• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Related Things

Status
Not open for further replies.
முண்டாசு கவிக்கொரு முக்காடு

:eyebrows:காவிரி வெற்றிலைக்கு உள்ளே
மாயங்கள் பல செய்து (கர்)நாடகம்
ஆடி விட்டனர் பேச்சுவார்த்தை_
வெற்றி இல்லை என்றே ! பின்
எப்படி ஐயா கங்கை கோதுமைக்கு
மாறு கொள்வோம் ?
சேது சமுத்திர கால்வாய் திட்டம்
அதை சேற்றிலே புதைத்து விட்டு
முண்டாசுக்கவிக்கு நல்லதொரு
முக்காட்டையும் போட்டனர்.

 
Last edited:
ஐயா ,
தங்களின் வருகைக்கு நன்றி.
எழுத்துப் பிழையை சுட்டியமைக்கு நன்றி.
தொடர்ந்து வந்து தங்களின் மேலான
கருத்துக்களை பதிந்தால் மிகவும்
நன்றியுடையவனாக
இருப்பேன் ..
 
poonga[1].gif

தலைப்பு: காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம்
ஆக்கியோன் : சிவசண்முகம்

மூப்புறா இளமை ,எத்திசையும் புகழ் மணக்கும் , ஏழு கடலையும் ஒரு அணுவில் அடக்கிய பெருமை - என்றும் எக்காலத்தும் மானுட வாழ்வில் ஏற்று போற்றத்தக்க அய்யன் ஈந்த திருக்குறள், காலத்தால் தொல்காப்பியத்திற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு பிற்பட்டது.


வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை -ஒல்லியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்தமிழ் மேலாம் தரம்

என்ற பாடலில் வரிசைபடுத்தப்பெறும் நூல்களுள் திருக்குறளுக்கு காலத்தால் மூத்தது தொல்காப்பியம் என்பது தெளிவுறும்
தமிழ் மொழியின் இலக்கண நூலாம் தொல்காப்பியம் அய்யன் வள்ளுவன் ஈந்த திருக்குறள் இரண்டும் தந்தை மகன் உறவு போன்றே !













 
pd3028757[1].jpgதொல்காப்பியம்-திருக்குறள்
ஆக்கியோன்: சிவசண்முகம்
தலைப்பு :- தொல்காப்பியம்-திருக்குறள்

தொல்காப்பியம்-திருக்குறள் இவை இரண்டிலும் தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டது .

முன்னது தமிழின் சூத்திரம் என்றால் பின்னது உலக மாந்தர்களுக்கு வாழ்வியல் நெறிமுறைகள் கூறும்
அறநூல்.


தொல்காப்பியம் என்ற அழகிய விழிகளைக் கொண்டு திருக்குறள் தனது பார்வையை உலக மாந்தர்களுக்கு
விரித்து காட்டுகிறது என்று சொன்னால் மிகையாகாது .
 
நூல் மரபு

எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப


இதனால் தானே அய்யன் வள்ளுவனும் தனது குறட்பாவில் அகரத்தை முதலில் வைத்து ,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்று பாடியுள்ளார்
 
நூல் மரபு ..........
இதனால் தானே அய்யன் வள்ளுவனும் தனது குறட்பாவில் அகரத்தை முதலில் வைத்து ,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்று பாடியுள்ளார்
'அ' என்று தொடங்கிய குறட்பாக்களை,

'ன்' என்று திருவள்ளுவர் முடித்தார்.

நீங்களும் அறிந்திருப்பீர்கள்! :thumb:
 
மெய்யெழுத்துக்கள்

ஆகியோன்: சிவசண்முகம்
தலைப்பு : மெய்யெழுத்துக்கள்.

நூல் மரபு 1
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9

உயிர் எழுத்து என்பதாவது அ தொடங்கி ஒள வரை பன்னீர் எழுத்தும் ஆகுக என்று எம்மான் தொல்காப்பியர் எழுதி விட்டு
சற்றே கண் அயர்ந்தார் ..

அவரைச் சுற்றி "க்" தொடங்கி "ன்" வரை 18 எழுத்துக்களும் வந்து நின்று '' ஐயன்மீர் தாங்கள் உயிரை மட்டும் எழுதிவிட்டு அந்த உயிருக்கு மெய்யை வழங்காதிருத்தல் தகுமோ ? " என்று முறையிட்டன ..எம்மான் தொல்காப்பியனும் புன்முறுவலுடன் நீங்கள் பதினெண் எழுத்தும் மெய் என மொழிப என்று கூறிவிட்டு அவைகளை குறுநகையுடன் நோக்கினார் ..மெய்யெழுத்து 18..ம்.. களிப்புடனே நின்றன ! .
 
'அ' என்று தொடங்கிய குறட்பாக்களை,

'ன்' என்று திருவள்ளுவர் முடித்தார்.

நீங்களும் அறிந்திருப்பீர்கள்! :thumb:


தங்கள் வருகைக்கு நன்றி​
 
உயிர்மெய்

5386338121_a876ae14d9[1].jpg

ஆக்கியோன் : சிவஷன்முகம்
தலைப்பு : உயிர்மெய்

" அரசியாருக்கு இன்று என்ன இவ்வளவு கோபம் '' ?

கேட்டுக்கொண்டே பாண்டிய மன்னன் அரசியாரிடம் வந்தான் .

"எல்லாம் உங்களால்தான்"
என்று கோபம் கொண்டு தனது
வேல்விழிப்பார்வையை அரசன் மீது தைக்க-

"என்ன என்று கூறினால்தானே ? பதில் கூறமுடியும் -"
என்று பாண்டிய மாமன்னன் கேட்க்க

அதற்கு

'பின் என்ன ? .. எல்லோரும் உங்களைத்தானே அரசே! - அரசே! என்று
எதற்கெடுத்தாலும் அழைக்கிறார்கள்.

.உங்கள் உயிருடன் பிறந்த என்னை யார் கண்டுகொள்கிறார்கள் ?''

என்று கூறிவிட்டு தன்னையும்
மீறி வந்த சிரிப்பை மறைக்க வேறு பக்கம் தன் பார்வையை
செலுத்தினாள் மாதரசி.

''இதற்காகவா இவ்வளவு கோபம்?''

அரசியாரே .. ''க்" என்ற மெய்எழுத்து ஆ என்ற உயிரெழுத்துடன்
முன் சேர்ந்தால்தானே ''கா'' என்ற உயிர்மெய் பிறக்கிறது?"

க்+ஆ= கா

இந்த உயர்மெய்யை வைத்துதானே நம் "காதலை" வரையமுடியும் "?

வேல்விழி அரசியோ ஒன்றும் புரியாமல் மன்னனைப் பார்க்க-

மன்னனோ மெல்ல நகைத்து

மெய் ஆகிய உங்களை என் உயிருக்கு முன்வைத்தால் தானே காதல்-காதலன்- நான்
வருகிறேன் என்று கூறி அரசியாரின்
ஐயப்பாட்டை நீக்கி இளவரசியாரின் இன்முகத்தையும் மெல்ல வருடினான்

அரசியாரின் மெய் மெல்ல அரசனின் உயிர் முன் படர்ந்தது-


இருவரின் நிலைகண்டு வெட்கத்துடன் நிலவும் முகிலுக்குள்
மறைந்தது!

'


'' மெய்யின் வலியது
உயிர் தோன்றும் நிலையே''
எழுத்ததிகாரம் -நூல் -மரபு
நூற்பா : 18

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
 
Last edited:
smile makes your life sucess
smile makes u mind peace
the more u smile the more happiness your gain
 
Last edited:
Ref: post # 61

My humble suggestion.

When you post pictures, please take care!

Many members are ladies in this forum. :director:
 
Ref: post # 61

My humble suggestion.

When you post pictures, please take care!

Many members are ladies in this forum. :director:

I will take care in future. Only this picture is free download.Because of this
i have forced to fix.
 
Last edited:
Ref.no.61

சும்மா ஜமாய்க்கிறீங்க போங்க!

எனது எழுத்திலோ கருத்திலோ குற்றம் குறை இருப்பின் அது முழு முதலும் எம்மையே சாரும்.
கடுகத்தனையாவது நிறை இருப்பின்
அது எனக்கு அ என்று ஏடு கொடுத்த
என் வணக்கத்திற்குரிய-
மறைந்த ஆசிரியை செயலட்சுமி அவர்களையும்
எனது பேராசிரியப் பெருந்தகைகள் காவிரிநாடன்
எஸ் .எஸ். இரசேந்திரனார். அ.வ. இராசகோபாலன்
அவர்களையும் சாரும் ..
தங்கள் வருகைக்கு நன்றி !
 
8[1].JPG

வீரத்திருமகள் வேலுநாச்சியார்

ஆக்கியோன் : சிவசண்முகம்
தலைப்பு : ஆய்த எழுத்து

விண்ணதிர முழக்கங்கள் கேட்டது வீதியிலே !

அய்யன் திருவள்ளுவர் எழுத்தாணியை கீழே வைத்துவிட்டு வாசலில் வந்து நின்றார் .
கண்ணுற்ற காட்சியோ அவரை திடுக்கிட வைத்தது !

வாளேந்தும் வளைகரங்கள் !

துடிக்கும் செவ்விதழ்கள்-
சிவந்த வேல்விழிகள் !

இவையனைத்தும் காதலர்
தந்த பரிசு மழையால் அல்ல !

காரிகை ஒருத்தி விட்ட சொல்லம்பால் !

இந்த அமளிக்கிடையே அய்யன் வள்ளுவருக்கு முன் ஒரு உருவம்!.
கையில் வாளுடன் . நெருங்கி வருகிறது .அய்யனைப் பணிந்து நிற்கிறது .

"ஓ ஆயுத எழுத்தாரோ ? இங்கு என்ன உமக்கு வேலை ?"

''ஒன்றும் இல்லை..யாரோ அண்டைநாட்டு ஆடல் அழகியாம் .
நா தடிக்க நம் நாட்டு மாதரசிகளை கற்பிழந்தவர்கள் என்று
கூறிவிட்டாராம் ! அவளின் நாவினை துண்டிக்க வெகுண்டெழுந்து
நம் நாட்டு மாதரசிகள் புறப்பட்டுவிட்டனர் போர்ப்பரணி பாடிக்கொண்டு "

''சரி..அதற்காக நீயேன் ஆயுதம் ஏந்தி வருகிறாய் ?''

என்று கேலியாக சிரித்துக்கொண்டே வினவினார் அய்யன் !

''அனைத்தும் உணர்ந்த தாங்களா இவ்வாறு கேட்பது ? எம்மான்
தொல்காப்பியனார் தானே நீ கூப்பிடும்பொழுது துணைக்கு வா என்று கூறினார் ?''

சிரித்துக்கொண்டே ஆய்த எழுத்தின் தலையில் குட்டினார் அய்யன்!

''எம்மான் தொல்காப்பியனார் உன்னை பணித்தது இந்த வேலைக்கல்ல !''

''எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே'

என்று படித்துக்காட்டி

தமிழ் எழுத்துகள் ' அ'முதல் 'ன' இறுதியாக
முப்பது எழுத்துக்கள் எனக் கூறுவார் .

சார்பு எழுத்துக்களான குறுகிய ஒலியுடைய 'இ' கரம் குறுகிய ஒலியுடைய 'உ' கரம்
ஆய்த எழுத்து ஆகிய மூன்றும் இல்லாமல் முப்பது எழுத்துக்கள்.
என்று மேலும் விளக்கம் கொடுத்தார் ..

ஆகவே சொற்கள் எழுத்துக்கள் ஆகும் பொழுது உன்னை
துணைக்கு கூப்பிட்டால் நீ சென்று அவர்களுக்கு
உதவிடு என்று கூறி வாழ்த்தி வழியனுப்பிவைத்தார் .

ஆய்த எழுத்தும் மகிழ்வுடனே தனது கடைசி இருக்கையில்
அமர்ந்தது !

அய்யன் திருவள்ளுவரும் எழுத்தாணியை எடுத்து இப்படி
எழுதினார் ...


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
 
Last edited:
View attachment 735

வீரத்திருமகள் வேலுநாச்சியார்

ஆக்கியோன் : சிவசண்முகம்
தலைப்பு : ஆய்த எழுத்து

...............................
''சரி..அதற்காக நீயேன் ஆயுதம் ஏந்தி வருகிறாய் ?''

என்று கேலியாக சிரித்துக்கொண்டே வினவினார் அய்யன் !

.....................
ஆய்த எழுத்தை, ஆயுத எழுத்தாக நான் கற்பனை செய்ததுண்டு!

'அ முதல் ஃ வரை' என்ற என் 'ஓ அமெரிக்கா' நூலில் # 14 இன் ஒரு பகுதி:

'ஐயமொன்று எழுந்தது எனக்கு; சுதந்திரம் எனச் சொல்லி,

ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை வெறுக்கின்றனரே!

ஓ!! இதுதான் அமெரிக்க வாழ்க்கையோ?

ஔவையார் இக் கலாச்சாரம் கண்டால்,

‘ஃ’ – ஆயுத எழுத்தால் தாக்குவாளோ?' :thumb:
 
Thank you for your kind visit.
Happy to know that you are
also have an idea about
'' aautha ezhuththu'' while
writing 'O America' thread.

While am downloading the
Veeraththirumagal
Velu Naachiyar's photo,
I got an idea of this.
 
Last edited:
0001_1[1].jpg

பூங்கோடி! பூங்கோடி !

.......மௌனம்........

''என்ன பூங்கொடி நான் கூப்பிடுவது காதில் விழவில்லையா'' ?

அல்லது விழுந்தும் விழாதது போல் இருக்கிறாயா'' ?

மௌனம் கலைந்து பூங்கொடி பேசினால்

''முல்லை நிலம் ஆளும் மன்னரின் மகன் தாங்கள்.
இந்த சாதாரண தேரோட்டியின் மகளை

காக்கவைப்பதில் என்ன மகிழ்ச்சியோ'' ?

இளந்திரையன் அதற்கு




'' இல்லை பூங்கொடி எம்மான் தொல்காப்பியனார்
மன்னரை சந்திக்க வந்தார் ..அவரை
வணங்கிவிட்டு வர சிறிது நேரமாகிவிட்டது''
என்று கூறி பூங்கொடியின் கரத்தை
மெல்லப்பற்றினான்.



''ஓகோ ! நான் என்னவோ தொல்காப்பியனார்
வகுத்தளித்தவாறு

காரும் மாலையும் முல்லை


அதனால் இந்த கார்காலத்தின் மாலைப்பொழுதில்
என்னை நீண்டநேரம் காக்கவைத்துவிட்டு மெதுவாக
வந்துள்ளீர்களோ என்று நினைத்தேன் ''
என்று கூறி சிரித்தாள்.


பூங்கொடியின் முத்துப்பல் சிரிப்பில் தன்னைமுழுதும்
பறிகொடுத்த இளந்திரையன் மெல்ல அருகில் வந்து
அவளின் மென்மையான கைகலைப்பற்றி

தனது பார்வையால் காதலுக்கு முன்னுரை எழுதினான் .
.

அவனின் பார்வையை புரிந்துகொண்டவள் போல் சற்றே விலகி நின்று ...


'' இளவரசருக்கு தொல்காப்பியனார் அருளிச் செய்த ...


புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங் காலைத் திணைக்குரிய பொருளே


என்பது கூடவா தெரியாமல் போயிற்று என்று கூறி நகைத்தாள் !

அதற்கு இளந்திரையன் ..

'' தேருங் காலை என்றதனால் குறிஞ்சிக்கு புணர்ச்சியும்
பாலைக்கு பிரிவும் முல்லைக்கு இருத்தலும்
நெய்தற்கு இரங்கலும் மருதத்திற்கு ஊடலும்

அவ்வந் நிமித்தம் என்று ஆராய்ந்து நான் அறிந்தாலும்

..

தினைமயக் குறுதலும் கடிநிலை இலவே

நிலநொருங்கு மயங்குதல் இல்லென மொழிய

புலன்நன் குணர்ந்த புலமை யோரே


என்றும் கூறியுள்ளாரே ! என்று கூறி சிரித்தான்.


இதன் பொருளையும் அனைத்தும் அறிந்த
எம் வருங்கால மன்னர் கூறிவிட்டால்

என்னைப்போன்ற பேதைப் பெண்களுக்கும்
வசதியாக இருக்கும் என்று குறும்பாக சிரித்து கேட்க்க ..

இளந்திரையன் ..

'இங்கு ஒரு நிலமே மயங்குமாறாயிற்று

உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது திணையும் மயங்கிற்று ''


என்று கூறியவாறு

கனி தாங்கா அந்த வஞ்சிக் கொடியை

கரம் சுற்றிக் காவியம் எழுத கண்களால்
அழைத்தான்



கண்ணியவளும் தன்னை மறந்தாள் !

காரும் மாலையும் முல்லை
நூற்பா 20 அகத் 6

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிய பொருளே
நூற்பா 16


தினைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலநொருங்கு மயங்குதல் இல்லென மொழிய
புலன்நன் குணர்ந்த புலமை யோரே
நூற்பா 14
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top