• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

#69. உரலும், மரமும்!





“கர்வம் தான் அழிவின் ஆரம்பம்” என்று
கற்றோர் மற்றோருக்கு கூறுவது உண்டு;
பதவி, பணம், இளமை ஒன்றானால்
பதவிசு என்பதையே அழித்துவிடும்!

குபேரனின் மகன் நளகூபரன்;
குபேர சம்பத்து குடும்பச் சொத்து!
மணிக்ரீவன் மாறா நட்புடையவன்;
மமதை தலைக்கேற இதுவே போதும்!

ஈஸ்வரனை நன்கு ஆராதித்து அந்த
ஈசன் கருணையால் பெற்ற பெருமை,
பணிவைத் தரவில்லை; துணிவையும்
பணத்தின் மமதையையும் அளித்தது.

கங்கை ஆற்று நீரில் பல அழகிய
மங்கைகளுடன் செய்தனர் ஜலக்ரீடை;
மிருகங்கள் போலவே, மதுவெறியில்
ஒரு வித ஆடையும் அணியாமலேயே!

வழியே நடந்து வந்த நாரதரைக் கண்டு,
பழிக்கு அஞ்சிய இளம் பெண்கள் மட்டும்
விரைந்து ஆடைகள் அணிந்து கொள்ள;
விறைத்து மரம் போல நின்றனர் ஆண்கள்.

மரம் போல அசையாமல் நின்றவர்களை,
மரமாகும்படிச் சபித்து விட்டார் நாரதர்!
கண்ணன் அருளால் மட்டுமே அவர்கள்
கண்கவர் உருவம் மீண்டும் பெற முடியும்!

வருத்தத்துடன் பூமிக்கு இறங்கியவர்
மருத மரங்களாகி நின்றனர் நெடுநாள்!
உரலில் கட்டப்பட்டு ஊர்ந்த கண்ணன்
உருவம் முன்போல அளித்துக் காத்தான்!

ஒளி மயமான உடலை அடைந்தவர்
ஒளி மயமான உலகம் மீண்டனர்.
களியாட்டங்களை விட்டு ஒழித்து
கனவான்களாக வாழலாயினர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#70. யோக சக்தி!


அஷ்டாங்க யோகம் என்பதை முறையாக
இஷ்டத்துடன் செய்து வரும் யோகிகள்,
அடைவர் பலவித சக்திகள்; அவர்களை
அடைவிக்கும் அவைகள் உயர் நிலைக்கு.

மூன்று காலமும் உணரும் சக்திகளை
முழுமையாக அவர் அடைந்திடுவர்;
முகத்தைப் பார்த்தவுடனே மனதில்
முழுவதும் திரைப்படம் போல ஓடும்!

எதிர்மறைப் பொருட்களையும் அவர்
எதிர்மறையாக என்றும் உணரார்;
வெய்யிலும், மழையும் அவர்க்கு ஒன்றே!
வெப்பமும், குளிரும் அவர்க்கு ஒன்றே!

மற்றவர் மனத்துள் புகுந்து அங்கே
மறைந்து கிடக்கும் அனைத்தையும்,
மிச்சமின்றிக் கண்டு அறிந்து கொள்ளும்
அச்சம் தரும் சக்தியும் அவர்க்கு ஏற்படும்!

இயற்கையில் விளங்கும் பலவிதமான
இயக்க முடியாத பொருட்களையும்,
ஆதவன், நெருப்பு, நீர், விஷங்களையும்
ஆற்றலுடன் தம் வசப்படுதுவர் இவர்.

தனக்கு தானே எஜமானன் என்பது போல
நினைத்ததைச் செய்ய வல்லவர் இவர்;
பிறர் மனத்தை அறிய வல்லவரான
இவர் மனத்தை யாரும் வெல்ல முடியாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#70. யோக சக்தி!


அஷ்டாங்க யோகம் என்பதை முறையாக
இஷ்டத்துடன் செய்து வரும் யோகிகள்,
அடைவர் பலவித சக்திகள்; அவர்களை
அடைவிக்கும் அவைகள் உயர் நிலைக்கு.

மூன்று காலமும் உணரும் சக்திகளை
முழுமையாக அவர் அடைந்திடுவர்;
முகத்தைப் பார்த்தவுடனே மனதில்
முழுவதும் திரைப்படம் போல ஓடும்!

எதிர்மறைப் பொருட்களையும் அவர்
எதிர்மறையாக என்றும் உணரார்;
வெய்யிலும், மழையும் அவர்க்கு ஒன்றே!
வெப்பமும், குளிரும் அவர்க்கு ஒன்றே!

மற்றவர் மனத்துள் புகுந்து அங்கே
மறைந்து கிடக்கும் அனைத்தையும்,
மிச்சமின்றிக் கண்டு அறிந்து கொள்ளும்
அச்சம் தரும் சக்தியும் அவர்க்கு ஏற்படும்!

இயற்கையில் விளங்கும் பலவிதமான
இயக்க முடியாத பொருட்களையும்,
ஆதவன், நெருப்பு, நீர், விஷங்களையும்
ஆற்றலுடன் தம் வசப்படுதுவர் இவர்.

தனக்கு தானே எஜமானன் என்பது போல
நினைத்ததைச் செய்ய வல்லவர் இவர்;
பிறர் மனத்தை அறிய வல்லவரான
இவர் மனத்தை யாரும் வெல்ல முடியாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#71. நாம ஜபமே வழி!





யுகங்கள் மாறும்போது உடன் மாறும்
யுக்தி, சக்தி, பக்தி, முக்தி ஆகியனவும்;
முக்தியின் மார்க்கமும் மாறி விடும்,
சக்திகள் யுகங்களில் மாறும்போது.

சத்திய யுகத்தில் இறை வழிபாடு
நித்தியம் அவர் செய்யும் தவமே!
வெண்ணிறமுடைய பிரம்மச்சாரியாய்
தண்ணருள் புரிந்தான் இறைவன் அப்போது!

ஆசாரம் நன்கு நிலவிய காலம் அது,
ஆயுளும் பல ஆயிரம் ஆண்டுகளாம்!
அமைதியும், அடக்கமும் நிரம்பியதாலே
அமைதியாகத் தவம் செய்ய இயலும்!

திரேதா யுகத்தில் இறை வழிபாடு
சிறந்த யாகம், யக்ஞங்கள் மூலம்,
சிவந்த நிறம் கொண்ட யக்ஞரூபியாக
சிறந்து விளங்கினான் இறைவன் அப்போது!

யாகம் செய்யவும் வசதிகள் வேண்டும்;
யாகம் செய்ய வல்ல பல பண்டிதர்களும்,
யாகம் செய்யும் அக்கறையும், உறுதியும்,
யாகப் பொருட்கள் எனப் பலவும் தேவை.

துவாபர யுகத்தில் இறை வழிபாடுகளோ
தந்திர சாஸ்திரங்கள் கூறும் மார்க்கம்.
நீலமேக சியாமள வர்ணனான இறைவன்
நின்றான் கைகளில் கதை, சக்கரம் ஏந்தி!

கலி யுகத்தில் நம் இறைவன் உருவம்
கரு நீல வர்ணமாக மாறிவிட்டது!
முக்தியடைய ஒரே வழி இங்கே நாம்
பக்தியுடன் செய்யும் நாம சங்கீர்த்தனம்!

கலியில் மனித ஆயுள் மிகக் குறைவு,
கலகங்கள் மலிந்து பெருகி விட்டதால்,
காணமுடியவில்லை அமைதியையும்,
கண்ணியத்தையும், ஆசாரத்தையும்!

படித்த பண்டிதர்கள் மிகவும் குறைவு;
பிடித்தவற்றை வாங்க வசதி குறைவு;
நம்பிக்கையோ நாணயமோ இல்லை;
நம்மால் செய்ய இயன்றது நாம ஜெபமே!

“பொருட்செலவு இல்லாதது, ஆகையால்
அருட்செல்வம் அளிக்க இயலாதது ஜபம்”
என மருண்டு மயங்கி நிற்க வேண்டாம்!
அனைத்தும் சமமே இறைவன் பார்வையில்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
#72. ஒன்பது வித பக்தி.





அன்பர் செய்யும் பக்தியின் வகைகள்
ஒன்பது ஆகும் என்பது பிரசித்தம்,
ஐம்பொறிகளையும், புலன்களையும்,
ஐயனை வழிபட அமைப்பதாலே!

இறைவனின் பெருமைகளைக் காதால்
இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து
தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

இறைவனின் பெருமைகளை வாயால்
இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;
சுக முனி பாடிய பாகவதக் கதையால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும்!

மனதுக்குள் இடையறாது இறை நாமத்தை
மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும்
பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு
நிறைய சேவை செய்வதே “பாத சேவை”;
பாத சேவை செய்யும் மகத்தானதொரு
பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.

மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு
ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை”;
பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில்
பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.

எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி
எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்”;
கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை
கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.

தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி,
நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதில்
அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?

சரி நிகர் சமமாகத் தன்னை எண்ணிக்கொண்டு
இறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”;
உண்டு , உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன்
கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.

தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும்
தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்மநிவேதனம்”;
அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ்
அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#73. மனோ பாவனைகள்.





அன்பு செய்வதில் உண்டு பலவகைகள்;
அன்பின் ஒரு வெளிப்பாடே பக்தியாகும்.
மறைகள் ஏற்றுக்கொள்ளும் வழிகளில்
இறைவனிடம் நாம் அன்பு செய்ய இயலும்.

“சாந்த பாவ”த்தில் பக்தி செய்பவர்கள்
சாந்தமாகவே என்றும் காட்சி அளிப்பர்;
கங்கையின் மைந்தன் பீஷ்மரைப் போல
கனிந்த பக்தியின் ஒரு உருவம் ஆவர்!

“தாஸ்ய பாவ”த்தில் பக்தி செய்வோர்கள்
தாசனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைபவர்;
அனுதினம் தொண்டுகள் செய்து கொண்டு
அனுமனைப் போலவே வாழ்ந்திடுவர் இவர்.

இறைவனைத் தனது உற்ற தோழனாகவும்,
இறைவனைத் தனக்கு ஒத்தவனாகவும்,
எண்ணி அவனிடம் அன்பு செய்வர் சிலர்
பாண்டவர்கள் போல “சக்ய பாவ”த்தில்.

தாயும் தந்தையும் ஆன இறைவனுக்கு
தாயாகத் தானே ஆனது போல் எண்ணி,
வாஞ்சையுடன் தாய் போல அன்பு செய்பவர்
“வாத்சல்ய” பக்தர்கள் யசோதையைப் போல.

உயர்ந்த பக்தியின் பாவனை இதுதான்;
உலகத்தின் தன்னிகரற்ற தலைவனை,
உண்மைக் காதலனாக எண்ணி ஏங்கி,
உருகிப் பிரிவால் வருந்தி வாடி நிற்பதே!

ஒரு இளம் பெண்ணாக ஜீவாத்மாவையும்,
விரும்பும் காதலனாகப் பரமாத்மாவையும்,
உருவகிக்கும் “மாதுர்ய பாவ” பக்தியில்
சிறந்தோர் மீரா, ஆண்டாள், ஜெயதேவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#74. அஷ்ட சித்திகள்!





சித்திகள் எட்டும் நம் வசப்படும், உடல்
சக்கரங்கள் ஏழும் எழுப்பப்பட்டால்!

சித்தி பெற்ற சித்த புருஷர்கள்
செய்வர் பற்பல அற்புதங்கள்!

அணுவாகத் தன் உடலைக் குறைக்க
“அணிமா” என்னும் சித்தி உதவிடும்.

மலை போலத் தன் உடலை வளர்க்க
“மகிமா” என்னும் சித்தி உதவிடும்.

கரியை நிகர்த்த உடல் எடை அடைய
“கரிமா” என்னும் சித்தி உதவிடும்.

லேசான இறகு போல உடலை மாற்ற
“லகிமா” என்னும் சித்தி உதவிடும்.

பிரியப்பட்ட இடத்துக்கு உடனே செல்ல
“பிராப்தி” என்னும் சித்தி உதவிடும்.

விரும்பிய பொருட்களை அடைந்திட
“பிரகாம்ய” என்னும் சித்தி உதவிடும்.

ஈசனுக்கு நிகரான சக்தி அடைவது
“ஈசத்வம்” எனப் பெயர் பெற்ற சித்தி.

யாராகிலும் தன் வசப்படுத்துவது
“வசத்வம்’ என்கின்ற சித்தி ஆகும்.

அஷ்ட சித்திகளும் அடைந்தவருள்
அனுமனே மிகச் சிறந்தவன் ஆவான்.

தனக்கென்று இல்லாமல் பிறருக்காகவே
தன் சித்திகளை அவன் பயன்படுத்தியதால்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
#75.அனைத்தும் அவனே!





அனைத்துப் பொருட்கள் மட்டுமின்றி
அனைத்து உயிர்களும் நம் இறைவனே;
ஆயினும் அவன் பெருமையைத் தெரிவிப்பன
அரிய பொருட்களாகின்ற அவன் தன்மையே.

அகர முதல எழுத்து என அறிவோம்; அதில்
அகரமாக உள்ளவன் அந்தக் கண்ணனே!
மந்திரங்களில் சிறந்த பிரணவத்திலும்
மறைந்து ஒளிர்பவன் அந்தக் கண்ணனே!

மனுச் சக்ரவர்த்தியாக அரசர்களுக்குள்ளும்,
முனிவர்களில் சிறந்த நாரதர், பிருகு ஆகவும்,
அசுரர்களில் சிறந்த பிரஹலாதனாகவும்,
பசுக்களில் சிறந்த காமதேனுவாகவும்,

பறவைகளில் சிறந்த கருடனாகவும்,
பாம்புகளில் சிறந்த அனந்தன் ஆகவும்,
நதிகளில் சிறந்த கங்கையாகவும்,
துதி செயும் அந்தணருள் பலியாகவும்,

அனைத்து யாகங்கள், யக்ஞங்களிலும்
அனைவரும் செய்ய வல்ல ஜபமாகவும்,
படை வீரரில் சிறந்த அர்ஜுனனாகவும்,
பக்தர்களில் சிறந்த உத்தவராகவும்,

புஜ பலசாலிகளின் நிஜ பலமாகவும்,
தேஜஸ்விகளின் நல்ல தேஜஸ் ஆகவும்,
காணும் இடமெல்லாம் அரிதாய் உள்ளவை
கண்ணனின் வடிவமே, அழகே, பலமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



Cancel reply
 
#76. நாலு வகை பக்தர்!





பக்தி, இறைவன் அருள் வேண்டியே
பக்தர்களால் நன்கு அனுசரிக்கப்படும்;
பலன் எதிர்பாராமல் பக்தி செய்பவர்,
பல ஆயிரம் பேர்களில் ஒரே ஒருவரே!

கோவில்களில் ஜனக் கூட்டம் அலைமோதும்;
காவி உடைக்கும், பூஜைக்கும் பஞ்சமில்லை;
இத்தனை பக்தர்கள் இருந்த போதிலும்
இத்தனை மோசமான உலகம் எப்படி?

விசித்திரமான இந்த வினாவுக்கு
விடை அளிப்பவன் மாயக் கண்ணன்;
படைத்தவன் அறிவான் நம் மனத்துள்
அடைத்துக் கிடக்கும் ஆசைகள் எல்லாம்!

உலகின் போகங்கள் அனைத்தையும்
உல்லாசமாக அனுபவிக்க வேண்டியே
கடவுளிடம் நன்கு பக்தி செய்வார் பலர்;
கடை நிலை பக்தர்கள் ஆவர் இவரே!

செல்வம் சேரவேண்டும் தம் மனம் குளிர;
செல்லாதிருக்க வேண்டும் தம்மை விட்டு;
நில்லாமல் ஓடி ஓடிக் கும்பிடுவர் வேறு சிலர்
எல்லாக் கோவில்களுக்கும் சென்று சென்று!

மூன்றாம் நிலை பக்தர்கள் இவர்களின்
மூச்சு பேச்சு எல்லாம் சொத்துச் சேர்ப்பதே;
எதுவும் தருவான் இறைவன் ஆனால்
இது மட்டுமே இவர்களின் கோரிக்கை!

இறைவனிடம் இரண்டாம் நிலை பக்தர்
இறைஞ்சி வேண்டுவதோ பகுத்தறிவு.
இறைவனையும் மாயையும் வேறு வேறாக
அறிந்துகொள்ளும் சக்தியும், ஞானமுமே!

முதல் நிலை பக்தனோ முழு ஞானி!
மனத்தை அடக்கி, இறையில் திளைத்து,
மமகாரத்தையும், அகங்காரத்தையும்
முற்றிலுமாகத் தொலைத்தவன் அவன்!

தாயும் தந்தையும் ஆன நம் இறைவன்
தருவான் நாம் விரும்பி விழைவதை;
கோடீஸ்வரனிடம் கோடிகள் பெறாமல்
வாடி நிற்போமேயானால் அது யார் தவறு?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
Dear Mr. R.K.B,
I was wondering about Kutty friend's competition results!
Thanks for the Good News.
Tell her to keep up the good work
And wish her Good Luck for the dance recital on 25th inst.
with warm regards,
V.R.
 
#77. செவிடன் காதும், ஊதும் சங்கும்!





ஒருமுறை கேட்டேன் அறியாமையால்,
குருவிடம் நான் ஒரு சிறிய கேள்வி!

“பாங்குடன் உலகைக் காக்கும் கைகளில்,
சங்கு, சக்கரம், கதை, தாமரைகள் ஏன்?”

சிறு குழந்தைக்குச் சொல்வது போல,
சிரித்தபடியே சொன்னார் எங்கள் ஆசான்.

“இறைவன் நல்வழி நடப்பவர்களுக்கு,
சிறந்த தாமரை மலரினைத் தருவான்.”

தவறு செய்வோரை, சங்கொலி எழுப்பி,
கவனத்துடன் நடக்கும்படிச் சொல்வான்.

செவிடன் காதில் ஊதிய சங்கானால்,
செவிட்டில் அடிப்பான் கதையினால்!

தடுத்தும் மீண்டும் வரம்பு மீறினால்,
எடுப்பான் சக்கராயுதத்தை!”, என்றவர்

“உங்களுக்கு வேண்டியது தாமரையா,
சங்கா, சக்கரமா?”, எனக் கேட்டார்!

கனியிருக்கக் காய்களைக் கவருவோமா?
இனிய தாமரை இருக்க மற்றவை எதற்கு?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
#78. சாபமும் ஒரு வரமே!





கருமையும் அழகே, காந்தலும் ருசியே;
கருதி நோக்கினால் சாபமும் ஒரு வரமே!
சாபவிமோசனம் ஏற்படும் பொழுதே,
தாபங்கள் தீர்ந்து, உயர்வும் வரும்.

முனிகுமாரர் வைகுந்தம் செல்கையில்,
முரட்டுத்தனமாய் தடுத்து நிறுத்திய,
ஜெய, விஜயர்கள் அடைந்தனர் சாபம்,
ஜென்மங்கள் மூன்று உலகில் பிறக்கும்படி.

இரு அசுரர்களாகி கோபத்தைக் கழிக்க,
இரண்யாக்கன், இரண்யகசிபு என உலகில்,
தோன்றியதாலேயே நமக்கு கிடைத்தன,
தோன்றலின் வராக, நரசிம்ம அவதாரம்.

ராட்சதர்களாகி காமத்தைக் கழிக்க,
ராவணன், கும்பகர்ணன் என உலகில்,
தோன்றியதாலேயே நாம் அடைந்தோம்,
சான்றோன் ஆகிய ராமனின் அவதாரம்.

மனிதர்களாகித் தம் லோபத்தைக் கழித்த,
மதம் கொண்ட சிசுபாலன், தந்தவக்த்ரனை,
மாய்க்கப் பிறந்ததால் உலகம் பெற்றது,
மயக்கும் மாயக் கண்ணனின் அவதாரம்.

தன் அடியவர்களையே சாபத்தினால்,
தன் எதிரிகளாக் காண்பித்து, இறைவன்,
ஏற்படுத்தியதே இந்த விளையாட்டு,
ஏற்பட்டது உலகனைத்துக்கும் நன்மை!

அகத்தியர் சாபத்தால் பாண்டிய மன்னன்,
அழகிய களிறுகளின் அரசன் ஆனான்.
காலை இழுத்து, தேவலர் சாபத்தால்,
கந்தர்வன் ஹூ ஹூ முதலை ஆனான்.

இருவரையும் விடுவித்து, கந்தருவனுக்கு
இருந்த உருவமும், மன்னனுக்கு முக்தியும்,
இறைவன் கைவிடான் என்ற உறுதியை ,
இவ்வுலகினர்க்கும் கொடுத்தான் இறைவன்.

அருட் பிரசாதமான மாலையை தேவர்கள்,
அவமதித்து, சாபத்தால் ஒளி இழந்தனர்.
கிடைத்தன பாற்கடல் கடைந்திடும்போது ,
காமதேனு, கற்பகம், திருமகள், அமுது!

ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து ஆம்;
ஒருவரின் சாபம் பலரின் பரிசு ஆம்!
எது எப்படி நடந்தாலும் அது நன்மைக்கே,
என்று திடமாக நாமும் நம்பிடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 



Story of poem # 78

CURSE IS ALSO A BOON.

Even curses are boons in reality, since many good things happen when the

'shaapa vimochanam' occurs.

Jaya and Vijaya were the two divine dwArapAlakAs of Lord Vishnu.

Once they stopped Sanaka and his three brothers from visiting Lord NArAyanA.

The holy boys become extremely angry and curse Jaya and Vijaya to be born

on earth.

They choose to be the enemies of God for three life spans and get vimochanam.

First they were born as the terrible Asura twins HiranyAkshan and Hiranya

kasipu.

Lord killed HiranyAksha as VarAha Moorthy and Hiranya kasipu as Lord Narasimha.

In their next janma, they were born as terrifying rAkshasAs RAvanan and

Kumbakarnan.They got killed by the Lord in RAma avatar.

Again they were born as human beings in the form of SisupAlan and

Danthavakthran. They got killed by Sri Krishna AvatAram.

When the Pandya king IndradhyumnA was cursed by sage Agasthya, he became

GajEndran. Gantharavan Hoo Hoo playfully pulled the legs of Devala Rishi and

was cursed to become a crocodile.

God redeemed both their curses and gave their original form and glory. He gave us a

promise that He will deliver us from all our troubles.

When Indra humiliated the divine garland presented by DurvAsa maharishi,

and incurred his wrath, the divine glory of DEvAs started diminishing, due to Rihsi's

s'Apam.

Amrutha mathanam brought out kAmadhEnu, kalpaga vruksham, Lakshmi Devi

and the Nectar of Immortality.

So every curse seems to bring more and more good things and divine AvatArs

of the Lord to the world. So a curse is also as good as a boon!
 
Last edited:
dear friends,

From tomorrow I will try to give the meaning of the poem, below the poem itself.

I will come back to the ones we have missed (#1 to #77) later on.

with warm regards,
V.R.
 
#79. புஜ பலமும், நிஜ பலமும்!





புஜ பலம் என்றுமே நிஜ பலம் அன்று;
புத்தி பலம் தான் நிஜ பலம் என்றுமே.
நன்றாய் நமக்கு உணர்த்திடும் இதை,
தொன்று தொட்டு வரும் ஒரு நல்ல கதை.

சாபம் அடைந்த, தேவர்கள் கூட்டம்,
பாபம் நீங்கி, பலம் முன்போல் அடைய;
பாற்கடல் கடைந்து, அமுத கலசத்தை,
நோற்பது போல, பெற்றிட வேண்டும்.

“அரக்கர்கள் ஆயினும் நீர் எம் உறவினரே,
அமுதம் பெற்றிட எமக்கு உதவிட வேண்டும்!
தேனாம் அமுதை பகிர்ந்து கொள்வோம்” எனத்
தேன் போல் இனிக்க பேசினர் தேவர்கள்.

மந்தர மலையையே மா மத்தாக்கி,
வாசுகி பாம்பை பெரும் கயிறாக்கி,
முந்தித் தலைப் பக்கம் சென்று நின்றனர்,
கேசவன் மாயம் உணர்ந்த தேவர்கள்.

“வலிமை நிறைந்த அரக்கர் நாங்கள்,
வால்புறம் ஏன் நாம் பிடித்திட வேண்டும்?
தலைப்புறம் எமக்கு தந்திடுவீர்”, என
தொலை நோக்கில்லா அசுரர் வேண்டினர்.

கடைந்த போது துவண்ட மேனியால்,
வீசியது வாசுகி விஷ மூச்சு காற்றை.
கடைசி அரக்கன் வரை விஷ வாயுவினால்,
வீரியம் இழந்து வாடிப் போயினர் அசுரர்.

வால் பக்கம் உள்ள வானவர்கள் எல்லாம் ,
மால் அவன் கருணையால் ஒரு சிறிதும்
துயர் இன்றியும் முன்போன்றே சற்றும்
அயர்வின்றியும் கடைந்தனர் பாற்கடலை.

விரும்பியதை அளிக்கும் காமதேனுவை,
விரும்பினர் வேள்வி வளர்க்கும் முனிவர்;
வியனுலகு காணா வெண்பரி உச்சைசிரவசை,
விரும்பிப் பெற்றான் மன்னன் மகாபலி.

ஐராவதம் என்னும் வெள்ளை யானையை,
சுரர்கள் தலைவன் இந்திரன் பெற்றான்.
சிவப்பொளி வீசிய கௌஸ்துபம் என்னும்
சீரிய மணி ஸ்ரீமன் நாராயணனுக்கே.

பாரிஜாதம் என்னும் தெய்வீக மரத்தை,
கோரிப் பெற்றது தேவர்கள் கூட்டம்.
அப்சரஸ் என்னும் தெய்வ மங்கையரை,
அடைந்து மகிழ்ந்தார் வானுலகத்தோர்.

அமுதமே பெண்ணாகி வந்த திருமகள்,
ஆதி தேவன் நாராயணனை வரித்தாள்.
மதுவின் தெய்வமாய் மனத்தை மயக்கி,
மதத்தை வளர்த்தும் வாருணி அசுரர்களுக்கு!

கலசமும் கையுமாய் கடலில் இருந்து,
களையான முகத்துடன் வந்த தன்வந்த்ரியின்,
கலசத்தைப் பறித்து கலஹம் செய்தாலும்,
கடைசி வரை அமுதம் பெறவில்லை அசுரர்!

அனைத்து பொருட்களையும் தங்கள் வசமே,
அமைத்துக்கொண்டது தேவர்கள் கூட்டம்.
அமுத பகிர்விலும் மோகினியாக வந்து,
தமது வசீகரத்தால் வஞ்சித்தார் கண்ணன்.

ஆயிரம் யானைகள் பலம் இருந்தாலும்,
ஆயிரம் தோள்கள் பெற்று இருந்தாலும்,
ஆயிரம் ஆயுதங்கள் வைத்து இருந்தாலும்,
புய பலம் தோற்கும் புத்தி பலத்திடம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



Cancel reply
 
Bhuja Balam is not nija Balam.



Bhuja Balam is not nija Balam.

This has been proved by an ancient mythological story.

To regain their lost glory (due to the s'ApA of DurvAsa maharishi)

dEvAs have to get hold of the divine Nectar by churning the Ocean of Milk.

This can't be done without the help of their half-brothers, the asurAs.

They agree to share the fruit of their joint venture-the Amrutham.

Mount MandarA is the giant churn and Serpent VAsuki is the chord wound round it.

The dEvAs catch hold of the side near the snake's head.

The asurAs feel humiliated to touch its tail side and demand the side of its head.

As they churn, the snake emits poisonous fumes which affect the asurAs close by more than the dEvAs farther away.

Many wonderful things emerge from the ocean of milk.

KAmadenu the miracle cow is given to the rushis, who perform yagnas and yAgAs.

The divine white horse Uchchaisravas is given to Bali Chakravarthy.

The four tusked white elephant AirAvatham is given to Indran.

The gem Kousthubam is given to Lord NArAyanA.

DEvAs take possession of the ApsarAs.

Lakshmi DEvi prefers Lord NArAyanA and weds him.

The only thing AsurAs get is VAruni-the goddess of Wine and Intoxication.

Danvanthri emerges with the amrutha kalasam.

Even though the AsurAs do kalaham to get hold of it, Vishnu deceives them appearing as a Mohini.

The asuras may boast of possessing the strength of 1000 elephants.

They may boast of possessing 1000 arms and 1000 Ayudams.

But always budhdhi wins over mere physical sakthi.
 
Last edited:
dear friends,

I have written a prayer on Krishna which is followed by three different sections.

The first section deals with the relationship between 'God and Man' (Eshwar and JeevA).

The second section deals with 'Man and the World'( JeevA and Jagath).

The third section consists of stories from epics and purAnAs.

Of these 40 poems have been posted under different threads already and 79 in this thread so far.

I will start with 'God and man' first and then go on the other two sections and finally to the poems posted in the other threads.

Hope it is alright with you.

Happy reading! Don't forget to send your feedback!

with warm regards,
Visalakshi Ramani.
 
# 53. The divine baby krishna.



THE DIVINE BABY KRISHNA.

This song uses the Tamil alphabets as the beginning letter of each line and describes the glory of Krishna.

He who resides in the heart of His devotees;

He who floats on a tiny Bunyan leaf in the Pralaya jalA;

He who is the jewel among the cowherds;

He who is the protector of the fourteen worlds;

He who can swallow the world during PralayA and bring it out again during srushti;

He who has a beautiful flute in his hand;

He who grew up in Yathu kulam;

He who is the Lord of the Seven Hills;

He who is the friend of the pAndavAs;

He who dances brilliantly on the heads of the serpent kAliyA;

He who grew up sky high as VAmanA;

He who is the only remedy for the malady called samsArA;

Come to me! Come to me! Come to me!
 
# 54. RAMA and KrishnA.


RAMA and KrishnA.

RAMA and KrishNA are both avatArs of Vishnu.
Yet they cannot be more different from each other!

RAMA was born in a palace.
KrishnA was born in a prison.

RAMA was a royal Prince.
KrishnA was a cowherd.

RAMA lived a luxurious life as a child.
KrishnA was always hiding from his enemies.

RAMA was a man of few words.
KrishnA loved to talk a lot!

RAMA spoke only satyam.
Whatever krishnA spoke became satyam.

People blessed RAMA all along.
Enemies tried to kill KrishnA all along.

RAMA never left behind a friend.
KrishnA was always on the move.

RAMA did not mingle with women.
KrishnA loved the company of women.

RAMA kept his distance from others.
KrishnA mingled freely with everyone.

His father's words were 'mantra' for RAMA.
His words became 'mantra' for Krishna.

RAMA broke down in difficult situations.
KrishnA laughed at the face of problems.

RAMA lived as a human being.
KrishnA was a mAyAvi from the beginning.

RAMA listened to the others.
KrishnA taught the others.

RAMA RAjyam was famous.
Krishna SAyujyam is famous.

We have to learn from RAMA by doing what He did.
We have to learn from KrishnA by listening to what He said.

RAMA and KrishnA may appear totally opposed!
But they both form the pillars of India and Hinduism.
 
Dear Sir,
Thank you for your feedback and compliments.
I referred to my Sanskrit dictionary since your name sounded unusual.
After refering to both Kahanam and Gaganam I thought it must be Gaganam.
Are you reading the original Tamil version or the new English translation?
with warm regards,
V.R.
 
#80. தீவிர பக்தன்!





பார்த்தன் மனத்தில் ஒருமுறை,
கர்வம் தோன்றி வளரலானது;
“பாரினில் பரம பக்தன் நானே!”
கார்வண்ணன் சிறிது நகைத்தான்.

“உனக்கு ஒரு நல்ல வேடிக்கையை,
தனித்துக் காட்டுவேன் வா!” எனப்
பார்த்தனை அழைத்துச் சென்றான்,
பார்த்தசாரதி ஓர் தனி இடத்துக்கு.

உலர்ந்து காய்ந்த புல்லை மட்டுமே,
உண்டு உயிர் வாழுகின்ற ஒரு
வினோத மனிதனைக் கண்டு,
வியப்பில் ஆழ்ந்தான் பார்த்தன்!

படைப்பில் அரியவன் ஆகிய அவன்
இடுப்பில் இருந்த வாளே காரணம்.
புல்லைத் தின்னும் இம் மனிதனிடம்,
கொல்லும் வாளா என வியந்தான்!

வினோத மனிதன் அவனிடம் உரைத்தான்,
“எனது பரம எதிரிகள் நால்வர் ஆவர்;
கண்டதும் கொல்வேன் நான் அவர்களை,
கத்தியும் என்னிடம் உள்ளது பார்!” என்றான்.

“முதல் முதல் எதிரி அந்த நாரதனே;
முழு நேரமும் பாட்டு, வீணை எனத்
தொல்லைகள் பலவும் செய்வான்,
எல்லை இல்லாத நம் இறைவனை!

இரண்டாவது எதிரி திரௌபதியே;
இரக்கம் என்பதே இல்லை அவளிடம்;
உண்ணவிடாமல் வரவழைத்தாள்,
கண்ணனைக் காம்ய வனத்துக்கு!

நீரிலும், நெருப்பிலும், இறைவனை
நுழையச் செய்து, தூணிலிருந்தும்
தோன்றச் செய்தான் நரஹரியாக,
மூன்றாம் எதிரியான பிரஹ்லாதன்.

நான்காம் எதிரி அந்த அர்ஜுனனே.
இறைவனைத் தேர்ப்பாகன் ஆக்கி,
இவன் அமர்ந்தான் அந்தத் தேரில்,
இவன் மேலே, கண்ணன் கீழே என!

பார்த்தனின் பொங்கிய மனோ கர்வம்,
பாலில் தண்ணீர் தெளித்தது போல
நொடியில் அடங்கியது! “தீவிர பக்தன்
தேடினாலும் கிடையான் இவனைப் போல!”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



Cancel reply
 
# 80. Theevra Bhaktan.




One day arjuna feels proud that he is the best bhakthA of Sri KrishnA.

Krishna goes for a stroll with arjunA and shows him a strange man.

The man eats nothing but dried grass but has a dagger in his waist.

He tells arjunA that he has four enemies whom he will kill-the moment he sees them.

NAradA is the first enemy. He plays veena and sings all day long and does not give

the Lord a moment of peace and quiet.

The second enemy is Droupathi, who bade Krishna to come to KAmyavana,

even before he could eat his meal.

The third enemy is PrahlAd who made the Lord appear from fire, water and even

a stone pillar.

The fourth enemy is arjunA who made Lord his sArathi and made the Lord sit in a

lower level in the chariot.

arjunA became spell-bound by the intensity of the man's love for God!
 
Last edited:
# 55. This too is an one way traffic!



One way traffic and two way traffics are not new to the world.

"All roads lead to Rome" is an old adage. Similarly all roads lead to KrishnA but none of them come back from Him!

PUthanA feigned to be an affectionate mother, while breast feeding KrishnA. But she gave up her life and never went back to the place where she had come from.

S'akatAsurA who came in the guise of a propelling wheel, was shattered to a thousand pieces by a kick inflicted by the lotus feet of infant krishnA.

ThrunAvarthA, who lifted up Krishna in the form of a hurricane, trying to kill Him, instead got killed by KrishnA.

VatSAsurA who appeared as a calf, was whirled round and flung to his death, quite playfully by KrishnA.

BakAsurA the giant bird was torn into two pieces by KrishnA with His bare hands.

aghAsurA who came in the guise of a giant pyhton, DhEnukA, PralambA, KEsi and ArishtA all disappeared from the face of the earth and never went back.

The enemies of KrishnA give up their ghosts and never return. But those who adore and love Him also never come back - since they can't stand the separation.

There is a famous saying about God.
"Those who have seen Him, never speak about it.
Those who speak about it, have never seen Him"

Similarly "Those who go to KrishnA, never return.
Those who have returned, have never gone to Him"
 
Last edited:

Latest ads

Back
Top