DEVI BHAAGAVATAM - SKANDA 1
1#2b. ஆதி பராசக்தி (2)
“கடல் நீரில் உப்பு விரவி இருப்பதைப் போல,
உடல்களில் உயிராக வியாபிப்பவள் தேவி.
சகுண, நிர்குண உருவங்கள் உடையவள்,
சரணடைகின்றேன் நான் அந்த தேவியிடம்!
பந்தங்களை மாயையால் தருபவள் அவளே!
பந்தம் நீக்கி மோக்ஷம் தருபவளும் அவளே!”
சூதரின் மொழிகளைக் கேட்ட முனிவர்கள்
சூதரிடம் உரைத்தார்கள் தங்கள் கதையை.
‘கலியின் கொடுமைக்கு அஞ்சினோம் யாம்!
கலி அண்டாத ஓர் இடத்தைத் தேடினோம்!
சக்கரம் ஒன்றைத் தந்தார் பிரம்மதேவன்;
“சக்கரத்தைப் பின் பற்றிச் செல்லுங்கள்!
சிதறுண்டு சக்கரம் விழுமிடம் புனிதத் தலம்;
பதறாமல் வாழுங்கள் கலி அண்டாது அங்கே!
தவம் செய்யுங்கள் கிருத யுகம் வரையில்!”
தங்கு தடையின்றி முன்னேறியது சக்கரம்.
சிதறுண்டு விழுந்தது இந்த வனத்தில் வந்து !
சித்தர்கள், முனிவர்கள் வாழ்கின்றோம் இங்கு!
யாகம் செய்கின்றோம் தாவர வர்க்கங்கள்,
மாவால் செய்வித்த பசுக்களைக் கொண்டு,
கதை கூறுவதில் சமர்த்தர் நீர் என்றறிவோம்!
கதை கேட்பதில் யாம் சமர்த்தர் என்றறிவீர்.
தேனமுதம் பருக வேண்டும் செவிகள் குளிர,
தேவி பாகவதத்தை நீர் கூறக் கேட்டு!” என்றனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
“கடல் நீரில் உப்பு விரவி இருப்பதைப் போல,
உடல்களில் உயிராக வியாபிப்பவள் தேவி.
சகுண, நிர்குண உருவங்கள் உடையவள்,
சரணடைகின்றேன் நான் அந்த தேவியிடம்!
பந்தங்களை மாயையால் தருபவள் அவளே!
பந்தம் நீக்கி மோக்ஷம் தருபவளும் அவளே!”
சூதரின் மொழிகளைக் கேட்ட முனிவர்கள்
சூதரிடம் உரைத்தார்கள் தங்கள் கதையை.
‘கலியின் கொடுமைக்கு அஞ்சினோம் யாம்!
கலி அண்டாத ஓர் இடத்தைத் தேடினோம்!
சக்கரம் ஒன்றைத் தந்தார் பிரம்மதேவன்;
“சக்கரத்தைப் பின் பற்றிச் செல்லுங்கள்!
சிதறுண்டு சக்கரம் விழுமிடம் புனிதத் தலம்;
பதறாமல் வாழுங்கள் கலி அண்டாது அங்கே!
தவம் செய்யுங்கள் கிருத யுகம் வரையில்!”
தங்கு தடையின்றி முன்னேறியது சக்கரம்.
சிதறுண்டு விழுந்தது இந்த வனத்தில் வந்து !
சித்தர்கள், முனிவர்கள் வாழ்கின்றோம் இங்கு!
யாகம் செய்கின்றோம் தாவர வர்க்கங்கள்,
மாவால் செய்வித்த பசுக்களைக் கொண்டு,
கதை கூறுவதில் சமர்த்தர் நீர் என்றறிவோம்!
கதை கேட்பதில் யாம் சமர்த்தர் என்றறிவீர்.
தேனமுதம் பருக வேண்டும் செவிகள் குளிர,
தேவி பாகவதத்தை நீர் கூறக் கேட்டு!” என்றனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி