• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Related Things

Status
Not open for further replies.
திரு.சண்முகசுந்தரம் அவர்களே,

தமிழ் இலக்கியத்தில் தங்களுக்கு உள்ள (நகைச்சுவை கலந்த) அறிவும் ஆற்றலும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
 
திரு.சண்முகசுந்தரம் அவர்களே,

தமிழ் இலக்கியத்தில் தங்களுக்கு உள்ள (நகைச்சுவை கலந்த) அறிவும் ஆற்றலும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

''ஒண்ணாயிருக்க கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு
கத்துக்கொடுத்தது யாருங்க''?

சிவஷன்முகம்
 
Last edited:
திருவிளையாடல்: பழம் நீ அப்பா ..

K.B .சுந்தராம்பாள்

திருவிளையாடல்:

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும்
சோதனை..

T.R.மகாலிங்கம்

2 IN 1 CLIP[video=youtube;LIvw4Hg2g90]http://www.youtube.com/watch?v=LIvw4Hg2g90[/video]
 
யாதும் ஊரே யாவரும் கேளிர்

[video=youtube;z35bnRaya4s]http://www.youtube.com/watch?v=z35bnRaya4s[/video]

யாதும் ஊரே யாவரும் கேளிர் :popcorn:
 
3585713-justice[1].jpg
ஆக்கியோன் : சிவசண்முகம் .
தலைப்பு : திணை .

பட்டி மன்ற நடுவர் நெடுஞ்செழியனார் முதலில்
வேங்கை அணியினரை பேச அழைக்கிறார்..

திணை நாண்கு என்று கூறி அதற்குண்டான சான்றுகளை
முன் எடுத்து வைக்கின்றனர் நம் வேங்கை அணியினர் .

நாமும் கேட்போமா..?

அவையின் சான்றோர்களே வணக்கம்.

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே.

என்று எம்பெருமானார் தமது தொல்காப்பியத்தில் (நூற்பா 5)
வகுத்து கூறியுள்ளார் .

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே !

மாயவன் (கண்ணன்) மேவிய காடு பொருந்திய உலகமும் ,
சேயோன் (முருகவேல்) மேவிய மைவரை உலகமும்
வேந்தன் (இந்திரன்) மேவிய தீம்புனல் உலகமும் ,
வருணன் மேவிய பெருமணல் உலகமும் .
முல்லை குறுஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்.

ஆக திணை நாண்கு மட்டுமே என்று கூறி
எனக்கு வாய்ப்பு அளித்த தலைவருக்கு நன்றி
கூறி விடை பெறுகிறேன்.

அடுத்து எழில் அணியினரை பேச அழைக்கிறார்
நடுவர் நெடுஞ்செழியனார் ..

எழில் அணியினர் ...'' வேங்கை அணியினரைப் பார்த்து
சிரிப்பதா அழுவதா
என்றே தெரியவில்லை !

எம்மான் தனது பொருளதிகாரத்தில் அகத்திணை இயலில் (நூற்பா 13 )
இருவகைப் பிரிவும் நிலைபெறத் ' தோன்றலும்
உரியதாகும் என்மனார் புலவர்

இது பாலைக்கு உரிய பொருளாம்
ஆறு உணர்த்துதல் நுதலிற்று .

மேலும் ...

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"

சிலப்.காடுகான் . ( 64-66)

என்றும் பிற சான்றோர் செய்யுள் வகுத்துள்ளனரே !

ஆக..

பாலைக்கு நிலம் ஓதாது வேனிற்காலமும் நண்பகலும் ஒதினமையானும்..

''வந்தது கொண்டு வாராதது முடித்தல் '' (மரபு. 412)

என்பதற்கிணங்க கண்டுகொள்ளலாமே?

இந் நிலங்களில் வேனிற்காலத்து நிகழ்வான
கருப்பொருளாக கொள்ளப்படும் ..
பாலை நிலத்திற்கு தெய்வம் -கொற்றவை
மரம்- பாலை பண்-பாலை என்றும்
கொள்ளவேண்டும் !

எனவே பாலை சேர்த்து ஐவகைத்திணை
என்று கூறி விடை பெறுகிறேன்! .

நடுவர் நெடுஞ்செழியனார் தீர்ப்பு !

நன்று ! இங்கு வேங்கை அணியினரும் எழில் அணியினரும்
தத்தமது கருத்துக்கள் நிலைப்பெற அவர் தம் ஆதாரங்களை
அழகுற அடுக்கி ஒரு சொற்போரே நிகழ்த்திவிட்டனர் !

ஒருமுறை வேங்கை பதுங்கியது !
அவர்தம் நிலை கண்டு எழில் சிரித்தது !
மறுமுறை வேங்கை பாய்ந்தது !
எழில் மயங்கியது !

ஆகா ! என்னே ஒரு கண்கொள்ளாக் காட்சி !

இந்நிலையில் என்னை இங்கு தீர்ப்பளிக்க பணித்துள்ளனர் ..

நிலம் மயங்குருதல் போன்று
என்னிலையும் மயங்கிற்று !

மயக்கமுற்று தீர்ப்பு எழுதினால் மற்றவர்
என்னை எள்ளி நகையாட மாட்டாறோ?

என் அறிவிற்கும் -திறத்திற்கும் ஒப்பும் வகையால்
எழுதுகிறேன் ..தீர்ப்பு அல்ல ! இது ஒரு தீர்வு மட்டுமே!

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

என்று தொல்காப்பியனார் அழகுற படம் பிடித்து காட்டியுள்ளார்.

இதன் முறையே பாலை நிலத்திற்கு தனியாக நிலம் குறிக்கப்பெறவில்லை
என்பதும் நாம் அறிந்ததே!

மேலும் பாலைக்கு தெய்வம் வேந்தன் ..
எப்படி வேந்தன் இந்திரன் ஆனான் என்பதும்
தெளிவுறவில்லை.

எனவே பாலை என்பதே ஒரு '' இடைச்செருகலோ''
என்று ஐயப்பாடும் எழுந்துள்ளது !

இதை சான்றோர்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன் .

எனினும் '' சொல்லிய முறையால் சொல்லவும் படும் ''

என்பதற்கிணங்க முல்லை குறுஞ்சி மருதம் நெய்தல்
இவற்றுடன் பாலை சேர்த்து ஐந்திணை என்று தீர்வு காண்கிறேன்
 
Last edited:
என்னுயிர்த் தோழி !

books[9].jpg

ஆக்கியோன் : சிவசண்முகம்

தலைப்பு : என்னுயிர்த் தோழி
கேலொரு சேதி ...


கொஞ்சும் மொழிகளைத்தன் கெஞ்சும் விழி அழகால்
வஞ்சமின்றி வாரிவழங்கும் வனப்பு மிக்காள்!

மருதத்து மைவிழிப் பார்வைக்கு வையகத்தை வளம் வருவோர்-

ஆரணங்கின் ''அருட்கடாட்சம்'' கிடைக்காதா? என்று
காத்திருப்போர்- இவர்களின் பட்டியலோ மிக அதிகம் !

அச்சில் வார்த்தெடுத்த புதுமை அந்தப் பதுமை!

நகாசு வேலை செய்ய பொற்கொல்லனிடம்
கொடுத்துவிட்டாலோ திருப்பித் தர மனமின்றி-

''இன்று போய் நாளை வா '' என்றே நித்தம் அவன்
''வாய்தா'' வாங்கிடுவான்..அப்படியொரு அழகி !
இவனோ ....

நறுக்கு மீசை ! சுருட்டி விட்ட கேசம் !
துடுக்குப் பேச்சு ! துடிப்பான செயல் !

விரிந்து பரந்த மார்பு ! குன்றெனத் தோள்!
அவனி போற்றும் கொடை! அடலேறு நடை!

எதிரிக்கு எச்சரிக்கை!ஏந்திளைக்கோ காணிக்கை!

தாயின் மடியில் போர்ப்பரணித் தாலாட்டு !
கன்னி அவள் மடியில் காதல் விளையாட்டு !

என்றே தழுவிக்கிடந்த அவனை..

அரசர் ஆணை -அரண்மனைப் பணி அழைக்கவே
ஆரத்தழுவி ஆரனங்கிடம் விடை பெற்றான்.

''பொற்கொடி ! கொஞ்சம் பொறுடி!

ஓடி வந்திடுவேன் உன்னை வாரி எடுத்திடுவேன்'' !

ஒருபொழுது மட்டும் பிரியா விடைகொடுத்து-

தனியா தாகத்துடன் தளிர்க்கொடியாள் காத்திருந்தாள்.

செவிக்கினிய சேதி கொண்டுவந்தாள் தோழி !

என்னவென்று கேட்க்க குறுந்தொகை செல்வோம்.

வெண் கொம்பு யானைக் கூட்டம் இறங்கி
நீராடும் வளம் பொருந்திய சோனையாற்றின்
கரைதனிலே அமையப்பெற்ற பாடலி நகரை
உனக்கு நான் பரிசாகத் தருகிறேன் தோழி !

என் காதலர் வந்திட்டாரா ?
நீ உன் கண்ணால் கண்டாயா?
அல்லது யாரேனும் சொல்லக் கேட்டாயா?
தெளிவாய்ச் சொல்லடி என் தோழி !
என்றே திரும்பத் திரும்பக் கேட்டாலே
மருத நாட்டுத் தலைவி .

இந்த அழகிய சேதியை அழகுற வடித்திட்டார்
படுமரத்து மோசி கீரனார் குறுந்தொகையில்

இப்படி...

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

இதைத்தானே அய்யன் வள்ளுவனும் வடித்தெடுத்தான்
தனது குறளில் .

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.






 
Share | http://www.addthis.com/bookmark.php...p://www.poemhunter.com/shivayadav-yadav/&tt=0http://www.addthis.com/bookmark.php...p://www.poemhunter.com/shivayadav-yadav/&tt=0http://www.addthis.com/bookmark.php...p://www.poemhunter.com/shivayadav-yadav/&tt=0



HOUND OF HEAVEN
User Rating:
-- /10
(0 votes)


- vote - 1 2 3 4 5 6 7 8 9 10

print.gif
Print friendly version
zarf.gif
E-mail this poem to e friend
sentThis.gif
Send this poem as eCard
addThisPoems.gif
Add this poem to MyPoemList
Ages turns an endless pages;
Always reveal something wonders.
In reasonable, may be in valuable
Form your time as a vault to know you.
Never fail to give proper meanings
And the meanings of life, ought to be in success.
Never fail to give proper understanding
And retrieving the peace in proper ways
On powerful traveling in those pages
Hard to transpare, it is an invisible
An attempt beyond all births and deaths
Hound of heaven after your death, a wasteful.

shivayadav yadav
</B>

Share | http://www.addthis.com/bookmark.php...p://www.poemhunter.com/shivayadav-yadav/&tt=0http://www.addthis.com/bookmark.php...p://www.poemhunter.com/shivayadav-yadav/&tt=0http://www.addthis.com/bookmark.php...p://www.poemhunter.com/shivayadav-yadav/&tt=0
 
அன்பே சிவம்

defaultCAPQE1L3 - Copy.jpg

அன்பே சிவம் என்றே நிதம்
ஆதிசிவன் தாள்பணிந்து நீ போற்று.
இருள்நீக்கி ஒளி தந்த அந்த
ஈசன் இணையடி நிழல் போற்று.
உமையொரு பாகன் உமா மகேஸ்வரனை
ஊனக்கண் கொண்டு நோக்காமல் இருக்க-
என்றே ஞானக்கண் தந்த பசுபதிநீயே !
ஏழ்ஓசை எட்டுதிசையாய் ஆன அவனை
ஐயமின்றித் தொழ எம் மனமே-
ஒல்காப்புகழ் நமசிவாயனை நிதம் நீயே
ஓம்கார இசை கொண்டு இசைப்பாயே.
ஒளகாரம் அடுத்து எம்மான் வைத்த
ஃ முக்கண் முதல்வனைப் போற்று !

சிவசண்முகம்.
 
அன்பே சிவம்

:cheer2:அன்பே சிவம்


அன்பே சிவம் என்றே நிதம்
ஆதிசிவன் தாள்பணிந்து நீ போற்று.
இருள்நீக்கி ஒளி தந்த அந்த
ஈசன் இணையடி நிழல் போற்று.
உமையொரு பாகன் உமா மகேஸ்வரனை
ஊனக்கண் கொண்டு நோக்காமல் இருக்க-
என்றே ஞானக்கண் தந்த பசுபதிநீயே !
ஏழ்ஓசை எட்டுதிசையாய் ஆன அவனை
ஐயமின்றித் தொழ எம் மனமே-
ஒல்காப்புகழ் நமசிவாயனை நிதம் நீயே
ஓம்கார இசை கொண்டு இசைப்பாயே.
ஒளகாரம் அடுத்து எம்மான் வைத்த
ஃ முக்கண் முதல்வனைப் போற்று !

சிவசண்முகம்.
 
Comrades may be die but communism may not

lenin[1].jpgshivayadav yadav (Aug 24 1956 / Karur / Tamilnadu / India.)


ussr






COMRADES MAY BE DIE BUT COMMUNISM MAY NOT.....
Oh my russian childrens!
whare did u gone?
oh, i have lost my comrades!
oh, how many childrens.....!
Armenia, Azerbaijan, Georgia, Kazakstan.......
mom ussr gives all in one birth.
what happened to all the childrens?
am still searching ur faces in the map,
yes, u have already lost ur faces.
who done this mistakes?
why u draw the boundry between us?
tell me,
oh my childrens-why did u forget Karl Marx?
what the sin in Das capital?
history will going to repeat...
yes the red army will back to 1917....
urs shiva yadav.

shivayadav yadav </B>
 
Yoonoos Peerbocus (8/7/2010 6:51:00 AM)
[still searching your face on the map/you have a knack for politics/fine
comments_About_logo.gif
Nivedita Bagchi SPC UK (8/6/2010 4:23:00 PM)
[1] ‘Upper Cut’ [a type of vigorous punch in boxing] on face of Communism…
comments_About_logo.gif

[2] Carl Marx said, ‘Religion is opium to people’

[3] Now the paradigm has shifted to over 360 degree [not possible practically in geometry] but in geography it has happened …as you’ve very aptly worded…in USSR…soon will happen in China…I anticipate very much with optimism…

[4] Now Communist are Opiumed lol… thanks for sharing
Regards
Ms. Nivedita
UK
Political. Radical write. Truthful poem. Well Done; D
 
Last edited:
Hi friend!

It is nice to have enthusiasm to post poems in English.

But please write correct spelling and grammar, if you wish to get REAL appreciation!!

Best wishes...........:typing:
 
please write correct spelling and grammar

hi friend!

it is nice to have enthusiasm to post poems in english.

but please write correct spelling and grammar, if you wish to get real appreciation!!

best wishes...........:typing:

thank you for your comments

am in force to write the poems in rhythmical.
coz, it may be negligence of my spelling and grammar.
moreover in poetic-in my view there is not
much importance to the grammar.
anyhow i will

shansnrmp
 
Last edited:
thank you for your comments

........................
moreover in poetic-in my view there is not
much importance to the grammar.
anyhow i will

shansnrmp
Oh! God! How can anyone shun the basic grammar of a language!

You may write poems without rhyming words.... but for sure NOT WITHOUT GRAMMAR!

'இலக்கணமே போ!' என்ற என் எழுத்துக்களைப் பலரும் தப்பாகவே புரிந்து கொள்கிறார்!!

:shocked:
 
Oh! God! How can anyone shun the basic grammar of a language!

You may write poems without rhyming words.... but for sure NOT WITHOUT GRAMMAR!

'இலக்கணமே போ!' என்ற என் எழுத்துக்களைப் பலரும் தப்பாகவே புரிந்து கொள்கிறார்!!

:shocked:

''Ages turns an endless pages;
Always reveal something wonders..

is this rhythmical or not ?
 
அமெரிக்க 'மைக்ரோவேவ்' அடுப்பு, இரு முறைகள்தான் எச்சரிக்கை கொடுக்கும்!

இந்திய 'மைக்ரோவேவ்' அடுப்பு, தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கும்!

நான் முதலாவதையே விரும்புகிறேன்!:peace:
 
''தமிழன்னை தன்னைக் காத்துக் கொள்ளட்டும்! :boink:

இல்லையென்றால், குலவி, குளவி, குழவி, எல்லாம் ஒன்றாகிப் போகும்!!!!:crazy: ''


சகோதரி திருமதி ராஜி ராம் அவர்கள் இப்படி சொல்வது எனக்கு புரியவில்லை. தமிழ் எழுத்து முறையில் மாற்றம் தேவையில்லை என்று கருதிகிறார ? உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் இன்று கிடைக்கப்பெறும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் எழுத்துக்களுக்கும் இன்று நாம் எழுதும் எழுத்து முறைகளுக்கும்
நிறையவே வேறுபாடு உள்ளது என்பது கண்கூடு ..தமிழ் அன்னை தனது நீண்ட நெடிய பயணத்தில் சிற்சில மாறுதல்களுடன்
தன்னை அலங்கரித்துக்கொன்டாலும் என்றும் இளமை மாறா கன்னியாகவே புன்முறுவல் பூக்கிறாள் ..
ஒருமுறை எனது பெரிய மகன் திரு . சரவணன் அவர்களை french tution சேர்த்துவிட சேலம் சென்றிருந்தேன்..(திரு. சரவணன் அவர்களின் குழந்தைதான் இன்று என் profile photo ..நியூயார்க் ஹாரிஸ்பர்கில் இருக்கிறார் ) டியூஷன் மாஸ்டர் சொன்னார் ..''பிரெஞ்சு மொழிக்கு உரித்தான சிறப்பு ...ஒரு நாகம் படம் எடுத்து சீரும்பொழுது உண்டாகும் சப்தத்திற்கும் கூட பிரெஞ்சு மொழியில் எழுத்து உண்டு'' என்று சொன்னார்.. இதைப் பார்க்கும் பொழுது நம் தமிழ் மொழிக்கு சிற்சில எழுத்து வேண்டுவதாகத் தோன்றினாலும் அதையே காரணமாக வைத்து '' பிற மொழிக் கலப்பை நாம் அனுமதிப்பதும் முறை ஆகாது '' அதே நேரம் ஞ் .....இதன் வரிசை எழுத்துக்களும் இன்று நம் தமிழில் நடைமுறையில் இருப்பதை விடவும் தாய்த் தமிழின் கிளை மொழியான மலையாள மொழியில் அதிகம் நடைமுறையில் இருப்பது காண்க ..அதற்காக நாம் இந்த எழுத்துக்களை விட்டுவிட முடயுமா? ..
 
அசுணம்

அசுணம்

quote_icon.png
Originally Posted by shansnrmp

என்ன ஏதேனும் புது செய்தி
உண்டா?

என்று கேட்டுக்கொண்டே
அமர்ந்தார் அறிவுடை நம்பி.

ஒன்றும் இல்லை ..''ஏதோ அசுணம்
என்ற ஒரு பறவையாம் ..

அது மென்மையான இசையை
ரசிக்கக்கூடியதாம் ..

பறை எனும் கடினமான
தாளவாத்தியக் கருவியின்
அதிர வைக்கும் சத்தத்தைக்
கேட்டால் அந்த இரைச்சல்
தாங்காமல் அந்தப் பறவை
இறந்து விடுமாம்..
என்னே விந்தை பாருங்கள்'' !

என்று கூறியவாறு அன்றைய
நாளிதழைப் பார்த்துக்கொண்டே
தேநீரை சுவைத்தார் அறிவுக்கொழுந்து


''ஓஹோ ! இதைத்தான் நான்மணிக் கடிகை
நூலின் நாலாம் பாடல்
கூறுகிறதோ''? என்று கூறி நிறுத்தினார்
அறிவுடை நம்பி ..

'என்ன என்ன நான்மணி என்ற நடிகையா'?
என்று ஆவலுடன் கேட்டார் அறிவுக்கொழுந்து ..

அட உன் வாயில் கொள்ளிக்கட்டைய வைக்க
என்று சொல்ல நினைத்த அறிவுடை நம்பிக்கு
நாயர் கடை தேநீர் நினைவுக்கு வரவே
சற்றென்று வாயை அடக்கிக்கொண்டார் .

தன்னை நொந்துகொண்டே ..''ஒய் ! அது
நான்மணி நடிகை இல்லை . நான்மணிக் கடிகை
என்ற நமது இலக்கிய அறநூல்'' என்று கூறினார்
அறிவுடை நம்பி ..

தொடர்ந்து ..

''அசுணம் என்பது மென்மையான இசையை
ரசிக்கக்கூடிய ஒருவகைப் பறவை. பறை எனும்
கடினமான தாளவாத்தியக் கருவியின் அதிர
வைக்கும் சத்தத்தைக் கேட்டால் அந்த இரைச்சல்
தாங்காமல் அந்தப் பறவை இறந்து விடுமாம்.


சில மனிதர்களும் அதைப்போல வாழ்க்கையில்
தங்களுக்கு
இனிமை மட்டுமே இருக்க வேண்டும் என்று
நினைப்பார்கள்.
மாறாக துன்பம் ஏதேனும் வந்துவிட்டால்
உயிரை விட்டு விடுவார்கள்''

இதைத்தானே நான்மணிக் கடிகை கூறுகிறது ...

பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு
(நான்மணிக் கடிகை. பாடல் நான்கு )

-நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு

காட்டில் மரங்கள் மிக அடர்த்தியாக
வளர்ந்திருந்தால் அங்கு நெல் முளைக்க
வழி இல்லை. வளரத் தொடங்கும் போதே
அழிந்து விடும். அது போல, ஒருவன் நல்ல
செயல்களைச் செய்ய முயலும்போது சுற்றி
உள்ளவர்கள் அதனை ஊக்குவிக்காமல்
எதிர்மறையாகப் பேசி அவன் மனதைப்
புண்படுத்தினால் அவனது முயற்சி
ஆரம்பத்திலேயே முடங்கிவிடும்.

என்று சொல்லிவிட்டு தேநீர் கணக்கை
அறிவுக்கொழுந்தின் தலையில் கட்டிவிட்டு
அங்கிருந்து அகன்றார் நம் அறிவுடைநம்பி !


சிவஷன்முகம்



 
Last edited:
அகழ்வாரைத் தாங்கும்

Photo-0011[2].jpg P.S. SATHISH.


''If you prick us do we not bleed?
If you tickle us do we not laugh?
If you poison us do we not die?
And if you wrong us shall we not
revenge''?

Merchant of Venice.
(Act III, Scene I).

The Pro explaining the versions of Shylock as follows..

We are all the same species,
and should be treated
with the same respect,
irrespective of superficial
differences
such as skin color, religion,
cultural practices.
Shylock argues for similarity,
resemblance, bonds of nature or,
in the terms established by the play,
"kind." We are the same kind, therefore we should treat
one another with kindness.

While explaining ,

there is a voice
from the Tamil Pro in the next
class room ,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
 
Refer post 94

உங்கள் style -ல் (நகைச்சுவை + ஒப்புமை) கலக்கி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
 
கடவுள் வாழ்த்து.

செப்புமொழி தமிழ் எனவே இந்த
செகம் கேட்க்க நீ பாடு !
நற்றமிழ் மாலை யாம் தொடுக்க-
அடி எடுத்துக் கொடுக்க என்றும்
அம்பலத்து வாணன் நீயே வருவாய்
நின்று எமக்கு அருள் தருவாய்.
 
Last edited:
காப்பு.

குன்று ஏறிநின்ற என் குமரனே!
வழு இல்லாத் தமிழ் அமுதினை
நாளெல்லாம் யான் பெற உனை
அனு தினமும் வேண்டி நின்றேன்.
நான் பெற்ற தமிழ்க்கனி நினது-
நாள் எல்லாம் குறையாத அமிழ்து!
முத்தமிழ் தந்து நீ துணையிருந்தால்
தித்திக்கும் தேன்சுவை கூட்டி நான்
தீந்தமிழ் ஆரம் சூட்டி மகிழ்வேனே!
 
இராசேந்திரப் பாண்டியன்

(1) காஞ்சி மாநகரினை யாண்ட காடுவெட்டி
சோழன் கனவினில் மதுரை நகர்
வாழ் சொக்கே ஸ்வரனும் வந்தானே
நித்திய பூசை நிறுத்தாமல் நீயும்
மதுரையம்பதி எனக்கே செய்திட வேண்டுமென
கேட்ட மாத்திரத்தில் துணுக்குற்று எழுந்தானவனே!

(2) இராசேந்திர பாண்டியனாம் நல்லதொரு மன்னனாம்.
நீதிவழுவா அரசனாம் மூதூர்நகர்க் காவலனாம் !
கண்டே களிப்புற்று கனவினில் வந்தசேதியை
தப்பாமல் உரைத்திட்டான் சோழன்- அவனிடமே !
உவகையுடன் இருகைகொண்டு இருக்கை கொடுத்து
வேண்டுவன செய்தான் பாண்டியன் காவலனே .

(3) அவன்செய்த உதவியால் அகம்மகிழ்ந்தே சோழன்
கண்குளிர வணங்கினன் சொக்கனை நிதமே !
பரிசுகள் பலஅனுப்பிப் பாண்டியனுக்கு நன்றிதனை
சொல்லிக்கொண்ட சோழ மகன் மறக்காமல்தன்
மகளைப் பாண்டியன் பரிசாக்கி - மாநகர்க்
காவலனை மாப்பிளையாக்க உறுதி கொண்டானே.

தொடரும் ...
 
Last edited:
:decision:

இறுதிவரை நன்றாகக் கொண்டு சென்று,

இறுதியில் 'உறுதி'யை விட்டுவிட்டீரே!

முயற்சி திருவினையாக்கும்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top