64 thiru vilaiyaadalgal
43. பலகை இட்டது.
மூன்று ஜாம பூஜைகளிலும் நிதம்
முக்கண்ணனைப் பாடிவந்த பாணன்;
நான்கு ஜாம பூஜைகளிலும் பின்பு
நாள் தவறாமல் பாடலானான்!
அடாது மழை பெய்தாலும் தொண்டு
விடாது நடை பெறும்என்று காட்ட,
அரன் மழை பொழியச் செய்தான்;
இரவு நடு ஜாம பூஜை சமயத்தில்!
மேகக் கூட்டங்கள் மோதின!
ஏகப்பட்ட மின்னல்கள் சிதறின!
இடி முழக்கி வெருட்டியது உலகை,
தொடர்ந்து நடந்தான் பாணபத்திரன்.
முனைந்து கோவிலை அடைந்தான்,
நனைந்து தொப்பலான பாணபத்திரன்;
நனைந்த யாழ் இசைக்க மறுத்தது!
நனைந்தவனின் குரல் நடுங்கியது!
வெடவெட என உடல் நடுங்கியது!
கடகட என்று பற்கள் கிட்டிப் போயின!
முழங்கால்கள் மோதிக் கொண்டன!
வழிந்தது மழை நீர் உடையிலிருந்து!
“இதன் மீது இருந்து பாடுவாய் பாணா!”
அரன் குரல் அசரீரியாகக் கேட்டது.
நவரத்தினங்கள் பதித்த ஒரு பலகை;
சிவன் அன்புடன் அளித்த பலகை.
அதன் மீது இருந்து பாடியபடியே
அரனை மகிழ்வித்தான் பாணன்;
அரனின் பரிசை அறிந்த மன்னன்
அதன் மீது அவனை அமரச் செய்தான்.
நஞ்சை நிலத்தின் பெறும் பகுதியை
வஞ்சனை இன்றி வழங்கினான்.
வறுமை நீங்கிய பாண பத்திரன்
பிறழாது நிதம் இசை பயின்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
43. பலகை இட்டது.
மூன்று ஜாம பூஜைகளிலும் நிதம்
முக்கண்ணனைப் பாடிவந்த பாணன்;
நான்கு ஜாம பூஜைகளிலும் பின்பு
நாள் தவறாமல் பாடலானான்!
அடாது மழை பெய்தாலும் தொண்டு
விடாது நடை பெறும்என்று காட்ட,
அரன் மழை பொழியச் செய்தான்;
இரவு நடு ஜாம பூஜை சமயத்தில்!
மேகக் கூட்டங்கள் மோதின!
ஏகப்பட்ட மின்னல்கள் சிதறின!
இடி முழக்கி வெருட்டியது உலகை,
தொடர்ந்து நடந்தான் பாணபத்திரன்.
முனைந்து கோவிலை அடைந்தான்,
நனைந்து தொப்பலான பாணபத்திரன்;
நனைந்த யாழ் இசைக்க மறுத்தது!
நனைந்தவனின் குரல் நடுங்கியது!
வெடவெட என உடல் நடுங்கியது!
கடகட என்று பற்கள் கிட்டிப் போயின!
முழங்கால்கள் மோதிக் கொண்டன!
வழிந்தது மழை நீர் உடையிலிருந்து!
“இதன் மீது இருந்து பாடுவாய் பாணா!”
அரன் குரல் அசரீரியாகக் கேட்டது.
நவரத்தினங்கள் பதித்த ஒரு பலகை;
சிவன் அன்புடன் அளித்த பலகை.
அதன் மீது இருந்து பாடியபடியே
அரனை மகிழ்வித்தான் பாணன்;
அரனின் பரிசை அறிந்த மன்னன்
அதன் மீது அவனை அமரச் செய்தான்.
நஞ்சை நிலத்தின் பெறும் பகுதியை
வஞ்சனை இன்றி வழங்கினான்.
வறுமை நீங்கிய பாண பத்திரன்
பிறழாது நிதம் இசை பயின்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Last edited: