• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மலம்பட்டி சுடுகாட்டில் 2வது மனித மண்டை ஓ&#2975

Status
Not open for further replies.
மலம்பட்டி சுடுகாட்டில் 2வது மனித மண்டை ஓ&#2975

மலம்பட்டி சுடுகாட்டில் 2வது மனித மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு!

(13/09/2015)

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் தோண்டும் பணியின்போது 2வதாக ஒரு மனித மண்டை ஓடும் சில எலும்பு துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

7.jpg


கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.பி. நிறுவனம் மன நலம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை நரபலி கொடுத்து ஓலைப்பாயில் சுருட்டி புல்டோசரில் குழி தோண்டி சின்ன மலம்பட்டி சுடுகாட்டில் ஒரு பனை மரத்தின் கீழ் புதைத்ததை நேரில் பார்த்ததாக மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவை சேர்ந்த் சேவற்கொடியான் என்கிற பிரபு பகீர் புகாரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சகாயத்தை நேரில் சந்தித்து கொடுத்தார்.

சேவற்கொடியான் கூறிய புகாரை தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் இன்று காலை 9 மணி முதல் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

தோண்டும் பணியின்போது முதலில் சிறிய எலும்பு துண்டுகள் கிடைத்த நிலையில், பகல் 12.50 மணியளவில் 5 அடி தோண்டியபோது, அங்கிருந்து ஒரு மனித மண்டை ஓடு, 2 கால் எலும்புகள், 2 கை எலும்புகள், 2 முழங்கால்கள் மற்றும் 2 சிறிய எலும்புகள் என மொத்தம் 9 எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேலும் தோண்டும் பணி அங்கு தீவிரப்படுத்தப்பட்டது.

உணவு இடைவெளைக்கு பிறகு சுறு சுறுப்பாக நடைபெற்று வந்த தோண்டும் பணியின்போது, பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டாவதாக ஒரு மண்டை ஓடு, தொடை எலும்புகள், கால் எலும்புகள், கை எலும்புகள் என மேலும் 7 எலும்புகளும் சிறிய எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டது. இந்த எலும்பு துண்டுகள் வெள்ளை பட்டு வேட்டியில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. மேலும், அபிஷேக பொருட்களுடன் மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றும் அத்துடன் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

இவைகளை மருத்துவக்குழுவினர் சேகரித்து மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இவை அனைத்தும் தடைய அறிவியல் துறைக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பின் சென்னைக்கும், மும்பைக்கும் சோதனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் மேலும் பல எலும்பு துண்டுகள் கிடைக்கும் என்று அஞ்சப்படுகிறது.

- சண்.சரவணக்குமார், சே.சின்ன துரை


http://www.vikatan.com/news/article.php?aid=52363

 
நான் சொன்ன இருவரின் சடலங்கள் சிக்கின: ந&#299

நான் சொன்ன இருவரின் சடலங்கள் சிக்கின: நரபலி புகார் கூறிய சேவற்கொடியோன் பேட்டி


September 14, 2015

தோண்டியெடுக்கப்பட்ட 4 சடலங்களில், நான் சொன்ன இரு நபர்களின் சடலங்கள் சிக்கிவிட்டதாக நரபலி புகார் கூறிய சேவற்கொடியோன் தெரிவித்தார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்ட ஆணையர் சகாயத் திடம், நரபலி புகாரை கூறியிருந் தார். இவரது புகாரின் அடிப்படை யில்தான் நேற்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.


இந்த நிலையில் அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி.


எந்த அடிப்படையில் நரபலி புகாரை கொடுத்துள்ளீர்கள்?


பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தபோது, பெரிய பொறுப்புகளில் இருந்த அனுமந்தன், அய்யப்பன், பழனி, ஜோதிபாசு போன்றவர்கள் சம்பந்தமில்லாமல் சாலையோரத்தில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை என்னுடைய வாகனத்தில் ஏற்றுவார்கள். போகிற வழியில் 100 ரூபாய் கொடுத்து சாப்பாடு வாங்கி வரச் சொல்வார்கள். நானும் வாங்கிக் கொடுப்பேன். கடைசியில் அவர்களை கீழவளவு கிராமத்தில் வீரகாளியம்மன் கோயில் பின்புறமுள்ள பிஆர்பி முதலாளி பழனிச்சாமியின் அலுவலகத்தில் இறங்கிவிடுவேன். அலுவலகத்தின் பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகளில் பலரை நான் திரும்ப பார்த்ததில்லை.

ஒருமுறை மனநோயாளிகளை இறக்கிவிட்டதும், பழனிச்சாமியின் ஓட்டுநர் முத்து என்னிடம் 5 ரூபாய் கொடுத்து பூ வாங்கி வரச் சொன்னார். அவரிடம் மனநோயாளிகளை எதற்கு பிடித்து வருகிறார்கள் என்று கேட்டேன். இவர்களை எல்லாம் நம்ம முதலாளி குணப்படுத்தி அனுப்புகிறார் என்று கூறினார்.



நரபலி நடந்ததை நீங்கள் பார்த்தீர்களா?



கடந்த 2005-ம் ஆண்டு இ.மலம்பட்டி ஆற்று குவாரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றவதற்காக ஆயில் மோட்டாரை நானும், அய்யப்பனும் ஜீப்பில் கொண்டு சென்றோம். ஆற்றின் நடுவே ஒடுக்கமான பாதையில் சென்றபோது, எதிரே திறந்த ஜீப் ஒன்று வந்தது. நான் சில நாட்களுக்கு முன் ஏற்றி அனுப்பிய 2 மனநோயாளி கள் அந்த ஜீப்பில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடல மாகக் கிடந்தார்கள். அதை நான் கவனிப்பதை கண்ட அய்யப்பன் என்னை கன்னத்தில் அறைந்தார். பனை மரம் அருகே ஜே.சி.பி. யால் குழி தோண்டி, அந்த இரு சடலங்களையும் புதைத்ததை பார்த்தேன். அந்த இடத்தைத்தான் இப்போது அடையாளம் காட்டினேன்.


இப்போது தோண்டியெடுக்கப் பட்ட சடலங்கள் அவர்களுடையது தானா?


முதலில் எடுக்கப்பட்ட சடலம் நான் அழைத்து வந்தவரைப் போல இல்லை. அடுத்து கிடைத்த இரு சடலங்களும் அதில் கிடைத்த துணிகளை வைத்து பார்க்கும்போது நான் அழைத்து வந்தவர்களாக இருக்கும் என்று நம்புகிறேன். காரணம், அவை இரண்டும் அவசர அவசரமாக ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நான் ஓட்டிய ஜீப்பில் ஒரு பெண் உட்பட 12 மனநோயாளிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் இருவர் புதைக்கப்பட்ட இடம் மட்டுமே எனக்குத் தெரியும் என்பதால், சகாயத்திடம் புகார் செய்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


http://tamil.thehindu.com/tamilnadu/
 
Status
Not open for further replies.
Back
Top