devi bhaagavatam - skanda 4
4#15. திருமாலின் அவதாரம்
“பிருகுவின் சாபத்தால் என்னென்ன அவதாரங்கள்
திருமாலுக்கு ஏற்பட்டன எனக் கூறுங்கள் குருதேவா!”
“ஜனமேஜயா! திருமால் எடுத்தார் அவதாரம்
சாக்ஷூஷூ மன்வந்தரத்தில் முதன் முதலில்.
கிருத யுகத்தில், முதல் சதுர் யுகத்தில்
தருமரின் பிள்ளைகள் நர, நாராயணராக.
அத்திரி முனிவர் பத்தினி அனசூயாதேவி
புத்திரனாக வேண்டினாள் மும்மூர்த்தியரை.
கிருத யுகத்தில் முதல் சதுர் யுகத்தில் இங்கு
உருவெடுத்தார் தத்தாத்ரேயராக விஷ்ணு.
நான்காவது சதுர்யுக கிருதயுகத்தில் விஷ்ணு
நரசிங்கராகத் தோன்றினார் ஹிரண்யனை அழிக்க.
அடுத்த யுக்தில் பிறந்தார் காச்யபர் மகனாக;
கெடுத்தார் பலியின் கர்வத்தை வாமனனாக.
திரேதா யுகத்தில் பத்தொன்பதாவது சதுர் யுகத்தில்
பரசுராமராகத் தோன்றினார் ஜமதக்னி முனியிடம்.
திரேதா யுகத்தில் தசரத மன்னனுக்கு
ஸ்ரீ ராமராகப் பிறந்தார் ரகு வம்சத்தில்,
துவாபரயுகம் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில்
அவதரித்தார் கிருஷ்ண, அர்ஜுனர்களாக.
எங்கும் நிறைந்தவர் பரமாத்மா எனினும்
எதற்கும் புலப்படாதவர் பரமாத்மா.
ஆதாரம், உருவம், ஆசைகள் இல்லாதவர்;
அறிய முடியாதவர் அந்தப் பரமாத்மா.
முக்குண பேதத்தால் மும்மூர்த்தி ஆகின்றார்
முத்தொழில்கள் புரிகின்றனர் மும்மூர்த்திகள்.
இத்தனைக்கும் காரணம் சக்தி தேவியே.
அத்தனையும் கட்டுப்படுகின்றன அவளுக்கு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#15. திருமாலின் அவதாரம்
“பிருகுவின் சாபத்தால் என்னென்ன அவதாரங்கள்
திருமாலுக்கு ஏற்பட்டன எனக் கூறுங்கள் குருதேவா!”
“ஜனமேஜயா! திருமால் எடுத்தார் அவதாரம்
சாக்ஷூஷூ மன்வந்தரத்தில் முதன் முதலில்.
கிருத யுகத்தில், முதல் சதுர் யுகத்தில்
தருமரின் பிள்ளைகள் நர, நாராயணராக.
அத்திரி முனிவர் பத்தினி அனசூயாதேவி
புத்திரனாக வேண்டினாள் மும்மூர்த்தியரை.
கிருத யுகத்தில் முதல் சதுர் யுகத்தில் இங்கு
உருவெடுத்தார் தத்தாத்ரேயராக விஷ்ணு.
நான்காவது சதுர்யுக கிருதயுகத்தில் விஷ்ணு
நரசிங்கராகத் தோன்றினார் ஹிரண்யனை அழிக்க.
அடுத்த யுக்தில் பிறந்தார் காச்யபர் மகனாக;
கெடுத்தார் பலியின் கர்வத்தை வாமனனாக.
திரேதா யுகத்தில் பத்தொன்பதாவது சதுர் யுகத்தில்
பரசுராமராகத் தோன்றினார் ஜமதக்னி முனியிடம்.
திரேதா யுகத்தில் தசரத மன்னனுக்கு
ஸ்ரீ ராமராகப் பிறந்தார் ரகு வம்சத்தில்,
துவாபரயுகம் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில்
அவதரித்தார் கிருஷ்ண, அர்ஜுனர்களாக.
எங்கும் நிறைந்தவர் பரமாத்மா எனினும்
எதற்கும் புலப்படாதவர் பரமாத்மா.
ஆதாரம், உருவம், ஆசைகள் இல்லாதவர்;
அறிய முடியாதவர் அந்தப் பரமாத்மா.
முக்குண பேதத்தால் மும்மூர்த்தி ஆகின்றார்
முத்தொழில்கள் புரிகின்றனர் மும்மூர்த்திகள்.
இத்தனைக்கும் காரணம் சக்தி தேவியே.
அத்தனையும் கட்டுப்படுகின்றன அவளுக்கு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி