Raji Ram
Active member
சின்னஞ் சிறுசுகள்!
தாய்ப்பால் வேண்டும் சின்னஞ்சிறிசுகள்,
தாயின் அரவணைப்பை வேண்டினாலும்,
தாய் பணி நிமித்தம் சென்றுவிடுவதால்,
சேய் அவளைப் பிரிந்தும் இருக்க நேரும்!
குளிர்பதனப் பெட்டியில், உறைய வைத்து,
எளிதாக சேமித்துவிடுவார் தாய்ப்பாலை!
குழந்தைப் பராமரிப்பிலே உதவ விழைந்து,
குழந்தையிடம் செல்லும் பெரியவர்களோ,
பாலை மீண்டும் திரவமாக்கிடும் வழியை,
பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்ளுவதை,
அறியாமையின் வெளிப்பாடாக நினைத்து,
அறிந்துகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்!
பசியால் வீரிட்டு அழும் குழந்தைக்கு, அதன்
பசியைத் தீர்த்திடப் பால் தர வேண்டாமோ?
தாய் திரும்பும்வரை, அழுது தீர்க்கும் அந்தச்
சேய்! இதனால் நுரையீரல் பலம் பெறுமோ?
:baby: . . . :Cry: