• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
க்ஷோணி ஸ்த2லம் ம்ருக3 க3ணா: பத3யோர் நகாஸ்தே
ஹஸ்த்யுஷ்ட்ர சைந்த4வ முகா2 க3மனம் து கால: |
விப்ராதி3 வர்ண ப4வனம் வத3னாப்3ஜ பா3ஹூ சாரூரு
யுக்3ம சரணம் கருணாம் பு3தே4 தே || (6 – 8 )


கருணைக்கடலே! தங்கள் இடுப்புப் பிரதேசம் மிருகக் கூட்டங்கள் ஆகும்; கால் நகங்கள் யானை, ஒட்டகம், குதிரை போன்ற மிருகங்கள் ஆகும்; தங்கள் நடையே காலம் ஆகும்; தங்களின் திருமுகம், கைகள், தொடைகள், கால்கள் என்பவை முறையே நான்கு வர்ணங்களின் உற்பத்தி ஸ்தானங்கள் ஆகும். (6 – 8)
 
ஸம்ஸார சக்ரமயி சக்ரத4ர க்ரியாஸ்தே
வீர்யம் மஹா ஸுரக3ணோsஸ்தி2 குலானி சை’லா:|
நாட்3ய: ஸரித் ஸமுத3யஸ் தரவச்’ச ரோம
ஜீயாதி3த3ம் வபுர நிர் வச்சனீய மீசா’ || (6 – 9 )

ஹே சக்ரபாணி! தங்கள் பிரவிருத்திகள் சம்சாரச் சக்கரம் ஆகும்; தங்கள் பராக்கிரம் பெரிய அசுரக் கூட்டம் ஆகும் ; எலும்புகள் மலைகள் ஆகும்; நாடிகள் நதிகள் ஆகும்; ரோமங்கள் மரங்கள் ஆகும்; சொற்களால் விவரிக்க முடியாத தங்கள் விராட் ஸ்வரூபம் சிறந்து விளங்கட்டும். (6 – 9)
 
ஈத்3ருக்3ஜகன்மய வபுஸ்தவ கர்ம பா4ஜாம்
கர்மா வஸான ஸமயே ஸ்மரணீயமாஹு : |
தஸ்யாந்த ராத்ம வபுஷே விமலாத்மனே தே
வாதாலயாதி4ப நமோஸ்து நிருந்தி4 ரோகா3ன் || (6 – 10)

ஜகன் மயமாகிய தங்கள் சரீரத்தைக் கர்ம மார்க்கத்தில் உள்ளவர்கள் நற் கர்மங்களின் முடிவில் ஸ்மரிக்க வேண்டும். குருவாயூரப்பா! அந்தராத்ம ஸ்வரூபியும், சுத்த சத்துவ மூர்த்தியும் ஆகிய தாங்கள் என் வியாதிகளைப் போக்க வேண்டும். (6 – 10)
 
த3ச’கம் 7: ஹிரண்யக3ர்ப்போ4த்பத்யாதி3 வர்ணனம்

ஏவம் தே3வ சதுர் த3சா’த்மாக ஜக3த்ரூபென ஜாத: புன:
தஸ்யோர்த்4வம் க2லு ஸத்ய லோகநிலயே ஜாதோsஸி தா4தா ஸ்வயம் |
யம் ச’ம்ஸந்தி ஹிரண்யகர்ப்ப4 மகி2ல த்ரைலோக்ய ஜீவாத்மகம்
யோsபூத் ஸ்பீத ரஜோ விகார விகஸன் நானா ஸிஸ்ருக்ஷாரஸ: || (7 – 1)

பதினான்கு உலகங்களாக ஆவிர்பவித்த தங்கள் இவற்றுக்கும் மேலே உள்ள சத்யலோகத்தில் பிரம்மனாக பவித்தீர். மூவுலகங்களும் ஹிரண்யகர்ப்பன் என்று போற்றும் தாங்கள், ரஜோ குணத்தின் விருத்தியால் பல விதமான சிருஷ்டிகளைச் செய்வதில் ஆர்வம் கொண்டீர். (7 – 1)
 
சோ’sயம் விச்வவிஸர்க3 த3த்த ஹ்ருத3ய ஸம்பச்’யமான: ஸ்வயம்
போ3த4ம் க2ல்வனவாப்ய விச்’வ விஷயம் சிந்தாகுல தஸ்தி2வான் |
தாவத்தம் ஜக3தாம் பதே தப தபேத்யேவம் ஹி வைஹாயஸீம்
வாணீ மேன மசி’ச்’ரவ ச்’ருதி ஸுகா2ம் குர்வம்ஸ்தப : ப்ரேரணாம் || (7 – 2)

பிரம்ம தேவன் பிரபஞ்சத்தைச் சிருஷ்டிப்பதில் மனத்தைச் செலுத்தினான். ஆனால் அதைப் பற்றிய அறிவு இல்லாததால் பிரமன் சிந்தை கலங்கினான். அப்போது தங்கள் தவம் புரியும்படி அவனை ஏவுவதற்கு “தபஸ் செய்” என்ற அசரீரி வாக்கை அவனைக் கேட்கச் செய்தீர். (7 – 2)
 
கோsசௌ மாமவத3த் புமாநிதி ஜலாபூர்ணே ஜக3ன் மண்ட3லே
தி3க்ஷூத்3 வீக்ஷ்ய கிமய்பநீக்ஷிதவதா வாக்யர்த்த2முத் பச்’யதா |
தி3வ்யம் வர்ஷ ஸஹஸ்ர மாத்த தபஸா தேன த்வமாராதி4த:
தஸ்மை த3ர்சி’தவானஸி ஸ்வநிலயம் வைகுண்ட2மேகாத்3பு4தம் || (7 – 3)

“உலகம் முழுவதும் நீரால் நிரம்பி இருக்கும் போது யார் என்னிடம் இதைச் சொன்னார்கள்?”
என்று எல்லா திசைகளிலும் பிரமன் தேடினான். எவரையும் காணவில்ல. “தப தப” என்ற அசரீரி வாக்கை ஆராய்ந்து ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் புரிந்தான். ஆச்சரியமயமான தங்கன் வைகுண்ட லோகத்தை தாங்கள் அவனுக்குக் காட்டினீர்கள். (7 – 3)
 
மாயா யத்ர கதா3sபி நோ விகுருதே பா4தே ஜக3த3ப்4யோ ப3ஹி:
சோ’க2 க்ரோத4 விமோஹ ஸாத்4வஸமுகா பா4வாஸ்து தூ3ரம் க3தா:|
ஸாந்த்3ராநந்த3ஜரீ ச யத்ர பரமஜ்யோதி: ப்ரகாஷாத்மகே
தத்தே தா4ம விபா4விதம் விஜயதே வைகுண்ட2 ரூபம் விபோ4 || ( 7 – 4)

வைகுண்டம் பதினான்கு லோகங்களுக்கும் வெளியில் விளங்குகின்றது. அது பிரம்ம ஜோதியின் பிரகாசத்துடன் கூடியது. அங்கு மாயை எப்போதும் விகாரம் அடைவதில்லை. அங்கு துக்கம், கோபம், அஞ்ஞானம், பயம் போன்றவைகள் இல்லை. அங்கு இடைவிடாத ஆனந்தப் பிரவாஹம் இருக்கிறது. அந்த மேன்மை பெற்ற வைகுண்டம் தங்களால் பிரமனுக்குக் காட்டப்பட்டது. (7 – 4)
 
யஸ்மின்நாம சதுர்பு4ஜா ஹரிமணி ச்’யாமாவதா3தத்விஷோ
நானா பூ4ஷண ரத்ன தீ3பித தி3சோ’ ராஜத்விமானாலயா: |
ப4க்தி ப்ராப்த ததா2விதோ4ன்னதபதா3 தீ3வ்யந்தி தி3வ்யா ஜனா:
தத்தே தா4ம நிரஸ்த ஸர்வ ச’மலம் வைகுண்ட2 ரூபம் ஜயேத் || (7 – 5 )


எந்த உலகில் நான்கு கைகளை உடையவர்களும், இந்திரநீல மணியின் தெளிந்த நிறத்தை உடையவர்களும், பலவித ஆபரணங்களால் திசைகளை விளங்கச் செய்பவர்களும், பிரகாசமன விமானங்களில் வசிப்பவர்களும், சுத்த சத்துவ ரூபர்களும் ஆன சுத்தமான பக்தர்கள் நிஷ்காம பக்தியால் அடைந்துள்ளர்களோ அந்த வைகுண்டம் மேன்மை பெற்று விளங்கட்டும். (7 – 5)
 
த3ச’கம் 7 ( 6 to 10)

த3ச’கம் 7: ஹிரண்யக3ர்ப்போ4த்பத்யாதி3 வர்ணனம்

நானாதி3வ்ய வதூ4ஜனை ரபி4வ்ருதா
வித்3யுல்லதாதுல்யயா
விச்’வோன் மாத3ன ஹ்ருத்3ய கா3த்ர
லதயா வித்3யோதிதாசா’ந்தரா|
த்வத் பாதா3ம்பு3ஜ சௌரபை4க குதுகா
லக்ஷ்மி: ஸ்வயம் ல்க்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீய தி3வ்ய விப4வா
தத்தே பத3ம் தே3ஹி மே ||
(7 – 6 )

வைகுண்ட லோகத்தில் ஸ்திரீக்களால் சூழபட்டவளும்; மின்னலுக்கு நிகராகிச் சகல ஜனங்களையும் மயக்கும் மேனியழகால் திசைகளைப் பிரகாசிக்கச் செய்பவளும், திவ்வியமான வைபவங்களை உடையவளும், ஆகிய லக்ஷ்மி தங்கள் பாதத் தாமைரையின் வாசனையை முகர்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றாள். தாங்கள் அப்படிப்பட்ட தங்கள் ஸ்தானத்தை எனக்குத் தந்தருள வேண்டும். (7 – 6)

................................................................................................................


தத்ரைவம் ப்ரதி த3ர்சி’தே நிஜபதே
ரத்னாஸனாத்4 யாஸிதம்
பா4ஸ்வத் கோடி லஸத்கிரீட கடகா
த்3யா கல்ப தீ3ப்ராக்ருதி|
ஸ்ரீ வத்ஸாங்கித மாத்த கௌஸ்துப4
மணிச் சா2யாருணம் காரணம்
விச்’வேஷாம் தவரூப மைக்ஷத விதிஸ்
தத்தே விபோ4 பா4து மே ||
(7 – 7 )

தங்களால் காண்பிக்கப்பட்ட வைகுண்டத்தில் இரத்தின மயமான ஆசனத்தில் வீற்றிருந்த; கோடி சூர்யப் பிரகாசம் கொண்ட ஆபரணங்களை அணிந்திருந்த; ஸ்ரீ வத்சம் என்ற மருவினை உடைய; கௌஸ்துப ரத்தினத்தால் சிவந்து காணப்பட்ட; உலகத்தின் காரணமாகிய; தங்களை பிரமன் கண்டான். அப்படிப்பட்ட தங்களின் ரூபம் எனக்கும் நன்கு விளங்க வேண்டும். (7 – 7)

................................................................................................................


காலாம்போ4த3 கலாய கோமலருசீ
சக்ரேண சக்ரம் தி3சா’ம்
ஆவ்ருண் வான முதா3ர மந்த3 ஹஸித
தஸ்யாந்த ப்ரஸன்னானம்|
ராஜத் கம்பு3க3தா3ரி பங்கஜ த4ர
ஸ்ரீமத் புஜா மண்ட3லம்
ஸ்ரஷ்டுஸ் துஷ்டிகரம் வபுஸ் தவவிபோ4
மத்3ரோக3 முத்3வாஸயேத் ||(7 – 8)

கார்மேகம், காயாம்பூ, இவற்றைப் போன்ற தங்கள் திருமேனி தன் அழகான ஒளி மண்டலத்தால் திசை வட்டத்தை மறைக்கின்றது. தங்கள் திருமுகத்தில் கம்பீரமான மந்தஹாசம் நிலவுகிறது. சங்கு, சக்கரம், பத்மம், கதை இவற்றைத் தாங்குகின்றது தங்கள் புஜ மண்டலம். பிரம்மனுக்கு மகிழ்ச்சியைத் தந்த தங்கள் திரமேனி என் வியாதிகளைப் போக்க வேண்டும்.(7 – 8)

...................................................................................................................


த்3ருஷ்ட்வா ஸம்ப்4ருத ஸம்ப்4ரம : கமலபூஸ்
த்வத் பாத3 பாதோருஹே
ஹர்ஷாவேச’ வச’ம்வதோ3 நிபதித:
ப்ரீத்யா க்ருதார்தீ2ப4வன் |
ஜானஸ்யேவ மனீஷிதம் மம விபோ4
ஞானம் ததா3 பாத3ய
த்3வைதாத்3வைத ப4வத் ஸ்வரூப
பரமித்யாசஷ்ட தம் த்வாம் ப4ஜே ||(7 – 9)


பிரமன் பரபரப்படைந்து சந்தோஷத்தில் தங்கள் பாதங்களை வணங்கி “ஹே பிரபு! என் கோரிக்கையை தாங்கள் அறிவீர்கள். பரம், அபரம் என்ற தங்கள் ஸ்வரூப விஷய ஞானத்தை தந்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். அப்படிப்பட்ட தங்களை நான் பஜிக்கின்றேன். (7 – 9)

...................................................................................................................


ஆதாம்ரே சரணே வினம்ரமத2 தம்
ஹச்தேன ஹஸ்தே ச்’ப்ருச’ன்
போ4தஸ்தே ப4விதா ந ஸர்க3விதி4பிர்
ப3ந்தோ4Sபி ஸஞ்ஜாயதே |
இத்யா பா4ஷ்ய கி3ரம் ப்ரதோஷ்ய நிதராம்
தச்சித்த கூ3ட4: ஸ்வயம்
ஸ்ருஷ்டௌ தம் ஸமுதை3ரய: ஸ ப4க3வன்
னுல்லாஸ யோல்லாக4தாம்|| (7 – 10)

சிவந்த அடிகளில் விழுந்து வணங்கிய பிரமனின் கையைப் பிடித்துக் கொண்டு “உனக்கு ஞானம் உண்டாகட்டும். உனக்குச் சிருஷ்டி காரியத்தால் எந்த பந்தம் உண்டாகாது ” என்று கூறினீர். பிரமனை இவ்வாறு சந்தோஷப்படுத்தித் தாங்களும் அவன் உள்ளத்தில் மறைந்துறைந்து சிருஷ்டி செய்யத் தூண்டினீர். அப்படிப்பட்ட தாங்கள் என் ஆரோக்கியத்தைப் பெருக்க வேண்டும். (7 – 10)
 
த3ச’கம் 8 ( 1 to 5)

த3ச’கம் 8 – ப்ரலய வர்ணனம் ஜக3த் ஸ்ருஷ்டிப்ரகார வர்ணனம் ச

ஏவம் தாவத் ப்ராக்ருத ப்ரக்ஷயான்தே
ப்ராஹ்மே கல்பே ஹ்யாதி3மே லப்3த4 ஜன்மா |
ப்3ரஹ்மா பூ4யஸ் த்வத்த ஏவாப்ய வேதா3ன்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வ கல்போப மானாம் || (8 – 1)


மஹா பிரளயத்தின் முடிவில், முதல் பிரம்ம கல்பத்தில் தோன்றிய பிரமன், தங்களிடமிருந்து வேதங்களைப் பெற்றுக் கொண்டு, முன் கல்பத்தில் செய்தது போலவே சிருஷ்டித்தார். (8 – 1)

--------------------------------------------------------------------------------------------------------

ஸோSயம் சதுர்யுக3 ஸஹஸ்ர மிதான்ய ஹானி
தாவன் மிதாச்’ச ரஜனீர் ப3ஹுசோ’ நினாய |
நித்3ராத்யசௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வ ஸ்ருஷ்டைர்
நிமித்தக ப்ரலய மாஹுரதோSஸ்ய ராத்ரிம் || (8 – 2)


அந்த பிரமன் ஆயிரம் சதுர்யுக அளவு நீண்ட பகல்களையும், அதே அளவு நீண்ட இரவுகளையும் கழிக்கின்றான். பிறகு தான் படைத்த பிரஞ்சங்களுடன் அவனும் உங்களிடம் லயிக்கின்றான். பிரமனின் இரவு நைமித்திக பிரளயம் ஆகும். (8 – 2)

----------------------------------------------------------------------------------------------------------

அஸ்மாத்3ருசாம் புனரஹர்முக2க்ருத்ய துல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோத்யனுதி3னம் ஸ ப4வத்ப்ரஸாதாத் |
ப்ராக்3ப்ரஹ்ம கல்பஜனுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்த ப்ரபோ3த4ன ஸமாSஸ்தி ததா விஸ்ருஷ்டி: || (8 – 3)

பிரமன் நாம் காலைக் கர்மங்களைச் செய்வது போல புதிதாக சிருஷ்டியை அவனுடைய ஒவ்வொரு நாளும் செய்கின்றான். முந்திய பிரம்ம கல்பத்தில் ஜனித்த சிரஞ்சீவிகளின் சிருஷ்டி, அவர்கள் தூங்கி விழிப்பதற்கு ஒப்பாகும். (8 – 3)

----------------------------------------------------------------------------------------------------------

பஞ்சாச’த3ப்3த3 மது4னா ஸ்வவயோSர்த்த4 ரூபமேகம்
பரார்த்த4மதிவ்ருத்ய ஹி வர்த்ததேSசௌ |
தத்ராந்த்ய ராத்ரிஜனிதான் கத2யாமி பூ4மன்
பச்’சாத் தி3னாவதரணே ச ப4வத்விலாஸான் || (8 – 4)

பிரமன் தன் ஆயுளின் பாதியாகிய ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டான். எங்கும் நிறைந்த தேவா! பிரமனின் கடைசி இரவிலும் அதற்கு அடுத்த நாளின் துவக்கத்திலும் தாங்கள் புரியும் லீலைகளை இப்போது கூறுவேன். (8 – 4)

------------------------------------------------------------------------------------------------------

தி3னாவஸானேSத2 ஸரோஜயோனி:
ஸுஷுப்தி காமஸ்த்வயி ஸன்னிலில்யே |
ஜக3ந்தி ச த்வஜ்ஜட2ரம் ஸமீயுஸ்
ததே3த3மேகார்ணவமாஸ விச்’வம் || (8 – 5)


பிரமன் தன் பகல் முடிந்தவுடன் நித்திரை கொள்வதற்கு தங்களிடம் லயம் அடைந்தான். மூன்று உலகங்களும் உங்கள் வயிற்றில் ஒடுங்கின . அப்போது இந்த உலகம் முழுவதும் ஒரே சமுத்திரமாக ஆனது. (8 – 5)

-----------------------------------------------------------------------------------------------------------------
 
Apparently I forgot to post the daily quota of 5 poems yesterday!
I will make it up today. I am sure it won't matter much since today is a Sunday!
 
த3ச’கம் 8 ( 6 to 9)

த3ச’கம் 8 – ப்ரலய வர்ணனம் ஜக3த் ஸ்ருஷ்டிப்ரகார வர்ணனம் ச

தவைவ வேஷே பணி ராஜி சே’ஷே

ஜலைக சே’ஷே பு4வனே ஸ்ம சே’ஷே |
ஆனந்த3 ஸாந்த்3ரானுப4வ ஸ்வரூப :
ஸ்வயோக3 நித்3ரா பரிமுத்3ரிதாத்மா || (8 – 6 )

உலகம் முழுவதும் ஜலமயமானபோது, தங்களுடைய வேறு ஒரு உருவமான ஆதிசேஷன் மீது, சத் சித் ஆனந்த் ஸ்வரூபியான தாங்கள் ஆத்மயோக நித்திரையில் இருந்தீர்கள். (8 – 6)

---------------------------------------------------------------------------------------------------------------

காலாக்2ய ச’க்திம் ப்ரலயாவஸானே
ப்ரபோ3த4யேத்யா திச’தா கிலாதௌ3 |
த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்த ச’க்தி
வ்ரஜேன தத்ராகி2ல ஜீவதா4ம்னா || (8 – 7 )


மூலப் பிரக்ருதி முதலிய சக்தி சமூகங்கள் தங்களிடம் லயித்திருந்தன. சமஸ்த கோடி ஜீவன்கள் தங்களிடம் இளைப்பாறின. “பிரளயத்தின் முடிவில் என்னை எழுப்பு!” என்று காலத்திடம் நீங்கள் ஆணையிட்டீர்கள். பிரளத்தின் ஆரம்பத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து யோக நித்திரை செய்யத் தொடங்கினீர்கள். (8 – 7)

-----------------------------------------------------------------------------------------------------------

சதுர் யுகா3ணாம் ஸஹஸ்ரமேவம்
த்வயி ப்ரஸுப்தே புனரத்3 விதீயே |
காலாக்2ய ச’க்தி: ப்ரத2ம ப்ரபு3த்3தா4
ப்ராபோ3த3 யத்வாம் கில விச்’வநாத || (8 – 8)

விச்வநாதா ! ஒப்பார் இல்லாத தாங்கள் ஆயிரம் சதுர் யுகங்கள் இவ்வாறு நித்திரை செய்தீர்கள். பிறகு காலம் என்னும் சக்தி முதலில் எழுந்தது. பிறகு தங்களையும் நித்திரையிலிருந்து எழுப்பியது. (8 – 8)


-----------------------------------------------------------------------------------------------------------------


விபு3த்4ய ச த்வம் ஜலக3ர்ப்ப3 சா’யின்
விலோக்ய லோகானகி3லான் ப்ரலீனான் |
தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த:
ஸ்தி2தேஷு விச்’வேஷு த3தா3த2 த்3ருஷ்டிம் || (8 – 9 )

பிரளய ஜலத்தில் படுத்து உறங்கிய ஈசா ! தாங்கள் எழுந்த உடனேயே, காரண ரூபமாக உங்களிடம் லயித்திருந்த சமஸ்த லோகங்களையும் கடாக்ஷித்தீர்கள். (8 – 9)

--------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 8 (10 to 13)

ததஸ் த்வதீ3யாத3யி நாபி4ரந்த்4ராத்3
உத3ஞ்சிதம் கிஞ்சன தி3வ்ய பத்3மம் |
நிலீன நி:சேஷ பதா3ர்த்த2 மாலாம்
ஸம்க்ஷேப ரூபம் முகுலாயமானம் || ( 8 – 10)

அதன் பிறகு தங்கள் நாபியிலிருந்து, தங்களிடம் சூக்ஷ்ம ரூபத்தில் லயித்திருந்த ஜீவராசிகள் அனைத்தும் ஒரு திவ்வியமான தாமரை மொட்டு ரூபத்தில் வெளிப்பட்டன.

--------------------------------------------------------------------------------------------------------


ததே3தத3ம்போ3ருஹ குட்3மலம் தே
கலேப3ராத் தோய பதே2 ப்ரரூட4ம் |
ப3ஹிர் நிரீதம் பரித:ஸ்புரத்பி4:
ஸ்வதா4மபி4ர்த்4வாந்தமலம் ந்யக்ருந்தத்|| (8 – 11)


அந்தத் தாமரை மொட்டு தங்கள் சரீரத்திலிருந்து வளர்ந்து ஜலத்திற்கு மேலே வெளியே வந்தது. அது தன்னுடைய காந்தியினால் நான்கு திசைகளிலும் இருந்த இருளைப் போக்கடித்தது. (8 – 11)

-------------------------------------------------------------------------------------------------------


ஸம்புல்ல பத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மின் ப4வத் வீர்யக்4ருதே ஸரோஜே |
ஸ பத்3ம ஜன்மா விதி4ராவிராஸீத்
ஸ்வயம் ப்ரபு3த்3தா4கி2ல வேத3ராசி’ : || (8 – 12)


விசித்திரமான, நன்றாக மலர்ந்த இதழ்களை உடைய, தங்கள் யோக சக்தியால் தாங்கப்பட்ட அந்தத் தாமரைப் பூவில், பத்மஜன் என்னும் பிரமன் தானாகவே வந்து தோன்றினான். (8 – 12)

----------------------------------------------------------------------------------------------------
அஸ்மின் பராத்மன்னனு பாத்3ம கல்பே
த்வமித்த2 முத்தா2பித பத்3மயோனி: |
அனந்த பூ4மா மம ரோக3ராசி’ம்
நிருந்தி4 வாதாலயவாஸ விஷ்ணோ || (8 – 13)

பரமாத்மனே! எங்கும் வியாபித்துள்ள விஷ்ணோ! குருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் இந்த விதமாக பிரம்மனை சிருஷ்டித்தவரும், அளவற்ற மகிமையுடையவரும், ஆகிய தாங்களே என் வியாதிகளைப் போக்க வேண்டும்.


--------------------------------------------------------------------------------------------------------------
 
I just saw that nine people like this thread. :)

Thank you for liking something worthwhile. :pray2:

Now the 70+ year old book has been preserved and presented-

written in understandable Tamil lucidly for the benefit of all! :)

The time spent in typing the Sanskrit slokas is not wasted after all! :happy:
 
த3ச’கம் 9 ( 1 to 5)

த3ச’கம் 9 : ஸ்ருஷ்டி ப்ரகார வர்ணனம்

ஸ்தி2த: ஸ கமலோத்ப4வஸ்தவ ஹி நாபி4 பங்கேருஹே
குத: ஸ்விதி3த3மம்பு3தா4 வுதி3த1மித்யனாலோகயன் |
ததீ3க்ஷண குதூஹலாத் ப்ரதி தி3ச’ம் விவ்ருத்தானன:
சதுர்வத3ன தாமகா3த்3 விகஸத3ஷ்ட த்3ருஷ்டயம்பு3ஜாம் || (9 – 1)


பிரமன் தங்கள் நாபியிலிருந்து உண்டான அந்தத் தாமரையில் இருந்து கொண்டு, இந்தத் தாமரை எங்கிருந்து முளைத்தது என்று ஆலோசித்தான். அதைக் கண்டறியும் ஆவலுடன் எல்லா திசைகளிலும் முகத்தைத் திருப்பிய பொழுது, பிரமன் நான்கு முகங்களையும் எட்டுக் கண்களையும் பெற்றான். (9 – 1)

--------------------------------------------------------------------------------------------

மஹார்ணவ விகூ4ர்ணிதம் கமலமேவ தத் கேவலம்
விலோக்ய தது3பாச்’ரயம் தவ தனும் து நாலோகயன் |
க ஏஷ கமலோத3ரே மஹதி நி:ஸ்ஹாயோ ஹ்யஹம்
குத:ஸ்வி தி3த3மம்பு3ஜம் ஸம ஜனீதி சிந்தாமகா3த் || (9 – 2)


பெரிய கடலில் அசைகின்ற அந்த ஒரே ஒரு தாமரைப் பூவைக் கண்டும், அதைத் தாங்குகின்ற தங்கள் திருமேனியைக் காணாததால் “விசாலமான இந்தத் தாமரையில் தனியே இருக்கும் நான் யார்? இந்தத் தாமரை எங்கிருந்து முளைத்தது ?” என்று பிரமன் பலவாறு சிந்திக்கத் தொடங்கினான். (9 – 2)

----------------------------------------------------------------------------------------------------------

அமுஷ்யஹி ஸரோருஹ :கிமபி காரணம் ஸம்ப4வேத்
இதி ஸ்ம க்ருத நிச்’சய : ச க2லு நாலரந்த்4ராத்4வனா |
ஸ்வயோக3 ப3லவித்3யயா ஸமவரூட4வான் ப்ரௌட4தீ4:
த்வதீ3யமதிமோஹனம் ந து களேப3ரம் த்3ருஷ்ட்வான் || (9 -3 )

புத்திமான் ஆகிய அந்த பிரமன் இந்தத் தாமரைப் பூவிற்கு ஒரு ஆதாரம் இருந்தே ஆக வேண்டும் என்று நிச்சயித்துத் தனது ஞானம் யோகம் இவற்றால் தாமரைக் கொடியின் துவாரம் வழியாகக் கீழே இறங்கினார். ஆனால் தங்களைக் காண முடியவில்லை. (9 – 3)

------------------------------------------------------------------------------------------------------------

தத:ஸகல நாலிகா விவர மார்க3கோ3 மார்க3யன்
ப்ரயஸ்ய ச’தவத்ஸரம் கிமபி நைவ ஸந்த்3ருஷ்டவான் |
நிவ்ருத்ய கமலோத3ரே ஸுக2நிஷண்ண ஏகாக்3ர தீ4:
ஸமாதி4ப3ல மாத3தே4 ப4வத3னு க்3ரஹை காக்3ரஹீ || (9 – 4 )


தாமரைத் தண்டின் எல்லாத் துவாரங்கள் வழியே சென்று நூறு வருஷங்கள் தேடிய போதும் எதையுமே காண முடியவில்லை. திரும்பி வந்து தாமரைப் பூவின் நடுவில் சுகமாக அமர்ந்து கொண்டு, பிரமன் மனத்தை ஒரு நிலைப் படுத்தித் தங்கள் அனுக்ரஹத்தை மட்டுமே விரும்பிச் சமாதியில் ஆழ்ந்தான். (9 – 4)

----------------------------------------------------------------------------------------------------

ச’தேன பரிவத்ஸரைர் த்3ருட4 ஸமாதி4 ப3ந்தோ4ல்லஸத்
ப்ரபோ3த4 விச’தீ3க்ருத:ஸ க2லு பத்மினீ ஸம்ப4வ: |
அத்3ருஷ்ட சரமத்3பு4தம் தவ ஹி ரூபமந்தர் த்3ருசா’
வ்யசஷ்ட பரிதுஷ்ட தீ4ர் பு4ஜக3 போ4க3 பா4கா3ச்ரயம் || (9 – 5 )


தாமரரையில் பிறந்த பிரமன் நூறு தேவ வருஷங்கள் சமாதியில் இருந்தான். அதனால் உண்டான ஞானத்தால் அவன் நிர்மலன் ஆனான். இதற்கு முன்பு பார்த்திராத, ஆச்சரியமயமான, ஆதிசேஷனை ஆச்ரயித்திருந்த, தங்கள் சாக்ஷாத் உருவத்தை, மனக் கண்களில் கண்டான் . அதனால் மகிழ்ச்சி அடைந்தான். (9 – 5)

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 9 : ஸ்ருஷ்டி ப்ரகார வர்ணனம்

கிரீட முகுடோல்லஸத் கடக ஹார கேயூர யுக்3
மணிஸ்புரித மேக2லம் ஸுபரிவீத பீதாம்ப3ரம் |
காலாய குஸுமப்ரப4ம் க3லதலோல்லஸத் கௌஸ்துப4ம்
வபுஸ் தத3யி பா4வயே கமலஜன்மனே த3ர்சி’தம் || (9 – 6 )


கிரீடமும், முகுடமும் விளங்க; வளைகள், முத்து மாலைகள் அணிந்து கொண்டு; இரத்தின மேகலை அணிந்து கொண்டு , பீதம்பரம் தரித்துக் கொண்டு, கசாம்பூ நிறமுடைய கழுத்தில் கௌஸ்துபம் மின்னக் காட்சி அளித்தீர் பிரம்மனுக்கு. அப்படிப்பட்ட திருமேனியை நானும் தியானிக்கிறேன். (9 – 6)

---------------------------------------------------------------------------------------------------

