DEVI BHAAGAVATAM - SKANDA 4
4#4c. யாக யக்ஞங்கள்
“மாயையில் மயங்கிய மனிதர்கள் பின்பு
மயங்குகின்றனர் சத்திய அசத்தியத்தில்!
ஆசைப்பட்டவற்றை அடைவதற்காக மனிதன்
மோசம் செய்கின்றான் வஞ்சக எண்ணத்துடன்.
மறைந்து விடுகின்றது பகுத்தறியும் திறன்;
வெறி பிறக்கிறது விரும்பியதை அடைய.
அஹங்காரம் தோன்றுகிறது ஐஸ்வரியத்தால்!
அஹங்காரத்தினால் தோன்றும் அஞ்ஞானம்!
அசூயை, துவேஷம், பொறாமை, பேராசை,
அதர்ம புத்தி, ஆடம்பரம் டாம்பீகம் என்று
தோன்றுகின்றன பல துர் குணங்கள்;
தோன்றுகின்றன மனிதனை அழிக்க!
விரும்புவதைப் பெற்றிட யாக, யக்ஞங்கள்,
தருமம், தானம், தவம், ஜபம் போன்றவை.
தூய்மையான திரவியங்களால் செய்தால்
தூய்மையான நற்பயன்கள் கிடைக்கும்.
தூய்மையற்ற திரவியங்களால் செய்வது
தூய்மையற்ற பயன்களை அளிக்கும்
துரோகம் செய்யாமல் ஈட்டிய பணம்
தூய்மையானது என்று கூறப்படும்
உற்பத்தி செய்தான் அனைவரையும் பிரமன்
உற்பத்தியாயினர் தேவர் சத்துவ குணத்தில்.
உற்பத்தியாயினர் மனிதர் ராஜச குணத்தில்;
உற்பத்தியாயினர் அசுரர் தாமச குணத்தில்.
துவேஷம், லோபத்துடன் யாகம் செய்வர் மனிதர்
துவேஷ புத்தியுடன் தவத்தைக் கெடுப்பர் தேவர்.
சம்சாரம் உண்டாவது அஹங்காரத்தில் – அந்த
சம்சாரம் தோற்றுவிக்கும் துவேஷ புத்தியை.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#4c. யாக யக்ஞங்கள்
“மாயையில் மயங்கிய மனிதர்கள் பின்பு
மயங்குகின்றனர் சத்திய அசத்தியத்தில்!
ஆசைப்பட்டவற்றை அடைவதற்காக மனிதன்
மோசம் செய்கின்றான் வஞ்சக எண்ணத்துடன்.
மறைந்து விடுகின்றது பகுத்தறியும் திறன்;
வெறி பிறக்கிறது விரும்பியதை அடைய.
அஹங்காரம் தோன்றுகிறது ஐஸ்வரியத்தால்!
அஹங்காரத்தினால் தோன்றும் அஞ்ஞானம்!
அசூயை, துவேஷம், பொறாமை, பேராசை,
அதர்ம புத்தி, ஆடம்பரம் டாம்பீகம் என்று
தோன்றுகின்றன பல துர் குணங்கள்;
தோன்றுகின்றன மனிதனை அழிக்க!
விரும்புவதைப் பெற்றிட யாக, யக்ஞங்கள்,
தருமம், தானம், தவம், ஜபம் போன்றவை.
தூய்மையான திரவியங்களால் செய்தால்
தூய்மையான நற்பயன்கள் கிடைக்கும்.
தூய்மையற்ற திரவியங்களால் செய்வது
தூய்மையற்ற பயன்களை அளிக்கும்
துரோகம் செய்யாமல் ஈட்டிய பணம்
தூய்மையானது என்று கூறப்படும்
உற்பத்தி செய்தான் அனைவரையும் பிரமன்
உற்பத்தியாயினர் தேவர் சத்துவ குணத்தில்.
உற்பத்தியாயினர் மனிதர் ராஜச குணத்தில்;
உற்பத்தியாயினர் அசுரர் தாமச குணத்தில்.
துவேஷம், லோபத்துடன் யாகம் செய்வர் மனிதர்
துவேஷ புத்தியுடன் தவத்தைக் கெடுப்பர் தேவர்.
சம்சாரம் உண்டாவது அஹங்காரத்தில் – அந்த
சம்சாரம் தோற்றுவிக்கும் துவேஷ புத்தியை.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி