A poem a day to keep all agonies away!

VINAAYAKA PURAANAM 1

27g. Brahma’s yagna

Brahma wanted to perform a yagna in honor of lord Siva in the mountain Podigai. He left behind his wife Savithri Devi and went to the Yagna saala with his other wife Saraswathi Devi.

The neglected wife Savithi Devi became wild with anger and cursed that all the deva who had come to witness the yagna be turned to water. All the Deva including Vishnu and Indra became water.

The wives of the Deva came running and crying. Brahma was shocked beyond words. He contemplated on Lord Siva who appeared on his Nandi vaahanam.

Siva told Brahma, “You forgot to invoke the blessings of Vinayaka before you started the yagna. That is the cause of all these troubles. Worship Vinayaka and start the yagna once again with his blessings and it will be completed successfully.”

Brahma and all the wives of the Deva worshiped Vinayaka under the Mandaaraatree – but nothing happened. Then they heard an aakaashvaani telling them to do the archanani with the vanni patrams.

When the vanni patra archani was done, Vinayaka appeared before them. They worshiped the Heramba vinayaka and got back their original forms.

Brahma continued to worship Vinayaka for twelve years more. Then with the blessings of Vinayaka and the the help of both his wives, he completed the yagna successfully.
 
DEVI BHAAGAVATH -SKANDA 4

4#6c. ஊர்வசி

புலப்பட்டனர் தபஸ்விகளின் கண்களுக்கு
பொலிவுடைய ரதி, மதன், அப்சரஸ்கள்

நர, நாராயணர் கண்டு அதிசயித்தனர்
வரிசையாக வந்த அழகிய பெண்களை!

தங்களின் அங்க அழகை எல்லாம் – அந்த
மங்கையர் வெளிப்படுத்தினர் நாணாமல்.

ஆடினார் காமத்தைத் தூண்டும் நடனம்;
பாடினர் போகத்தைத் தூண்டும் பாடல்.

சிந்தித்தார்கள் நர நாராயணர் இது பற்றி!
‘இந்திரன் விழைந்தானோ நம்மை மயக்க?

வனப்பு மிகுந்த வனிதையை சிருஷ்டித்து
மனதில் பதிப்பேன் தவத்தின் வலிமையை!’

“உங்களுக்குத் தர வேண்டும் ஒரு விருந்து
எங்களால் இயன்ற அளவுக்குச் சிறப்பாக !”

தட்டினர் தம் தொடையை நாராயணன் – வெளிப்
பட்டாள் ஒரு பேரழகி அவர் தொடையிலிருந்து!

ஊர்வசி என்னும் தேவ கன்னிகை வந்தாள்
ஊரு ஆகிய தொடையில் இருந்து வெளியே.

நாணினர் அப்சரஸ் அவள் அழகினில் – நாணிக்
கோணினர் அவள் தம்மிலும் சிறந்தவள் என்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATH -SKANDA 4

4#6c. Oorvasi

Nara Naaraayana could now see the Rati, Manmathan and the apsaras. They were surprised at the beauty of the visitors from heaven. The damsels dispalyed their curves and beauty shamelessly.

They danced and sang sweetly so as to arouse the two brothers and make them seek carnal pleasures.

Naarayanan thought to himself, “So Indra wants to disturb our penance. I shall display to them the power of my penance by creating a woman more beautiful than them .”

He then spoke to them, We want to give you a befitting feast.” He slapped on his thigh and an apsaras – far more beautifu than those present there – emerged from his thigh.

She was named as Oorvasi since she emerged from the ‘ooru’ or the thigh of Naaraayanan. The visitors from heaven became shy seeing the superior beauty of Oorvasi.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

8c. சூரனின் வீரவேள்வி.

வேள்விப் பொருட்கள் கிடைத்த உடனே
வேள்வியைத் துவங்கினான் சூரபத்மன்.


வச்சிரத் தூணை நிறுவினான் நடுவில்,
வழிபட்டான் காவல் தெய்வங்களை.

மதில் நடுவில் அமைந்த பேய்களுக்கும்,
பூதங்களுக்கும் ஊன் பலி கொடுத்தான்.

நச்சு விறகிட்டுக் கொளுத்தினான் சூரன்,
நச்சுத் தீயை ஆயிரத்தெட்டுக் குழிகளில்.

அவி கொடுத்தான் அக்னி குண்டத்தில்;
சிவ பிரானின் பெயரைச் சொல்லியபடி.

குறையாமல் தீயை வளர்த்துவதற்கு
தாரகனை நியமித்தான் சூரபத்மன்.

நூற்றெட்டுக் குழிகளில் பிறகு யாகம்;
நீறு பூக்காமல் பார்க்க அரிமாமுகன்.

நடுக் குழியில் தொடர்ந்தது யாகம்,
நச்சு விறகால் தீயை மூட்டினான்.

வேள்விப் பொருட்களைத் தீயிலிட,
வேள்வித் தீ விண்ணை எட்டியது.

சூரனின் வீரவேள்வியைக் கண்டு
சுரர்கள் அஞ்சி நடுங்கலாயினர்.

பதினாயிரம் ஆண்டுகள் கழிந்தும்
பயன் ஒன்றும் காணவில்லை சூரன்.

அண்ணலை வரவழைக்க விரும்பி
விண்ணில் சென்று நின்று கொண்டான்.

தன் உடல் சதைகளை அறுத்து எடுத்துத்
தான் வளர்த்த யாகத்தீயில் இடலானான்.

அரிய அரிய உடல் சதை வளர்வது
அரியதொரு காட்சி ஆனது அங்கே.

ஆயிரம் ஆண்டுகள் இங்ஙனம் செய்தும்
அண்ணல் அங்கே தோன்றவேயில்லை.

உயிர் துறப்பதே உத்தமம் என எண்ணி
வயிரத்தூண் மேல் குதித்தான் சூரன்.

உச்சியினின்றும் உருண்டு விழுந்தவன்
மிச்சம் இல்லாமல் எரிந்து போனான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 ( # 8 C). Soorapadman’s yagna.

As soon as Soorapadman got the things required to perform the yagna, he started the yagna. He set up the diamond pillar in the middle and worshipped the guarding deities first.

He lit the fire with the poisonous wood in the 1008 yaaga kundam. The yaaga was performed and Taaraka asuran was entrusted with the job of keeping the fire glowing.

Then the 108 yaaga kundams were lit and yaaga was performed. Simha mukhan was entrusted with the job of keeping the fire glowing.

Then the central yaaga kundam was lit. Soorapadman made the offerings to the agni and the flames reached as high as the heaven. The Devas were frightened to see the serious yagna being performed by Soorapadman.

Ten thousand years passed by. Still Siva did not appear. Sooran made the yagna more severe. He stood in the sky and started offering parts of his own body in the yaaga fire.

New limbs and flesh grew as fast as he was cutting them off. It was a thrilling sight to all present there!

One thousand years passed by and yet Siva did not appear. Soorapadman decided to end his life in the yaaga kundam. He jumped on the diamond pillar, rolled down into the fire and got completely burned.


 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 99 ( 1 & 2)


வேத3 ஸ்துதி

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கத2யது
த4ரணே: கச்’ய ரேணூன்மிமீதே
யஸ்யை வாங்க்4ரி த்ரயேண த்ரிஜக3த3பி4 மிதம்
மோத3தே பூர்ண ஸம்பத் |
யோsசௌ விச்வானி த4த்தே ப்ரியமிஹ
பரமம் தா4ம தஸ்யாபி4யாயாம்
தத்3 ப4க்தா யத்ர மாத்யந்த்
யம்ருதரஸ மரந்தஸ்யத்ர ப்ரவாஹ:|| ( 99 – 1)


எவருடைய மூன்றடிகளால் மூவுலகங்களும் அளக்கப்பட்டு,
அதனால் ஐஸ்வர்யம் நிறைந்ததாகச் சந்தோஷப்படுகின்றதோ;
எந்த பகவான் உலகங்கள் அனைத்தையும் தாங்குகின்றாரோ,
எங்கும் நிறைந்திருக்கும் அந்த விஷ்ணுவின் வீரியங்களை
யாரால் எடுத்து உரைக்க முடியும் ?
பூமியின் துகள்களை யாரால் எண்ண முடியும்?
எந்த உலகத்தில் விஷ்ணு பக்தர்கள் சந்தோஷப்படுகின்றார்களோ,
எந்த உலகத்தில் மோக்ஷம் என்னும் பூந்தேன் பெருக்கெடுக்கின்றதோ,
அந்த விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமானதும் மேலானதும் ஆகிய
வைகுண்டத்தை நான் இந்த உலகிலேயே அடைவேன் ஆகுக!( 99 – 1)

ஆத்3யாயாசே’ஷகர்தே ப்ரதி நிமிஷ
நவீனாய பர்த்ரே விபூ4தே :
ப4க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி3ச’தி
ஹவிராதீ3னி யக்ஞார்சனாதௌ3 |
க்ருஷ்ணாத்3யம் ஜன்ம யோ வா மஹதி3ஹ
மஹதோ வர்ணயேத் சஸோsயமேவ
பீத: பூர்ணே யசோ’பி4ஸ் த்வரித
மபி4ஸரேத் ப்ராப்யமந்தே பத3ம் தே || ( 99 – 2)


பக்தி நிறைந்த மனதை உடைய எவன் ஒருவன்
(எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பவரும்;
எல்லாவற்றையும் படைத்தவரும்;
ஒவ்வொரு கணத்திலும் புதிதாகத் தோன்றுகின்றவரும்,
அணிமாதி ஐஸ்வரியங்களைத் தரிக்கின்றவரும் ஆகிய)
ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு; யாகம், பூஜை முதலியவற்றில்
ஹவிஸ், புஷ்பம், பழம் முதலியவற்றை சமர்ப்பணம் செய்கின்றானோ அல்லது எவன் ஒருவன் மஹானான விஷ்ணுவின் மிகவும் பூஜ்யகரமான
கிருஷ்ண அவதாரத்தை வர்ணிக்கின்றானோ; அவனே இந்த உலகில்
சந்தோஷமாகக் கீர்த்திகள் நிறைந்தவனாக வாழ்ந்திருந்துவிட்டு கடைசியில் தங்கள் வைகுண்ட லோகத்தைத் தாமதம் இன்றி அடைவான். ( 99 – 2)
 
[h=1]த3ச’கம் 99 ( 3 & 4 )[/h] வேத3 ஸ்துதி

ஹே ஸ்தோதார: கவீந்த்3ராஸ்தமிஹ
க2லு யதா2 சேதய்த்4வே ததை2வ
வ்யக்தம் வேத3ஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஜனனோ பாத்த லீலா கதா2பி:|
ஜானந்தஸ் சாஸ்ய நாமானி அகில ஸுக2
கராணீதி ஸங்கீர்த்த யத்4வம்
ஹே விஷ்ணோ கீர்த்த நாத்3யைஸ் தவ க2லு
மஹதஸ் தத்வ போ3த4ம் ப4ஜேயம் || ( 99 – 3)



துதிக்கின்ற கவி ஸ்ரேஷ்டர்களே! பிரமாணச் சித்தரும், வேதத்தின் சார பூதருமான அந்த மஹாவிஷ்ணுவை எவ்விதம் நீங்கள் அறிகின்றீர்களோ, அவ்விதமாகவே இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட்ட லீலா விசேஷங்களின் கதைகளால் நன்கு துதியுங்கள்!
ஹே அறிஞர்களே! எல்லோருக்கும் எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்ற அந்த விஷ்ணுவின் திருநாமங்களை நன்கு கீர்த்தனம் செய்யுங்கள்!
ஹே விஷ்ணுவே! நாம சங்கீர்த்தனம் முதலியவற்றாலேயே நான் மஹானாகிய தங்களுடைய தத்துவ ஞானத்தை அடைவேன் ஆகுக!
( 99 – 3 )


விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்’யத மனஸி
ஸதா3 யைஸ்ஸ தர்மானபத்4னா
த்3யானீந்த்3ரஸ்யைஷ ப்4ருத்ய ப்ரியாஸக2
இவ ச வ்யாதனோத் க்ஷேமகாரீ|
ஈக்ஷந்தே யோகா3 ஸித்3தா4: பரபத3 மனிச’ம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாச’ம்
விப்ரேந்த்3ரா ஜாக3ரூகா க்ருத ப3ஹு நுதயோ
யச்ச நிர்பா4ஸயந்தே || ( 99 – 4)



எந்த எந்தப் பிரவிருத்திகளைக் கொண்டு தர்மங்களை அந்த அந்த அதிகாரிகளுடன் சேர்த்து வைத்தாரோ அந்த விஷ்ணு பகவான் – தேவேந்திரக்கு ஒரு வேலைக்காரனைப் போலவும், பிரியமுள்ள தோழனைப் போலவும், க்ஷேமத்தை செய்வதற்கு எந்த எந்த பிரவிருத்திகளைச் செய்தாரோஅந்த விஷ்ணு பகவான்; யோகசித்தி பெற்றவர்கள் எந்த விஷ்ணு பகவானுடைய நன்கு பிரகாசிக்கின்ற சிறந்த ஸ்தானத்தை எப்போதும் பார்கின்றர்களோ அந்த விஷ்ணு பகவான்; எந்த ஸ்தானத்தை பிராமணோத்தமர்கள் பலதரப்பட்ட ஸ்துதிகளால் பிரகாசப் படுதுகின்றார்களோ அந்த விஷ்ணு பகவான்; அப்படிப்பட்ட அந்த விஷ்ணு பகவானின் பிரவிருத்திகளை எப்போதும் மனதில் தியானம் செய்யக் கடவீர். ( 99 - 4)
 
த3ச’கம் 99 ( 5 to 7)

வேத3 ஸ்துதி

நோ ஜாதோ ஜாயமானோSபி ச ஸமதி4க3தஸ்
த்வன் மஹிம்னோSவஸானம்
தே3வ ச்’ரேயாம்ஸி வித்3வான் ப்ரதிமுஹுரபி
தே நாம ச’ம்சாபி4 விஷ்ணோ |
தந்த்வாம் ஸமஸ்தௌமி நானாவித4நுதி
வசனைரஸ்ய லோக த்ரயஸ்யாபி
ஊர்த்4வம் விப்4ராஜமானோ விரசித வஸதீம்
தத்ர வைகுண்ட2 லோகே || ( 99 – 5)


ஹே தேவா! தங்கள் மகிமையின் முடிவைக் கண்டவன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! சிரேய சாதனங்களை அறிந்த நான் தங்கள் திருநாமத்தை ஒவ்வொரு கணமும் கீர்த்தனம் செய்கின்றேன். இந்த மூவுலகங்களுக்கும் மேலே வைகுண்டத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருக்கும் அப்படிப் பட்ட தங்களை பலவிதமாக நன்கு துதிக்கின்றேன். ( 99 – 5 )

ஆப:ஸ்ருஷ்ட்யாதி3 ஜன்யா: ப்ரத2மமயி
விபோ4 க3ர்ப்ப4 தே3சே’ த3து4ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலச’யன ஹரே
ஸங்க3தா ஐக்யமாபன் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ4 தே விநிஹித மப4வத்
பத3ம் மேகம் ஹி நாபௌ4
தி3க்பத்ரம் யத் கிலாஹு: கனகத4ரணிப்4ருத்
கர்ணிகம் லோக ரூபம் || ( 99 – 6)


ஹே பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது.
ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர். அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில் ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா? அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர் ( 99 – 6 )

ஹே லோகா விஷ்ணு ரேதத் பு4வனப4ஜனயத்தன்ன ஜானீத2 யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்தம் கிமபி தத3பரம் வித்3யதே விஷ்ணுரூபம் |
நீஹார ப்ரக்2ய மாயா பரிவ்ருத மனஸோ மோஹிதா நாம ரூபை:
ப்ராண ப்ரத்யைக த்ருப்தாச்’சரத2 மக2பரா ஹந்த நேச்சா முகுந்தே3||(99-7)

ஹே ஜனங்களே! விஷ்ணு பகவான் இந்த உலகத்தை சிருஷ்டித்தார். இவ்விதம் என்று சொல்ல முடியாததும், ஜீவனைக் காட்டிலும் வேறானதுமான விஷ்ணு ரூபம் உங்கள் ஹிருதயத் தாமரையில் இருக்கிறது. அதையும் நீங்கள் அறிவதில்லை. பனிக்கு ஒப்பான மாயையால் மறைக்கப்பட்ட மனதை உடையவர்களாகவும்; நாம ரூபங்களால் மோஹம் அடைந்தவர்களாகவும்; பிராணனைத் திருப்தி செய்வதிலேயே திருப்தி அடைந்தவர்களாகவும்; யாகத்தை அனுஷ்டிப்பவர்களாகவும் நீங்கள் சுற்றித் திரிகின்றீர்கள். மோக்ஷத்தை அளிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடத்தில் உங்களுக்கு பிரேமை உண்டாவதில்லையே! ( 99 – 7 )
 
த3ச’கம் 99 ( 8 to 10)

வேத3 ஸ்துதி

மூர்த்த்4னாமக்ஷ்ணாம் பதா3னி வஹஸி கலு
ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்’வம்
தத்ப்ரோத்கம்யாபி திஷ்ட2ன் பரிமிதவிவரே
பா4ஸி சித்தாந்தரேSபி |
பூ4தம் ப4வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப4வான்
கிஞ்ச தேஹேந்த்3ரியாதி3ஷு
ஆவிஷ்டோ ஹ்யுத்3க3தத்வாத்3 அம்ருதமுக2ரஸம்
சானுபு4ங்க்ஷே த்வமேவ || ( 99 – 8 )


தலைகள் உடைய, கண்கள் உடைய, கால்கள் உடைய அனேக ஆயிரம் ஜீவன்களைத் தரிக்கின்றீர்கள். இந்த பிராமாண்டம் முழுவதும் வியாபித்து, அதையும் கடந்து வியாபித்து இருக்கின்றீர்கள். ஆனாலும் குறுகிய துவாரத்தை உடைய மனதிலும் பிரகாசிக்கின்றீர்கள். ஹே புருஷோத்தமா! கடந்து சென்றதும், இனி வரப் போவதும் எல்லாம் தாங்களே! தேஹம், இந்திரியங்கள் முதலியவற்றில் தாங்கள் பிரவேசித்தவராக இருந்த போதிலும் அவைகளில் இருந்து வெளியேறியவராகவும் இருப்பதால் தான் மோக்ஷ சுகத்தின் ரசத்தையும் தாங்கள் அனுபவிக்கிறீர்கள். ( 99 – 8 )

யஸ்து த்ரைலோக்ய ரூபம் த3த4த3பி ச
ததோ நிர்க3தோSனந்த சு’த்3த4
ஞானாத்மா வர்தஸே த்வம் தவ க2லு
மஹிமா ஸோSபி தாவான் கிமன்யத் |
ஸ்தோகஸ்தே பா4க3 ஏவாகி2ல பு4வனா தயா
த்3ருஷ்யதே த்ரயம்ச’கல்பம்
பூ4யிஷ்ட2ம் ஸாந்த்3ர மோதா3த்மக முபரி
ததோ பா4தி தஸ்மை நமஸ்தே || ( 99 – 9 )


ஹே அனந்த! தாங்கள் மூவுலகமாகிய உருவத்தைத் தரித்தபோதிலும், அம் மூவுலகங்களில் இருந்து வெளிபட்ட சுத்த ஞான ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள். எது எல்லாம் இங்கு இருக்கின்றதோ அது எல்லாம் தங்களுடைய மகிமை தான். தங்களுடைய நான்கில் ஒரு பாகமே இந்தப் பிரபஞ்சமாகக் காணப்படுகிறது. முக்கால் பாகம் பிரம்மாண்டத்துக்கும் மேலே பரமானந்த ரூபமாக விளங்குகிறது. அத்தகைய அனந்த ரூபியான உமக்கு என் நமஸ்காரம். ( 99 – 9 )

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து3ரதி4க3மதமம்
தத்து சு’த்3தை4க ஸத்வம்
வ்யக்தஞ்சாப்யே ததே3வ ஸ்புட மம்ருத
ரஸாம்போ4தி4 கல்லோல துல்யம்
ஸர்வாத் க்ருஷ்டாம பீ4ஷ்டாம் ததி3ஹ
கு3ணரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ச்’ரயேஹம் பவனபுரபதே
பாஹிமாம் க்ருஷ்ண ரோகா3த் || (99 -10)


எந்த ஒரு இந்திரியத்திற்கும் புலப்படாத தங்களின் நிர்குண ஸ்வரூபமானது பிரயத்தனப்பட்டும் அறிய முடியாததாகவே இருக்கிறது. சுத்த சத்துவ ரூபமான சகுண ஸ்வரூபமோ எனில் எளிதில் அறியக் கூடியதாக இருக்கிறது. மேலும், பிரகாசிக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய சகுண ஸ்வரூபமே பிரம்மானந்தம் ஆகிய சமுத்திரத்தின் அலைகளுக்கு ஒப்பனதாக இருக்கிறது. ஆகையால் இவ்வுலகில் , எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மேன்மையானதும், பிரியமானதும், பக்த வாத்சல்யம் போன்ற குணங்களின் இனிமையால் மனத்தைக் கவருவதும் ஆகிய தங்கள் மூர்த்தியை நான் ஆசிரயிக்கிறேன். ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா! என்னை சமஸ்த ரோகங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் ( 99 – 10 )
 
Vinaayaka PuraaNam 1

27h. வன்னியின் பெருமை

“வன்னி மரத்தின் அருமை பெருமைகளைப்
பொன் எழுத்தில் நாம் பொறிக்க வேண்டும்!

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
அந்தண குலத்தில் பிறவியைத் தரும்.

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
அந்தணர்களை ஞானிகள் ஆக்கும்.

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
க்ஷத்திரியருக்கு வெற்றியைத் தரும்

செங்கதிர்க் காலையில் வன்னி தரிசனம்
வைசியருக்குச் செல்வத்தைத் தரும்

செங்கதிர் கலையில் வன்னி தரிசனம்
பரகதியைத் தரும் பிற மனிதருக்கு.

பார்வதிக்குப் பரமசிவன் கூறியது!”
கீர்த்திக்குக் கூறினார் கிருச்சதமர்.

“வன்னிப் பத்திரத்தால் அர்ச்சித பலன்
வாழ்வைத் தந்தது உன் பாலகனுக்கு!”

“இனி எக்காலத்திலும் எவராலும் என்
இனிய மகனுக்கு நேரக் கூடாது ஆபத்து!

விநாயக மந்திரத்தை உபதேசியுங்கள்!” என
வினயத்துடன் வேண்டினாள் கீர்த்தி – வக்கிர

துண்டனின் மந்திரத்தை உபதேசித்தார்.
“துண்டி விநாயகனை ஆராதிப்பாய் மகனே!”

“காசியில் உள்ள துண்டி விநாயகரைப்
பூசிக்கச் சொன்னதன் காரணமென்ன?”

அன்னை கீர்த்தி கேட்டதும் முனிவர்
சொன்னார் இந்த விருத்தாந்தத்தை.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.
 
Vinaayaka PuraaNam 1

#27h. The greatness of Vanni patram


The greatness of the Vanni patram needs to be inscribed in letters of gold. The dharshan of Vanni leaf early in the morning makes a person take birth as a brahmin. It makes a brahmin into a gnaani.

It gives victory to the Kshatriya and wealth to the Vaisya and a good life to the other people. Siva had told this to Uma. Sage Kruchchadmar told these to Keerthi.

“The pooja done with Vanni leaf saved the life of your son.” Kruchchadamar told keerthi. She requested the sage to teach her son the Vinayaka mantra so that no one could harm him in the future.

The sage taught him the mantra and told him,”Go and worship the Thundi Vinayaka at Kasi” Keerthi asked the sage, “Sire! Why do you ask us to go to Kaasi to worship the Thundi Vinayka there?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6d. பரிசாக ஊர்வசி

பதினேழாயிரத்து ஐம்பதின்மர் வந்தனர்
பழங்களை ஏந்தியபடி விண்ணுலகிலிருந்து.

பதினேழாயிரத்து ஐம்பதின்மர் தோன்றினர்
பணி செய்து ஊர்வசியைப் பேணுவதற்கு.

தாமரை முகத்தினளைக் கண்ட அப்சரஸ்
தவத்தின் வலிமையை உணர்ந்தனர் நன்கு.

“கருணையும், மகிமையும் கொண்டுள்ளீர்!
கரும்பு வில் பாணத்துக்கு மயங்கவில்லை!

நரஹரியின் அம்சம் ஆவீர் இருவரும் – இங்கு
நாமாக வரவில்லைத் தவத்தைக் குலைக்க.

பங்கம் செய்யச் சொன்னவன் இந்திரன் தான்.
எங்கள் மேல் நீர் கொள்ளவில்லை கோபம்!

அளிக்கவில்லை கொடிய சாபங்கள் – மேலும்
அளித்தீர்கள் நல்ல சுவையான விருந்து.

சாபம் அளிப்பார்கள் தவ முனிவர்கள்
கோபம் அளவு மீறும் போதெல்லாம்.

சாபம் விரயம் செய்துவிடும் தவத்தை
கோபம் கொள்ளார் உத்தம முனிவர் !”

மனம் மகிழ்ந்தனர் நர, நாராயணர்கள்
மனம் உவந்து அளித்தனர் ஊர்வசியை,

“இந்திரனுக்கு அளியுங்கள் எம் பரிசாக.
இந்திரலோகம் திரும்பலாம் நீங்கள்”

செல்ல விரும்பவில்லை அந்தப்பெண்கள்,
சொல்லத் தொடங்கினார் உள்ளக் கருத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6d. Oorvasi was presented to Indra

Seventeen thousand and fifty persons came from heaven carrying divine fruits. Seventeen thousand and fifty persons appeared on earth to serve Oorvasi. The apasaras saw the lotus-faced Oorvasi and realized the power of penance.

They spoke to Nara and Naaraayanan now. ” You are well accomplished and kindhearted. You did not succumb to the flower arrows shot by the God of Love Manmathan with his sugarcane bow. You both are the amasam of Narahari.

We did not come here on our own to disturb your penance. Indra ordered us to do so. Still you did not get angry with us. You did not cast on us terrible curses. In stead you gave a grand feast.

Many rushis end up cursing people when made angry by them. But the curse will steal them of their power of penance. Wise rushis do not curse and waste their hard earned power of penance.”

Nara and Naaraayanan became happy with their humble words. They told the heavenly visitors,”You may return to your abode now. Please take Oorvasi with you as our gift to your king Indra.”

Strangely those visitors from Heaven did not want to go back there. They spoke out their innermost thoughts frankly to Nara and Naaraayanan now.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

8d. அவுணர்கள் துயரம்.

அண்ணன் பாய்ந்து தீயில் விழுந்ததைக்
கண்டு உள்ளம் பதைத்தான் அரிமாமுகன்.


ரத்தக் கண்ணீர் வடித்தான் அவன் – மேலும்
மொத்தமாக யாகத்தை மறந்துவிட்டான்.

துன்பக் கடலில் வீழ்ந்து அரற்றினான்;
“அன்பில்லாமல் எம்மைப் பிரிந்தீரோ?

மாயையின் மகனே! அசுரர்கள் அரசே!
தீயில் வீழ்ந்து வெந்து மாண்டீரோ?

தாயும், தந்தையும் நீரே – எம்மைத்
தாங்கும் அண்ணனும் நீரே அன்றோ?

அஞ்சி ஒளிந்து நிற்கும் தேவரும்,
அமரர் கோனும் மனம் மகிழ்ந்திட,

அஞ்சாமல் யாகத் தீயில் குதித்து – எம்
நெஞ்சைப் பிளந்து சென்று விட்டீரே!”

யாக சாலை சோக சாலை ஆனது.
யாவரும் வேள்வி மறந்து அரற்றினர்.

அவுணர்கள் அழுது புலம்பும் ஒலி
அமிர்தமாக இனித்தது இந்திரனுக்கு.

துன்பம் தீர்ந்து இன்பம் எய்தினான்;
தன் தவத்தைத் தானே மெச்சினான்.

வெள்ளை யானை மீதேறி விண்ணில்
கொள்ளை மகிழ்ச்சியும் அடைந்தான்.

அரிமா முகனும் முடிவு செய்தான்
வீரவேள்வி செய்து உயிர் துறந்திட.

ஆயிரம் தலைகளை அரிந்து இட்டான்
அண்ணன் பாய்ந்த யாகக் குழியினில்;

மளமளவென்று அந்தத் தலைகள்
வளரலாயின மீண்டும் மீண்டும்!

தாரகனும் அரிந்து எரியில் இட்டான்
தீரத் தீர வளரும் தன் தலைகளை.

அவுணர்களும் செய்தனர் அங்ஙனமே!
அக்னியில் பாய்ந்தும் பலர் மாய்ந்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (# 8 D). The sorrow of the Ausras.

Simha mukhan was overcome with sorrow when Soorapadman got burned to ashes. He shed bitter tears of sorrow and forgot all about maintaining the yagna fire.

He lamented with a broken heart,”How could you leave us thus? Have you no love for us? The son of Maayai! The king of Asuras! You were everything to us. You have made the frightened Devas and the panicky Indra happy by ending your life thus.”

Everybody started crying and lamenting and the yaaga saalaa became a sokha saalaa!

The cries of sorrow from the asuras gladdened the heart of Indra. He sat on his white elephant and enjoyed the sights and sounds coming from below.

Simha mukhan decided to end his life in the same manner. He cut off his heads one by one and threw them in the yaaga fire! The heads grew again and again.

Thaarakan also offered his severed head in the fire and his head kept growing back.

More asuras did the same and some even jumped into the fire and ended their lives.
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 100 ( 1 to 3)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அக்3ரே பச்’யாமி தேஜோ நிபி3ட3தர
கலாயாவலி லோப4நீயம்
பீயூஷாப்லவிதோஹம் தத3னு தது3த3ரே
தி3வ்ய கைசோ’ர வேஷம் |
தாருண்யாரம்ப4 ரம்யம் பரமஸுக
ரஸாஸ்வாத் ரோமாஞ்சிதாங்கை3:
ஆவீதம் நாரதா3த்4யை விலஸத்3
உபநிஷத் ஸுந்த3ரி மண்ட3லைச்’ச|| ( 100 – 1)


நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன். அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன். அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால் மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன். பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, நாரதர் முதலானவர்களும், சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)

நீலாப4ம் குஞ்சிதாக்3ரம் க4னமமலதரம்
ஸம்யதம் சாரு ப4ங்க்3யா
ரத்னோத்தம் ஸாபி4ராமம் வலயித
முத3யச் சந்த்3ரகை: பிஞ்ச2 ஜாலை:|
மந்தார ஸ்ரங்நிவீதம் தவ
ப்ருது2கபரீபா4ரமாலோகயேஹம்
ஸ்நிக்3த4 ஸ்வேதோர்த்4வ புண்ட்3ராமபி
ச ஸுலலிதாம் பா2ல பா3லேந்து3வீதீ2ம் || ( 100 – 2)


நீலநிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும், ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின் வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்; பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்; அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.( 100 – 2)

ஹ்ருத்3யம் பூர்ணானு கம்பார்ணவ
ம்ருது3லஹரி சஞ்சல ப்4ரூவிலாசை:
ஆநீல ஸ்நிக்3த4 பக்ஷ்மாவலி
பரிலஸிதம் நேத்ர யுக்3மம் விபோ4 தே|
ஸாந்த்3ரச்சாயம் விசா’லாருண
கமலத3லாகர மாமுக்3த4 தாரம்
காருண்யா லோகலீலா சி’சி’ரித
பு4வனம் க்ஷிப்யதாம் மய்யநாதே2 || ( 100 – 3)


ஹே பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும், மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்; அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்; மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால் உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆஆகிய தங்களுடைய இரண்டு கண்களும் அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும் ( 100 – 3)
 
த3ச’கம் 100 ( 4 to 6)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

உத்துங்கோ3ல்லாஸி நாஸம் ஹரிமணி
முகுர ப்ரோல்லஸத்3 க3ண்ட3பாலீ
வ்யாலோலத்கர்ண பாசா’ஞ்சித
மகரமணி குண்டல த்3வந்த்3வ தீப்ரம்|
உன்மீலத்3 த3ந்த பங்க்தி ஸ்புரத3ருணதரச்
சாய பி3ம்பா3த4ராந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி3 மந்த3ஸ்மித மது4ரதரம்
வக்த்ரமுத்3 பா4ஸதாம் மே || ( 100 – 4)


உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடிபோல விளங்குகின்ற கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்; அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில் பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்; ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.(100-4)

பா3ஹு த்3வந்த்3வேன ரத்னோஜ்ஜ்வல
வலயப்4ருதா சோண பாணி ப்ரவாலேன்
உபாத்தம் வேணு நாலீம் ப்ரஸ்ருத
நக2மயூகா2ங்கு3லீ ஸங்க3 ஸார
க்ருத்வா வக்த்ராரவிந்தே3 ஸுமது4ர விகஸத்3
த்3ராகமுத்3பா4வ்யமானை:
ச’ப்த3 ப்ரஹ்மாம்ருதைஸ்த்வம் சி’சி’ரித பு4வனை:
ஸிஞ்ச மே கர்ண வீதீம்||(100- 5)


ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய; இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால் சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு; இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற நாதபிரம்மம் ஆகிய அமிர்தத்தால் என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்கவேண்டும்.(100-5 )

உத்ஸர்பத் கௌஸ்துப4 ஸ்ரீததிபி4ரருணிதம்
கோமலம் கண்ட2 தே3ச’ம்
வக்ஷ: ஸ்ரீ வத்ஸரம்யம் தரலதர
ஸமுத்3 தீ3ப்ர ஹார ப்ரதானம்|
நானவர்ண ப்ரஸூனாவலி கிஸலயிநீம்
வன்யமலாம் விலோல
லோலம்பா3ம் லம்ப3 மானா முரஸி
தவ ததா2 பா4வயே ரத்னமாலாம் || ( 100- 6)


உயரக் கிளம்புகின்ற கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்; ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்; பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும், அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய வனமாலையையும், அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன்.(100-6 )
 
த3ச’கம் 100 ( 7 to 9)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அங்கே3 பஞ்சாங்க3ராகை 3: அதிச’ய
விகஸத் சௌரபா4 க்ருஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபி
க்ருசா’ம் பி3ப்4ரதம்மத்3ய வல்லீம் |
ச’க்ராச்’மன்யஸ்த தப்தோஜ்ஜ்வல
கனகநிப4ம் பீத சேலம் த3தா4னம்
த்4யாயாமோ தீப்தரச்’மி ஸ்புட மணிரச’னா
கிங்கிணீ மண்டி3தம் த்வாம் || ( 100 – 7 )

சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால் ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக பிரம்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில் லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்; இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின் கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன். ( 100 – 7 )

ஊரூ சாரூ தவோரூ க4னமஸ்ருணா ருசௌ
சித்தசோரௌ ராமாயா:
விச்’வ க்ஷோப4ம் விசங்க்ய த்4ருவமணி ச’முபௌ4
பீத சேலா வ்ருதாங்கௌ3 |
ஆனம்ராணாம் புரஸ்தான்னயஸன்
த்3ருத ஸமஸ்தார்த்த2 பாலி ஸமுத்3க3
ச்சா2யம் ஜானுத்3வயஞ்ச க்ரம ப்ருது2ல
மனோக்ஞே சஜங்கே4 நிஷேவே|| ( 100 – 8 )


மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த, (அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால் மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட, புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்; கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக்கால்களையும் சேவிகின்றேன்.( 100 – 8 )

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை3ரிவ பத3ப4ஜனம்
ச்’ரேய இத்யாலபந்தம்
பாதா3க்3ரம் ப்4ராந்தி மஜ்ஜத் ப்ரணத
ஜன மனோ ம்ந்த3ரோத்3தா4ரகூர்மம் |
உத்துங்கா3தாப்4ர ராஜன்னகர ஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்’ரிதானாம்
ஸந்தாப த்4வாந்த ஹன்த்ரீம் தாதிமனுகலயே
மங்க3லா மங்கு3லீனாம் || ( 100 – 9)


திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )
 
பின்புலக் கதை

இந்தத் தொடரின் பின்புலக் கதை இது!

யோகதர்ஷன் மாஸ்டர் ஸ்ரீமன் நாராயணீயத்தை விளக்கினார்.
ஒவ்வொரு வரியும் ஒரு மினி ரயில் வண்டி போல இருக்கும்.

எங்கே நிறுத்த வேண்டும்? எப்படிப் பிரிக்க வேண்டும்? தெரியாது.
படிப்பதை விடப் பாடுவது எளிதாக இருக்கும் போலத் தோன்றியது.

திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களின் ஒலிநாடாவை வைத்துக் கொண்டு
மிகவும் சிரமப்பட்டு 100 வேறு ராகங்களில் பாடக் கற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு தசகமும் வெவ்வேறு ராகம். இது ஒரு 100 ராக மாலிகை.
அப்போதும் முழு மனத் திருப்தி ஏற்படவில்லை எனக்கு.

வார்த்தைகளின் பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும்
என்று முனைப்பாகப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினேன்.

ஏறக் குறைய நான் பிறந்த போது வெளிவந்த ஒரு புத்தகத்தில்
பதம் பிரித்துச் சொற்களின் பொருளும் அழகாகத் தரப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த புத்தகத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கூட
அதை வைத்திருந்த அவர்கள் சம்மதிக்க வில்லை.

ஏறக் குறைய நம்பிக்கையை இழந்து விட்டேன் அது கிடைக்கும் என்று.
இவருடைய அத்திம்பேரின் தம்பியிடம் அது பற்றி பேசியபோது

அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்,
“உனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியுமா?”

“தெரியும்” என்றேன். அவர் முகம் மலர்ந்து விட்டது.

“நீ தேடும் புத்தகம் என்னிடம் ஒரு காபி உள்ளது.
எத்தனையோ பேர்கள் தரச் சொல்லிக் கேட்டார்கள்.
ஆனால் சம்ஸ்க்ருதம் படிக்கத் தெரிந்தவருக்குத் தான் கொடுப்பது
என்று தீர்மானமாகக் கொடுக்க மறுத்து விட்டேன்.
இனி அந்தப் புத்தகம் உன்னுடையது” என்றார்.

எனக்கு மகிழ்ச்சியில் பேசக் கூட முடியவில்லை.
அவர் புத்தகத்தில் என் பெயர் எழுதியிருந்தது போலும்!

புத்தகத்தை அனுப்பி வைத்தார் சென்னை சென்ற உடனேயே.
இப்போது அது என் இணை பிரியாத் துணை ஆகிவிட்டது!

அந்தப் புத்தகம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால்
இந்தத் தொடர் பிறந்து இருக்கவே முடியாது நிச்சயமாக!

அந்தத் தாத்தாவுக்கு நன்றி நம் எல்லோர் சார்பிலும்!
ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.

“கண்ணன் அருள் எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்”
என்று வேண்டிக் கொண்டு இந்தத் தொடரை முடிக்கின்றேன்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை வசிக்கலாம்.
தினப்படியும் வாசிக்கலாம்! கோகுலாஷ்டமிக்கும் வாசிக்கலாம்!
 
#4662 ONWARD HAVE BEEN POSTED TODAY.
I thank the readers of this thread for the increased traffic.
The traffic during the past one day is ~ 200!
You may be silent but you are also sincere! :)
I Thank you all ! :pray2:
 
VINAAYAKA PURAANAM 1

28a. காசி க்ஷேத்ரம்


நிலம் சிறப்புப் பெறும் வேறு வேறாக
ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி இவற்றால்!

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
மூன்றிலும் சிறந்தது காசி க்ஷேத்ரம்.

அவிமுக்தம் என்பது அதன் ஸ்தலம்;
அதன் தீர்த்தம் மணிகர்ணிகை ஆகும்;

விசுவநாதர் அங்கு விளங்கும் மூர்த்தி;
பூசிப்பவர் பெறுவார் புருஷார்த்தங்கள்!

தொழுவர் ஈசனை இங்கு தேவர்களும்;
தொழுவர் ஈசனை இங்கு மனிதர்களும்.

விஷ்ணு பூஜித்தார் ஈசனை இங்கே,
விசுவநாதர் மனம் குளிர்ந்து மகிழ.

பாதாளம் வரைத் தோண்டிய தடாக நீரை
தாராளமாக எடுத்து அபிஷேகம் செய்தார்.

முக்தி தரும் ஈசன் காட்சி தந்தான் அங்கே
பக்திக்கு மெச்சி காளை வாஹனம் மீது.

தலையை அசைத்துத் துதிகளைக் கேட்கக்
குலுங்கின செவியில் குண்டலங்கள்.

ஒரு மணி உதிர்ந்து விழவே தடாகம்
திருப் பெயர் பெற்றது மணிகர்ணிகை!

பகீரதன் தவம் செய்து கங்கையை
பாகீரதியாகச் சேர்த்தான் அந்த நீரில்.

முனிவரின் கனிவான ஆசிகள் பெற்று,
அன்னையும் மகனும் சென்றனர் காசி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
VINAAYAKA PURAANAM 1


#28A. Kaasi kshethram

Any Land becomes auspicious due to the presence of three factors. Sthalam, Theertham and Moorthi add value to any holy kshethram. Kaasi is famous for all these three factors.

Avimuktam is the name of the sthalam, MaNikarNikai is the name of the theertham and Viswanaathar is the moorthi there. Those who worship the lord here will get the chatur vidha purushaartham.

The Deva come and worship Lord Siva here. The humans also come here to worship Lord Siva. Once Vishnu did aaraadhanaa to Siva here. Vishnu dug a pond as deep as the paataala and used the water liberally to do abhishekham to Viswanaathar.

Vishnu sang songs of praise and Lord Siva listened to them with pleasure moving his head to suit the music.

A bell from his kundalam fell into the water below and the thadaagam go the name MaNikarNikai.

Bhageerathan did tapas and brought down Ganaga to merge with this water as Bhaageerathi. The sage Kruchchadamar spoke of the greatness of Kasi.

Keerthi and Kippira Prasaad were duly impressed and left for Kasi right away.
 
Back
Top