• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 10 : ஸ்ருஷ்டி பே4த3 வர்ணனம்

ருத்3ராபி4 ஸ்ருஷ்ட ப4யதா3க்ருதி ருத்3ர ஸங்க
ஸம்பூர்யமாண பு4வனத்ரய பீ4த சேதா : |
மா மா ப்ரஜா:ஸ்ருஜ தபஸ் சர மங்க3லாயேதி
ஆசஷ்ட தம் கமலபூ4ர் ப4வதீ3ரிதாத்மா || (10 – 6)

ருத்திரனால் சிருஷ்டிக்கப்பட்ட பயங்கரமான ருத்திரகணங்களால் மூவுலகங்களும் நிறைந்து விட்டன அதைக் கண்டு பயந்த பிரமன், தங்களால் ஏவப்பட்டு,”இனிப் பிரஜைகளை சிருஷ்டிக்க வேண்டாம்.
உலக நன்மைக்காகத் தவம் புரிவாய்!” என்று ருத்திரனிடம் கூறினான்.

--------------------------------------------------------------------------------------------------------------------

தஸ்யாத2 ஸர்க3 ரஸிகஸ்ய மரீசி: அத்ரி:
தத்ராங்கி3ரா: க்ரது முனி: புலஹ: புலஸ்த்ய : |
அங்கா3த3 ஜாயதப்4ருகு3ச்’ச வஸிஷ்ட2 த3க்ஷௌ
ஸ்ரீ நாரத3ச்’ய ப4க3வான் ப4வத3ங்க்3ரி தா3ஸ: || (10 – 7)

ருத்திரன் தவம் செய்யச் சென்ற பிறகு சிருஷ்டியில் ஈடுபட்டிருந்த பிரமனின் சரீரத்திலிருந்து மரீசி, அத்ரி, அங்கிரஸ், க்ரது, புலஹர், புலஸ்த்தியர் , ப்ருகு, வசிஷ்டர் , தக்ஷர், தங்கள் பாதங்கின் மேல் பக்தி கொண்ட நாரதர் ஆகியோர் ஜனித்தார்கள். (10 – 7)

----------------------------------------------------------------------------------------------------------

த4ர்மாதி3கானபி4 ஸ்ருஜன்னத2 கர்த3மம் ச
வாணீம் விதா4ய விதி4ரங்க3ஜ ஸங்குலோபூ4த் |
த்வத்3 போ3தி4தை: ஸனக த3க்ஷ முகை2ஸ் தனூஜை:
உத்3போ3தி4தச்’ச விரராம தமோ விமுஞ்சன் || (10 – 8)

பிரமன் அதன் பிறகு தர்மதேவன், கர்த்தமன் முதலியோரைச் சிருஷ்டித்தான். சரஸ்வதி தேவியை சிருஷ்டித்ததும் அவள் மீது காம விகாரம் கொண்டான். சனகன், தக்ஷன் போன்றவர்களால் அந்த தவற்றை உணர்த்தப்பட்டு தன் அஞ்ஞானம் விலகப் பெற்றான்.

---------------------------------------------------------------------------------------------------------


வேதா3ன் புராண நிவஹானபி ஸர்வ வித்4யா:
குர்வன் நிஜானன க3ணாச் சதுரானனோs சௌ |
புத்ரேஷு தேஷு வினிதா4ய ஸ ஸர்க3 வ்ருத்3தி4ம்
ப்ராப்னுவம்ஸ்தவ பதா3ம்பு3ஜமாச்’ரிதோs பூ4த் || (10 – 9 )

பிரமன் தன் முகத்திலிருந்து வேதங்கள், புராணங்கள், பிற வித்தைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து அவற்றை அந்தப் புத்திரர்களுக்குக் கொடுத்தான். அப்போதும் சிருஷ்டி அபிவிருத்தியை அடையாததால் அவன் மீண்டும் தங்கள் பாதங்களைச் சரணடைந்தான்.

--------------------------------------------------------------------------------------------------------


ஜானன்னுபாயமத2 தே3ஹமஜோ விப4ஜ்ய
ஸ்த்ரீபும்ஸபா4வமப4ஜன் மனுதத்3 வதூ4ப்4யாம் |
தாப்4யம் ச மானுஷ குலானி விவர்த4யம்ஸ் த்வம்
கோ3விந்த3 மாருதபுராதீ4ப ருந்தி3 ரோகா3ன் || (10 -10)

அதன் பிறகு பிரமன் பிரஜைகளை உற்பத்தி செய்யும் உபாயத்தை அறிந்து கொண்டு தன் தேஹத்தையே இரண்டாகப் பிரித்தான். மனு, சதரூபை என்ற ஒரு புருஷனின், ஒரு ஸ்திரீயின் ரூபத்தை அடைந்தான். இவர்களைக் கொண்டு மனித இனத்தைப் பெருக்கினான். குருவாயூரில் இருக்கும் கோவிந்தா! தாங்கள் என் வியாதிகளை நீக்க வேண்டும். (10 – 10)

----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 11 : ஸனகாதீ3னாம் வைகுண்ட2 ப்ரவேச’ வர்ணனம்

க்ரமேண ஸர்கே3 பரிவர்த்த4மானே
கதா3sபி தி3வ்யா: ஸனாகாத3யஸ்தே |
ப4வத்3 விலோகாய விகுண்ட2 லோகம்
ப்ரபேதி3ரே மாருத மந்தி3ரேசா’ || (11 – 1)


பிரஜா சிருஷ்டி கிரமமாக நடந்து வந்தது . அப்போது ஒருநாள் திவ்ய சக்தி வாய்ந்த சனகன் முதலிய நால்வர் தங்களைக் காண வைகுண்டம் வந்தார்கள். (11 -1)

-------------------------------------------------------------------------------------------------------------------------

மனோக்ஞனை: ச்ரேயஸ கானனாத்3யை:
அநேக வாபி மணி மந்தி3ரைச்’ச |
அநோபமம் தம் ப4வதோ நிகேதம்
முனீச்’வரா: ப்ராபுரிதீத கக்ஷ்யா: || (11 – 2)

அந்த முனீஸ்வரர்கள் ஆறு கோட்டைகளைக் கடந்து, மனோஹரமான நைஸ்ரேயம் என்னும் உத்தியாவனம், குளங்கள், மணிமயமான வீடுகள் விளங்குகின்ற தங்களின் இருப்பிடத்தை அடைந்தார்கள். (11 – 2)

---------------------------------------------------------------------------------------------------------

ப4வத்3 வித்3ரூக்ஷூன் ப4வனம் விவிக்ஷூன்
த்3வா :ஸ்தௌ2 ஜயஸ்தான் விஜயோsப்ய ருந்தா4ம் |
தேஷாம் ச சித்தே பத3மாப கோப:
ஸர்வம் ப4வத் ப்ரேரணையைவ பூ4மன் || (11 – 3)

தங்கள் இடத்தில் தங்களை தரிசிக்க வந்தவர்களை வாயிற் காப்போர்களான ஜயனும், விஜயனும் தடுத்தனர். சனகன் முதலியோர் மனதில் கோபம் குடி கொண்டது. இவை தங்கள் பிரேரணையால் நிகழ்ந்தன. (11 – 3)

-----------------------------------------------------------------------------------------------------------

வைகுண்ட2 லோகானுசித ப்ரசேஷ்டவ்
கஷ்டவ் யுவாம் தை3த்ய க3திம் ப4ஜேதம்|
இதி ப்ரச’ப்தௌ ப4வதா3ச்’ரி தௌ தௌ
ஹரி ஸ்ம்ருதிர் நோsஸ்த்விதி நேமதுஸ்தான் || (11 – 4)

“வைகுண்ட லோகத்துக்குத் தகாத நடத்தை உடைய துஷ்டர்களான நீங்கள் அசுர யோனியை அடையக் கடவீர்!” என்று முனிவர்கள் ஜெய, விஜயனைச் சபித்தனர். தங்கள் தாசர்களாகிய அவ்விருவரும் தங்களுக்கு எப்போதும் ஹரி ஸ்மரணை இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். (11 – 4 )

-------------------------------------------------------------------------------------------------------------

தாதே3ததா3க்ஞாய ப4வானவாப்த:
ஸஹைவ லக்ஷ்ம்யா ப3ஹிரம்பு3ஜாக்ஷா |
க2கே3ச்’வராம் ஸார்பித சாரு பா3ஹு :
ஆனந்த3யம்ஸ்தான் அபி4ராம மூர்த்தயா || (11 – 5)

தாமரைக் கண்ணா! இதை அறிந்தவுடன் கருடன் மேல் லக்ஷ்மியுடன் அமர்ந்து அவர்களை மகிழ்விக்கத் தாங்கள் வெளியே வந்தீர்கள். (11 – 5)

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 11 : ஸனகாதீ3னாம் வைகுண்ட2 ப்ரவேச’ வர்ணனம்

ப்ரஸாத்3ய கீ3ர்பி4 : ஸ்துவதோ முநீந்த்3ரான்
அனன்யா நாதா2வத2 பார்ஷதௌ3 தௌ |
ஸம்ரம்ப4யோகே3ன ப4வைஸ்த்ரிபி4ர்
மாமுபேதமித்யாதக்ருபம் ந்யகா3தீ3:|| (11 – 6)

தங்களை துதித்த முனிவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு, வேறு நாதன் இல்லாத அந்த ஜய, விஜயரிடம், “நீங்கள் இருவரும் த்வேஷம் கொண்டு மூன்று ஜன்மங்களில் என்னை வந்து அடைவீர்கள்!” என்று கருணையுடன் கூறினீர்கள். (11 – 6)

---------------------------------------------------------------------------------------------------------------------

த்வதீ3ய ப்4ருத்யாவத2 கச்’யபாத்தௌ
ஸுராரிவீராவுதி3தௌ தி3தௌ த்3வௌ |
ஸந்த்4யா ஸமுத் பாத3ன கஷ்ட சேஷ்டவ்
யமௌ ச லோகஸ்ய யமாவிவான்யௌ || (11 – 7 )


தங்களின் தாசர்களாகிய அவர்கள் கச்யபர் மனைவி திதியிடம் இரண்டு அசுர வீரர்களாக ஜனித்தனர் சந்தியா காலத்தில் உற்பத்தியானதால் அவர்கள் துஷ்டர்களாகவும், உலகில் இரண்டு யமன்களைப் போலவும் இருந்தார்கள். (11 – 7)

----------------------------------------------------------------------------------------------------------

ஹிரண்ய பூர்வ: கசி’பு: கிலைக :
பரோ ஹிரண்யாக்ஷ இத்தி ப்ரதீத:|
உபௌ4 ப4வன்னாத2 மசே’ஷ லோகம்
ருஷா ந்யருந்தா4ம் நிஜ வாஸனாந்தௌ4|| (11 – 8 )


அவர்களில் ஒருவன் ஹிரண்யன் என்றும் மற்றவன் ஹிரண்யாக்ஷன் என்றும் பிரசித்தி பெற்றார்கள். அசுர வாசனையால் அறிவிழந்து, தங்களை நாதனாகக் கொண்ட எல்லா உலகங்களிலும் அவர்கள் உபத்திரவம் செய்தார்கள். (11 – 8)

-----------------------------------------------------------------------------------------------------

தயோர் ஹிரண்யாக்ஷ மஹா ஸுரேந்த்3ரோ
ரணாய தா4வன்னனவாப்த வைரீ |
ப4வத்3 ப்ரியம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ஜ்ய
சசார க3ர்வாத்3 வினத3ன் க3தா3வான் || (11 – 9)


ஹிரண்யாக்ஷன் போர் செய்வதற்குத் தகுந்த எதிரியைத் தேடினான். யாரும் கிடைக்காததால் பூமியை நீரில் மூழ்க வைத்து விட்டுக் கையில் கதையுடனும், கர்வத்துடம் சப்தம் செய்து கொண்டும் எங்கும்
சுற்றித் திரிந்தான். (11 – 9)

----------------------------------------------------------------------------------------------------

ததோ ஜலேசா’த் ஸத்3ருச’ம் ப4வந்தம்
நிச’ம்ய ப3ப்4ராம க3வேஷயம் ஸ்த்வாம்|
ப4க்தைக த்3ருச்’ய: ஸ க்ருபா நிதே3 த்வம்
நிருந்தி4 ரோகா3ன் மருதா3லயேசா’ || (11 – 10)

அதற்குப் பிறகு தாங்கள் அவனுக்குத் தகுந்த எதிரி என்று வருணனிடம் அறிந்து கொண்டான் . தங்களைத் தேடிச் சுற்றித் திரிந்தான். பக்தனால் மட்டுமே காணப்படக் கூடிய, கருணைக்கு இருப்பிடமான குருவாயூரப்பா! தாங்கள் என் ரோகங்களைத் தடுக்க வேண்டும். (11 – 10)

----------------------------------------------------------------------------------------------------------
 
Today I am supposed to type and pot the powerful Narasimha avataar.

How can I do justice to it when I feel like washed out zombie??? :(

Here is a poem to that effect!
 
[h=1]விதிவிலக்கு.[/h]

விதி என்று ஒன்று இருந்தால்,
விதி விலக்கு ஒன்றும் உண்டு.
விதியை மாற்றி விலக்கிவிட
விமலனால் மட்டுமே முடியும்!

இரட்டை யமன்களைப் போல
இந்த உலகைத் துன்புறுத்தினர்
இரண்யாக்கன், இரண்யன் என்ற
இரு கொடிய அசுர சகோதரர்கள்.

வராக மூர்த்தியால் கொல்லப்பட்ட
வலிய சகோதரனின் சாவைக் கண்டு,
மரணமே இல்லா வாழ்வு வேண்டிச்
சிறந்த தவம் செய்தான் இரண்யகசிபு.

கரையான் புற்று மூடிய போதும்,
கலையாத சிறந்த தவம் ஒன்று.
விரும்பிக் கேட்டதோ மிகவும்
வினோதமான வரம் ஒன்று.

இரவிலோ அன்றிப் பகலிலோ,
தரையிலோ, ஆகாயத்திலோ,
வீட்டிலோ அன்றி வெளியிலோ,
விலங்கினாலோ, மனிதனாலோ,

உயிருள்ள ஆயுதத்தினாலேயோ,
உயிரற்ற ஆயுதத்தினாலேயோ,
மரணம் தனக்கு நிகழக்கூடாதென,
பரமனிடம் பெற்றான் அரிய வரம்.

மரணமில்லாப் பெருவாழ்வை நம்பி,
இறைவன் நானே என்று அறைகூவி,
பரமனின் பக்தர்கள் எல்லோரையும்
விரோதிகளாகவே எண்ணலானான்.

நேரம் கனிந்ததும், இரண்யகசிபுவை
வேறு உலகுக்கு அனுப்பவேண்டியே,
கூறிய விதிகள் அனைத்தையும் தன்
சீரிய அறிவினால் உடைத்தான், ஹரி!

இரவோ பகலோ அல்லாத சந்திவேளை ,
தரையோ ஆகாயமோ அல்லாத படிக்கட்டு ,
வீடோ வெளியோ அல்லாத வீட்டு வாசல்,
விலங்கோ மனிதனோ அல்லாத உருவம்,

வலிக்காததால் உயிரற்றதும்,
வளர்வதால் உயிருள்ளதுமானக்
கூறிய நகங்களையே அவன் தன்
சீரிய ஆயுதங்களாகக் கொண்டான்.

எத்தனை வரங்களைப் பெற்றாலும்,
பித்தனைப் போல நடந்துகொண்டால்,
நித்தம் நித்தம் பயந்து அஞ்சி, நாம்
அத்தனிடம் தோற்றே ஆகவேண்டும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
4.jpg


EXCEPTION TO EVERY RULE!

Every rule has an exception-but there is no exception to this rule! Only the exception proves the rule. Who is better qualified to find all the loopholes than the law-maker?

HiranyAkshan and Hiranyan became mad with power and ego and started harassing all the three worlds. Lord NArAyanA took the form of VarAha Moorthy and killed HiranyAkshan.

Hiranyan became both terrified and angry and decided to get the boon of immortality from Brahma.

He did a severe tapas and got completely covered by ant hills! In due course, Brahma appeared before him and the boon Hiranyan asked was very unusual.

He demanded that he should not be killed at night or during the day; neither inside the house nor outside it; neither on the earth nor in the sky, neither by a man nor by an animal; and with a weapon which was neither alive nor dead!

He had sought immortality for all practical purposes! His atrocities increased day by day while his son PrahlAd’s Vishnu bakthi also increased day by day.

Finally Lord VishnU decided that the time was ripe to kill Hiranyan-who had become like a mad elephant let loose on a rampage. He chose to become a lion-man who could crack open the elephant’s head with a single mighty blow!

He managed to bend every condition and kill Hiranyan. He chose sandhyA kAlam-which was neither day nor night. He sat on the door step-which was neither inside the house nor outside. The raised steps were neither earth nor sky!

The narahari was neither a man nor an animal. He used only his nails which are not alive since they do not cause pain when trimmed and which are not dead since they keep growing!

A person may scheme, plot and plan to perfection but God who is more perfect than him, can make it null and void!
 
த3ச’கம் 12 : வராஹாவதார வர்ணனம்

ஸ்வாய்ம்பு4வோ மனுரதோ2 ஜன ஸர்க3 சீ’லோ
த்3ருஷ்ட்வா மஹீம ஸமயே ஸலிலே நிமக்3னாம் |
ஸ்ரஷ்டாரமாப ச’ரணம் ப4வத3ங்க்3ரி ஸேவா
துஷ்டாச’யம் முனிஜனை : ஸஹ ஸத்யலோகே || (12 – 1 )

பிரமன் கட்டளை இட்டபின் சிருஷ்டியைச் செய்து வந்த ஸ்வாயம்பு மனு, பூமி நீரில் மூழ்கி இருப்பதைக் கண்டார். சத்ய லோகத்தில் முனிவர்களுடன் தங்கள் பாதங்களைச் சேவித்துக் கொண்டிருந்த பிரமனிடம் மனு சரண் அடைந்தார்.

---------------------------------------------------------------------------------------------------

கஷ்டம் ப்ரஜா: ஸ்ருஜதி மய்யவனி நிமக்3னா
ஸ்தா2னம் ஸரோஜாப4வ கல்பய தத் ப்ரஜானாம் |
இத்யேவமேஷ கதி2தோ மனுனா ஸ்வயம்4பூ:
அம்போ4ருஹாக்ஷ தவ பாத3 யுக3ம் வ்யசிந்தீத் || (12 – 2)

‘பிரம்ம தேவா! நான் பிரஜைகளை சிருஷ்டி செய்யும் போது பூமி ஜலத்தில் மூழ்கி விட்டது. ஆகையால் பிரஜைகள் இருக்க வேண்டிய இடத்தைத் தாருங்கள்!” என வேண்டிக் கொள்ள பிரமன் தங்கள் திருவடிகளின் மீது தியானம் செய்தான்.

------------------------------------------------------------------------------------------------------

ஹா ஹா விபோ4 ஜலமயம் ந்யபிப3ம் புரஸ்தாத்
அத்3யாபி மஜ்ஜதி மஹீ கிமிஹம் கரோமி |
இத்தம் த்வத3ங்க்4ரி யுக3ளம் ச’ரணம் யதோsஸ்ய
நாஸாபுடாத் ஸமப4வ: சி’சு’ கோலரூபி || (12 – 3)

“எங்கும் நிறைந்திருக்கும் பிரபோ! கஷ்டம்! கஷ்டம்! முன்பே நான் பிரளய ஜலத்தைப் பானம் செய்தேன். ஆனாலும் இப்போது மீண்டும் பூமி முழுகி விட்டது!” என்று பிரமன் தங்களிடம் சரணடைந்தான். அப்போது பிரமனின் மூக்குத் துவாரத்திலிருந்து தாங்கள் ஒரு பன்றிக் குட்டியாக அவதரித்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------

அங்கு3ஷ்ட2 மாத்ர வபுருத்பதித: புரஸ்தாத்
பூ4யாsத2 கும்பி4 ஸத்3ருச’: ஸம ஜ்ரும்ப4தா2ஸ்த்வம்|
அப்4ரே ததா2 வித4 முதீ3க்ஷ்ய ப4வந்த முச்சை:
விஸ்மேரதாம் விதி4ரகா3த் ஸஹ ஸூனுபி: ஸ்வை: || (12 – 4)

முதலில் கட்டை விரல் அளவே இருந்த தாங்கள் பிறகு யானையில் அளவு வளர்ந்தீகள். அப்படி மிகவும் வளர்ந்து மேகமண்டலத்தை அடைந்துவிட்ட தங்களை பிரமன் தன் மகன்களுடன் கூட மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தான்.

-----------------------------------------------------------------------------------------------------

கோsஸாவ சிந்த்ய மஹிமா கிடிருத்தி2தோ மே
நாஸா புடாத் கிமு ப4வேத3ஜிதஸ்ய மாயா |
இத்தம் விசிந்தயதி தா4தரி சை’லமாத்ர:
ஸத்3யோ ப4வன் கில ஜகர்ஜித2 கோ3ரகோ3ரம் || (12 – 5)

“என் நாசித் துவாரத்திலிருந்து வெளியே வந்த, சிந்தனைக்கு அப்பாற்பட்ட மகிமை உடைய, இந்தப் பன்றி யாராக இருக்கும்? எவராலும் வெல்லப்பட முடியாத விஷ்ணுவின் மாயையோ ?” என்று பலவாறு பிரமன் ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போதே தாங்கள் மலையளவு வளர்ந்து மிகவும் பயங்கர கர்ஜனை செய்தீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 12 : வராஹாவதார வர்ணனம்

தம் தே நிநாத3 முபகர்ண்ய ஜனஸ் தப :ஸ்தா2
ஸத்ய ஸ்தி2தாச்’ச முனயோ நுநுவூர் ப4வந்தம் |
தத் ஸ்தோத்ர ஹர்ஷுலமனா : பரிணத்3ய பூ4ய:
தோயாச’யம் விபுலமூர்த்தி ரவாதரஸ்த்வம் || ( 12 – 6)

தங்களுடைய கர்ஜனையைக் கேட்டு, ஜனலோகம், தபோலோகம், சத்ய லோகம் இவற்றில் உள்ள முனிவர்கள் தங்களைத் துதித்தனர். அவர்கள் துதியினால் மனம் மகிழ்ந்த தாங்கள் இன்னும் பெருகிய சரீரத்துடன் சமுத்திரத்தில் இறங்கினீர்கள். (12 – 6)

------------------------------------------------------------------------------------------------------------

ஊர்த்4வ ப்ரஸார பரிதூ4ம்ர விதூ4தரோமா
ப்ரோக்ஷிப்தவாலதி ரவாங்முக2 கோ4ர கோ4ண: |
தூர்ண ப்ரதீ3ர்ண ஜலத3:பரிகூ4ர்ண த3க்ஷ்ணா
ஸ்தோத்ரூன் முனீன் சி’சி’ரயன்னவ தேரித2 த்வம் || (12 – 7)

மேல் நோக்கிய, கறுப்பும் சிவப்புமாகக் கலந்த, குடையப்பட்ட ரோமங்களுடனும்; உயரத் தூக்கப்பட்ட வாலுடனும்; கீழ் நோக்கிய பயங்கர நாசியுடனும்; விரைவாக மேகங்களைப் பிளந்து கொண்டு; தங்களின் அசைகின்ற கண்களால் தங்களைத் துதிக்கும் முனிவர்களின் மனத்தைக் குளிரச் செய்து; சமுத்திர நீரில் தாங்கள் இறங்கினீர்கள். (12 – 7)

------------------------------------------------------------------------------------------------------------

அந்தர் ஜலம் தத3னு ஸங் குல நக்ர சக்ரம்
ப்4ராம்யத் திமிங்கி3ல குலம் கலுஷோர் மிமாலம் |
ஆவிச்’ய பீ4ஷணரவேண ரஸாதலஸ்தா2ன்
ஆகம்பயன் வஸுமதி மக3வேஷயஸ்த்வம் || (12 – 8)

அதன் பிறகு திகிலடைந்த முதலைகள், சுற்றித் திரியும் திமிங்கிலங்கள், கலங்கிய அலைகள் இவைகளால் நிறைந்த சமுத்திர நீரில் பிரவேசித்தீர்கள். ரசாதலத்தில் இருப்பவர்கள் அஞ்சும்படியான பயங்கர சத்தம் செய்து கொண்டு நீரில் பூமியைத் தேடினீர்கள். (12 – 8)

--------------------------------------------------------------------------------------------------------------

த்3ருஷ்ட்வாsத தை3த்ய ஹதகேன ரஸாதலாந்தே
ஸம்வேசி’தாம் ஜடிதி கூடகிடிர்விபோ த்வம் |
ஆபாதுகான விக3ணய்ய ஸுராரி கேடான்
த3ம்ஷ்ட்ராங்குரேண வஸுதா4 மத3தா4: ஸலிலம் || ( 12 – 9)


துஷ்ட அசுரன் ஹிரண்யாக்ஷன் பாதாளத்தின் பக்கத்தில் ஒளித்து வைத்திருந்த பூமியைக் கண்டீர்கள். மாயா வராஹ ரூபியாகிய தாங்கள் எதிர்த்து வருகின்ற அசுரர்களை லட்சியம் செய்யாமல் விரைந்து தங்களின் கோரைப் பற்களின் நுனியால் விளையாட்டாக பூமியை வெளியில் எடுத்தீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------
அப்யுத்3த4ரன்னத2 த4ராம் த3ச’னாக்3ரலக்ன
முஸ்தாங்குராங்கித இவாதி4க பீவராத்மா |
உத்3தூ4த கோ4ர ஸ்லிலாஜ்ஜல தே4ருதஞ்சன்
க்ரீடா3 வராஹவபுரீச்’வர பாஹி ரோகா3த் || (12 – 10)

லீலைக்காகப் பன்றி உருவம் எடுத்த ஈசா! கோரைப் பற்களின் நுனியால் பூமியைப் பற்றிக் கொண்டும், கோரைப் புல்லால் அடையாளம் செய்யப்பட்டவர் போலவும், பூமியை உயர எடுத்துக் கொண்டு பொங்கி எழும் நீரிலிருந்து பெருத்த உருவத்துடன் வெளியே வந்தீர்கள். தாங்களே என்னை வியாதிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்!

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 13 : ஹிரண்யாக்ஷ யுத்3த4 வர்ணனம்

ஹிரண்யாக்ஷம் தாவத்3வரத3 ப4வத3ன்வேஷணபரம்
சரந்தம் ஸாம்வர்தே பயஸி நிஜ ஜங்கா4 பரிமிதே |
ப4வத்3ப4க்தோ க3த்வா கபடபடுதீ3ர் நாரத3 முனி :
ச’னைரூசே நந்த33ந்தனுஜமபி நிந்த3ம்ஸ்தவ ப3லம்|| (13 – 1)

வரதா ! அப்போது தனது முழங்கால் அளவே இருந்த பிரளய ஜலத்தில் தங்களைத் தேடிக் கொண்டு, சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஹிரண்யாக்ஷனிடம் சென்று, தங்கள் பக்தரும் வஞ்சிப்பதில் வல்லவருமாகிய நாரத முனிவர் ஹிரண்யாக்ஷனை புகழ்ந்தும், தங்களை இகழ்ந்தும் பேசினார்.

------------------------------------------------------------------------------------------------------------

ஸ மாயாவீ விஷ்ணுர் ஹரதி பவதீ3யாம் வஸுமதிம்
ப்ரபோ4 கஷ்டம் கஷ்டம் கிமித3மிதி தேனாபி4க3தி3த:|
நத3ன் க்வாசௌ க்வாஸாவிதி ஸ முனினா த3ர்சி’தபதோ2
ப4வந்தம் ஸம்ப்ராபத்3 த4ரணித4ர முத்3யந்த முத3காத் || (13 – 2)

“மாயாவியகிய விஷ்ணு உங்கள் பூமியை அபஹரித்துச் செல்கின்றான். பிரபோ! இது என்ன கஷ்டம்!” என நாரதன் கூறினான். உடனே ஹிரண்யாக்ஷன் ” அந்த விஷ்ணு எங்கே?” என்று கத்தினான். நாரதன் வழிகாட்ட, பூமியை எடுத்துக் கொண்டு ஜலத்திலிருந்து வெளியேறும் தங்களை வந்து அடைந்தான்.

-----------------------------------------------------------------------------------------------------

அஹோ ஆரண்யோsயம் ம்ருக3 இதி ஹஸந்தம் ப3ஹுதரை :
து3ருக்தைர் வித்4யந்தம் தி3தி ஸுத மவக்ஞாய ப4க3வன் |
மஹீம் த்3ருஷ்ட்வா த3ம்ஷ்ட்ரா சி’ரஸி சகிதாம் ஸ்வேன மஹஸா
பயோதா4வாதா4ய ப்ரஸப4 முத3யங்க்தா2 ம்ருக4 விதௌ4 || (13 – 3)

“ஐயோ! இது ஒரு காட்டு மிருகம் அல்லவா?” என்று சொல்லிப் பரிஹசித்துப் பல கடும் சொற்களைப் பேசிய அசுரனைத் தாங்கள் பொருட்படுத்த வில்லை. கோரைப் பல்லில் நுனியில் இருந்த பூமாதேவி நடுங்குவதைக் கண்டு தங்கள் யோக சக்தியால் பூமியை சமுத்திரத்தில் நிலைக்கச் செய்தீர்கள். பிறகு அசுரனுடன் போர் செய்யத் தொடங்கினீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------

க3தா3பாணௌ தை3த்யே த்வமபி க்3ருஹீதோன்னதக3தோ3
நியுத்3தே4ன க்ரீட3ன் க4டக4டரவோத்3 கு4ஷ்டவியதா |
ரணாலோகௌத்ஸுக்யான் மிலதி ஸுர ஸங்கே4 த்3ருதமமும்
நிருந்த்4யா: ஸந்த்4யாத: ப்ரத2மமிதி தா4த்ரா ஜக3தி3ஷே || (13 – 4)

அசுரன் கதாபாணியாக இருந்தான். தாங்களும் தங்கள் கையில் கதையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, ‘கட கட’ என்னும் சப்தம் விண்ணில் முழங்கத் துவந்த யுத்தம் செய்து விளையாடினீர்கள். அந்தப் போரைக் காண தேவர்கள் குழுமி விட்டனர். பிரமன் “சந்தியா காலத்துக்கு முன்பே அசுரனைக் கொன்று விட வேண்டும்” என்று தங்களிடம் வேண்டிக் கொண்டான்.

--------------------------------------------------------------------------------------------------------

க3தோ3ன் மர்தே3 தஸ்மிம்ஸ்தவ தி3திபு4வோ
க3தா3கா4தாத்3 பூ4மௌ ஜ்ஜடிதி பதிதாயாமஹஹ போ4:|
ம்ருது3ஸ்மேராஸ்யஸ்த்வம் த3னுகுல நிர்மூலனசணம்
மஹாசக்ரம் ஸ்ம்ருத்வா கரபு4வி த3தா4னோ ருருசிஷே || (13 – 5)

அந்த யுத்தத்தில் அசுரன் கதையினால் அடிக்கப்பட்டு தங்கள் கதை பூமியில் விழுந்து விட்டது. அப்போது புன்னகை தவழும் முகத்துடன் அசுர குலத்தை வேரறுக்கும் சுதர்சனச் சக்கரத்தை ஸ்மரித்தீர்கள். அதைத் தங்கள் கையில் தாங்கிப் பிரகாசித்தீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 13 : ஹிரண்யாக்ஷ யுத்3த4 வர்ணனம்

தத: சூ’லம் காலப்ரதிமருஷி தை3த்யே விஸ்ருஜதி
த்வயி சி2ந்த3த்யேனத் கரகலித சக்ர ப்ரஹரணாத் |
ஸமாருஷ்டோ முஷ்ட்யா ஸ க2லு விதுத3ம்ஸ்த்வாம் ஸமதனோத்
க3லன் மாயே மாயாஸ்த்வயி கில ஜக3ன்மோஹனகரீ:|| (13 – 6)

அசுரன் பிரளய கால ருத்திரனின் கோபத்தோடுத் தன் சூலத்தைப் பிரயோகித்தான் தங்களின் சக்கரம் அசுரனின் சூலத்தை முறித்தவுடன் மிகுந்த கோபத்தோடு அசுரன் தங்களைக் கை முஷ்டியால் தாக்கினான். மாயையை வென்ற தங்களிடமே உலக மயக்கும் மாயைகளைப் பிரயோகித்தான் அசுரன்.

------------------------------------------------------------------------------------------------------

ப4வச்சக்ர ஜ்யோதிஷ்கணலவ நிபாதேன விது4தே
ததோ மாயசக்ரே விதத க4னரோஷாந்த4 மனஸம் |
க3ரிஷ்டா2பி4ர் முஷ்டி ப்ரஹ்ருதிபி4ர பி4க்4னந்த மஸுரம்
கராக்3ரேண ஸ்வேன ச்’ரவண பத3மூலே நிரவதீ4 : || (13 – 7)

தங்கள் சுதர்சனச் சக்கரத்தின் தீப் பொறிகள் அசுரனுடைய மாயையை நசிக்கச் செய்தது. என்ன செய்வது என்று அறியாத அசுரன் கடுமையான சினத்துடன் கை முஷ்டிகளால் தங்களைக் கடுமையாகத் தாக்கினான. தாங்கள் அந்த அசுரனைக் கை நுனியால் கன்னத்தில் அறைந்து கொன்று விட்டீர்கள்.

---------------------------------------------------------------------------------------------------

மஹாகாய: ஸோsயம் தவ கரஸரோஜ ப்ரமதி2தோ
க3லத்3ரக்தோ வக்த்ராத3பதத்3 ருஷிபி4: ச்’லாகி4தஹதி : |
ததா3 த்வாமுத்3தா3ம ப்ரமத3ப4ர வித்3யோதி ஹ்ருத3யா:
முநீந்த்3ரா: ஸாந்த்3ராபி : ஸ்துதி பி4ரநுவன் னத்4வரதனும் || (13 – 8)


பெருத்த சரீரத்தையுடைய அந்த அசுரன், தங்களுடைய தாமரைக் கரத்தால் அடிக்கப்பட்டு வாயிலிருந்து ரத்தம் கொட்டக் கீழே விழுந்தான். அவன் முனிவர்கள் புகழும் மரணத்தை அடைந்தான். அப்போது கட்டுக்கு அடங்காத ஆனந்தப் பெருக்கால் பிரகாசிக்கும் மனத்தை உடைய முனிவர்கள் ஸ்தோத்திரங்களை முழக்கி யக்ஞ மூர்த்தியான தங்களைத் துதித்தனர்.

----------------------------------------------------------------------------------------------------

த்வசி ச2ந்தோ3 ரோமஸ்வபி குச’கணாச் சக்ஷுஷி க்4ருதம்
சதுர்ஹோதாரோங்sக்4ரௌ ஸ்ருக3பி வத3னே சோத3ர இடா3 |
க்3ரஹா ஜிஹ்வாயாம் தே பரபுருஷ கர்ணே ச சமஸா :
விபோ4 ஸோமோ வீர்யம் வரத3 க3லதே3சே’sப்யுபஸத3: || (13 – 9 )


புருஷோத்தமா! தங்களுடைய தோலில் காயத்ரீ முதலிய சந்தஸ்ஸுகள் உள்ளன. தங்களுடைய ரோமங்களில் தர்ப்ப சமூஹம் உள்ளது . தங்களுடைய கண்களில் நெய் உள்ளது. தங்களுடைய நான்கு கால்களில் பிரம்மா, ஹோதா, அத்வர்யு, உத்காதா என்ற நான்கு ரிக் வித்துகள் உள்ளனர். தங்களுடைய முகத்தில் ஸ்ருக் என்ற ஹோம பாத்திரமும், வயிற்றில் இடை என்னும் பாத்திரமும் உள்ளன. தங்களுடைய நாக்கில் சோமரசத்தை எடுத்து வைக்கும் கிரஹமென்ற பாத்திரமும், காதுகளில் சோம பானம் செய்யும் சமஸங்கள் என்ற பத்திரங்களும் உள்ளன. உமது ரேதஸே சோம ரசமாக உள்ளது. வரதா! உமது கழுத்தில் உபஸத்துக்கள் இருக்கின்றன.

----------------------------------------------------------------------------------------------------

முனீந்த்3ரை ரித்யாதிஸ்தவனமுக2ரைர் மோதி3த மனா:
மஹீயஸ்யா மூர்த்யா விமலதர கீர்த்யா ச விலஸன் |
ஸ்வதி4ஷ்ண்யம் ஸம்ப்ராப்த: ஸுக2 ரஸ விஹாரி மது4ரிபோ
நிருந்த்4யா ரோக3ம் மே ஸகலமபி வாதாலயபதே || (13 – 10)


மதுவென்ற அசுரனின் வைரியே! குருவாயூரப்பா! முனிவர்களின் துதிகளால் ஆனந்தம் அடைந்து , பெருத்த உடலுடனும், மாசில்லாத கீர்த்தியுடனும் உமது வைகுண்ட லோகத்தை அடைந்து, அங்கே இன்ப ரசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தாங்கள் என் வியாதிகளை நாசம் செய்ய வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 14 : கபிலோபாக்2யானம்

ஸமனு ஸ்ம்ருத தாவகாங்க்4ரி யுக்3ம:
ஸ மனு:பங்கஜ ஸம்ப4வாங்க3ஜன்மா|
நிஜ மந்தர மந்தராய ஹீனம்
சரிதம் தே க2தயன் ஸுக2ம் நினாய || (14 – 1)

பிரமனின் புத்திரனான சுவாயம்பு மனு, தங்கள் திருவடிகளை இடைவிடாமல் தியானித்துக் கொண்டும், தங்கள் சரிதத்தைச் சொல்லிக் கொண்டும் தம் மன்வந்தரத்தை இடையூறு இல்லாமல் சுகமாகக் கழித்துவிட்டார்.

---------------------------------------------------------------------------------------------------------

ஸமயே க2லு தத்ர கர்த்த3மாக்2யோ
த்3ருஹிணச்சா3ய ப4வஸ்ததீ3ய வாசா|
த்4ருதஸர்க3ர ஸோ நிஸர்கரம்யம்
ப4க3வம்ஸ்த்வாமயுதம் ஸமா: ஸிஷேவே || (14 – 2)

அதே காலத்தில் பிரமனின் நிழலிலிருந்து பிறந்த கர்த்தமர் என்பவர், பிரமனின் சொற்படிச் சிருஷ்டியில் விருப்பம் கொண்டு ஸ்வபாவமாகவே அழகு படைத்ததத் தங்களைப் பதினாயிரம் ஆண்டுகள் சேவித்து வந்தார்.

------------------------------------------------------------------------------------------------------------

க3ருடோ3பரி காலமேக4க்கம்ரம்
விலஸத் கேலி ஸரோஜ பாணி பத்3மம்|
ஹஸிதோல்லஸிதானனம் விபோ4 த்வம்
வபுராவிஷ் குருஷே ஸ்ம கர்த்த3மாய || (14 – 3)

தாங்கள் கருடன் மீது அமர்ந்து, தங்களின் கறுத்த மனோஹரமான மேனியைத் தாமரைக் கையில் உள்ள தாமரை மலருடனும் மந்தஹாசத்தால் மலர்ந்த முகத்துடனும் கர்த்தமருக்குக் காட்சி அளித்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------

ஸ்துவதே புலகாவ்ருதாய தஸ்மை
மனுபுத்ரீம் த3யிதாம் நவாபி புத்ரி:|
கபிலம் ச ஸுதம் ஸ்வமேவ பச்’சாத்
ஸ்வக3திம் சாப்யனுக்3ருஹ்ய நிர்கதோபூ4: || (14 – 4)

புளகம் அடைந்து, தங்களைத் துதித்த கர்த்தமருக்குப் பத்தினியாக ஸ்வாயம்பு மனுவின் புத்திரியையும், அவளிடம் ஒன்பது மகள்களையும், உமது அம்சமான கபிலன் என்னும் மகனையும், கடைசியில் மோக்ஷத்தையும் வரமாக அருளினீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------

ஸ மனு: ச’த ரூபயா மஹிஷ்யா
கு3ணவத்யா ஸுதயா ச தே3வஹூத்யா|
ப4வதீ3ரித நாரதோ3பதி3ஷ்ட:
ஸமகா3த் கர்த்த3மமாக3தி ப்ரதீக்ஷம் || (14 – 5)


தங்களால் ஏவப்பட்ட நாரதர் ஸ்வாயம்பு மனுவுக்கு உபதேசிக்க; ஸ்வாயம்பு மனு தனது பட்டமஹிஷியாகிய சதரூபையுடனும், நல்ல குணவதியாகிய தேவஹூதி என்ற மகளுடனும்; தங்களின் வரவை எதிர்நோக்கி இருந்த கர்த்தமரிடம் சென்றார்.

-----------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 14 : கபிலோபாக்2யானம்

மனுனோபஹ்ருதாம் ச தே3வஹூதிம்
தருணீ ரத்னமவாப்ய கர்த்தமோs சௌ |
பவத3ர்சன நிர்வ்ருத்தோsபி தஸ்யாம்
த்3ருட 3சு’ச்’ரூஷணயா த3தௌ4 ப்ரஸாத3ம் || (14 – 6)

கர்த்தமர் ஸ்வாயம்பு மனுவினால் அழைத்து வந்து தனக்கு அளிக்கப்பட தேவஹூதியை ஏற்றுக் கொண்டார். தங்களைப் பூஜிப்பதிலேயே நிம்மதி அடைந்திருந்தார். தனக்குத் திடமாகப் பணிவிடைகள் செய்த தேவஹூதியிடமும் அன்பு வைத்தார்.

------------------------------------------------------------------------------------------------------------

ஸ புனஸ் த்வது3பாஸ ன ப்ரபா4வாத்3
த3யிதா காம க்ருதே க்ருதே விமானே |
வனிதாகுல ஸங்குலோ நவாத்மா
வ்யஹரத்3 தே3வபதே2ஷு தே3வஹூத்யா || (14 – 7)

தங்களைச் சேவித்து வந்த மகிமையால் கர்த்தமர் தன் பத்தினியின் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு விமானத்தை உண்டு பண்ணினார். அதில் புதிதாக எடுத்துக் கொண்ட ஒன்பது சரீரங்களுடன், அநேகம் ஸ்திரீகள் புடை சூழ, மனைவி தேவஹூதியுடன் வான வீதிகளில் இன்பமாக சஞ்சரித்தார்.

------------------------------------------------------------------------------------------------------------

ச’தவர்ஷமத2 வ்யதீத்ய ஸோsயம்
நவ கன்யா: ஸமவாப்ய த4ன்யரூபா:|
வனயான ஸமுத்3ய தோsபி காந்தா ஹிதக்ருத்
தவ ஜ்ஜனனோத்ஸுகோ ந்யவாத்ஸீத்|| (14 – 8 )


கர்த்தமர் இவ்விதமாக நூறு வருஷங்களைக் கழித்தார். மிகவும் அழகிய பெண்கள் ஒன்பது பேர்களைப் பெற்ற பின்னர் துறவியாகிக் காட்டுக்குச் செல்ல விரும்பினார். ஆனால் தங்கள் அவதாரத்திற்காகவும், மனைவிக்கு நன்மை செய்வதற்காகவும் அவர் அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தார்.

---------------------------------------------------------------------------------------------------

நிஜப4ர்த்ருகி4ரா பவன்னிஷேவா
நிரதாயாமத2 தே3வ தே3வஹூத்யாம் |
கபிலஸ் த்வமஜாயதா2 ஜனானாம்
ப்ரத2யிஷ்யன் பரமாத்ம தத்வ வித்3யாம் || (14 – 9)

அதன் பின் தனது கணவன் வாக்கின்படித் தங்களையே சேவித்து வந்த தேவஹூதியினிடம், மக்களுக்குப் பரமாத்ம தத்துவத்தையும், இருபது நான்கு தத்துவங்களையும் விளக்குவதற்காகத் தாங்கள் கபிலராக அவதரித்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------

வனமேயுஷி கர்த்த3மே ப்ரஸன்னே
மதஸர்வஸ்வ முபாதி3ஷஜ்ஜனன்யை |
கபிலாத்மாக வாயுமந்தி3ரேச’ த்வரிதம்
த்வம் பரிபாஹி மாம் க3தௌ3கா4த் || (14 – 10)

கர்த்தமர் சந்தோஷத்துடன் காட்டுக்குச் சென்ற போது தன் தாய்க்குச் சித்தாந்தங்களை உபதேசித்த கபில ரூபியாகிய குருவாயூரப்பா! என் வியாதிக் கூட்டத்திலிருந்து விரைந்து என்னைக் காப்பாற்று!

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 15 : கபிலோபாக்2யானம்

மதிரிஹ கு3ணஸக்தா ப3ந்த4 க்ருத்வேஷ்வ ஸக்தா
த்வம்ருத க்ருது3ப ருந்தே4 ப4க்தி யோக3ஸ்து ஸக்திம் |
மஹ த3னுக3ம லப்4யா பக்திரேவாத்ர ஸாத்4யா
கபில தனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3 :|| (15 – 1)

“உலகில் விஷய சுகங்களில் ஈடுபடும் புத்தி சம்சார பந்தத்தை ஏற்படுத்துகின்றது. விஷய சுகங்களில் பற்று இல்லாத புத்தி மோக்ஷத்தைத் தருகின்றது. மேலும் பக்தி யோகம் ஒன்று தான் நமக்கு விஷயங்களில் உள்ள பற்றை அகற்றுகின்றது. ஆகவே இந்த உலகின் தேடி அடைய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது மகான்களைப் பின்பற்றி அடைய வேண்டிய பக்தி” என்று கபில மூர்த்தியாகிய தாங்கள் தாய் தேவஹூதிக்கு உபதேசம் செய்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ப்ரக்ருதி மஹத3ஹங்காராச்’ச மாத்ராச்’ச பூ4தா
ந்யபி ஹ்ருத3பி த3சா’க்ஷீ பூருஷ : பஞ்சவிம்ச’: |
இதி விதி3த விபா4கோ3 முச்யதேsசௌ ப்ரக்ருத்யா
கபிலதனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3: || (15 – 2)


“மூலப் பிரகிருதி, மஹத் தத்துவம், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து மகா பூதங்கள், மனது, பத்து இந்திரியங்கள் என்ற இருபது நான்கு தத்துவங்களுடன் புருஷன் இருபத்தி ஐந்தாவது தத்துவம் ஆவான். இந்தப் பிரிவுகளை அறிந்த புருஷன் மாயையால் எப்படி விடப்படுகிறான்” என்று தாய் தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

ப்ரக்ருதி க3தகு3ணௌகை4ர் நாஜ்யதே பூருஷோயம்
யதி து ஸஜதி தஸ்யாம் தத்3குணாஸ்தம் ப4ஜேரன் |
மத3னு ப4ஜன தத்வாலோசனை: ஸாப்ய பேயாத்
கபிலதனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3: || (15 – 3)

பிரகிருதியில் இருக்கும் கர்த்ருத்வம் போன்ற குணங்களால் இந்தப் புருஷன் கவரப் படுவதில்லை. ஆனால் அவனுக்குப் பிரகிருதியில் பற்றுதல் இருந்தால் அந்தப் பிரகிருதியின் குணங்கள் அந்தப் புருஷனையும் சென்று அடையும். என்னை பூஜிப்பதாலும் தத்துவ ஞானம் பெறுவதாலும் புருஷனை அந்தப் பிரகிருதி விட்டு அகன்று விடும்” என்று தாய் தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

விமலமதி ருபாத்தை ராஸனாத்3யைர் மத3ம்ச’ம்
க3ருட3 ஸமதி4ரூட4ம் தி3வ்ய பூ4ஷாயுதா4ங்கம் |
ருசிதுலிததமாலம் சீ’லயேதானுவேலம்
கபிலதனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3: || (15 – 4)

“யம நியமங்களால் பரிசுத்தம் ஆன பிறகு; ஆசனம் பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து அதன் பிறகு; கருடன் மேல் அமர்ந்து, திவ்விய ஆபரணங்களை அணிந்து, திவ்விய ஆயுதங்களை ஏந்தித் தமாலம் போன்ற காந்தியை வீசும் என் உருவத்தைத் தியானிக்க வேண்டும்!” என்று தேவஹூதிக்கு நீங்கள் உபதேசித்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------

மம கு3ணக3ண லீலா கர்ணனை: கீர்த்தனாத்3யை:
மயி ஸுர ஸரி தோ3க4 ப்ரக்2ய சித்தானு வ்ருத்தி: |
ப4வதி பரமப4க்தி : ஸா ஹி ம்ருத்யோர் விஜேத்ரி
கபில தனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3: || (15 – 5)

“என்னுடைய குணங்களையும், லீலைகளையும் கேட்பதாலும்; கீர்த்தனம் முதலியவற்றைப் பாடுவதாலும்; என்னிடம் கங்கையின் பிரவாஹத்தைப் போன்ற மேலான பக்தி உண்டாகின்றது. அதுவே சம்சாரத்தை நாசம் செய்ய வல்லது” என்று தாங்கள் தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 15 : கபிலோபாக்2யானம்

அஹஹ ப3ஹுல ஹிம்ஸா ஸஞ்சிதார்த்தை2: குடும்பம்
ப்ரதிதி3ன மனு புஷ்ணான் ஸ்திரீ ஜிதோ பா3லலாலீ |
விச’தி ஹி க்3ருஹ ஸக்தோ யாதனம் மய்ய ப4க்த:
கபில தனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3 :|| (15 – 6)

“பலவித ஹிம்சைகளைச் செய்தும்; அதன் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒவ்வொரு நாளும் குடும்பத்தைக் காப்பாற்றியும்; மனைவிக்கு வசப்பட்டும், குழந்தைகளை லாலனம் செய்து கொண்டும்; என்னிடம் பக்தி செய்யாத மனிதன் நரகத்தை அடைவான்” என்று தாங்கள் தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

யுவதி ஜட2ர கி2ன்னோ ஜாத போ3தோ4sப்ய காண்டே3
ப்ரஸவ க3லித போ3த4: பீட3யோல்லங்க்4ய பா3ல்யம் |
புனரபிப3த முஹ்யத்யேவ தாருண்ய காலே
கபில தனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3 :|| (15 – 7)

“தாயின் வயிற்றில் இருக்கும் போது வருத்தம் கொண்டு, அதைப் போக்கிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறான். ஆனால் அப்போது நல்ல ஞானம் அடைந்தவானாக இருக்கிறான். பிறக்கும் போது அந்த ஞானத்தை இழக்கின்றான். பால்யத்தைக் கடந்து யௌவன பருவத்தை அடைந்தவுடன் மறுபடியும் மோஹம் அடைகின்றான்” என்று தாங்கள் தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

பித்ரு ஸுரக3ணயாஜீ தா4ர்மிகோ யோ க்3ருஹஸ்த2:
ஸ ச நிபததி காலே த3க்ஷிணா த்4வோபகா3மீ |
மயி நிஹிதம காமம் கர்ம தூத3க்பதா3ர்த்த3ம்
கபில தனுரிதி த்வம் தே3வஹூத்யை ந்யகா3தீ3 :|| (15 – 8)

“பித்ருக்களையும் தேவர்களையும் பூஜிக்கும் தர்மவானும் கூட தென்மார்க்கத்தில் சஞ்சரித்து விட்டுப் புண்ணியம் முடிந்ததும் பூமிக்கு வருகிறான். ஆனால் எனக்கு அர்ப்பணம் செய்யப்பட நிஷ்காம கர்மம் உத்தராயண மார்க்கத்துக்குக் காரணம் ஆகின்றது” என்று தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------

இதி ஸுவிதி3த வேத்3யாம் தே3வ ஹே தே3வஹூதிம்
க்ருதநுதிமனுக்3ருஹ்ய த்வம் க3தோ யோகி3 ஸங்கை3: |
விமலமதிரதா2சௌ ப4க்தி யோகே3ன முக்தா
த்வமபி ஜனஹிதார்த்த2ம் வர்த்தஸே ப்ராகு3தீ3ச்யாம் || (15 – 9)

ஈசா! அறிய வேண்டியவற்றை நன்கு அறிந்து கொண்டு தங்களைத் தோத்திரம் செய்த தேவஹூதியைத் தாங்கள் நன்றாக அனுக்ரஹித்து விட்டு யோகிகளுடன் சென்று விட்டீர்கள். அதன் பின் நிர்மலமான சித்தத்தை உடைய தேவஹூதியும் பக்தி யோகத்தால் முக்தி அடைந்தாள். ஜனங்களின் நன்மைக்காக தாங்கள் இப்போதும் வடகிழக்குத் திசையில் இருக்கின்றீர்கள்!

---------------------------------------------------------------------------------------------------------

பரம கிமு ப3ஹூக்தயா த்வத் பதா3ம்போ3ஜ ப4க்திம்
ஸகல ப4ய விநேத்ரீம் ஸர்வ காமோப நேத்ரீம் |
வத3ஸி க2லு த்3ருட4ம் த்வம் தத்3விதூ4யா மயான்மே
கு3ருபவனபுரேச’ த்வய்யு பாத4த்ஸ்வ ப4க்திம் || (15 – 10)

பரமாத்மனே! அதிகம் சொல்வதால் ஆவதென்ன? தங்கள் பாதகமலங்களில் செய்யப்படும் பக்தியே பயங்களைப் போக்கும் என்றும் விரும்பியவற்றை அளிக்கும் என்றும் தாங்களே திடமாக உபதேசித்தீர்கள். குருவாயூரப்பா! என் வியாதிகளை மாற்றித் தங்களிடம் மாறாத பக்தியைத் தர வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 16 : நரநாராயண அவதார வர்ணனம், த3க்ஷ3 வர்ணனம் ச

த3க்ஷோ விரிஞ்சி தனயோதs2 மனோஸ் தனூஜாம்
லப்3த்4வா ப்ரஸூதிமிஹ ஷோட3ச’ சாப கன்யா : |
த4ர்மே த்ரயோ த3ச’ ததௌ பித்ருஷூ ஸ்வதா4ம் ச
ஸ்வாஹாம் ஹவிர்பு4ஜி ஸதீம் கி3ரிசே’ த்வத3ம்சே’ || (16 – 1)

பிரம்மனின் புத்திரனாகிய தக்ஷப் பிரஜாபதி, ஸ்வாயம்பு மனுவின் புத்திரி ப்ரசூதியை மணந்து கொண்டார். அவள் பதினாறு பெண்களைப் பெற்றாள் . அவர்களின் பதின்மூன்று பெண்களைத் தர்மதேவனுக்கும், ஸ்வதாவை பித்ருக்களுக்கும், ஸ்வாஹாவை அக்கினி தேவனுக்கும், சதியை சிவனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்.

-------------------------------------------------------------------------------------------------------

மூர்திர்ஹி த4ர்ம க்3ருஹிணி ஸுஷவே ப4வந்தம்
நாராயணம் நரஸக2ம் மஹிதானு பா4வம் |
யஜ்ஜன்மனி ப்ரமுதி3தா: க்ருததூர்ய கோ4ஷா :
புஷ்போத்கரான் ப்ரவ்ருஷுர் நுநுவு: ஸுரௌகா4: || (16 – 2)

தர்ம தேவனின் பத்தினி மூர்த்தி என்பவள் மகிமை பொருந்தியவரும், நரனைத் தோழனாகக் கொண்டவரும் ஆகிய நாராயணன் ஆகிய தங்களைப் பெற்றெடுத்தாள்.
அந்த நர நாராயணர்களின் அவதாரத்தால் மகிழ்ந்த தேவ கணங்கள் முரசு வாத்தியங்களை முழக்கியும், மலர்களைப் பொழிந்தும் தங்களைத் துதித்தனர்.

------------------------------------------------------------------------------------------------------

தை3த்யம் ஸஹஸ்ர கவசம் கவசை:பரீதம்
ஸாஹஸ்ர வத்ஸர தப: ஸமராபி4 லப்3யை : |
பர்யாய நிர்மித தப: ஸமரௌ ப4வந்தௌ
சி’ஷ்டைக கங்கடமமும் ந்யஹதாம் ஸலீலம் || (16 – 3)

நர, நாராயணன் ஆகிய தங்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தவத்தையும் யுத்தத்தையும் செய்து வந்தீர்கள். ஆயிரம் கவசங்களைப் பெற்ற சஹஸ்ர கவசன் என்பனைத் தாங்கள் ஆயிரம் வருடங்கள் செய்த தவத்தாலும் யுத்தத்தாலும் கவசங்களை இழக்கச் செய்தீர்கள். ஒரே ஒரு கவசத்துடன் நின்ற அவனை எளிதில் வென்றீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------

அன்வாசரன்னுபதி3ச’ன்னபி மோக்ஷ த4ர்மம் த்வம்
ப்4ராத்ருமான் ப3த3ரிகாச்’ரம மத்4ய வாத்ஸீ : |
ச’க்ரோsத2 தே ச’ம தபோப3ல நிஸ்ஸஹாத்மா
திவ்யாங்க3னா பரிவ்ருதம் ப்ரஜிகா4ய மாரம் || (16 – 4)

தாங்கள், தங்கள் சகோதரனுடன் கூட மோக்ஷ தர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டும், அதை மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டும் பதரிகாசிரமத்தில் வசித்து வந்தீர்கள். அப்போது இந்திரன் தங்களின் தபோ பலத்தையும் இந்திரிய நிக்ரஹத்தையும் கண்டு பொறாமை கொண்டான். தேவ ஸ்த்ரீக்களையும் மன்மதனையும் அவன் தங்களிடம் செல்லுமாறு ஏவினான்.

---------------------------------------------------------------------------------------------------------

காமோ வஸந்த மலயானில ப3ந்து4சா’லீ
காந்தா கடாக்ஷ விசி’கை2ர் விகஸத் விலாசை : |
வித்4யன் முஹூர் முஹுர கம்ப முதீ3க்ஷ்ய ச த்வம்
பீ4தஸ்த்வயாsத2 ஜக3தே3 ம்ருது3 ஹாஸ பா4ஜா || (16 – 5)

மன்மதன், மலயமாருதன், வசந்தன் இவர்களுடன் லீலா அபிநயங்கள் செய்யும் தேவ ஸ்த்ரீக்களின் கண்ணடி பட்டும் தாங்கள் சிறிதும் அசையவில்லை. அவர்கள் இதைக் கண்டு அஞ்சினர். அப்போது மந்தஹாஸம் செய்தபடி இவ்வாறு சொன்னீர்கள் அல்லவா?

-------------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 16 : நரநாராயண அவதார வர்ணனம், த3க்ஷ3 வர்ணனம் ச

பீ4த்யாsலமங்க3ஜ வஸந்த ஸுராங்க3னா வோ
மன்மானஸம் த்விஹ ஜுஷத்4வமிதி ப்3ருவாண: |
த்வம் விஸ்மயேன பரித: ஸ்துவதாமதை2ஷாம்
ப்ராத3ர்ச’ய: ஸ்வபரிசாரக காதராக்ஷீ : || (16 – 6)

ஹே மன்மதா! வசந்தா! தேவ ஸ்த்ரீகளே! அஞ்ச வேண்டாம்! இங்கு என்னால் சங்கல்பம் செய்யப்பட்ட மரியாதைகளை ஏற்றுக் க் கொள்வீர் என்று கூறித் தங்களைச் சுற்றி நின்று துதித்த அவர்களுக்குத் தங்களுக்குப் பணி புரியும் அழகிகளைக் காண்பித்தீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

ஸம்மோஹனாய மிலிதா மத3னாத3யஸ்தே
த்வத் தா3ஸிகா பரிமலை : கில மோஹமாபு: |
தத்தாம் த்வயா ச ஜக்3ருஹுஸ் த்ரபயைவ ஸர்வ
ஸ்வர்வாஸி க3ர்வ ச’மனீம் புனரூர்வசீ’ம் தாம் || (16 – 7 )

தங்களை மயக்குவதற்கென்று வந்தவர்கள், தங்கள் பணிப்பெண்களின் பரிமளத்தாலேயே மோஹம் அடைந்து விட்டனர். எல்லா சுவர்க்கவாசிகளின் கர்வத்தையும் தன அழகால் அடக்கிய ஊர்வசியைத் தாங்கள் அளிக்க அவர்கள் வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டனர்.

---------------------------------------------------------------------------------------------------------

த்3ருஷ்ட்வோர்வசீ’ம் தவ கதா2ம் ச நிச’ம்ய ச’க்ர:
பர்யாகுலோsஜனி ப4வன் மஹிமாவமர்சா’த் |
ஏவம் ப்ரசாந்த ரமணீய தராவதாராத்
த்வத்தோsதி4கோ வரத3 க்ருஷ்ணதனுஸ் த்வமேவ || (16 – 8)

ஊர்வசியைப் பார்த்தும், தங்கள் கதையைக் கேட்டும் இந்திரன் தங்கள் மகிமையை எண்ணிக் கலக்கம் அடைந்தான் வரதா ! மிக மனோஹரமான, சௌம்யமான நர நாராயண அவதாரத்தை விட மேன்மை பெற்றவர் கிருஷ்ண மூர்த்தியாகிய தாங்களே ஆவீர்கள்.

---------------------------------------------------------------------------------------------------

த3க்ஷஸ்து தா4துரதிலாலனயா ரஜோsந்தோ4
நாத்யாத்3ருத்ஸ் த்வயி ச கஷ்டமசா’ந்தி ராஸீத் |
யேன வ்யருந்த4 ஸ ப4வத் தனுமேவ ச’ர்வம்
யக்ஞே ச வைரபிசு’னே ஸ்வஸுதாம் வ்யமானீத் || (16 – 9 )

தக்ஷப் பிரஜாபதி பிரம்மதேவனின் அதிக லாலனத்தால் ரஜோ குணம் மிகுந்தவனானான். விவேகம் இல்லாதவனாகவும், தங்களிடத்தில் ஆதரவு இல்லாதவனாகவும், சாந்தி இல்லாதவனாகவும் இருந்தான். அதனால் பரமசிவனையே பகைத்துக் கொண்டான். விரோதத்தை நிரூபித்த யாகத்தில் தன் சொந்த மகளையே அவமானப் படுத்தினான்.

-------------------------------------------------------------------------------------------------------

க்ருத்3தே4ச’ மர்தி3த மக2 : ஸ து க்ருத்த சீ’ர்ஷோ
தே3வ ப்ரஸாதி3த ஹராத3த2 லப்3த4 ஜீவ : |
த்வத் பூரித க்ரதுவர: புனராப சா’ந்திம்
ஸ த்வம் ப்ரசா’ந்திகர பாஹி மருத்புரேசா’ || (16 – 10)

கோபம் அடைந்த பரமேச்’வரன் தக்ஷனின் யாகத்தை அழித்து, அவன் தலையையும் கொய்தான். பின்னர் தேவர்கள் சிவனைச் சந்தோஷப்படுத்தியதால் மீண்டும் தக்ஷனை உயிர்பித்தான். தக்ஷனின் யாகமும் பூர்த்தி அடைந்தது. தக்ஷனும் மனச் சாந்தி அடைந்தான். எல்லா தோஷங்களுக்கும் நிவாரணம் செய்யும் குருவாயூரப்பா! தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

--------------------------------------------------------------------------------------------------------
 
Visalam Madam

The following are the names of some chapters in SRUMAN NARAYANEEYAM that I found in Times Music "SRUMAN NARAYANEEYAM" Album that I would be buying the same to start my Narayaneeyam chanting ,I would like to know their Dasakam Numbers as only the chapters names are mentioned :

Dhyanam
Bhagavadswaroopam & Mahat...
Dhruva Charitham
AjamilaMoksha
Prahalada Charitham
Balidarpa Samnam
Ramayana Hanuman Samagama
Krishnavataram
Kaleeya Mardanam
Govindabhishekam
Rasakreeda
Veda Stuti
Kesadi Padavarnanam

Hoping for your reply .
 
Dear Mr. Krishna,

Dhyanam (There is no dasakam with this title).

We use the first two slokas of the second dasakamas the dhyaana slokas.

dasakam 2 - Bhagavadswaroopam

dasakam 17 - Dhruva Charitham

dasakam 22 - Ajamila Moksha

dasakam 24 - Prahalada Charitham

dasakam 30 & 31 - Balidarpa Samnam

dasakams 34 & 35 Ramaavataar

dasakam 38 - Krishnavataram

dasakam 55 - Kaleeya Mardanam

dasakam 64 - Govindabhishekam

dasakam 69 - Rasakreeda

There is no dasakam with this title as Veda Stuti.

(may be the dasakam 99 which describes Bhagavan's mahimaa)

dasakam 100 - Kesadi Padavarnanam

You will find all these dasakams in the wordpress blog

https://sreemannarayaneeyam.wordpress.com/

except Ramaavatar, which I will be completing during this week!
 
Visalam Madam , Thanks for your reply , now it is relatively easy for me to follow the text . I have marked you Sreeman Narayaneeyam blog for reference .
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top