• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Mamas and Samayal!

Anathakumar: Since you have a flare for Haasyam, you can also write what you had observed in marriages in old times such as, with Veetilai Pakku in the mouth, mama saying, . என்னாங்காணும்? மாப்பிள்ளை பம்பாய்க்கு போரானாமே! அங்கே எல்லாம் சந்தியாவந்தனம் எப்படி செய்வான்.ஆபீசிலே அதெல்லாம் செய்ய விடுவாளா? சேட்ஜி, இவன் ஏதோ அதர்வண வேதம் ஓதரான்னு நெனைச்சுண்டா ஆபத்தாச்சே! பேஷா இங்கேயே விட்டுப் போயிடுவான். வாத்தியார் பிரண்டு வெங்கடராமன், அம்பி மொத்த வருஷ தட்சிணையும் தந்துடு. மத்ததை நான் பாத்துக்கிறேன். தர்பை புல்லை கையிலே தந்து ஒரு சங்கல்பண்ணா போச்சுன்னாராம். பாத்தீரா ,கலிககாலம் முத்தி போச்சு. மாப்பிள்ளை குடுமியை எடுத்துட்டானாமே! ஏனாம். பம்பாயிலே குடுமி வச்சுண்டா தப்பா? அதில்லைங்காணும். நம்ம பொண்ணுதான் எடுக்கச் சொன்னாளாம். அட பாவமே! ஏங்காணும் என் தலையிலே இருக்கற பேனை எடுக்கவே நேரமில்லை, தலையை அரிக்கறதேன்னு அவன் சொன்னா அவன் தலைப் பேனையும்னா எடுக்கணும். மேலும், எண்ணை விக்கற வெலையிலே வாரம் ரெண்டு பேருக்கும் ஆழாக்கு எண்ணை வாங்கி கட்டுபடியாகுமா கோந்தைன்னு ஆத்துக்காரி வேற தூபம் போட்டா! அத்தோட குடுமி இருந்தா என்னா? ஜானவாசத்துக்கு மாப்பிள்ளை கோட்டு-சூட்டு போட்டுன்னாதான் நன்னாயிருக்கும் .அத்தோட, கோப்ரா ( )பிராண்டு ஷூ இருந்ததாத்தான் ஷோக்கா இருக்கும்னு அத்திம் வேரே தூபம் போட்டார். பொண்ணு அதை போட்டுக்க, குடுமி இருந்தா நன்னவா இருக்கும்னு கேட்டாளம். எல்லாம் பிராப்தங்காணும். மாப்பிள்ளை நன்னா ஆப்டுண்டானே!...

Add your observations please. This will uplifting foreign living Brahmin too!
:) :) Neengale nanna ezhutharel Saar!
 
:) :) Neengale nanna ezhutharel Saar!
அப்படி சொல்லதேங்கோள். நாலு பேர் கேட்டா சிரிக்க மாட்டளோ?. நீங்கள் சொல்லற வசனங்கள்லே ஐயோ, சௌகார் ஜானகி பேசற மாதிரி அச்சு அசலா இருக்கே! இது ஒங்க கடை. கொல்லன் ஒலையிலே ஊசி விக்கற மாதிரி ஏதோ அசட்டு பிசட்ட எழுதினா, கேலிக்கூத்தன்னா.! நம்மாத்து மாமிக்கு அதெல்லாம் புடிக்காதே! தேமேன்னு நீங்களே எழுதுங்கோ.
 
On a serious note, when I read your post that gives impetus to write. I have always enjoyed jovial atmosphere and always make people smile. Thus, my stress level is extremely low. Singing and joking are born talents and you have it. I was not mocking at you, rather you inspire others to join this group. We all have problem, we list them as though we have invented them, but seldom give any workable solution. Jokes are not predetermined and rather flows like a rivers and the rivers are rare now. I watch people and write down their jokes to read again and laugh aloud. I do not carry the burden of bad mouthing India by regurgitating news which every one reads. Any way your contribution is great. I always call a spade as spade.

Now one of jokes from the music world: Elathur(Tirunelveli dist) Bhagavathar ( I have to find his name) used to be tough with his Mrudangam vidwan and always criticized him on the concerts.. So, the Mridangamist was looking for an opportunity to take revenge on the Bhagavatar. So, one day the Bagavatar sent his daughter to perform in a Kacheri. The girl asked the Mridangam vidwan, how can I control stage fright? He said, my niece, I am giving you milk with medicines, drink it and you stage fear will vanish. The girl obliged him. So, when she started "Vata-pi Ganapathim..", maamaa vayaru ennomo sariyilleye and she went to bath room (rest room in the west, kakkuus in India) and never returned. It was said "ava eduththa sombai kezhe vaikave illaiyame"!. The Mridangamist had added "NErvalam" a laxative in the milk. The Bhagavatar learned this lesson. This was told by a Musician when I was young. It is in my collection. So, the slogan is "Mridangam vidwan thaan mattum thani avaarthanam panna maattan, padaravalaimume panna vachiduvaan. jaakrathai". But every one was careful with Ariyakudi RamanujaIyengar!
 
Bhakyam Ramaswamy use to write like you do. We need more Hasyam than Dhukkam if you are married and is not compatible with you. That is called Karma Balan. Ambi, antha payyanukku naanthan jathakam paartheen. Besha proutham irunthathu antha ponnoda. Aaana paru, pona janma pavam ippo avaalai thoratharathu. Adu avar karma bhlannuthan chollanum. Aaana pon janmathile avan pondaadiya iruthu avalai paduthinono illaiyo, ippu purushanaa aapaadundaan. athukku naan enna cheeyaa mudiyum? Pariharam irukkannu kettaan paiyan. Ambi, ippo pura pavathaiyum aupavikallainaa, adutha jenmathileyum avale vanthu uchirai vaanguvaal. Demennu , sarvam krishna mayannu chollindu chmaalichukonnen. Ippo ellam ennai kuparathe illai. Swamy, unmaiya chonna intha kalathele kudithanam nadatha tmudiyaathu.
 
On a serious note, when I read your post that gives impetus to write. I have always enjoyed jovial atmosphere and always make people smile. Thus, my stress level is extremely low. Singing and joking are born talents and you have it. I was not mocking at you, rather you inspire others to join this group. We all have problem, we list them as though we have invented them, but seldom give any workable solution. Jokes are not predetermined and rather flows like a rivers and the rivers are rare now. I watch people and write down their jokes to read again and laugh aloud. I do not carry the burden of bad mouthing India by regurgitating news which every one reads. Any way your contribution is great. I always call a spade as spade.

Now one of jokes from the music world: Elathur(Tirunelveli dist) Bhagavathar ( I have to find his name) used to be tough with his Mrudangam vidwan and always criticized him on the concerts.. So, the Mridangamist was looking for an opportunity to take revenge on the Bhagavatar. So, one day the Bagavatar sent his daughter to perform in a Kacheri. The girl asked the Mridangam vidwan, how can I control stage fright? He said, my niece, I am giving you milk with medicines, drink it and you stage fear will vanish. The girl obliged him. So, when she started "Vata-pi Ganapathim..", maamaa vayaru ennomo sariyilleye and she went to bath room (rest room in the west, kakkuus in India) and never returned. It was said "ava eduththa sombai kezhe vaikave illaiyame"!. The Mridangamist had added "NErvalam" a laxative in the milk. The Bhagavatar learned this lesson. This was told by a Musician when I was young. It is in my collection. So, the slogan is "Mridangam vidwan thaan mattum thani avaarthanam panna maattan, padaravalaimume panna vachiduvaan. jaakrathai". But every one was careful with Ariyakudi RamanujaIyengar!
Ha Ha Ha! Hilarious episode!
 
Bhakyam Ramaswamy use to write like you do. We need more Hasyam than Dhukkam if you are married and is not compatible with you. That is called Karma Balan. Ambi, antha payyanukku naanthan jathakam paartheen. Besha proutham irunthathu antha ponnoda. Aaana paru, pona janma pavam ippo avaalai thoratharathu. Adu avar karma bhlannuthan chollanum. Aaana pon janmathile avan pondaadiya iruthu avalai paduthinono illaiyo, ippu purushanaa aapaadundaan. athukku naan enna cheeyaa mudiyum? Pariharam irukkannu kettaan paiyan. Ambi, ippo pura pavathaiyum aupavikallainaa, adutha jenmathileyum avale vanthu uchirai vaanguvaal. Demennu , sarvam krishna mayannu chollindu chmaalichukonnen. Ippo ellam ennai kuparathe illai. Swamy, unmaiya chonna intha kalathele kudithanam nadatha tmudiyaathu.
Talking about music and Tambrahm humour I am not sure if you have read this article of mine.


Pls read if you haven't and give your feedback!
 
Talking about music and Tambrahm humour I am not sure if you have read this article of mine.


Pls read if you haven't and give your feedback!
Not ony hilerious, but also shows how South Indian Mama mamis (unfortunately no Other than Brahmans talk like this - at least I have not heard) kep their sanity. They have their own world of views and heir perceptions are very interesting. You have created moe or less a musical drama. Thanks.
I will add my observations too, but it will take more time. This is a typical Mylapore Mama- Mami's music-bharatam. You are blessed to have this sense of humour. Hope your better half also laughs with you.
 
கச்சேரி களேபரம்:

சங்கீத சீசன்லே பார்வதி மாமி- ஆம்படையான் ஐயாசாமி விவாதம்:-

ஏன்னா, இனிமே ஒங்க பிரண்சு -சுப்பணி, குப்புணி எல்லாறையும் சாயரட்சை 5 மணிக்கு மேலே வரச்சொல்லுங்கோ. அவா கூடவே கச்சேரிக்கு போங்கோ. ஆத்திலே அரட்டை கச்சேரி வேண்டாமே?

