• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sahasra nAma AvaLi

4. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி​


b4

மஹாலக்ஷ்மி நமஸ்துப்4யம் நமஸ்துப்4யம் ஸுரேச்’வரி |
ஹரிப்ரியே நமஸ்துப்4யம் நமஸ்துப்4யம் த3யாநிதே4 || (4)

மஹா லக்ஷ்மி தேவியே! உனக்கு நமஸ்காரம், தேவர்களின் ஈஸ்வரியே! உனக்கு நமஸ்காரம். ஹரியின் ப்ரிய சகியே! உனக்கு நமஸ்காரம். கருணையின் இருப்பிடமானவளே! உனக்கு நமஸ்காரம்.
 

1. ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி​


c0

யாகுந்தே3ந்து3 துஷாரஹார த4வளா யா ஸுப்3ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர த3ண்ட3மண்டி3தகரா யா ஸ்வேதபத்மாஸனா |
யா ப்3ரஹ்மாச்யூத ச’ங்கர ப்ரப்4ருதிபி4: தே3வைஸ்ஸதா3பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதி ப4க3வதி நிச்’சேஷ ஜாட்3யாபஹா || (1)


எந்த பகவதி மல்லிகை, சந்திரன், பனி இவற்றைபோன்ற முத்து மாலையை அணிந்தவளோ ; வெண் பட்டு உடுத்தியவளோ; வீணையை மீட்டும் அழகிய கரங்களை உடையவளோ; வெள்ளைத் தாமைரயில் வீற்று இருப்பவளோ; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியோரால் பூஜிக்கப் படுபவளோ; அந்த சரஸ்வதி தேவி என் அறியாமையின் இருளை அகற்றி என்னை காத்தருளவேண்டும்.
 

2. ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி​


c2

ஸ்ரீமச் சந்த3ன சர்ச்சிதோஜ்வலவபு: சு’க்லாம்ப3ர மல்லிகா
மாலாலாலித குந்த3ளா ப்ரவிலஸன் முக்தாவளி சோ’ப4னா |
ஸர்வஜ்ஞான நிதா3ன புஸ்தகத4ரா ருத்ராக்ஷ மாலாங்கிதா
வாக்3தே3வி வத3நாம்பு4ஜே வஸதுமே த்ரைலோக்யமாதா சு’பா4 ||(2)


சந்தனக் கலைவையினால் ஜொலிக்கும் சரீரத்தை உடையவள்; மல்லிகை மாலை சூடிய கூந்தலை உடையவள்; பிரகாசிக்கும் முத்து மாலைகளால் அழகு பெற்றவள்; எல்லா அறிவையும் அளிக்கும் புத்தகங்களை ஏந்தியவள்; ருத்திராக்ஷ மாலையை அணிந்தவள்; அழகிய வடிவினை உடையவள்; மூன்று உலகங்களுக்கும் தாய்; வாக்குக்கு ஈஸ்வரி ஆகிய சரஸ்வதி அன்னை என் முக கமலத்தில் வசிக்க வேண்டும்.
 

Devi Sthuthi​


a11

தேவி மாஹாத்மியத்தில் அமைந்துள்ள
தேவி ஸ்துதிகளை மட்டும் காண்போம்!


உலகில் நிரம்பி வழியும் கலகங்களே போதும்!
கொலைக்களக் காட்சிகள் இங்கே வேண்டாமே!

அடுத்து வருவது மார்கண்டேய மகரிஷியின்
அர்க்கலா ஸ்தோத்திரம் எனப் புகழ் பெற்றது.
 

அர்க்க3லா ( 1 and 2)​


a21

ஜயந்தி மங்க3லா காளீ பத்3ரகாளி கபாலினீ |
துர்கா3 க்ஷமா சி’வா தா4த்ரீ ஸ்வாஹா ஸ்வதா4 நமோஸ்து தே || (1)


ஜயந்தீ, மங்கலா, காளீ, பத்ரகாளீ, கபாலினீ, துர்கா, க்ஷமா, சிவா, தாத்ரீ, ஸ்வாஹா, ஸ்வதா என்னும் பல பெயர்களைப் பெற்றுள்ள அன்னையே உனக்கு நமஸ்காரம்.

மது4கைடப4 வித்3ராவி விதா4த்ரு வரதே3நம: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (2)


மது கைடபர்களை அழித்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே !
உனக்கு என்னுடைய நமஸ்காரம். எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்!
நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்!
என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 3 and 4)​


a3

மஹிஷாஸுர நிர்நாச’ விதா4த்ரி வரதே3 நம : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (3)

மகிஷாசுரனைக் கொன்று உலகினைக்காத்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே! எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

வந்தி3தாங்க்4ரி யுகே3 தே3வி சௌபா4க்3யதா3யினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (4)

உலகம் அனைத்தும் வணங்கும் திருவடிகளை உடையவளே!
தேவர்களுக்கு வெற்றி என்னும் சௌபக்கியத்தைத் தருபவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 5 and 6)​


a4

ரக்த பீ3ஜ வதே4 தே3வி சண்ட3 முண்ட3 விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (5)


ரக்த பீஜன் என்னும் கொடியவனை வதைத்தவளே!
சண்ட முண்டாசுரர்களைக் கண்டனம் செய்தவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ ச’த்ரு விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (6)


நினைப்பதற்கே அரிய வடிவினையும் அற்புதமான வரலாற்றையும் உடையவளே!
எல்லாப் பகைவர்களையும் நாசம் செய்பவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 7 and 8)​


a5

நதேப்4யோ ஸர்வதா3 பக்த்யா சண்டி3கே ப்ரணதாயமே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (7)


பரப்ரம்ம ஸ்வரூபிணி ஆகிய அன்னையே!எப்போதும் மாறாத பக்தியுடன் உன்னை வணங்குவோருக்கும் எனக்கும நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! எம் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸ்துவத்ப்௪ : ப4க்திபூர்வம் த்வாம் சண்டி3கே வ்யாதி3 நாசி’னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (8)


சண்டிகையே! அனைத்து வியாதிகளையும் நாசம் செய்பவளே!பக்தியுடன் உன்னைத் துதிப்பபவர்களுக்கு நீ நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 9 and 10)​


a6

சண்டி3கே ஸததம் யே த்வாமர்சயந்தீஹ ப4க்தித: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 9

சண்டிகையே! எவர் எவர் உன்னை எப்போதும் மாறாத பக்தியுடன்
அர்சிக்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3ஹி சௌபா4க்4யமாரோக்3யம் தே3ஹிதே3வி பரம் ஸுக2ம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 10


தேவி! சௌபாக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் அளிப்பாய்.
பிரமானந்தம் ஆகிய பேரின்பத்தையும் அளிப்பாய்.
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 11 and 12)​


a7

விதே4ஹி த்3விஷதாம் நாச’ம் விதே4ஹி ப3லமுச்சகை : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி|| (11)


சத்ருக்களை நாசம் செய்வாய்! அற்புதமான பலத்தைத் தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

விதே4ஹி தே3வி கல்யாணம் விதே4ஹி விபுலாம் ச்’ரியம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (12)


தேவி! மங்கலத்தை அளிப்பாய்! நிறைந்த செல்வத்தை தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா (13 and 14)​


a8

வித்3யாவந்தம் யச’ஸ்வந்தம் லக்ஷ்மிவந்தம் ஜனம் குரு |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 13


கல்விமான் ஆக்குவாய்! புகழ் பெற்றவன் ஆக்குவாய்!
செல்வம் படைத்தவனாகவும் இந்த மனிதர்களை ஆக்குவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ப்ரசண்ட3 தை3த்ய த3ர்பக்4னே சண்டி3கே ப்ரணதாய மே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 14

பெயர்பெற்ற தைத்தியர்களின் செருக்கை அழித்தவளே!
சண்டிகையே! வணங்கும் எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்!
நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்!
பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 15 and 16)​


a9

சதுர்பு4ஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்’வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 15


நான்கு புஜங்களை உடையவளே! நான் முகனால் துதிக்கப் படுபவளே! பரமேச்வரி! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்.

க்ருஷ்ணேன ஸம்ஸ்துதேதே3வி ச’ச்’வத்ப4க்த்யா ததா2ம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 16

அம்பிகையே! தேவி! கிருஷ்ணபகவானால் இடைவிடாது பக்தியுடன் துதிக்கப் பட்டவளே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்.
 

அர்க்க3லா (17 and 18)​


a10

ஹிமாசல ஸுதாநாத2 பூஜிதே பரமேச்’வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி | | 17


பார்வதி நாதனால் பூஜிக்கப் பட்டவளே! பரமேச்வரி!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸுராஸுர சி’ரோரத்ன நிக்4ருஷ்ட சரணேம்பிகே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி| | 18


தேவர்களும் அசுரர்களும் தங்கள் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களால் தொட்டு வணங்கும் அழகிய பாதங்களை உடையவளே! அம்பிகையே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா (19 and 20)​


A

இந்த3ராணீபதி ஸத்3பா4வ பூஜிதே பரமேச்’வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி | | 19

இந்திராணியின் பதியாகிய இந்திரனால் நன்கு பூஜிக்கப் பட்டவளே! பரமேஸ்வரி! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3வி ப்ரசண்ட3தோ3ர்த3ண்ட3 தை3த்ய த3ர்ப விநாசி’னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 20


தேவி! கொடிய தோள் வலிமை படைத்த தைத்தியர்களின் கர்வத்தை நாசம் செய்தவளே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா (21 and 22)​


AA

தே3வி! ப4க்த ஜனோத்3தா3ம த3த்தானந்தோ3த3யேம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 21


தேவி! பக்தர்களுக்கு பரமானந்தத்தின் மூலமான முக்தியை அளிப்பவளே!அம்பிகையே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

பத்னீம் மனோரமாம் தே3ஹி மனோவ்ருத்தானுஸாரிணீம் |
தாரிணீம் து3ர்க3 ஸம்ஸார ஸாக3ரஸ்ய குலோத்3ப4வாம் || 22


மனதுக்கு இனியவளாகவும், மனதின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுபவளாகாவும், கடப்பதற்கு அரிய ஸம்சார சாகரத்தைக் கடக்க உதவுபவளாகவும், நல்ல குலத்தில் உதித்தவளும் ஆகிய மனைவியை அளிப்பாய்.

ப2லஸ்ருதி:

இத3ம் ஸ்தோத்ரம் படி2த்வா து மஹாஸ்தோத்ரம் படே2ன் நர: |
ஸ து ஸப்த ச’தி ஸங்க்2யா வர மாப்நோதி ஸம்பத3: ||


இந்த ஸ்தோதிரத்தைப் படித்த பிறகே தேவி மாஹாத்மியத்தைப் படிக்க வேண்டும்.
அதனால் சிறந்த பலன் கைக்கூடும், சகல சம்பத்தும் கிடைக்கும்.

இதி ஸ்ரீ மார்கண்டே3ய புராணே அர்க்க3லா ஸ்தோத்ரம் ஸமாப்தம். 🙏
 

From tomorrow onwards this will follow.​

தேவர்களின் ஸ்துதி (1)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும் தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.
 

தேவர்களின் ஸ்துதி(1)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

தே3வா ஊசு: || (8)

நமோ தே3வ்யை மஹா தே3வ்யை சி’வாயை ஸததம் நம : |
நம: ப்ரக்ருத்யை ப4த்3ராயை நியதா: ப்ரணதாஸ்மதாம் || (9)


தேவர்கள் கூறியது:-

தேவிக்கு நமஸ்காரம். மஹா தேவிக்கு நமஸ்காரம்.
மங்கள வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம்.
இயற்கை என்கின்ற வடிவானவளுக்கு நமஸ்காரம்.
மங்கள ஸ்வரூபிணியான அன்னையை
அடக்க ஒடுக்கமாக நாங்கள் வழிபடுகின்றோம்.

ரௌத்3ராயை நமோ நித்யாயை கௌ3ர்யை தா4த்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்நாயை சேந்து3ரூபிண்யை ஸுகா2யை ஸததம் நம: || (10)


பயங்கர வடிவை உடைய தேவிக்கு நமஸ்காரம்.
நித்தியமானவளுக்கு நமஸ்காரம்.
கௌரிக்கு நமஸ்காரம்.
உலகையே தாங்குபவளுக்கு நமஸ்காரம்.
ஒளி வடிவானவளுக்கு நமஸ்காரம்.
சந்திரப்பிரபையை போன்ற தேவிக்கு நமஸ்காரம்.
இன்ப வடிவானவளுக்கு என்றென்றும் எங்கள் நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (2)​


ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்3த்யை ஸித்3த்4யை குர்மோ நமோ நம : |
நைர்ருத்யை பூ4ப்4ருதாம் லக்ஷ்ம்யை ச’ர்வாண்யை தே நமோ நம : || (11)


சரணமடைந்தோருக்கு எல்லா நலன்களுமாகத் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும், மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரம். புவியாளும் அரசருக்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவனின் பத்தினிக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரங்கள்.

து3ர்கா3யை துர்க3பாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை |
க்யாத்யை ததை2வ க்ருஷ்ணாயை தூ4ம்ராயை ஸததம் நம: || (12)


கஷ்டங்களைக் கடக்க உதவும் துர்க்கை வடிவினளும், அனைத்தின் சாராம்சம் ஆனவளும், அனைத்தயுமே ஆக்குபவளும், கியாதி வடிவினளும், கரிய நிறத்தவளும், புகை வடிவினளும் ஆன தேவிக்கு என்றென்றும் நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (3)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

அதிஸௌம்யாதி ரௌத்3ராயை நாதாஸ் தஸ்யை நமோ நம : |
நமோ ஜக3த்ப்ரதிஷ்ட்டா2யை தே3வ்யை க்ருத்யை நமோ நம : || (13)


இனிய வடிவினை உடையவளும், பயங்கர வடிவினை உடையவளும் ஆகிய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். உலகின் ஆதாரமாகவும், உலகின் இயக்கமாகவும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வ பூ4தே ஷு விஷ்ணு மாயேதி ச’ப்3தி3தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (14 -16 )


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் விஷ்ணு மாயை என்று கூறப்படுகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்
 

தேவர்களின் ஸ்துதி (4)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு சேதநேத்யபி4தீ4யதே |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (17 -19)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சைதன்ய வடிவினள் என்று கூறப்படுகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு புத்3தி4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (20 – 22)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் புத்திவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (5)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு நித்3ராரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||(23 – 25)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நித்திரைவடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு க்ஷுதா4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (26 – 28)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பசிவடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (6)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச்சா2யாரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (29 – 31)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பிரதி பிம்பவடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச’க்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (32 -34)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறை கின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

 

தேவர்களின் ஸ்துதி (7)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு த்ருஷ்ணா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (35 – 37)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் வேட்க்கையின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு க்ஷாந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (38 – 40)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பொறுமையின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (8)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ஜாதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (41 – 43)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜாதியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு லஜ்ஜா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (44 – 46)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நாணத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

Latest ads

Back
Top