DEVIVBHAAGAVTAM - SKANDA 5
5#32b. சுமேதஸ் முனிவர்
பேராசை பிடித்தவர்கள் – சிந்தியாமல்
யாரையும் பலிகடா ஆக்கிவிடுவார்கள்!’
தன்னந் தனியனாக குதிரை மேல் அமர்ந்து
முன்னம் சென்றிராத ஆசிரமம் சென்றான்.
முனிவர் சுமேதஸின் ஆசிரமம் இருந்தது
மூன்று காத தூரத்தில் அவன் நாட்டிலிருந்து.
பூத்துக் குலுங்கின மரம், செடி, கொடிகள்;
காற்றில் ஒலித்தன பறவைகளின் பாடல்கள்.
கொஞ்சி விளையாடிய இயற்கையின் எழில்
விஞ்சியது விரவிய ஆழ்ந்த அமைதியில்!
கேட்டது சீடர்கள் வேதம் ஓதும் நாதம்!
கட்டினான் குதிரையை, நடந்தான் சுரதன்.
சால மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார் – மான்
தோலின் மீது குரு மஹான் சுமேதஸ் முனிவர்.
சாந்த பாவமும், தவத்தின் தேஜசும் கலந்து
காந்தம் போல இழுத்தது சுரத மன்னனை!
கால்களில் விழுந்தான் சுரத மன்னன் – அவர்
கால்களைக் கழுவினான் கண்ணீர் அருவியால்.
மனம் உருகிவிட்டது மாமுனிவருக்கு – அவனை
இனம் கண்டு கொண்டார் ஓர் நல்ல அரசன் என்று.
“நாடாள வேண்டிய மன்னன் தனியே
காடாள வந்த காரணம் கூற வேண்டும்!”
“தவ சிலரே! இழந்து விட்டேன் என் நாட்டை!
இழந்தேன் அரசை! பிரிந்தேன் குடும்பத்தை!
ஓடி வந்துவிட்டேன் சத்ரு பயத்தால் – உம்மை
நாடி வந்து விட்டேன் நீர் அபயம் அளிப்பீர் !”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
5#32b. சுமேதஸ் முனிவர்
பேராசை பிடித்தவர்கள் – சிந்தியாமல்
யாரையும் பலிகடா ஆக்கிவிடுவார்கள்!’
தன்னந் தனியனாக குதிரை மேல் அமர்ந்து
முன்னம் சென்றிராத ஆசிரமம் சென்றான்.
முனிவர் சுமேதஸின் ஆசிரமம் இருந்தது
மூன்று காத தூரத்தில் அவன் நாட்டிலிருந்து.
பூத்துக் குலுங்கின மரம், செடி, கொடிகள்;
காற்றில் ஒலித்தன பறவைகளின் பாடல்கள்.
கொஞ்சி விளையாடிய இயற்கையின் எழில்
விஞ்சியது விரவிய ஆழ்ந்த அமைதியில்!
கேட்டது சீடர்கள் வேதம் ஓதும் நாதம்!
கட்டினான் குதிரையை, நடந்தான் சுரதன்.
சால மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார் – மான்
தோலின் மீது குரு மஹான் சுமேதஸ் முனிவர்.
சாந்த பாவமும், தவத்தின் தேஜசும் கலந்து
காந்தம் போல இழுத்தது சுரத மன்னனை!
கால்களில் விழுந்தான் சுரத மன்னன் – அவர்
கால்களைக் கழுவினான் கண்ணீர் அருவியால்.
மனம் உருகிவிட்டது மாமுனிவருக்கு – அவனை
இனம் கண்டு கொண்டார் ஓர் நல்ல அரசன் என்று.
“நாடாள வேண்டிய மன்னன் தனியே
காடாள வந்த காரணம் கூற வேண்டும்!”
“தவ சிலரே! இழந்து விட்டேன் என் நாட்டை!
இழந்தேன் அரசை! பிரிந்தேன் குடும்பத்தை!
ஓடி வந்துவிட்டேன் சத்ரு பயத்தால் – உம்மை
நாடி வந்து விட்டேன் நீர் அபயம் அளிப்பீர் !”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