ச்’ருதி பர்கர த3ர்சி’த ப்ரசுர வைப4வ ஸ்ரீபதே
ஹரே ஜய ஜய ப்ரபோ4 பத3 முபைஷி தி3ஷ்டயா த்3ருசோ: |
குருஷ்வ தி4யமாசு’ மே பு4வன நிர்மிதௌ கர்மடா2ம்
இதி த்3ருஹிண வர்ணித ஸ்வகு3ண ப3ம்ஹிமா பாஹி மாம் || (9- 7 )

“உபநிஷத்துக்கள் காட்டுகின்ற, அளவற்ற வைபவங்களுடைய, துக்கங்களைப் போக்குகின்ற, லக்ஷ்மிபதே! ஹரே! தாங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும். உங்கள் தரிசனம் கிடைத்தது என் பாக்கியமே. உலகத்தைப் படைக்கும் சமர்த்தனாக ஆவதற்கு எனக்குப் புத்தியைத் தர வேண்டும்!” என்று பிரமன் பிரார்த்தித்தான். இவ்விதம் அனேக குணங்களையுடைய தாங்கள் என்னைக் காக்க வேண்டும். (9 – 7)

---------------------------------------------------------------------------------------------------------------

லப4ஸ்வ பு4வனத்ரயீ ரசன த3க்ஷதாம் மக்ஷதாம்
க்3ருஹாண மத3னுக்3ரஹம் குரு தபச்’ச பூ4யோ விதே4 |
ப4வத்வகி2ல ஸாத4னீ மயி ச ப4க்திரத்யுத்கடே
த்யு தீ3ர்ய கி3ரமாத3தா4 முதி3த சேதஸம் வேத4ஸாம் || (9 – 8)

“ஹே பிரம்ம தேவா! அழிவில்லாததான மூவுலகங்களையும் படைக்கும் சாமர்த்தியத்தை அடைவாய்! என் அனுக்ரஹத்தைப் பெறுவாய்! மீண்டும் தவம் புரிவாய்! உனக்கு என்னிடம் மாறாத தீவிர பக்தி உண்டாகட்டும் ” என்று கூறி பிரம்மனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினீர்கள். (9 – 8)

----------------------------------------------------------------------------------------------------------------

ச’தம் க்ருத தபாஸ்தத: கலு தி3வ்ய ஸம்வத்ஸரான்
அவாப்ய ச தபோ ப3லம் மதிப3லம் ச பூர்வாதி4கம் |
உதீ3க்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வயுனா
ப4வத்3 ப3ல விஜ்ரும்பி4த: பவன பாத2ஸீ பீதவான் || (9 – 9)

பிரமன் நூறு தேவ வருஷங்கள் தவம் செய்தான். முன்னைக் காட்டிலும் அதிக தபோ பலமும் மதி பலமும் அடைந்தான். பிரளய காலத்து ஜலத்தில் தாமரை அசைவது கண்டு, தானே விருத்தி அடைந்து, அந்தக் காற்றையும், நீரையும் பருகினான். (9 – 9)

-------------------------------------------------------------------------------------------------------

தவைவ க்ருபயா புன :ஸரஸிஜேன தேனைவ ஸ:
ப்ரகல்ப்ய பு4வனத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜா நிர்மிதௌ |
ததா2வித4 க்ருபாப4ரோ கு3ருமருத் புராதீ4ச்’வர
த்வமாசு’ பரிபாஹி மாம் கு3ருத3யோக்ஷிதை ரீக்ஷிதை : || (9 – 10)

பிரமன் தங்கள் கிருபையினால் அந்தத் தாமரைப் பூவைக் கொண்டே மூன்று உலகங்களையும் உண்டு பண்ணி, பிரஜைகளையும் சிருஷ்டிக்கத் தொடங்கினான். அப்படிப்பட்ட கருணையுடைய தாங்கள், தங்கள் கனிந்த கண்களால் என்னைக் கடாக்ஷித்து விரைவாகக் காப்பாற்ற வேண்டும். (9 – 10)

------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 10 ( 1 to 5)

த3ச’கம் 10 ஸ்ருஷ்டி பே4த3 வர்ணனம்

வைகுண்ட2 வர்த்தி3த ப3லோS த பவத் ப்ரஸாதா3த்
அம்போ4ஜயோநிரஸ்ருஜத் கில ஜீவா தே3ஹான் |
ஸ்தா2ஸ்நூனி பூ4ருஹமயானி ததா2 திரச்’சாம்
ஜாதிர் மனுஷ்ய நிவஹானபி தே3வ பே4தா3ன் || (10 – 1)

தங்கள் அனுக்ரஹத்தினால் பிரமனின் பலம் விருத்தி அடைந்தது. மரம், செடி கொடிகள், தாவரங்கள், பட்சிகள், விலங்குகள், மனிதர்கள் என்று பலவேறு ஜீவாத்மாக்களின் உடல்களைச் சிருஷ்டித்தான்.
(10 – 1)

--------------------------------------------------------------------------------------------------

மித்2யா க்3ராஹாஸ்மி மதி ராக3 விகோப பீ4தி:
அஞ்ஞான வ்ருத்திமிதி பஞ்சவிதா4ம் ச ஸ்ருஷ்ட்வா |
உத்3தா3ம தாமஸ பதா3ர்த்த2 விதா4ன தூ3னஸ் தேனே
த்வதீய சரண ஸ்மரணம் விசுத்தையே || (10 – 2)

பிரமன் அறிவு மயக்கம், அஹங்கார மமகாரம், ஆசை, கோபம், பயம் என்று ஐந்து விதமான அஞ்ஞான மயமான விஷயங்களைப் படைத்தான். தமோ குணம் மிகுந்த இவற்றைப் படைத்ததால் வருத்தம் அடைந்து தங்கள் திருவடிகளை தியானம் செய்தான். (10 – 2)

---------------------------------------------------------------------------------------------------------


தாவத் ஸஸர்ஜ மனஸா ஸனகம் ஸனந்த3ம் பூய:
ஸநாதன முனிம் ச ஸனத் குமாரம் |
தே ஸ்ருஷ்டி கர்மணி து தேன நியுஜ்யமான:
த்வத் பாத3 ப4க்தி ரஸிகா ஜக்3ருஹூர் ந வாணீம் || (10 – 3)


தங்களைத் தியானித்த பிரமன் மனத்தால் சனகரையும், சனந்தரையும், சனாதன முனிவரையும், சனத் குமாரனையும் சிருஷ்டித்தார். சிருஷ்டி கர்மத்தில் அவர்களை பிரமன் ஏவினாலும், தங்கள் பாத பக்தியில் ஆர்வம் கொண்டதனால் அவர்கள் பிரமன் சொல்லை ஏற்கவில்லை. (10 – 3)

----------------------------------------------------------------------------------------------------------

தாவத் ப்ரகோபமுதி3தம் ப்ரதிருந்த4தோSஸ்ய
ப்4ரூமத்3யதோSஜனி ம்ருடோ3 ப4வதே3க தே3ச’ |
நாமானி குரு மே பதா3னி ச ஹா விரிஞ்சேதி
ஆதௌ3 ருரோத3 கில தேன ஸ ருத்ரநாமா || (10 – 4)

அப்போது பொங்கிய கோபத்தை பிரமன் அடக்கிக் கொண்டான். அவன் புருவமத்தியிலிருந்து தங்களின் அம்சமாகிய மிருடன் ஜனித்தான். பிறந்த உடனேயே அவன் “பிரமனே! எனக்கு பெயர்களையும், இடங்களையும் தர வேண்டும்; என்று அழுதான் . அதனால் ருத்திரன் என்ற பெயரைப் பெற்றான். (10 – 4)

--------------------------------------------------------------------------------------------------------------

ஏகாத3சா’ ஹ்வயதயா ச விபி4ன்ன ரூபம்
ருத்3ரம் விதா4ய த3யிதா வனிதாச்’ச த3த்வா |
தாவன்ய த3த்த ச பதா3னி ப4வத் ப்ரணூன்னா
ப்ராஹ ப்ரஜா விரசனாய ச ஸாத3ரம் தம் || (10 – 5)

தங்களால் ஏவப்பட ருத்திரன் பதினோரு உருவங்களையும், பதினோரு பெயர்களையும், பதினோரு பத்தினிகளையும், பதினொரு ஸ்தானங்களையும் அடைந்தான். ருத்திரனிடம் பிரஜைகளை சிருஷ்டிக்கும்படிக் கூறினான் பிரமன். (10 – 5)

--------------------------------------------------------------------------------------------------------
 
Visalam Madam

Sorry to interrupt in this thread by posting my message . First of all congrats on your efforts to bring online Srimad Narayaneeyam in Tamil online and I have marked your Narayaneeyam Blog for my own personal use and also to share it with others and this is a text that I have never read it all and only bought the books and hopefully read it in due course and also refer your blog for the same .
I have a question and I hope you can answer the same :
In Bhagavad Gita there is a saying that if you cant chant the entire Gita at least Chant daily the Chapter-15 of the Bhagavad Gita before meals as Chapter 15 is a short one ( just 20 verses ) and also has the shloka to invoke the Vaishwanara digestive energy .I want to know whather in Narayaneeyam any particular Chapter is there that is suited for daily Nitya Parayanam especially for busy people . Would like you to point out any such specific chapters for daily Nitya Parayana and I would also like you to suggest who has chanted Srimad Narayaneeyam very clearly so that I can buy their CD and start following the same .Since Krishna Jayanthi is fast approaching I wish to keep Sri Mad Narayaneeyam as one text that I do for my Nitya Parayanam ( at least 1 chapter )
Hoping for your reply in this .
 
Dear Mr. Krishna,

Sorry I got to see your post now. I was typing Naaraayaneeyam and Thirumanthiram all day long!

Rama naamaa is equal to the Vishnu Sahasranaama according to none less than Lord Siva.

The original Bhaagavata mahaa puraana has 18.000 verses. Sri Naaraayana Bhattari condensed them into ~ 1000 slokas - divided into 100 dasakams. Each one is pearl and you want me to select the best among all those exquisite pearls.

The 90th dasakam onwards deals with not just stories of the bhaktas but about the tatvas and the vibhooti of God. But I love the 100th dasakam which describes God from his head to his foot very beautifully.

It deals about the beauty of krishna as well his mahima. And it is very useful for dhyaanam and dhaarana. I myself had used the description along with the popular poster of Sri Guruvaayoorappan for serious meditation successfully.

So I will vote for the 100th dasakam. If you read it and love God as you would do your own child or grandchild it will work wonders!

I shall present it here for the sake of the members who have some inexplicable fear / phobia to enter a blog - any blog!
 
த3ச’கம் 100 ( 1 to 5)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

அக்3ரே பச்’யாமி தேஜோ நிபி3ட3தர கலாயாவலி லோப4நீயம்
பீயூஷாப்லவிதோஹம் தத3னு தது3த3ரே தி3வ்ய கைசோ’ர வேஷம் |
தாருண்யாரம்ப4 ரம்யம் பரமஸுக ரஸாஸ்வாத் ரோமாஞ்சிதாங்கை3:
ஆவீதம் நாரதா3த்4யை விலஸத்3 உபநிஷத் ஸுந்த3ரி மண்ட3லைச்’ச|| ( 100 – 1)

நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன். அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன். அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால் மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன். பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, நாரதர் முதலானவர்களும், சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)

-----------------------------------------------------------------------------------------------------------------------

நீலாப4ம் குஞ்சிதாக்3ரம் க4னமமலதரம் ஸம்யதம் சாரு ப4ங்க்3யா
ரத்னோத்தம் ஸாபி4ராமம் வலயித முத3யச் சந்த்3ரகை: பிஞ்ச2 ஜாலை:|
மந்தார ஸ்ரங்நிவீதம் தவ ப்ருது2கபரீபா4ரமாலோகயேஹம்
ஸ்நிக்3த4 ஸ்வேதோர்த்4வ புண்ட்3ராமபி ச ஸுலலிதாம் பா2ல பா3லேந்து3வீதீ2ம் || ( 100 – 2)

நீலநிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும், ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின் வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்; பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்; அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.( 100 – 2)

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஹ்ருத்3யம் பூர்ணானு கம்பார்ணவ ம்ருது3லஹரி சஞ்சல ப்4ரூவிலாசை:
ஆநீல ஸ்நிக்3த4 பக்ஷ்மாவலி பரிலஸிதம் நேத்ர யுக்3மம் விபோ4 தே|
ஸாந்த்3ரச்சாயம் விசா’லாருண கமலத3லாகர மாமுக்3த4 தாரம்
காருண்யா லோகலீலா சி’சி’ரித பு4வனம் க்ஷிப்யதாம் மய்யநாதே2 || ( 100 – 3)

ஹே பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும், மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்; அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்; மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால் உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆஆகிய தங்களுடைய இரண்டு கண்களும் அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும் ( 100 – 3)

-----------------------------------------------------------------------------------------------------------------------
உத்துங்கோ3ல்லாஸி நாஸம் ஹரிமணி முகுர ப்ரோல்லஸத்3 க3ண்ட3பாலீ
வ்யாலோலத்கர்ண பாசா’ஞ்சித மகரமணி குண்டல த்3வந்த்3வ தீப்ரம்|
உன்மீலத்3 த3ந்த பங்க்தி ஸ்புரத3ருணதரச் சாய பி3ம்பா3த4ராந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி3 மந்த3ஸ்மித மது4ரதரம் வக்த்ரமுத்3 பா4ஸதாம் மே || ( 100 – 4)

உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடிபோல விளங்குகின்ற கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்; அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில் பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்; ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.(100-4)

-----------------------------------------------------------------------------------------------------------------------

பா3ஹு த்3வந்த்3வேன ரத்னோஜ்ஜ்வல வலயப்4ருதா சோண பாணி ப்ரவாலேன்
உபாத்தம் வேணு நாலீம் ப்ரஸ்ருத நக2மயூகா2ங்கு3லீ ஸங்க3 ஸார
க்ருத்வா வக்த்ராரவிந்தே3 ஸுமது4ர விகஸத்3 த்3ராகமுத்3பா4வ்யமானை:
ச’ப்த3 ப்ரஹ்மாம்ருதைஸ்த்வம் சி’சி’ரித பு4வனை: ஸிஞ்ச மே கர்ண வீதீம்||(100- 5)

ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய; இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால் சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு; இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற நாதபிரம்மம் ஆகிய அமிர்தத்தால் என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்கவேண்டும்.(100-5 )

---------------------------------------------------------------------------------------------------------------------
 
உத்ஸர்பத் கௌஸ்துப4 ஸ்ரீததிபி4ரருணிதம் கோமலம் கண்ட2 தே3ச’ம்
வக்ஷ: ஸ்ரீ வத்ஸரம்யம் தரலதர ஸமுத்3 தீ3ப்ர ஹார ப்ரதானம்|
நானவர்ண ப்ரஸூனாவலி கிஸலயிநீம் வன்யமலாம் விலோல
லோலம்பா3ம் லம்ப3 மானா முரஸி தவ ததா2 பா4வயே ரத்னமாலாம் || ( 100- 6)


உயரக் கிளம்புகின்ற கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்; ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்; பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும், அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய வனமாலையையும், அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன்.(100-6 )

------------------------------------------------------------------------------------------------------


அங்கே3 பஞ்சாங்க3ராகை 3: அதிச’ய விகஸத் சௌரபா4 க்ருஷ்ட லோகம்
லீனானேக த்ரிலோகீ விததிமபி க்ருசா’ம் பி3ப்4ரதம்மத்3ய வல்லீம் |
ச’க்ராச்’மன்யஸ்த தப்தோஜ்ஜ்வல கனகநிப4ம் பீத சேலம் த3தா4னம்
த்4யாயாமோ தீப்தரச்’மி ஸ்புட மணிரச’னா கிங்கிணீ மண்டி3தம் த்வாம் || ( 100 – 7 )

சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால் ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக பிரம்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில் லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்; இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின் கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஊரூ சாரூ தவோரூ க4னமஸ்ருணா ருசௌ சித்தசோரௌ ராமாயா:
விச்’வ க்ஷோப4ம் விசங்க்ய த்4ருவமணி ச’முபௌ4 பீத சேலா வ்ருதாங்கௌ3 |
ஆனம்ராணாம் புரஸ்தான்னயஸன் த்3ருத ஸமஸ்தார்த்த2 பாலி ஸமுத்3க3
ச்சா2யம் ஜானுத்3வயஞ்ச க்ரம ப்ருது2ல மனோக்ஞே சஜங்கே4 நிஷேவே|| ( 100 – 8


மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த, (அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால் மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட, புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்; கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக்கால்களையும் சேவிகின்றேன்.( 100 – 8 )

-----------------------------------------------------------------------------------------------------
மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை3ரிவ பத3ப4ஜனம் ச்’ரேய இத்யாலபந்தம்
பாதா3க்3ரம் ப்4ராந்தி மஜ்ஜத் ப்ரணத ஜன மனோ ம்ந்த3ரோத்3தா4ரகூர்மம் |
உத்துங்கா3தாப்4ர ராஜன்னகர ஹிமகர ஜ்யோத்ஸ்னயா சாச்’ரிதானாம்
ஸந்தாப த்4வாந்த ஹன்த்ரீம் தாதிமனுகலயே மங்க3லா மங்கு3லீனாம் || ( 100 – 9)


திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )

------------------------------------------------------------------------------------------------------

யோகீ3ந்த்3ராணாம் த்வத3ங்கே3ஷ்வதி4க ஸுமது4ரம் முக்தி பா4ஜாம் நிவாஸோ
ப4க்தானாம் காமவர்ஷத்யுதரு கிஸலயம் நாத2 தே பாத3 மூலம் |
நித்யம் சித்தஸ்தி2தம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ4
ஹ்ருத்வா நிச்’சே’ஷதாபான் ப்ரதி3ச’து பரமானந்த3 ஸந்தோ3ஹ லக்ஷ்மீம்||
( 100 – 10)

ஹே! நாதா! ஹே குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே கிருஷ்ணா! யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும், மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய தங்கள் பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)

------------------------------------------------------------------------------------------------------

அஞாத்வா தே மஹத்வம் யதி3ஹ நிக3தி3தம் விச்’வநாத2 க்ஷமேதா2:
ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதி4கதரம் த்வத் ப்ராஸாதா3ய பூ4யாத் |
த்3வேதா4 நாராயணீயம் ச்’ருதிஷு ச ஜனுஷா ஸ்துத்யதா வர்ணனேன
ஸ்பீதம் லீலாவதாரை ரித3மிஹ குருதாம் ஆயுராரோக்3ய சௌக்யம்|| ( 100 -11)


ஹே ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ அதைத தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரத் துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை அ டைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும். வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும், ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட “நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும். ( 100 -11)

------------------------------------------------------------------------------------------------------

நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||
ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

https://sreemannarayaneeyam.wordpress.com/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top