• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

#28. விஷயமும், விளம்பரமும்.







இது ஒரு சிறந்த விளம்பர யுகம்!
எதை விற்பதானாலும் வேண்டும்,
கதை போன்ற ஒரு நீண்ட விளம்பரம்.

பொய்களில் மூன்று வகைகள் உண்டு;
அண்டப் புளுகுகள் , ஆகாசப் புளுகுகள்,
அறிவை மயக்கும் விளம்பரப் புளுகுகள்!

மணலை மலையாகக் காட்ட வேண்டுமா ?
பேனை பெருமாள் ஆக்கவேண்டுமா ?
பேனா செய்யும் இவ்விளம்பர மாயங்கள்!

தரம் இருந்தால் விளம்பரம் எதற்கு?
தரம் குறைந்த பொருட்களைத் தள்ளவே;
தரம் குறைந்த விளம்பரங்கள் தேவை.

“என்னிடம் தேன் உள்ளது” என்று
எந்த மலர் விளம்பரம் செய்தது ?
வண்டுகள் தேடி வரவில்லையா?

“என்னிடம் பழம் உள்ளது” என்று
எந்த மரம் விளம்பரம் செய்தது ?
கிளிகள் கொத்த வரவில்லையா?

பால் இருக்கின்றதென்று பசுவோ;
நூல் இருக்கின்றதென்று பஞ்சோ;
தோல் இருக்கின்றதென்று எருதோ;

எப்போதேனும் விளம்பரம் செய்யுமா?
தப்பாமல் நாம் தேடிச் செல்கின்றோமே.
விஷயம் இருந்தால், வேண்டாம் விளம்பரம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
#29. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி…





தேவை இன்றி அழுகின்ற ஆண்களையும்,
தேவை இன்றிச் சிரிக்கும் பெண்களையும்,
நம்பக்கூடாது என்பார் அறிவுடையோர்.
நல்ல பயனுள்ள அறிவுரைதான் இது.

அவசியம் இன்றி அதிகப் பணிவுடன்,
அழகிய ஒரு சிறு குழந்தை போலக்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மயக்கும்
வஞ்சியர்களிடம் உஷார் உஷார்!

வஞ்சகமாக ஒரு வலை விரிக்கவே,
கொஞ்சிக் கெஞ்சுவர் சில வஞ்சியர்.
வலையில் சிக்கினால் நாம், சிலந்தி
வலையில் சிக்கின ஒரு பூச்சிதான்.

வில் வணக்கம் தீங்கு குறிப்பது போன்றே,
சொல் வணக்கமும் தீங்கைக் குறிக்கும்.
வெளித் தோற்றத்துக்கு மயங்கிவிடும்
வெகுளிகளின் கதியோ அதோகதி!

சின்ன மீன்களைப் போட்டுப் பிடிப்பார்கள்
சில மனிதர்கள், மிகப் பெரிய மீன்களை;
கொள்ளை கொள்ளும் சிரிப்பால் மயக்கிக்
கொள்ளை அடிப்பார் சில வஞ்சியர்.

காரணம் இன்றிக் குழைவோரிடம் மிக
கவனமாகவே நீங்கள் இருந்திடுங்கள்.
காரியம் ஆகவேண்டியே நடிக்கும் அந்த
காரிகைகள் வாழ்வினை அழித்திடுவர்.

விழிப்புடன் இருந்தால் மட்டுமே
பிழைத்துக் கொள்ள முடியும்.
வழுக்கிவிட்டோம் எனில் வாழ்வே
நழுவிப் போய்விடும் அல்லவா?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#30. நன்மையே விழைமின்!





காட்டு வழியில் நடந்து களைத்த,
காளை ஒருவன் தூரத்தில் கண்டான்,
விரிந்து பரந்து தண் நிழல் தரும்,
வியத்தகு வினோத மரம் ஒன்றினை.

நெருங்கிச் சென்றான்; மரத்தின்
நிழலில் உடல் குளிர அமர்ந்தான்;
பசியும் தாகமும் ஒன்றாக உருவாகி,
பிசைந்தன அவன் காலி வயிற்றை!

கைகள் இரண்டும் மிகவும் வலித்தன;
கால்கள் இரண்டும் மிகக் குடைந்தன;
“பஞ்சு மெத்தை நல்லது இருந்தால்,
கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்”, என்று

நினைத்த மாத்திரத்திலே, அங்கே
நின்றது ஒரு அம்சதூளிகா மஞ்சம்!
“குடையும் என் கைகால்களின் வலி
குறையும் அழுத்தினால்”, என எண்ண,

கல கல என்ற வளை ஒலியுடன்,
சில இளம் கன்னிகள், அவனுடைய
கால் கை பிடிக்கத் தொடங்கினர்,
களைப்பு மாறுகின்ற வகையில்.

“பசிக்கு அறுசுவை உணவினைப்
புசித்தால் சுகம்தான்”, என நினைக்க,
கண் முன் தோன்றின கலயங்கள்;
கண்டிராத புதிய உணவு வகைகள்!

இத்தனை நடந்த பின்னும் அந்தப்
பித்தன் அறியவே இல்லை, தான்
இருப்பது, நினைத்ததை எல்லாம்
தரும் கற்பக மர நிழலில் என்று!

உணவு உண்டவுடன் எண்ணினான்,
“ஒரு பசித்த புலி வந்தால் என்ன ஆகும்?”
உறுமலுடன் காட்சி தந்தது ஒரு வெம்புலி!
“ஓடிவிடவேண்டும் புலி”, என எண்ணாமல்,

“என்னைப் புலி கடித்துக் கொன்றால்
என்ன செய்வேனோ?”, என்று பதற,
கடித்துக் கொன்றது புலியும் பாய்ந்து!
கற்பக மர நிழலில் உயிரை விடுவதா?

எதை வேண்டுமானாலும் கேட்கலாம்;
எண்ணியபடி எதையும் அடையலாம்; ஆனால்,
நினைத்ததோ ஒரு காட்டு வெம்புலியை;
அணைத்ததோ ஒரு கொடிய மரணத்தை!

எப்போதும் நல்லவற்றை நினைமின்;
எப்போதும் நல்லவற்றை உரைமின்;
எப்போதும் நல்லவற்றைச் செய்மின்;
எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



Cancel reply
 
Here is a rickety effort from me,
Its tranquil and its cool,
Like a baby sleeping in wool.
Its October,
Start of the winter,
with pleasant sunshine,
and mischivous cold,
a new subject for chat,
for every young and old,
with nature in its full charm,
a little struggle but to keep warm,
and nothin painful for anyone,
In October earth becomes heaven.
 
Hello Hoover,

The flow of words is too smooth to be called as a "rickety effort!"

But surely you can make it still better by spending more time on it.

Poems become better and crisper in direct proportion to the time we spend of them!

Keep up the good work! Hope to receive more contributions in the future to this thread!

with best wishes,
V.R.
 
#31. சிரிப்பும், அழுகையும்!







சிலசமயங்களில் அழும் விலங்குகளும்;
சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே.
வாய் விட்டுச் சிரித்தால் நம்முடைய,
நோய் விட்டுப் போகும் என்பார்கள்.

சிரிக்க சிரிக்க சிரிப்பு என்பதுபோல்,
சிரிப்பவரைக் கண்டாலே சிரிப்பு வரும்.
சிரிக்கும் போது முகமும், அகமும்;
சிறந்து அழகாய் தோற்றம் அளிக்கும்.

சிரித்து வாழ வேண்டும்; ஆனால் பிறர்
சிரிக்கும்படி நாம் வாழக் கூடாது.
சிரிப்பது சுலபம், மிக எளிது, ஆனால்
சிரிக்க வைப்பது கடினம், மிகக் கஷ்டம்.

மகிழ்ச்சியை நாம் பகிர்ந்து கொண்டால்,
மகிழ்ச்சி பலமடங்காகப் பெருகும் ;
அழுகையைப் நாம் பகிர்ந்து கொண்டால்,
அழுகை, படிப்படியாகக் குறையும்.

உலகில் பிறக்கும் போது ஒருவன்,
அழுது கொண்டு பிறப்பான்; ஆனால்
உறவினர்கள் அனைவரும் மிகவும்
ஆனந்தமாய் சிரிப்பார், மகிழ்வார்.

வாழ்வாங்கு வாழ்ந்தபின் ஒருவன்
சிரித்துக்கொண்டே செல்ல வேண்டும்.
ஆழ்ந்த துயரில் அவன் சுற்றம், நண்பர்
சிந்த வேண்டும் கண்களின் அருவி.

பிறப்பிலும் சரி, இறப்பிலும் சரி,
மகிழ்ச்சியும் சரி, அழுகையும் சரி;
இடம் மாறி, மாறி, நம்மிடம் பலவித
வேடிக்கைகள் காட்டும் உலகினில்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
Years gone, days will come,
noone knows, what will be the sum
after plus and minus of fortune
equals nothing but a monotunous tune
remained life a burden unbearable
a disease not fatal but not cureable
many have to suffer due to it
noone can said to be fully fit
only ultimate truth can take out
or does its teasing, a morbid doubt
let me leave this puzzle painful
solving in it yet noone is successful
my heart is craving for peace perpetual
and vicinity of the almighty noble.
 
Years 've gone but days will come!
No one knows what will be the sum!
Whether pluses and minuses of fortune
Will add up to anything more than a hum!

The life remains a burden unbearable,
Like a disease not fatal but incurable;
Since all the people seem to suffer from it,
No one can be really called as fully fit!

Only the ultimate truth can take out,
"Or will it?" remains a morbid doubt;
I wish to give up this puzzle painful,
In solving which none is successful!

My heart craves for peace perpetual.
A true loving gift of the almighty noble;
When will I find it- for I am so simple,
Like the water filling a mere thimble.


How do you like it now?
I hope this is what you wished to convey and that i have not deviated from your main theme.
Spend more time on the concept as well the choice of words.
You will surely produce better poems:)
Good luck and best wishes,
V.R.
 
# 32. நல்லதும், அல்லதும்.





நல்லதும் அல்லதும் சேர்ந்தே உள்ளன,
நம்மை சுற்றிய பொருட்களில் எல்லாம்;

அல்லதை நீக்கி நல்லதை நாடுகின்ற,
நல்ல வழக்கம் நமக்கு மிகவும் தேவை.

சிறந்த குணங்கள் நிறைந்த பிறவியிலும்,
குறைந்த அளவிலேனும் குறைகள் இருக்கும்;

சிறந்தவற்றை மட்டும் பிரித்து ஏற்கும்,
நிறைந்த மன நிலையை பெற்றிடுவோம்!

மெல்லிய வலையால் நல்லதை விட்டு விட்டு,
சல்லடை சேர்க்கும் அல்லதை மட்டும் !

சல்லடை போலவே நாமும் மாறி, மனதில்
அல்லதை மட்டுமே சேர்த்திடல் கூடாது!

அல்லதை நீக்கிடும் பெரிய முறமோ,
நல்லதைத் தன்னிடம் தக்க வைக்கும்.

நல்லவை மனதில் தங்கிட முறம்போல
அல்லவை ஒதுக்கிட அறிந்திடுவோம்!

நீரில் கலந்த பாலைத் தன் திறனால்,
பிரித்து எடுக்கும் அன்னம் போலவே,

அல்லதை விடுத்து, நலம் பட வாழ்ந்திட,
நல்லதை எடுக்க நாம் கற்றிடுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#33. நஞ்சும், அமுதமும்.





அழகிய சித்திரம் கண்களுக்கு இன்பம்,
பழகிய மொழியோ செவிகளுக்கு இன்பம்,
நறுமணப் பொருட்கள் நாசிக்கு இன்பம்,
அறுசுவை உணவு நாவுக்கு இன்பம்!

மழலையின் தழுவல் மனத்துக்கு இன்பம்,
முழுமையான இன்பம் தருவது எதுவோ?
மாயையின் சக்தியை மறைத்து வைத்து,
மயக்குகின்ற ஒரு மங்கை மட்டுமே.

அழகிய உருவால் கண்களுக்கு இனிமை,
குழறும் மொழியால் செவிகளுக்கு இனிமை,
ஊறும் தேன் இதழ்களால் நாவுக்கு இனிமை,
நறுமண பூச்சுக்களால் நாசிக்கு இனிமை!

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது
ஐயமின்றி அழகிய பெண் ஒருத்தியே!
ஐம்புலன்களையும், ஐம்பொறிகளையும்,
ஐயமின்றி சிறைப் பிடிப்பவள் இவளே!

ஞானத்தை தடுக்கும் பலவித சக்தியுடன்,
மோனத்தைக் குலைக்கும் பலவித யுக்தியுடன்,
ஏன் படைத்தான் இறைவன் இவளை?
நன்மைக்கா அன்றி நம் தீமைக்கா?

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே;
அளவுடன் கொண்டால், நஞ்சும் அமுதமே!
மோடிக்கு மயங்கும் பாம்பு போல ஆண்கள்
ஆடினால் தேடிவந்தவள் திருமகள் ஆவாளா?

சக்தியின் வடிவம் பெண்ணே! அவளை,
சக்தியாகவே நாம் மதிக்க வேண்டும்.
மேனகையை விரும்பிய கௌசிகன் போல
“மோனத்தைக் குலைத்தாள்” என்று சாடுவதா?

இளையவர், முதியோர், இல்லறம் துறந்தோர்,
இவர்களைப் பேணுதல் இல்லான் கடமை.
இல்லாள் இல்லான் ஏதும் இல்லான்!
இல்லாள் இருப்பது நல்லறம் பேணவே.

பெண் என்பவள் ஓர் அற்புதப் படைப்பு!
பேணிக் காப்போர் அறிவார் உண்மையை.
பெண்ணைக் கண்ணீர்க் கடலில் வீழ்த்தியவர்
மண்ணில் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.

பெண் ஒரு போகப் பொருள் அல்லவே அல்ல,
பெண் ஒரு கட்சிப் பொருள் அல்லவே அல்ல,
பெண் என்பவள் ஒரு சுமை தாங்கியும் அல்ல,
பெண் என்பவள் ஒரு இடி தாங்கியும் அல்ல!

மண்ணில் சிறந்த பொருட்களை எல்லாம்
பெண்களாகவே பலர் சித்தரிக்கின்றனர்.
கலைமகள், அலைமகள், மலைமகள் மற்றும்,
கங்கை, காவேரி, கோதாவரி பெண்களே.

“இனியேனும் பெண்மையை போற்றுவோம்”
என்று இன்றேனும் மனம் கனிந்திடுவீர்!
“வாழு, வாழவிடு !” என்பார் பெரியோர்,
வாழ விட்டு வாழ்த்துங்கள் பெண்களை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
keep tight your lips,
and be an innocent sheep
when time is not with you
you do not have much to do

but store energy
to break lithargy
which time inflicted
on colors of life, to fed

and yes, it is certain,
the almighty will lift the iron curtain
with his grace on you
and a life happy and new
 
Zip your lips as if you're asleep,
Pose to be an innocent sheep;
When the time isn't right for you,
Even if you have so much to do.

But store your life's energy,
And shatter all forms of lethargy;
Which time might have inflicted,
To render your life much afflicted.

And yes! Be you always certain,
Almighty will lift the iron curtain;
With His infinite grace up on you,
To make your life happy and new!

Dear Mr. Hoover,
Is your poem better now?
with best wishes,
V.R.
 
Last edited:
originally from # 54 by Mr.Hoover :)

It is tranquil and it is cool,
I can feel it for I am no fool.

It is the month of October,
The beginning of the winter.

Sun shining on the world,
Along with mischievous cold.

A new subject to talk about,
For men both lean and stout.

With nature in its fullest charm,
A struggle to keep oneself warm.

And nothing is painful for anyone,
In October earth becomes a heaven.

How do you like it now Mr. Hoover?
 
#34. குரங்குப்பிடி, தர்மஅடி!







ஆசைதான் எல்லாத் துன்பத்திற்கும் காரணம்,
ஆர்தான் மறுக்க முடியும் இந்த உண்மையை?
பாசம் என்றால் கயிறு, நம்மை பலவாறு
பந்தப் படுத்தும் பார்க்க முடியாத கயிறு!

எது எதையெல்லாம் விட்டு விடுகிறோமோ,
அது அதனால் நமக்குத் துன்பம் இல்லை!
“யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்” அல்லவா?

காலைப் பற்றி தொங்கும்போதே நம்மை
காலால் எற்றும் உரிமையை அளிக்கிறோம்.
வைக்கும் இடத்தில வைக்கப்பட்டால் தான்,
கைப்பாவையாய் நம்மை ஆட்டிப் படையார்.

குறுகிய வாயுடைய ஒரு சிறிய ஜாடி,
பொரி கடலையால் நிரம்பி மணக்கும்;
மறு எண்ணம் இல்லாமல் கையை விட்டு
நிரம்ப அள்ளும் அறியாக் குரங்கு!

கையும் மாட்டிக்கொண்டது ஜாடியில்,
மெய்யும் மாட்டிக்கொண்டது மனிதனிடம்!
கையை விட்டால் தான் விடுதலை.
கையை விட்டால் இல்லை கடலை!

கடலையா அல்லது விடுதலையா? என்று
உடனடி முடிவு எடுக்க வேண்டும் குரங்கு.
ஒன்று கிடைக்காமலே போகலாம்,
இரண்டுமே கிடைக்காமலும் போகலாம்!

மரத்திடம் சென்று வலியப் பற்றிக் கொண்டு ,
மரம் எனை விடுவதில்லை என்பது போல;
உலகை நாமே வலியப் பற்றிக்கொண்டு,
உலகம் நம்மை விடவில்லை என்போம்!

யாருக்காகவும் எதுவுமே நிற்காது,
உருண்டு ஓடும் உலகம் முன்னோக்கி!
தான் இல்லாத உலகம் நின்றுவிடும் என்று,
தன்னைத் தானே ஏய்த்துக் கொள்வானேன்?

“பந்தமா முக்தியா”? முடிவு நமதே.
“பாசமா பக்தியா”? முடிவு நமதே.
“குறையா நிறையா”? முடிவு நமதே.
“சிறையா விடுதலையா”? முடிவு நமதே.

“இன்பமா துன்பமா”? முடிவு நமதே.
“இவ்வுலகமா வீடு பேறா”? முடிவு நமதே.
இத்தனை முடிவுகளும் நம்மிடம் இருக்க,
பித்தரைப் போல துயர் அடைவதேன்?



வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



Cancel reply
 
# 35. ஆமையும், பொறாமையும்.





ஆமை நுழைந்து விட்ட வீடும்
அமீனா நுழைந்து விட்ட வீடும்,
ஆட்டம் கண்டு அழியும்; இது
அனைவரும் அறிந்த உண்மை.

ஆமையைக் காட்டிலும் கொடியது
அசூயை எனப்படும் பொறாமை.
அசூயை நுழைந்த மனம் ஒரு
பிசாசை விடவும் கொடியது ஆகும்.

காமாலைக் கண்களுடைய ஒருவன்
காண்பதெல்லாம் மஞ்சளாவதுபோல
அசூயை கொண்டவர் கண்களுக்கு
அனைத்துமே தவறாகத்தான் தெரியும்.

மனத்தில் உள்ள மாசினை எல்லாம்
மற்றவர் மீது ஏற்றிச் சொல்லியே
மாளாத துயரில் ஆழ்த்துவர், தன் மீது
தாளாத அன்பு உடையவர்களையும்!

பொறாமை பிறப்பிக்கும் ஒரு வித
தீராத சந்தேகச் சங்கிலித் தொடரை.
எடுத்தால் குற்றம், வைத்தால் குற்றம்;
விடுதலை என்பதே கிடையாது!

பொறாமை உருவாக்கும் யாராலும்
பொறுக்க முடியாத கோபத்தையும்!
சினம் கொண்டவர் சிறிது சிறிதாய்த்
தினம் அழிவர்! தப்பிக்க உண்டு வழி!

அனைத்து மன மாசுகளையும் ஒரு
ஆணி வேறாக இருந்து வளர்ப்பது
அசூயை ஆகிய பொறாமையே!
அதை விரட்டினால் வாழ்வு சிறக்கும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
this countryside provide,
not only food, like wheat and rice,
It also gives soldiers to sacrifice,
for cause of nations pride

the greenary which it bears
medows full of beutiful flowers
have become inspiration
for many,to write their epics and poem

and see everyone healthy and stout
worthy of winning any bout

even they are poor,
not so selfish and clever,
they will remain happy forever
with their spirits satisfied, sheer.
 
# 67 by hoover polished and presented again!

Country side which does provide,
Vegetable, fruits, grains and rice;
Is the cause for a nation's pride,
For in it grow soldiers who sacrifice.

The meadows form green carpets,
For the flowers of different hues;
They do indeed reach their targets,
Our soul, mind, body and eyes.

Everyone so healthy and stout,
Capable of winning any bout;
They may be utterly poor,
They may not be very clever;

Yet they remain forever freed,
With their minds free of greed;
They look up for the dark clouds,
Let them be blessed by Gods!

with best wishes,
V.R.
 
# 36. கருமையும் அழகே!







பகலும், இரவும் இருப்பதைப் போன்றே,
வெண்மையும், கருமையும் இணை பிரியாதவை!

முழுவதும் பகலாய் இருந்தாலும் கடினம்;
முழுவதும் இரவாய் இருந்தாலும் கடினம்.

வெப்பம், குளிர் என்பன ஒரு இரட்டை.
வெயில், மழை என்பதும் ஒரு இரட்டை.

இன்பம், துன்பம் என்று ஒரு இரட்டை.
வெற்றி, தோல்வி என்று ஒரு இரட்டை.

வாழ்வு, தாழ்வு என்றொரு ஜோடி;
வளர்ச்சி, தளர்ச்சி என்றொரு ஜோடி.

லாபம், நஷ்டம் என்று ஒரு ஜோடி.
ராகம், த்வேஷம் என்று ஒரு ஜோடி.

வளமை, வறுமை, என்பதும் இரட்டை.
பெருமை, சிறுமை என்பதும் இரட்டை.

மானம், அவமானம் என்றொரு ஜோடி.
புகழ்ச்சி, இகழ்ச்சி என்றொரு ஜோடி.

எந்த ஜோடியின், எந்தப் பிரிவுமே,
வந்த பின்னர் வரும் நமக்கு கலக்கமே !

எது வந்தாலும், நன்மையே பயக்கும்.
இதை உணர்ந்தாலே, வாழ்வே இனிக்கும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



Cancel reply
 
reply to # 69.

dear hoover,

Rhymes make a poem! They are very important. But the ideas, the punctuations, the paragraphs are also equally important.

We have some freedom to juggle with the words for the sake of rhymes. But we can't send Grammar on a vacation!:)

with best wishes,
V.R.
 

# 37. யார் பெரியவர்?





ஒருநாள் ஒரு பெரிய கேள்வி பிறந்தது,
உறுப்புகளில் எல்லாம் யார் பெரியவர்?
கண்களா, காதுகளா, நாசியா, நாவா?
கால்களா , கரங்களா, வயிரா, வாயா?

உடல் நலம் பேணுவதில் இவர்களில்
உண்மையில் யார் தான் பெரியவர்?
விடை தெரியவில்லை ஒருவருக்கும்,
உடன் தொடங்கியது வேலை நிறுத்தம்!

“எங்கள் உதவியின்றி, எப்படி உண்ணுவீர்கள்?”
என்று தங்கள் பெருமை பேசின கரங்கள்!
“எங்கள் உதவி இன்றி ஓடி, ஆடிப் பொருள்
எப்படித் தேடுவீர்” என்று கேட்டன கால்கள் .

” நான் தான் உணவை விழுங்கி உடலுக்கு
நன்மை புரிகின்றேன்”, பெருமை பேசியது வாய் .
” எங்கள் உதவி இன்றி எப்படி ஜீரணம் செய்வீர்”?
என்று வழக்காடின வயிறும், இரு குடல்களும் .

காதுகளும், கண்களும், மற்ற உறுப்புக்களும்,
கலகம் செய்யத் தொடங்கின ஒரே நேரத்தில்.
முடிவு காண முடியாமல் போனதால், அவைகள்
முழுவதுமாகப் ஆக போராட்டத்தில் இறங்கின.

உணவு உள்ளே செல்ல வில்லை; உடல் சக்தி இழந்தது.
கண்கள் மங்கி விட்டன; காதுகள் பஞ்சடைத்தன;
மூளை மழுங்கி விட்டது; குரல் கூட எழும்பவில்லை.
மூலையில் சுருண்டு விழுந்து விட்டது உடல்.

புரிந்தது அப்போதுதான் அதற்கு ஒரு உண்மை.
பெரியவர் சிறியவர் என்கின்ற பேதம் இல்லை.
சரிவர அனைவரும் தத்தம் பணிகளை,
புரிந்தால் மட்டுமே உடல் வாழ முடியும் .

புத்தி வந்தது; போராட்டாம் முடிந்தது!
சக்தி வந்தது; உடல் பணிகள் நடந்தன!
வேற்றுமை மறந்த உடல் உறுப்புகளும்,
ஒற்றுமையாக தம் பணிகளை செய்தன.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
# 38

# 38. முனிவரும், நாகமும்.





அரும் தவ முனிவர் ஒரு முறை கண்டார்,
கரு நிற நாகம்! கண்டவர்கள் ஓடும் படியாக;
எதிர்ப்பட்டவரை எல்லாம் துரத்தித் துரத்தி,
எதிப்பவர்களைக் கடித்துக் கொல்லும் நாகம்!

“உயிர்க்கொலை பாபம், நீ தவிர்ப்பது நலம்,
உயிரைப் பறிக்கும் படிக் கடிக்காதே”, என்று
நல்ல வார்ததைகள் கூறிய முனிவர் பின்னர்,
செல்லலானார் அவர் தம் வழியிலே.

மறுமுறை முனிவர் அவ்வழி வந்த போது ,
மண்டிய புண்களுடன் குற்று உயிராகி விட்ட,
நாகத்தைக் கண்டு மிகவும் வருந்தி வினவினர்,
“நன்றாக இருந்த நீ ஏன் இப்படி ஆகிவிட்டாய்?”

“உங்களால் எனக்கு ஏற்பட்டது இந்த கதி!
ஊராரை நான் கடிக்கவில்லை என்பதால்,
சின்னப் பிள்ளை முதல் பெரியவர்கள் வரை,
இன்னல் தந்ததால் காயம் அடைந்தேன்”.

“கடித்து கொல்ல வேண்டாம் என்று சொன்னேன்.
சீறி பயமுறுத்த வேண்டாம் என்று சொன்னேனா ?
அடி படாமல் காத்து கொள்ள நீ சீறத்தான் வேண்டும்.
சீறினால் தான் நாகம், சீறாவிட்டால் வெறும் கயிறு”

முனிவன் சொன்னது இப்போது புரிந்தது.
சினந்த நாகம் சீறியே தன்னை பிறரின்,
கல்லடிகளில் இருந்தும், தடி அடிகளில் இருந்தும்,
காத்துக் கொண்டு பின் நெடுநாள் வாழ்ந்தது

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
39. முதலைக் கண்ணீர்!





ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்,
அதில் வசித்த ஒரு அறிவுள்ள குரங்கும்,
நீரில் வாழ்ந்து வந்த ஒரு முதலையும்,
நீண்ட நாட்களாய் நெருங்கிய நண்பர்கள்!

தினம் தினம் பேசிப் பழகிய அவைகள்,
தித்திக்கும் நாவல் பழங்களைப் பகிர்ந்து,
தின்று மகிழ்ந்து, நேரம் போவதே தெரியாமல்,
தினம் தினம் அளவளாவியபடி இருந்தன.

தன் மனைவிக்கும் சில நாவல் பழங்கள்
தன் மனம் மகிழக் கொடுக்க விரும்பி,
சில பழங்களை முதலை ஒரு நாள் காலை
மலர்ந்த முகத்துடன் எடுத்துச் சென்றது.

முதலை நல்லது ஆயினும் அதன் மனைவி,
முதல் தரமான பொல்லாத பெண் போக்கிரி!
குரங்கு தந்த பழ ருசியில் மயங்கியவள்,
குரங்கின் குடலையே சுவைக்க விரும்பினாள்!

ரகளை செய்து கண்ணீர் வடித்து அவள்
முதலையின் மனத்தை மாற்றி விட்டாள்!
“ஏதாவது பேசி ஏமாற்றி என்னிடம் அந்த
ஏமாளிக் குரங்கை அழைத்து வாரும்!”

“இனிக்கும் பழங்கள் கொடுத்த உனக்கு
இனிப்பு வகைகளைத் தர வேண்டுமாம்!
தவறாமல் வரச் சொன்னாள் என் மனைவி”
தவறான எண்ணத்தில் முதலை கூறியது.

முதலையின் பேச்சை நம்பிய குரங்கும்
முதலையின் முதுகில் அமர்ந்து சென்றது.
“தப்ப வழி இனி இல்லை” என்றது முதலை,
“இப்போது எங்கள் உணவு உன் குடலே!”

அப்பாவி ஆனாலும் அறிவாளி! ஆகையால்,
தப்பும் வழியை குரங்கு கண்டு கொண்டது.
“குடலைக் கழுவிக் காய வைத்துள்ளேன்.
உடனே வந்தால் நான் எடுத்துத் தருவேன்!”

மரத்தின் அருகே சென்றதும் நொடியில்
முதலையின் முதுகில் இருந்த குரங்கு
தாவி குதித்துத் தன் மரத்தில் ஏறியது!
“தா உன் குடலை” என்ற முதலையிடம்,

“உடலில் இருந்து வெளியே எடுக்க முடியுமா
குடலை நான் உயிருடன் உள்ளபோதே?
உண்மை பேசாத நண்பன் வேண்டாம்,
உனக்கும் உன் நடப்புக்கும் விடை” என்றது.

பேராசை பெரும் கேடு ஆனது!
மாறாத நண்பனையும் இழந்து,
நாவல் பழங்களையும் இழந்து,
நாவடைத்துப் போயிற்று முதலை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


 
#40. பொது எதிரி!







பறவைகள் ஒரு புறம், விலங்குகள் மறு புறம்,
புரிந்தன முடிவில்லாத உலக மகா யுத்தம்!
பாரத யுத்தம் போல பல நாட்கள் நீண்ட யுத்தம்!
பறவைகளும் விடவில்லை விலங்குகளும் தான்!

பறவைகள் கை ஓங்கிய போது வௌவால்,
பறந்து சென்று அந்தப் பக்கம் சேர்த்துகொண்டது.
“நானும் பறவை இனமே! என் இறக்கைகளை
நன்றாகப் பாருங்கள்”, என்று கூறியது அது.

விலங்குகள் கை ஓங்கிய போது வௌவால்,
விரும்பி அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டது .
“உங்களை போலவே நானும் குட்டி போட்டு,
உங்களைப் போலவே நானும் பால் தருகிறேன்”.

“வென்றது யார்? தோற்றுப் போனது யார்?”
என்று யாராலுமே சொல்ல முடியவில்லை!
“போதும் யுத்தம்” என்று இரண்டு தரப்பும்,
பேசி முடிவு செய்தன, போரும் முடிந்தது!

சமயத்திற்கு தகுந்தவாறு கட்சி மாறி மாறி,
சந்தர்ப்பவாதியாகச் செயல்பட்ட வௌவாலை,
விலங்குகளும், பறவைகளும் ஒரு மனதாக
விலக்கினர்; அன்று முதல் அது பொது எதிரி!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 

Latest ads

Back
Top