ஐயாசாமி : பாரூ, அவா மேல என்ன கோவம்?. சுப்பணிதானே கோவில் பிரசாதம் கொண்டு வந்து, அக்கா கபாலீஸ்வரர் கோவில் நைவேத்யம், சிண்டுதான் கொடுக்க சொன்னா என்பானே! நீயும்தான், அண்ணா ஒருவாய் காப்பி குடிச்சுட்டு போங்கோன்னு ரெண்டாதர டிகாஷன் லே காப்பி போட்டு கொடுப்பே! இப்ப திடீர்ன உத்தரவு போடற சூஷுமம் என்ன?

பார்வதி மாமி: அபசாரம். அபசாரம். ஒங்க கூட இருந்த எனக்கும் ஒங்கம்மா அப்பிடதானே காப்பி தருவா! அது பத்தி எனக்காக பரிஞ்சு பேசி இருக்கேளா! ஜோசியர் அப்பவே சொன்னார். பையன் ஜாதகத்திலே 8-ம் மடத்திலே வக்ர சனி இருக்கான். கொஞ்சம் அசட்டு பிடிவாதம் இருக்குன்னார். கஞ்சுப்பட்டி குப்புசாமி ஜோசியிரா கொக்கான்னா! நான் நன்ன ஆப்டுண்டேன். நானும் மேனகா கலைக்டர் மாதிரி படிச்சிருந்தா, சுப்ரிம் கோர்ட்டு சுந்தர் ராமன் வீட்டு மருமகளா ஜம்னு இருந்திருபப்பேனே! கொடுப்பினை இல்லையே! எல்லாம் என் தலை எழுத்து!

ஐயாசாமி: பாரூ, பேரன் பேத்தி எடுத்த சுமங்கலீன்னு எல்லாருமே ஒன்னை கொண்டாறராளே! பரலோகம் போன எங்கம்மாவை ஏன் கூப்படரே! நோக்கு ஒன்னு தெரியுமோ? நீ ஆசைப்பட்ட மாங்கா பார்ட போட்ட சுங்குடி பொடவை வந்தாச்சு. இன்னைக்கு நல்ல நாள். தலைப்பிலே குங்குமம் தடவி உடுத்திக்கோ! பக்கத்தாத்து தருதலை பத்மா மாமி கூட கோவிலிக்கு போயிட்டுவா. பாக்க அம்பாள் மாதிரியே இருப்பே!

பார்வதி மாமி: ஏன்ன என்மேலே எவ்ளோ பிரியம். ஜாதகத்லே சுக்ர பலம் ஜாஸ்தின்னதுதான் தெருயுமே! அது சரி, நான் ஏன் ஒங்க பிரண்ட்சுகளை 3-மணிக்கே வரவேண்டாம்னேன்னா, பால் இருக்கறதில்லை! நீங்களும் "இது நம்பளுக்கு மட்டும்தான்னு ,அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டுவர வெலை ஒசந்த "பத்மனா காபி" காபி பவுடர்லே காப்பி போட்டா கட்டுபடியாகுமா? சிக்கரி கலந்த காபி குடிச்சவா எல்லாம் ,மன்னீ இது ஏக்ளாஸ் இன்னம் கொஞ்சம் கூட தாங்கோன்னா கட்டுபடி ஆகுமோ". நீங்களோ இந்தமாசம் காப்பி பொடி பட்ஜட் இவ்ளவுதான்ங்கறேள்! நான்தான் எலிப்பொறியிலே ஆப்டுண்ட எலியா தவிக்கிறேன்". இப்போ புரிஞ்சுதோ இந்த பாருவோட மகிமை.! சரி புது பொடவை உடுத்திண்டு கோவிலக்கு போயிட்டுவரேன். ஹேமா மாமி நாட்டுப்பொண்கிட்டே பேசி ரொம்ப நாளாச்சு. ரெண்டு முருக்கு ,டம்ளர்லெ குடிக்க ஜலம் வச்சுருக்கேன்! சீரியல் பாத்துண்டே தூங்கி வழியாதேங்கோ! வந்து வாசல் கதவை தட்டி கை வலிச்சா காலம்பற நீங்கதான் காப்பி போடணும்!

ஐயாசாமி: கவலைப் படாதேடீ பாரு! பழய அனுபவங்கள் அல்சீமர் மறதி தோய்வந்தாலும் மறக்காதுன்னு கோபால்சாமி சொன்னான். நேக்கு இன்னும் அல்சீமரோ அல்லாவுதீன் சீமரோ இல்லையே! பாக்யம் ராமசாமி -சீத்தா கெழவி சீரியல் மறக்கவே இல்லையே!.
 
கச்சேரி களேபரம்:

சங்கீத சீசன்லே பார்வதி மாமி- ஆம்படையான் ஐயாசாமி விவாதம்:-

ஏன்னா, இனிமே ஒங்க பிரண்சு -சுப்பணி, குப்புணி எல்லாறையும் சாயரட்சை 5 மணிக்கு மேலே வரச்சொல்லுங்கோ. அவா கூடவே கச்சேரிக்கு போங்கோ. ஆத்திலே அரட்டை கச்சேரி வேண்டாமே?

ஐயாசாமி : பாரூ, அவா மேல என்ன கோவம்?. சுப்பணிதானே கோவில் பிரசாதம் கொண்டு வந்து, அக்கா கபாலீஸ்வரர் கோவில் நைவேத்யம், சிண்டுதான் கொடுக்க சொன்னா என்பானே! நீயும்தான், அண்ணா ஒருவாய் காப்பி குடிச்சுட்டு போங்கோன்னு ரெண்டாதர டிகாஷன் லே காப்பி போட்டு கொடுப்பே! இப்ப திடீர்ன உத்தரவு போடற சூஷுமம் என்ன?

பார்வதி மாமி: அபசாரம். அபசாரம். ஒங்க இருந்தா எனக்கும் ஒங்கம்மா அப்பிடதானே காப்பி தருவா! அது பத்தி எனக்காக பரிஞ்சு பேசி இருக்கேளா! ஜோசியர் அப்பவே சொன்னார். பையன் ஜாதகத்திலே 8-ம் மடத்திலே வக்ர சனி இருக்கான். கொஞ்சம் அசட்டு பிவாதம் இருக்குன்னார். கஞ்சுப்பட்டி குப்புசாமி ஜோசியிரா கொக்கான்னா! நான் நன்ன ஆப்டுண்டேன். நானும் மேனகா கலைக்டர் மாதிரி படிச்சிருந்தா, சுப்ரிம் கோர்ட்டு சுந்தர் ராமன் வீட்டு மருமகளா ஜம்னு இருந்திருபப்பேனே! கொடுப்பினை இல்லையே! எல்லாம் என் தலை எழுத்து!

ஐயாசாமி: பாரூ, பேரன் பேத்தி எடுத்த சுமங்கலீன்னு எல்லாருமே ஒன்னை கொண்டாறராளே! பரலோகம் போன எங்கம்மாவை ஏன் கூப்படரே! நோக்கு ஒன்னு தெரியுமோ? நீ ஆசைப்பட்ட மாங்கா பார்ட போட்ட சுங்குடி பொடவை வந்தாச்சு. இன்னைக்கு நல்ல நாள். தலைப்பிலே குங்குமம் தடவி உடுத்திக்கோ! பக்கத்தாத்து தருதலை பத்மா மாமி கூட கோவிலிக்கு போயிட்டுவா. பாக்க அம்பாள் மாதிரியே இருப்பே!

பார்வதி மாமி: ஏன்ன என்மேலே எவ்ளோ பிரியம். ஜாதகத்லே சுக்ர பலம் ஜாஸ்தின்னதுதான் தெருயுமே! அது சரி, நான் ஏன் ஒங்க பிரண்ட்சுகளை 3-மணிக்கே வரவேண்டாம்னேன்னா, பால் இருக்கறதில்லை! நீங்களும் "இது நம்பளுக்கு மட்டும்தான்னு ,அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டுவர வெலை ஒசந்த "பத்மனா காபி" காபி பவுடர்லே காப்பி போட்டா கட்டுபடியாகுமா? சிக்கரி கலந்த காபி குடிச்சவா எல்லாம் ,மன்னீ இது ஏக்ளாஸ் இன்னம் கொஞ்சம் கூட தாங்கோன்னா கட்டுபடி ஆகுமோ". நீங்களோ இந்தமாசம் காப்பி பொடி பட்ஜட் இவ்ளவுதான்ங்கறேள்! நான்தான் எலிப்பொறியிலே ஆப்டுண்ட எலியா தவிக்கிறேன்". இப்போ புரிஞ்சுதோ இந்த பாருவோட மகிமை.! சரி புது பொடவை உடுத்திண்டு கோவிலக்கு போயிட்டுவரேன். ஹேமா மாமி நாட்டுப்பொண்கிட்டே பேசி ரொம்ப நாளாச்சு. ரெண்டு முருக்கு ,டம்ளர்லெ குடிக்க ஜலம் வச்சுருக்கேன்! சீரியல் பாத்துண்டே தூங்கி வழியாதேங்கோ! வந்து வாசல் கதவை தட்டி கை வலிச்சா காலம்பற நீங்கதான் காப்பி போடணும்!

ஐயாசாமி: கவலைப் படாதேடீ பாரு!
 
I forgot to mention that inspite of all these back and forth conversation between Mama and Mami heir affecgtion and implicit love never change. That is why our Mami's are called "Devis". The proverb- Mamai Bhuma Devi maahri, enaa porumai" is a tribute to them. I have seen with four of my mamas and only one was in "Elipori". But I use to wonder where did they get this jovial but not serious conversation? How do they deveop such an implied love? May be exchange of chromosome when Mami gets pregnant, but Mama never gets any DNA back! This Deva rahasiam is the root of all our Mama-Maami interactions. You bring this very nicely and this is enough for the forum to lighten up all the readers (some may need kichukichu is another story). Hats off to you.
 
அம்பி பேஷ் பேஷ். மாமாக்கள் என்ன சொல்றான்னா, எங்காத்திலே எல்லாத்தை
யும் வேலலைக்காரனே பாத்துக்கறான்ங்கறாள். எல்லாத்தையுமா என்று (வீட்டு வேலைகளை மனசிலே நெனைச்சுண்டு) ஆச்சரியத்தோட கேட்டா, அயோக்கிய ராஸ்கல்னு அடிக்கவரா? தமிழிலே ரெட்டை அர்த்தம் இருக்கும்ங்கறதை மறக்கபடாதுங்கறா மாமிகள். இனிமேலே பாலக்காட்டு தமிழிலே, அங்ஙனயாகணும்னு/ அதே? ன்னுதான் சொல்லணும்.--அம்பி கோண்டு
 
கல்யாண கலாட்டா:

மும்பை நண்பர்ஒருவர் என்னை மாப்பிள்ளை தோழனாக வர வற்பறுத்தினார். அதற்குமுன் 2 தடவை மாப்பிள்ளைத் தோழனாக போய் அவஸ்தை பட்டது மறக்கவில்லை .ஆகவே, தாலிகட்டி , சேஷோப ஔபாஸனம் முடிந்து, ராத்திரி சாந்தி மூஷூர்த்தத்க்கு படுக்கை அறைக்குள் போகுறவரை என் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதாக சத்தியம் செய்தான். கலியாணம் திருவனந்தபுரத்தில். பையன் குடும்பத்தில் ஒன்றுவிட்ட அத்தை பெரியம்மா உட்பட சமார் 30 பேர்கள் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தோம்.

அங்கே இறங்கினதும் முதல் வேலையாக நேராக சமையல் அறைக்கு அவசரஅவசரமாக போனேன். வாயில் வெத்தலை பாக்கு அறைத்துக் கொண்டிருந்தவரிடம், திருமேனி, இங்ஙனே நளபாக மூப்பர் எவடேன்னு கேட்டேன். சாரே , தமிழ் வளர பங்கியாயிட்டு சம்சாரிக்கும். எண்ட பேரு முத்துசாமி ஐயராணும். ஞான்தன்னே சீப்ஃ குக் ஆகணும் என்றார். என்த வர்த்தமானம்? நிங்கள் ஆராகணும் என்று கேட்டார். (என்னோட மாமிக்கு எர்ணகுளம் பூர்வீகம். மாமிகிட்டே கத்துண்ட அரை-குறை மலையாளம் ஞான் சம்சாரிக்கும்). நமஸ்காரம் ஸ்வாமிகளே! நான் கோபாலன். மாப்பிள்ளை தோழன். நீங்கதானா அந்த முத்துசாமி ஐயரா? பீமனோட கரண்டி ஒங்க கையிலேன்னு கேள்விபட்டிருக்கேன். அகோ பாக்யம் என்றேன் (ஆபீசிலே ஆளுமைப் பயிறிசி முதல் அத்யாயம் இது. . மேலும் சென்னையில், துஷ்டம் ப்ரதமே வந்தினம் - துஷ்டனுக்கே முதல் மாரியாதை என்பதை வெங்கட்ராம மாமா

சொன்னதை மறக்கலை. இன்கம் டாக்ஸ் ஆபீசிலே (கேடி) 4-கிளாஸ் பியூனிடம் பேசி, அவர் சொல்லி கொடுத்த பாடம். என்னங்க வேலுசாமி, நல்லா இருக்கீங்களான்ன கேட்டவுடன், மாரி! டேய் ஐயா நம்ப ஆளு. மாடிலே கண்ணாடி ஆபீசர்கிட்டே ரவுசு காட்டாமெ

இட்டாந்துருன்னான். மடமடனு காரியம் நடந்ததை நேரில் பார்த்த அனுபவம் வேறே! ).

நான் மாப்பிள்ளைத் தோழன் என்று சொன்னேன். அம்பி ,இந்த மாமாவுக்கும் மாப்பிள்ளை சாரையும் நன்னா கவனிச்சுக்கோ. இவாளுக்கு அசல் பால்லே மொதல் டிகாஷன் காப்பி கொடுத்துடணும். பாயசமும் அப்டியே . மனசிலாச்சா? ஏன் மாமா அப்படி சொல்றேன்னு கேட்டேன்.

பாருங்கோ நாளை முகூர்த்தம் இல்லையா! அசல் பாலுக்கு தட்டுப்பாடு. பாக்கிகாராளுக்கு புட்டிபால்தான்(பவுடர் மில்க்). மாப்பிள்ளை சாரோட இங்கேயே வந்துடுங்கோள். பரம ரகசியமாக ஞாபகம் வச்சுக்கோங்கோன்னார். சுமார் 4க்கு, கேசரி, பஜ்ஜி, ஒரு பெரிய தவலைப் பானையிலே வந்தது. அத்தே, பெரியம்மா, காலியாண ஆத்லே, ஏதோ காஃபி குடிக்கத்தான் ஜென்மம் எடுத்திருக்கறோம்னு நெனைக்காம, அளவோடு குடியுங்க. இந்த ஊர் தண்ணி ஒங்களுக்கு பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளை கூட வெளியே போயிட்டேன்.

பையன் அப்பா அம்மாவை, பெண்ணோட பெரியப்பா கலியாண மண்டபத்தை சுத்திக்காட்ட கூடிக்கொண்டு போய்விட்டார். பையன் தம்பி எனனிடம், அத்தை-பெரியம்மா கூட்டம் நன்னாயிருக்கே, ஏதுடி கல்யாண ஆத்திலே, கூட ஒரு டம்ளர் குடிச்சா கொறஞ்சா போயிடும்? காபி நன்ன திக்கா கூழ்போல இருக்கேன்னு 2 ரெண்டு டம்ளர் குடிச்சா! ஏதோ காணதது கண்டது போல ஆலா பறந்தது நன்னாவா இருக்கு என்றான். சிரித்து, அவாளெல்லாம் பழய காலத்துக்காரா. நனைஞ்சு சொமப்பாள்! விடு என்று சொல்லவிட்டேன்.

ராத்திரி சாப்பட்டில், டேய் எனக்கு பால் பாயாசம் பிடிக்கும், ஒரு கை பாக்கணும் என்றான். கண்ணா இந்த ஊர் தண்ணி ஒனக்கு ஒடம்புக்கு ஆகாட்டி, நான்னா பொண்ணு கழுத்திலே தாலி கட்டணும்ன்னேன். கப்சிப். பரிசாக அம்பி கொண்டு வந்த டம்ளர் பாயாசத்தை ஆளுக்கு பாதியா குடிச்சோம். பையனோட அப்பாவை, ஒங்களுக்கு சக்ரதை வியாதி வரும்னு சொல்லி மாமி பாயசம் குடிக்கவிடலை. அவளும் குடிக்கலை. பாதிபேரும் கொஞ்சமா சாப்பிட்டார்கள்.

காலையில் 7மணிக்கு மூகூர்த்தம் . பிள்ளை வீட்டுக்காரர்கள் சுமார் 20 பேருக்கு குறைவாக இருந்தார்கள். மறுநாள் ஊருக்கு திரும்பினேம் அத்தை சொன்னா, அம்பி நீ என்னவோ ஊர் தண்ணி ஒடம்புக்காதுன்னே. சரியா போச்சு. சின்ன வயசிலே, எங்கம்மா கடுக்காய் கஷாயத்திலே வெளக்கெண்ணை விட்டு குடிக்க சொல்லுவாள் . அதே மாதிரி இன்னைக்கி காலம்பற இந்த வயசிலேயும் நாங்க எடுத்த சொம்பை கீழே வெக்கவேயில்லை. நாங்க தங்கி இருந்த ஆங்களிலே பாரூம் எல்லாம் புதுசா, சுத்தமா இருந்ததோ, பொழைச்சோமோ! ஆமாம் , கேரளத்துக்காரா அவாளெல்லாம் ரொம்ப சுத்தம் என்றேன் . பொட்டிபால் அருமை புரிந்தது. மிருதங்ககாரன்-பாடகர், சமையல்காரர்- மாப்பிள்ளை, பியூன்-ஆபீசர் -எல்லா இடத்திலும் -"துஷ்டம் பிரதமே வந்திதம்".

எவ்வளவு பெரிய வேதாந்தம். சிக்கில் குருசரணுக்கும், சஞ்சய் சுப்ரமணியனுக்கும் மிருதங்க வித்வான்களும் உள்ள பரஸ்பர மரியாதை இப்போன்னா தெரியறது! - எலத்தூர் ராமலிங்க பாகவதர் பெண்ணுக்கு மிருதங்க வித்வான் பால்லே நேர்வாளம் கலந்து கொடுத்த கதை சுப்புடு சொல்ல மறந்தது!
 
Anandakumar sir: I will not write any more. Your response and other interestign episdoes are not coming now. I don't want to the the Rakshasha who killed the musician.
Thanks for your hilarious view of the world.
 
கல்யாண கலாட்டா:

மும்பை நண்பர்ஒருவர் என்னை மாப்பிள்ளை தோழனாக வர வற்பறுத்தினார். அதற்குமுன் 2 தடவை மாப்பிள்ளைத் தோழனாக போய் அவஸ்தை பட்டது மறக்கவில்லை .ஆகவே, தாலிகட்டி , சேஷோப ஔபாஸனம் முடிந்து, ராத்திரி சாந்தி மூஷூர்த்தத்க்கு படுக்கை அறைக்குள் போகுறவரை என் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதாக சத்தியம் செய்தான். கலியாணம் திருவனந்தபுரத்தில். பையன் குடும்பத்தில் ஒன்றுவிட்ட அத்தை பெரியம்மா உட்பட சமார் 30 பேர்கள் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தோம்.

