெறும் வரை.
நல்வினைப் பயனாகும் ஸ்வர்க்க வாழ்வு
தீவினைப் பயன் ஆம் நரகத்தில் உழல்வது
பிறவிகள் தொடரும் வினைப்பயன் முடிந்ததும்;
பிறவியில் சேர்ப்போம் ஆகாமியத்தை மீண்டும்.
கர்மங்கள் நீங்கிவிடா பிராயசித்தத்தினால்
கர்ம வினைகள் தொடரும் ஜன்மாந்திரமாக
கொடுத்து விடுவோம் இவனைக் கம்சனிடம்;
கொடுத்த வாக்கைக் கெடுப்பவன் பொய்யன்.
சத்தியத்தை விடுத்தால் வீணாகி விடுவோம்;
சத்தியமும், தர்மமும் வாழ்வின் குறிக்கோள்.
சுகமோ துக்கமோ இல்லை நம் வசத்தில்!
செய்யவேண்டும் நல்ல செயல்களையே!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி