வள்ளுவரைப் போற்றுவோம் ..... 155
உண்மை அறிதல்...
ஒரு ஒற்றர் தெரிந்து கொண்டு வந்த செய்தியை, வேறு
ஒரு ஒற்றர் மூலமும் அறிந்து கொண்டு, அதன் பின்னர்,
அந்தச் செய்தியின் உண்மையைத் தீர்மானிக்க வேண்டும்.
இந்தச் சிறந்த அறிவுரையை, ஒரு குறளில் உரைக்கிறார்.
'ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்', என்பது குறட்பா.
இரண்டு ஒற்றரும் போதாது; உண்மையை உறுதியாக்க,
மூன்று ஒற்றரின் செய்திகள், ஒன்றாக இருக்க வேண்டும்!
ஒருவரை ஒருவர் அறியாதபடி, மூவரை நியமித்து, அவர்
தருவதை ஆராய்ந்து, உண்மை உணர அறிவுறுத்துகிறார்.
'ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்', என்கிறார் அவர்.
ஒற்றரின் திறனை வியந்து, பிறர் அறியச் செய்துவிட்டால்,
ஒளிவு மறைவான பொருளை, வெளிப்படுத்தியது ஆகும்.
ஒளிவு மறைவாக விவரங்கள் சேகரிக்கும் ஒற்றனின் புகழ்,
ஒளிவு மறைவாகவே இருக்க வேண்டும், என்று கூறுகிறார்!
'சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை', என்பது குறட்பா.
கற்றறிந்த அறிஞரின் அறிவுரை மட்டும் அல்லாது, சிறந்த பல
ஒற்றரின் நேர்மையான உழைப்பும், நல்ல அரசுக்குத் தேவை!
:angel: