2 (# 5c). நல்லியல்புகள்.
"திருமணத்துக்கு உரிய மணமகளின்
சிறப்புக்களை உரைக்கின்றேன் நான்.
தந்தை, தாயை இழந்தவள் கூடாது;
தங்கை, தமக்கை அற்றவள் கூடாது;
உடன் பிறந்தவன் இல்லாதவள் கூடாது,
ஒற்றைப் பெண்ணானவளும் கூடாது;
உறவினர் அற்றவள், நோயாளியின் மகள்,
உயர்க்குடிப் பிறவாதவள், அழகற்றவள்;
விலங்குகளின் பெயரை உடையவள்;
விலக்கிவிட வேண்டிய பிற சமயத்தவள்;
செவிடர், முடவர், ஊமையர் கூடாது;
தெரு வாசலில் நின்று நோக்குபவள்;
மிகுதியாக அலங்கரித்துக் கொள்பவள்,
மிகுதியாக உணவு உட்கொள்ளுபவள்;
பேருறக்கம் உடையவள், முதிர்ந்தவள்,
கோத்திரத்தில் நம்மை ஒத்தவள் கூடாது;
நெட்டையானவள், மெலிந்தவள் கூடாது;
குட்டையானவள், பருத்தவள் கூடாது.,
கருநிறம், பொன்னிறம், பசப்பையுடையவர்;
குருதி நிறம் கொண்டவர்கள் கூடவே கூடாது.
நாணம் இல்லாதவள், பெரு வலிவுடையவள்;
நகைப்பவள், சினம் மிகுந்தவள் கூடாது,
அத்தன், அம்மை சொல் கேளாதவள்;
கூத்துப் பார்க்க விரும்புபவள் கூடாது.
சிவனிடத்தில் அன்பு கொள்ளாதவள்;
முனிவரை இகழ்பவள் கூடவே கூடாது.
அருள் அற்றவள், தீக் குணம் உடையவள்;
நிறை அற்றவள், தேவரைக் கல் என்பவள்;
இடி முழங்குவது போலப் பேசுபவள்;
இடுங்கிய கண்களை உடையவள்;
நரை மயிர், பெருங்கூந்தல் உடையவள்;
சிறுத்த கண்களை உடையவள் கூடாது;
நீண்ட மூக்கை உடையவள் கூடாது;
நீட்டிய பற்களும், வளைந்த கழுத்தும்
மயிர்ப்பரந்த கால்களை உடையவள்;
மனத்தைக் கவரும் அன்னநடை அற்றவள்;
உள்ளங்கைகளும், நகமும், வாயும்,
உள்ளங்கால்களும் சிவந்து இராதவள்;
இந்தக் குற்றங்கள் இல்லாதவள் ஆகிய
எந்தப் பெண்ணையும் மணப்பேன் நான்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
பெண்மையின் நல்லியல்புகள் புதுமைப் பெண்களிடம்
அண்மைக் காலமாகக் காண அரிதாகி வருகின்றனவோ?
"திருமணத்துக்கு உரிய மணமகளின்
சிறப்புக்களை உரைக்கின்றேன் நான்.
தந்தை, தாயை இழந்தவள் கூடாது;
தங்கை, தமக்கை அற்றவள் கூடாது;
உடன் பிறந்தவன் இல்லாதவள் கூடாது,
ஒற்றைப் பெண்ணானவளும் கூடாது;
உறவினர் அற்றவள், நோயாளியின் மகள்,
உயர்க்குடிப் பிறவாதவள், அழகற்றவள்;
விலங்குகளின் பெயரை உடையவள்;
விலக்கிவிட வேண்டிய பிற சமயத்தவள்;
செவிடர், முடவர், ஊமையர் கூடாது;
தெரு வாசலில் நின்று நோக்குபவள்;
மிகுதியாக அலங்கரித்துக் கொள்பவள்,
மிகுதியாக உணவு உட்கொள்ளுபவள்;
பேருறக்கம் உடையவள், முதிர்ந்தவள்,
கோத்திரத்தில் நம்மை ஒத்தவள் கூடாது;
நெட்டையானவள், மெலிந்தவள் கூடாது;
குட்டையானவள், பருத்தவள் கூடாது.,
கருநிறம், பொன்னிறம், பசப்பையுடையவர்;
குருதி நிறம் கொண்டவர்கள் கூடவே கூடாது.
நாணம் இல்லாதவள், பெரு வலிவுடையவள்;
நகைப்பவள், சினம் மிகுந்தவள் கூடாது,
அத்தன், அம்மை சொல் கேளாதவள்;
கூத்துப் பார்க்க விரும்புபவள் கூடாது.
சிவனிடத்தில் அன்பு கொள்ளாதவள்;
முனிவரை இகழ்பவள் கூடவே கூடாது.
அருள் அற்றவள், தீக் குணம் உடையவள்;
நிறை அற்றவள், தேவரைக் கல் என்பவள்;
இடி முழங்குவது போலப் பேசுபவள்;
இடுங்கிய கண்களை உடையவள்;
நரை மயிர், பெருங்கூந்தல் உடையவள்;
சிறுத்த கண்களை உடையவள் கூடாது;
நீண்ட மூக்கை உடையவள் கூடாது;
நீட்டிய பற்களும், வளைந்த கழுத்தும்
மயிர்ப்பரந்த கால்களை உடையவள்;
மனத்தைக் கவரும் அன்னநடை அற்றவள்;
உள்ளங்கைகளும், நகமும், வாயும்,
உள்ளங்கால்களும் சிவந்து இராதவள்;
இந்தக் குற்றங்கள் இல்லாதவள் ஆகிய
எந்தப் பெண்ணையும் மணப்பேன் நான்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
பெண்மையின் நல்லியல்புகள் புதுமைப் பெண்களிடம்
அண்மைக் காலமாகக் காண அரிதாகி வருகின்றனவோ?