Devi Bhaabgavatam - skanda 1
1#15c. சர்வம் சக்தி மயம்
‘இல்லறத்தை ஏற்கப் போவதில்லை இவன்;
துறவறத்திலேயே நோக்கம் கொண்டுள்ளான்!
பயனில்லை இவனுடன் வாது புரிவது!’ என்று
பயனுள்ள சொற்களைக் கூறினார் வியாசர்.
” இயற்றியுள்ளேன் பாகவதம் என்ற புராணம்;
இலங்குகிறது புராணங்களின் மகுடமாக அது.
ஆலிலை மேல் கிடந்தான் பாலரூப விஷ்ணு;
ஆலோசித்தான்,”உலகை நான் அறிவது எப்படி?”
சொல்லப்பட்டது பாதி ஸ்லோகம் தேவியால்;
சொல்லக் கேட்டவன் ஆலிலைமேல் பாலகன்!
“எல்லாப் பொருட்களாகவும் இருப்பவள் நானே!”
இல்லை என்னைவிட அநாதியான இன்னொன்று!”
கேட்டான் விஷ்ணு ஒரு பாதி ஸ்லோகத்தை!
கேட்டான் “சத்தியத்தைச் சொன்னது யார்?” என.
ஆணா பெண்ணா அல்லது அலியா – விஷ்ணு
வீணாகச் சிந்தித்தான் அதைக் குறித்து தன்னுள்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தான் பரந்தாமன்;
தோற்றம் தந்தாள் தேவி புன்னகையுடன் எதிரில்!
தரித்திருந்தாள் தேவி சாந்தமான ஒரு வடிவம்;
தரித்திருந்தாள் தேவி சங்கு சக்கர கதா பத்மம்!
தரித்திருந்தாள் தேவி உயர்ந்த பட்டாடைகள்;
தரித்திருந்தாள் தேவி நவமணி ஆபரணங்கள்.
தோழியர் புடைசூழ வந்தாள் பேரொலியுடன்;
தேவியை உணரவில்லை லக்ஷ்மி தேவியும்.
ஆதாரம் இன்றி அரியகாட்சி தந்த தேவியை
அதிக வியப்புடன் கண்டவன் பரந்தாமன்.
தோற்றினர் அவள் அருகே கீர்த்தி, ஸ்ம்ருதி
திருதி, ச்ரத்தா, மேதா, ஸ்வதா தேவியர்;
ரதி, புத்தி, ஸ்வாஹா, க்ஷுதா தேவியர்கள்;
நித்ரா, தயா, துஷ்டி, புஷ்டி தேவியர்கள்,
க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தரித்ரா தேவியர்கள்
சக்திகளாகத் தோன்றினர் தேவியைச் சுற்றி.
எப்படி உண்டாயினர் இத்தனை சக்திகள்?
எதற்கு உண்டாயினர் இத்தனை சக்திகள்?
ஒன்றும் அறியாத சிறுவனைப் போலவே
ஒன்றும் பேசாமல் இருந்தான் விஷ்ணு,
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
1#15c. சர்வம் சக்தி மயம்
‘இல்லறத்தை ஏற்கப் போவதில்லை இவன்;
துறவறத்திலேயே நோக்கம் கொண்டுள்ளான்!
பயனில்லை இவனுடன் வாது புரிவது!’ என்று
பயனுள்ள சொற்களைக் கூறினார் வியாசர்.
” இயற்றியுள்ளேன் பாகவதம் என்ற புராணம்;
இலங்குகிறது புராணங்களின் மகுடமாக அது.
ஆலிலை மேல் கிடந்தான் பாலரூப விஷ்ணு;
ஆலோசித்தான்,”உலகை நான் அறிவது எப்படி?”
சொல்லப்பட்டது பாதி ஸ்லோகம் தேவியால்;
சொல்லக் கேட்டவன் ஆலிலைமேல் பாலகன்!
“எல்லாப் பொருட்களாகவும் இருப்பவள் நானே!”
இல்லை என்னைவிட அநாதியான இன்னொன்று!”
கேட்டான் விஷ்ணு ஒரு பாதி ஸ்லோகத்தை!
கேட்டான் “சத்தியத்தைச் சொன்னது யார்?” என.
ஆணா பெண்ணா அல்லது அலியா – விஷ்ணு
வீணாகச் சிந்தித்தான் அதைக் குறித்து தன்னுள்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தான் பரந்தாமன்;
தோற்றம் தந்தாள் தேவி புன்னகையுடன் எதிரில்!
தரித்திருந்தாள் தேவி சாந்தமான ஒரு வடிவம்;
தரித்திருந்தாள் தேவி சங்கு சக்கர கதா பத்மம்!
தரித்திருந்தாள் தேவி உயர்ந்த பட்டாடைகள்;
தரித்திருந்தாள் தேவி நவமணி ஆபரணங்கள்.
தோழியர் புடைசூழ வந்தாள் பேரொலியுடன்;
தேவியை உணரவில்லை லக்ஷ்மி தேவியும்.
ஆதாரம் இன்றி அரியகாட்சி தந்த தேவியை
அதிக வியப்புடன் கண்டவன் பரந்தாமன்.
தோற்றினர் அவள் அருகே கீர்த்தி, ஸ்ம்ருதி
திருதி, ச்ரத்தா, மேதா, ஸ்வதா தேவியர்;
ரதி, புத்தி, ஸ்வாஹா, க்ஷுதா தேவியர்கள்;
நித்ரா, தயா, துஷ்டி, புஷ்டி தேவியர்கள்,
க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தரித்ரா தேவியர்கள்
சக்திகளாகத் தோன்றினர் தேவியைச் சுற்றி.
எப்படி உண்டாயினர் இத்தனை சக்திகள்?
எதற்கு உண்டாயினர் இத்தனை சக்திகள்?
ஒன்றும் அறியாத சிறுவனைப் போலவே
ஒன்றும் பேசாமல் இருந்தான் விஷ்ணு,
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி