• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Related Things

Status
Not open for further replies.
நன்றி

:decision:

இறுதிவரை நன்றாகக் கொண்டு சென்று,

இறுதியில் 'உறுதி'யை விட்டுவிட்டீரே!

முயற்சி திருவினையாக்கும்!


தவறு திருத்தப்பட்டது.தங்கள் வருகைக்கு நன்றி.
 
Last edited:
உக்கிரமப் பாண்டியன்

உக்கிரமப் பாண்டியனின் சதித் திட்டம்

(4)கொண்ட உறுதியைக் கேள்வியுற்றே பாண்டிய
மாமன்னனின் இளவல் உக்கிரம பாண்டியனோ
உறுத்தல் மிகக்கொண்டான் தன் மனத்தினிலே!
இன்னாசெய்வதே இனிய பொழுது போக்காம்-
இனியவை வெறுப்பதே அவன் நோக்காம் .
சோழமகளை அடையப் போட்டன் ஒருதிட்டம்!
 
(5)மண்ணாசை காட்டியே சோழ நன்
மனத்தினை மாற்றியே வைத்தனன்-
உக்கிரமப் பாண்டிய மன்னன் தானே!
மாநகர் மதுரையை இணைத்தே இங்கு
சோழ நாட்டின் எல்லையை விரித்தாள
நினைத்தனன் சோழ மகனும் தானே !
 
(6)பொருந்தாக் கூட்டணி போட்டே சோழன்-
அவன் பொல்லாங்கு தேடியே போனான்.
நட்பும் மாப்பிளை உறவும் நயம்படவே
பொருந்தி வந்த மாப்பாண்டியன் நாட்டைக்
கவர்ந்திடவே அவாக் கொண்டான் அவனே!
சேரா இடந்தனிலே சேர்ந்தே நின்றான் .
 
(7)ஊழ்வினை வந்தே உறுத்தும் அன்றோ?
உக்கிரமனைத் தன் மாப்பிளை யாக்க
அவசர முடிவெடுத்தான் சோழன் அவனே!
பாண்டிய மண்டலம் வென்றே அடுத்து
உக்கிரமனை மன்னனாக்கி தன் மாப்பிளை
யாக்க நினைத் தான் சோழனே !
 
Last edited:
சோழமகள் உக்கிராமன் திருமணம்

(8)மாறுபட்ட மனத்தினன் வேறுபட்ட நிலையிலே
நிலையில்லா முடிவெடுத்து நினைப்பதை நடத்திட
காலநேர அவகாசம் ஏதுமின்றி சடுதியிலே
தேதியென்று ஒன்று குறித்து மங்கையவளைத்
தாரை வார்த்தேக் கொடுத்திட்டான் உக்கிரமனுக்கே!
வரும் விளைவாராயாமல் வீண்பழி தேடலுற்றான் !
 
Last edited:
போர் வியூகம்

(9)ஆழிப் பேரலையின் அச்சுறுத்தல்-அசுரர்
போன்றே அணிவகுத்தல்-போர் வியூகம்
எதிர் வியூகம்-வியப்பூட்டும் சோழவியூகம்!
கடல் சிறுத்ததோ! படை பெருத்ததோ!
என்றே திகைத்தனர் அவனியில் உள்ளோர்!
உழிஞைத் திணையோ அவனுக்கு ஒருகலை!
 
Last edited:
மதில் வளைத்துப் போரிடல் உழிஞைத் திணை

(10 ) ஊழின் வினையால் உழிஞைத் திணையாம்
வந்துற்றே காஞ்சி நாட்டின் சோழனுக்கே !
பார்புகழும் பாண்டியன் நாட்டின் மதிலை
வளைத்துப் போரிடும் ஆற்றல் கொண்டே
முரசுநெய்பூசி உழிஞைப் பூமாலை சூடியே
உற்றவன் உக்கிரமன் துணைகொண்டே புறப்பட்டான்!
 
(11) காற்றின் வேகத்தைவிட கடிதே புறப்பட்டது
சோழன் சேனையது மாபாண்டிநகர் நோக்கி!
கடலா கடலின் அலையோவென பார்த்தோர்
திகைக்க உக்கிர மாகவே எழுந்ததுவே!
நால்வகைப் படைகளும் நாடு நடுங்க
நயவஞ்சகன் உகிரமன் துணை யுடனே !
 
Last edited:
இராசேந்திரப் பாண்டியன்

Author:siva shanmugam
Title : Rajendra Pandiyan.

கடவுள் வாழ்த்து.

செப்புமொழி தமிழ் எனவே இந்த
செகம் கேட்க்க நீ பாடு !
நற்றமிழ் மாலை யாம் தொடுக்க-
அடி எடுத்துக் கொடுக்க என்றும்
அம்பலத்து வாணன் நீயே வருவாய்
நின்று எமக்கு அருள் தருவாய்.

காப்பு.

குன்று ஏறிநின்ற என் குமரனே!
வழு இல்லாத் தமிழ் அமுதினை
நாளெல்லாம் யான் பெற உனை
அனு தினமும் வேண்டி நின்றேன்.
நான் பெற்ற தமிழ்க்கனி நினது-
நாள் எல்லாம் குறையாத அமிழ்து!
முத்தமிழ் தந்து நீ துணையிருந்தால்
தித்திக்கும் தேன்சுவை கூட்டி நான்
தீந்தமிழ் ஆரம் சூட்டி மகிழ்வேனே!

இராசேந்திரப் பாண்டியன்


(1) காஞ்சி மாநகரினை யாண்ட காடுவெட்டி
சோழன் கனவினில் மதுரை நகர்
வாழ் சொக்கே ஸ்வரனும் வந்தானே
நித்திய பூசை நிறுத்தாமல் நீயும்
மதுரையம்பதி எனக்கே செய்திட வேண்டுமென
கேட்ட மாத்திரத்தில் துணுக்குற்று எழுந்தானவனே!

(2) இராசேந்திர பாண்டியனாம் நல்லதொரு மன்னனாம்.
நீதிவழுவா அரசனாம் மூதூர்நகர்க் காவலனாம் !
கண்டே களிப்புற்று கனவினில் வந்தசேதியை
தப்பாமல் உரைத்திட்டான் சோழன்- அவனிடமே !
உவகையுடன் இருகைகொண்டு இருக்கை கொடுத்து
வேண்டுவன செய்தான் பாண்டியன் காவலனே .

(3) அவன்செய்த உதவியால் அகம்மகிழ்ந்தே சோழன்
கண்குளிர வணங்கினன் சொக்கனை நிதமே !
பரிசுகள் பலஅனுப்பிப் பாண்டியனுக்கு நன்றிதனை
சொல்லிக்கொண்ட சோழ மகன் மறக்காமல்தன்
மகளைப் பாண்டியன் பரிசாக்கி - மாநகர்க்
காவலனை மாப்பிளையாக்க உறுதி கொண்டானே.
உக்கிரமப் பாண்டியன்

உக்கிரமப் பாண்டியனின் சதித் திட்டம்

(4)கொண்ட உறுதியைக் கேள்வியுற்றே பாண்டிய
மாமன்னனின் இளவல் உக்கிரம பாண்டியனோ
உறுத்தல் மிகக்கொண்டான் தன் மனத்தினிலே!
இன்னாசெய்வதே இனிய பொழுது போக்காம்-
இனியவை வெறுப்பதே அவன் நோக்காம் .
சோழமகளை அடையப் போட்டன் ஒருதிட்டம்!

(5)மண்ணாசை காட்டியே சோழ நன்
மனத்தினை மாற்றியே வைத்தனன்-
உக்கிரமப் பாண்டிய மன்னன் தானே!
மாநகர் மதுரையை இணைத்தே இங்கு
சோழ நாட்டின் எல்லையை விரித்தாள
நினைத்தனன் சோழ மகனும் தானே !

(6)பொருந்தாக் கூட்டணி போட்டே சோழன்-
அவன் பொல்லாங்கு தேடியே போனான்.
நட்பும் மாப்பிளை உறவும் நயம்படவே
பொருந்தி வந்த மாப்பாண்டியன் நாட்டைக்
கவர்ந்திடவே அவாக் கொண்டான் அவனே!
சேரா இடந்தனிலே சேர்ந்தே நின்றான் .

(7)ஊழ்வினை வந்தே உறுத்தும் அன்றோ?
உக்கிரமனைத் தன் மாப்பிளை யாக்க
அவசர முடிவெடுத்தான் சோழன் அவனே!
பாண்டிய மண்டலம் வென்றே அடுத்து
உக்கிரமனை மன்னனாக்கி தன் மாப்பிளை
யாக்க நினைத் தான் சோழனே !
சோழமகள் உக்கிராமன் திருமணம்

(8)மாறுபட்ட மனத்தினன் வேறுபட்ட நிலையிலே
நிலையில்லா முடிவெடுத்து நினைப்பதை நடத்திட
காலநேர அவகாசம் ஏதுமின்றி சடுதியிலே
தேதியென்று ஒன்று குறித்து மங்கையவளைத்
தாரை வார்த்தேக் கொடுத்திட்டான் உக்கிரமனுக்கே!
வரும் விளைவாராயாமல் வீண்பழி தேடலுற்றான்

9)ஆழிப் பேரலையின் அச்சுறுத்தல்-அசுரர்
போன்றே அணிவகுத்தல்-போர் வியூகம்
எதிர் வியூகம்-வியப்பூட்டும் சோழவியூகம்!
கடல் சிறுத்ததோ! படை பெருத்ததோ!
என்றே திகைத்தனர் அவனியில் உள்ளோர்!
உழிஞைத் திணையோ அவனுக்கு ஒருகலை!
மதில் வளைத்துப் போரிடல் உழிஞைத் திணை

(10 ) ஊழின் வினையால் உழிஞைத் திணையாம்
வந்துற்றே காஞ்சி நாட்டின் சோழனுக்கே !
பார்புகழும் பாண்டியன் நாட்டின் மதிலை
வளைத்துப் போரிடும் ஆற்றல் கொண்டே
முரசுநெய்பூசி உழிஞைப் பூமாலை சூடியே
உற்றவன் உக்கிரமன் துணைகொண்டே புறப்பட்டான்!

(11) காற்றின் வேகத்தைவிட கடிதே புறப்பட்டது
சோழன் சேனையது மாபாண்டிநகர் நோக்கி!
கடலா கடலின் அலையோவென பார்த்தோர்
திகைக்க உக்கிர மாகவே எழுந்ததுவே!
நால்வகைப் படைகளும் நாடு நடுங்க
நயவஞ்சகன் உகிரமன் துணை யுடனே !
 
 
Last edited:
With the passions as waves
I saw the wonders of the world
With the glimpse of her corner
Her sarree furl while she is walking
My wine cups are rolling in my hands
Like the boats wavering on the sea
Just like the waves on
The banks
Thoughts of my love
Rises in my beating heart
My wine cups are rolling in
The grounds
 
laugh or cry.Wandering eyes eager to behold thee
Heart aflutter in anticipation
messages ahoy, but what is its ploy?
Is it going to cause laughter or cry?
Storms and showers common to me!
Like a fool, i await to sail across the waves!
In school the Math i learnt
But i guess i never learnt the art of the heart!
Prodigious over my daily home work
Alas, forgot to take love, how to love...

shivayadav yadav

.
.Good Morning :) .gudmorng .shansnrmp [email protected].
 
pearls in the string.Let us go and gather pearls in the shore;
For the ornaments and make it as shine.
Let us teturned to our home, for the wind,
Has caused the waves to raise, caution me
The rain will..
Come home dear, the birds too have fly,
Seeking their shelter;
Come home dear, the sailing boats are,
Return to the jetty
I know your pangs of solitude, yes am in wipe
Trying to wipe your rolling tears.

shivayadav yadav

.
.Good Morning :) ..shansnrmp [email protected].
 
திக்கற்றோருக்கு தெய்வமே துணை

(12) எட்டுத்திக்கும் புகழ் பாடிய பாண்டியன்-
செவிமடுத்தே தன் தம்பியாம் உக்கிராமன்
படை கொண்டே சோழன் துணைகொண்டே
வரும் செய்தியை கேள்வியுற்றே செய்வதறியாது
கலங்கியே நின்றான் பாண்டியன் மன்னவன் .
திக்கற்றோருக்கு தெய்வமே துணை யாம்
 
உன் ஆடையை நிழலாக !

crescent-moon-hawaii-pv[1].jpg

ஆக்கியோன் : சிவஷன்முகம்.

நிலவின் குளுமை !
இனிமையில் இனிமை!
 
Last edited:
சென்றான் முறையிட்டான்

symbols_sivalingam_large[1].jpg

(13) சிவன் அருளாலே -பாண்டியன் தயவினாலே
தினப்பூசை சொக்கேசனுக்கு செய்திட்ட சோழனோ
தோள்கள் தினவெடுத்தே பாண்டியன் நாட்டை
கவரவே படைகொண்டு புறப்பட்ட செயலறிந்தே
செய்வதறியாது சென்றான் முறையிட்டான் மூதூர்
பதியாம் சொக் கேஸ்வரன் முன்பாகவே .
 
முதலாம் மகேந்திரவர்மன்

shore-temple-mahabalipuram[1].jpg (1)

ஆக்கியோன் : சிவஷன்முகம்

மாமன்னன் மகேந்திரவர்மன் வாழ்க வாழ்கவே !

விண்ணதிர மக்களின் வாழ்த்து மொழி முழங்கவே
மகேந்திரவர்ம பல்லவன் தன் நாட்டு மக்களிடையே
தோன்றினான் . விடாது விண்ணதிரும் முழக்கம் ..
''சிம்மவிஷ்ணுவின் வாரிசே ! மாவீரனே ! சாளுக்கிய
புலிகேசியின் கொட்டம் அடக்கியவனே ! கங்கமன்னன்
துர்வீநீதனையும் அவன் தன் படைகளையும் வென்ற
எம் மன்னனே ! நின் புகழ் நீடூழி வாழ்க வாழ்கவே'' ! ..
வாழ்த்து முழக்கங்கள் அடங்க வெகு நேரம் ஆனது.
 
Last edited:
63[1].JPG (2)

மக்களின் வாழ்த்து முழக்க ஒலிக்கிடையே மகேந்திரவர்மன்
தனது அரச பரிவாரங்களுடன் அரண்மனை புகுந்தான் .
அமைச்சர் குழு , படை தளபதிகள், பன்னாட்டு வியாபார
பிரதிநிதிகள் , சீனா தேசத்து யாத்திரிகர்கள் பொது மக்கள் -
அரண்மனையே நிரம்பி வழிந்தது.
'' குணபரன் ! விசித்திர சித்தன் ! போத்தரையன் !
சத்ருமல்லன் !
மத்தவிலாசன் ! மாவீர மகேந்த்திரவர்மரே நின்
புகழ் நீடு வாழ்க '' !
அமைச்சர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு
அரியாசனத்தில் அமர்ந்தான் மகேந்திரவர்மன் !

தொடரும் ..
 
Last edited:
IMG_0036[1].jpg (3)

தலைமை அமைச்சர் :

பார் புகழும் பல்லவர் ஆட்சியிலே மக்களுக்கு குற்றம் குறை ஏதும் இல்லை!
நாடும் மக்களும் நலம் பல பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் .

இராசவர்மன் :

அமைச்சரே நன்று சொன்னீர் .நீங்கள் கூறியது
முற்றிலும் உண்மை. நான் நகர் வளம் வரும்பொழுது மக்களின்
மகிழ்ச்சி ததும்பும் முகங்களைப் பார்த்தேன். பார்க்கும்பொழுதே
தெரிகிறது நம் ஆட்சியில் எந்த குறையும் இல்லை என்பது .

தலைமை அமைச்சர் :

தங்களின் தந்தையார் சிம்மவிஷ்ணு விட்டுச்சென்ற அறபணிகள்-
கலைப்பணிகள் தங்களின் சீரிய முயற்சியால் தொய்வின்றி நடந்து
வருவது கண்டு உள்ளம் உவகை கொள்கிறது

தலைமை அமைச்சர் :

அமைச்சர் பெருமானே நீங்கள் கூறியது கேட்டு
என் உள்ளம் பெரும் மகிச்சி கொள்கிறது...அது சரி ..
நம் தலைமை சிற்பி எங்கே? தங்களிடம் பேசிக் கொண்டே
தலைமை சிற்பியை மறந்துவிட்டேனே ..அழைத்து வாருங்கள்
அவரை என்று மாமன்னன் கூற தலைமை சிற்பி பணிவுடன்
மன்னர் முன் வந்து நிற்கிறார்.

தலைமை சிற்பி :

மாமன்னன் கலைப்பணி நீடூழி வாழ்க என்று கூறி மன்னரின்
முன் மெத்தப் பணிவுடன் நிற்கிறார்.

இராசவர்மன்:

தலைமை சிற்பியே தன்னிகரில்லா கலைங்கனே நின் கலை நீடு வாழ்க !
என்று கூறி தன் அருகில் அமரவைகிறான் மாமன்னன் .
 
Last edited:
நான் கவிஞனும் இல்லை ...

[video=youtube;gPg7p-5wKyo]http://www.youtube.com/watch?v=gPg7p-5wKyo[/video]

காட்டு மானை வேட்டையாட தயங்கவிலையே
இந்த வீட்டுமானின் உள்ளம் ஏனோ விளங்கவிலையே ..:argue:
 
அப்பாப்பா நான் அப்பனல்லடா ..

[video=youtube;n6nFpClAPIw]http://www.youtube.com/watch?v=n6nFpClAPIw[/video]

கணக்காகப் பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம் ... :music:
 
இதோ எந்தன் தெய்வம் ..

[video=youtube;k3YN6RCZHs0]http://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0[/video]

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் :music:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top