4 # 12. c. அரிமுகனுடன் போர்.
வீரவாகு போர்க்கோலம் பூண்டார்;
நூறாயிரத்து எண்மருடன் சென்றார்.
கடுமையான போர் தொடங்கியது.
கொடுமையான தாக்குதல் நடந்தது.
முன்னணி முறிந்தது பூதர்களின்;
தண்டப் பிரயோகம் செய்தார் சிங்கர்.
சிந்தின அவுணர்களின் பற்கள்;
சிதறின அவுணர்களின் தலைகள்,
தசமுகன் பொருது வீழ்ந்தான்;
துன்முகன் செய்தான் மாயப்போர்.
நூறு நூறு வடிவங்கள் எடுத்தான்;
ஒரு பூதரைத் தாக்குவதற்கு.
அறிவுப் படைக்கலம் செலுத்தி
அழித்தார் மாயையை வீரவாகு.
வில்லை ஒடித்து மார்பைத் தாக்கித்
தொல்லை தந்தார் வீரவாகுத் தேவர்.
மயங்கி விழுந்தவன் பின் தெளிந்து,
மாயமறையால் விண்ணில் மறைந்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
வீரவாகு போர்க்கோலம் பூண்டார்;
நூறாயிரத்து எண்மருடன் சென்றார்.
கடுமையான போர் தொடங்கியது.
கொடுமையான தாக்குதல் நடந்தது.
முன்னணி முறிந்தது பூதர்களின்;
தண்டப் பிரயோகம் செய்தார் சிங்கர்.
சிந்தின அவுணர்களின் பற்கள்;
சிதறின அவுணர்களின் தலைகள்,
தசமுகன் பொருது வீழ்ந்தான்;
துன்முகன் செய்தான் மாயப்போர்.
நூறு நூறு வடிவங்கள் எடுத்தான்;
ஒரு பூதரைத் தாக்குவதற்கு.
அறிவுப் படைக்கலம் செலுத்தி
அழித்தார் மாயையை வீரவாகு.
வில்லை ஒடித்து மார்பைத் தாக்கித்
தொல்லை தந்தார் வீரவாகுத் தேவர்.
மயங்கி விழுந்தவன் பின் தெளிந்து,
மாயமறையால் விண்ணில் மறைந்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.