KANDA PURAANAM- MAHENDRA KAANDAM
21a. ஆலோசனை.
அழிந்த நகரை பிரமன் ஒழுங்கு செய்தபின்,
அரியணையில் அமர்ந்திருந்தான் சூரபத்மன் .
ஒற்றர்கள் விரைந்து வந்தனர் அரசவைக்கு.
மற்ற செய்திகளையும் புகன்றனர் அரசனிடம்.
“செவ்வேட்கடவுள், சிவனாரின் மகனார்,
செந்தில் மாநகர் வந்து சேர்ந்து விட்டார்.
பூதப் படைகள் ஈராயிரம் வெள்ளம் ஆம்.
ஏவப் படைத் தலைவர்கள் நூற்று எண்மர்.
தாரகன் மாய்ந்த செய்தி உண்மையாகும்.
கிரௌஞ்சன் பிளந்ததும் உண்மை ஆகும்.
யாளிமுகனையும் கொன்றுவிட்டான் தூதன்.
நாளை வந்து சேரும் முருகனின் படைகள்.”
அமைச்சர்களும், படைத் தலைவர்களும்,
அருமைத் தம்பி சிங்கமுக அவுணனும்
விரைந்து வந்து குழுமினர் அரசவையில்.
சூரபத்மன் சொன்னான் அவையினரிடம்,
“தேவர்களை நம் சிறையில் வைத்ததைத்
தேவர்கோன் சொன்னான் சிவபிரானிடம்.
தேவாதி தேவன் தோற்றுவித்தான் முருகனை.
தேவர்கள் துயர் தீர்க்க அனுப்பினான் அவனை.
தாரகனைக் கொன்ற பின் சிறுவன் முருகன்
தூதுவன் ஒருவனை அனுப்பினான் என்னிடம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
21a. ஆலோசனை.
அழிந்த நகரை பிரமன் ஒழுங்கு செய்தபின்,
அரியணையில் அமர்ந்திருந்தான் சூரபத்மன் .
ஒற்றர்கள் விரைந்து வந்தனர் அரசவைக்கு.
மற்ற செய்திகளையும் புகன்றனர் அரசனிடம்.
“செவ்வேட்கடவுள், சிவனாரின் மகனார்,
செந்தில் மாநகர் வந்து சேர்ந்து விட்டார்.
பூதப் படைகள் ஈராயிரம் வெள்ளம் ஆம்.
ஏவப் படைத் தலைவர்கள் நூற்று எண்மர்.
தாரகன் மாய்ந்த செய்தி உண்மையாகும்.
கிரௌஞ்சன் பிளந்ததும் உண்மை ஆகும்.
யாளிமுகனையும் கொன்றுவிட்டான் தூதன்.
நாளை வந்து சேரும் முருகனின் படைகள்.”
அமைச்சர்களும், படைத் தலைவர்களும்,
அருமைத் தம்பி சிங்கமுக அவுணனும்
விரைந்து வந்து குழுமினர் அரசவையில்.
சூரபத்மன் சொன்னான் அவையினரிடம்,
“தேவர்களை நம் சிறையில் வைத்ததைத்
தேவர்கோன் சொன்னான் சிவபிரானிடம்.
தேவாதி தேவன் தோற்றுவித்தான் முருகனை.
தேவர்கள் துயர் தீர்க்க அனுப்பினான் அவனை.
தாரகனைக் கொன்ற பின் சிறுவன் முருகன்
தூதுவன் ஒருவனை அனுப்பினான் என்னிடம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.