அங்கே இறங்கினதும் முதல் வேலையாக நேராக சமையல் அறைக்கு அவசரஅவசரமாக போனேன். வாயில் வெத்தலை பாக்கு அறைத்துக் கொண்டிருந்தவரிடம், திருமேனி, இங்ஙனே நளபாக மூப்பர் எவடேன்னு கேட்டேன். சாரே , தமிழ் வளர பங்கியாயிட்டு சம்சாரிக்கும். எண்ட பேரு முத்துசாமி ஐயராணும். ஞான்தன்னே சீப்ஃ குக் ஆகணும் என்றார். என்த வர்த்தமானம்? நிங்கள் ஆராகணும் என்று கேட்டார். (என்னோட மாமிக்கு எர்ணகுளம் பூர்வீகம். மாமிகிட்டே கத்துண்ட அரை-குறை மலையாளம் ஞான் சம்சாரிக்கும்). நமஸ்காரம் ஸ்வாமிகளே! நான் கோபாலன். மாப்பிள்ளை தோழன். நீங்கதானா அந்த முத்துசாமி ஐயரா? பீமனோட கரண்டி ஒங்க கையிலேன்னு கேள்விபட்டிருக்கேன். அகோ பாக்யம் என்றேன் (ஆபீசிலே ஆளுமைப் பயிறிசி முதல் அத்யாயம் இது. . மேலும் சென்னையில், துஷ்டம் ப்ரதமே வந்தினம் - துஷ்டனுக்கே முதல் மாரியாதை என்பதை வெங்கட்ராம மாமா

சொன்னதை மறக்கலை. இன்கம் டாக்ஸ் ஆபீசிலே (கேடி) 4-கிளாஸ் பியூனிடம் பேசி, அவர் சொல்லி கொடுத்த பாடம். என்னங்க வேலுசாமி, நல்லா இருக்கீங்களான்ன கேட்டவுடன், மாரி! டேய் ஐயா நம்ப ஆளு. மாடிலே கண்ணாடி ஆபீசர்கிட்டே ரவுசு காட்டாமெ

இட்டாந்துருன்னான். மடமடனு காரியம் நடந்ததை நேரில் பார்த்த அனுபவம் வேறே! ).

நான் மாப்பிள்ளைத் தோழன் என்று சொன்னேன். அம்பி ,இந்த மாமாவுக்கும் மாப்பிள்ளை சாரையும் நன்னா கவனிச்சுக்கோ. இவாளுக்கு அசல் பால்லே மொதல் டிகாஷன் காப்பி கொடுத்துடணும். பாயசமும் அப்டியே . மனசிலாச்சா? ஏன் மாமா அப்படி சொல்றேன்னு கேட்டேன்.

பாருங்கோ நாளை முகூர்த்தம் இல்லையா! அசல் பாலுக்கு தட்டுப்பாடு. பாக்கிகாராளுக்கு புட்டிபால்தான்(பவுடர் மில்க்). மாப்பிள்ளை சாரோட இங்கேயே வந்துடுங்கோள். பரம ரகசியமாக ஞாபகம் வச்சுக்கோங்கோன்னார். சுமார் 4க்கு, கேசரி, பஜ்ஜி, ஒரு பெரிய தவலைப் பானையிலே வந்தது. அத்தே, பெரியம்மா, காலியாண ஆத்லே, ஏதோ காஃபி குடிக்கத்தான் ஜென்மம் எடுத்திருக்கறோம்னு நெனைக்காம, அளவோடு குடியுங்க. இந்த ஊர் தண்ணி ஒங்களுக்கு பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளை கூட வெளியே போயிட்டேன்.

பையன் அப்பா அம்மாவை, பெண்ணோட பெரியப்பா கலியாண மண்டபத்தை சுத்திக்காட்ட கூடிக்கொண்டு போய்விட்டார். பையன் தம்பி எனனிடம், அத்தை-பெரியம்மா கூட்டம் நன்னாயிருக்கே, ஏதுடி கல்யாண ஆத்திலே, கூட ஒரு டம்ளர் குடிச்சா கொறஞ்சா போயிடும்? காபி நன்ன திக்கா கூழ்போல இருக்கேன்னு 2 ரெண்டு டம்ளர் குடிச்சா! ஏதோ காணதது கண்டது போல ஆலா பறந்தது நன்னாவா இருக்கு என்றான். சிரித்து, அவாளெல்லாம் பழய காலத்துக்காரா. நனைஞ்சு சொமப்பாள்! விடு என்று சொல்லவிட்டேன்.

ராத்திரி சாப்பட்டில், டேய் எனக்கு பால் பாயாசம் பிடிக்கும், ஒரு கை பாக்கணும் என்றான். கண்ணா இந்த ஊர் தண்ணி ஒனக்கு ஒடம்புக்கு ஆகாட்டி, நான்னா பொண்ணு கழுத்திலே தாலி கட்டணும்ன்னேன். கப்சிப். பரிசாக அம்பி கொண்டு வந்த டம்ளர் பாயாசத்தை ஆளுக்கு பாதியா குடிச்சோம். பையனோட அப்பாவை, ஒங்களுக்கு சக்ரதை வியாதி வரும்னு சொல்லி மாமி பாயசம் குடிக்கவிடலை. அவளும் குடிக்கலை. பாதிபேரும் கொஞ்சமா சாப்பிட்டார்கள்.

காலையில் 7மணிக்கு மூகூர்த்தம் . பிள்ளை வீட்டுக்காரர்கள் சுமார் 20 பேருக்கு குறைவாக இருந்தார்கள். மறுநாள் ஊருக்கு திரும்பினேம் அத்தை சொன்னா, அம்பி நீ என்னவோ ஊர் தண்ணி ஒடம்புக்காதுன்னே. சரியா போச்சு. சின்ன வயசிலே, எங்கம்மா கடுக்காய் கஷாயத்திலே வெளக்கெண்ணை விட்டு குடிக்க சொல்லுவாள் . அதே மாதிரி இன்னைக்கி காலம்பற இந்த வயசிலேயும் நாங்க எடுத்த சொம்பை கீழே வெக்கவேயில்லை. நாங்க தங்கி இருந்த ஆங்களிலே பாரூம் எல்லாம் புதுசா, சுத்தமா இருந்ததோ, பொழைச்சோமோ! ஆமாம் , கேரளத்துக்காரா அவாளெல்லாம் ரொம்ப சுத்தம் என்றேன் . பொட்டிபால் அருமை புரிந்தது. மிருதங்ககாரன்-பாடகர், சமையல்காரர்- மாப்பிள்ளை, பியூன்-ஆபீசர் -எல்லா இடத்திலும் -"துஷ்டம் பிரதமே வந்திதம்".

எவ்வளவு பெரிய வேதாந்தம். சிக்கில் குருசரணுக்கும், சஞ்சய் சுப்ரமணியனுக்கும் மிருதங்க வித்வான்களும் உள்ள பரஸ்பர மரியாதை இப்போன்னா தெரியறது! - எலத்தூர் ராமலிங்க பாகவதர் பெண்ணுக்கு மிருதங்க வித்வான் பால்லே நேர்வாளம் கலந்து கொடுத்த கதை சுப்புடு சொல்ல மறந்தது!
Hilarious narration! Neenga kathai ezhuthalaam Saar!
 
ஐயையோ, வீடுகட்ட கல்லு வேணும்,வயலுக்கு ஒரம்போட அழுகின முட்டை அழுகின தக்காளி வேணும்னுதானே என்னை கதாகாலேஷேபம் பண்ணச் சொல்லறையா என்று பாகவதர் கேட்டாராம். அபசாரம், அதுக்குத்தான் எங்கப்பா இருக்காரே! எனக்கு பச்சை கல் மாங்கா மாலை வேணும். சீதா கல்யாணம் கதாகாலஷேபம் பண்ணப் போறேன். சீதைக்கு ஜனகர் மரகத மாங்க மாலை போட்டார். அவள் அழகை மனசுலே வச்சுண்டு, ஆதி சங்கரர் அம்பாளிடம்- லலாடே காஷ்மீரம், முகே தாம்பூலம், நயனே கச்சனகலா, இன்னு சொல்லி பச்சைகல் மாங்காமாலை சீதைக்குன்னு விட்டுடார்னு சொல்லுவங்கோ! அப்படி பணக்காரா யாராவது சீதா கல்யாணத்திலே கொடுக்கலைனா "கும்பிபாக நரக சம்பவே:ன்னு சொல்லுங்கோ! ஏதுடி சங்கரி, டிவிலே யாரோ சொன்ன கதையை இப்படி சொல்லலாமா? மனுஷ வயத்தை ' கும்பி பாக நரகம்னு' பயங்கரமா சொல்லணுமா? அட ராமான்னார் அண்ணசாமி பாகவதர். ஒங்களுக்கு 32 லட்சணத்திலே 2 லட்சணம்தான் இல்லைன்னு தரகர் சுப்பையர் சொன்னாரோன்னு! எங்கம்மா அது என்னதுன்னு எங்கப்பா கிட்டே கேட்டா! பேஷான வரன். 32 லே 2 கொறஞ்சாஎன்னார். இப்பன்னா தெரியறது அது ரெண்டும் என்னான்னு -தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் புரியாது! இனிமே வெளிதிண்ணையிலே தான் ராத்திரி படுக்கணும்னாள் மாமி. வெள்ளிையை மறந்தேளோ, என் பெயரையும் மறந்துடனும். ஆமாம் சொல்லிப்புட்டேன்! வெள்ளி விடிவு தருமா?
 
காப்பி குடித்திட வாரீர், கண்டு மகிழந்து பருகிட வாரீர்
வெங்கிட்டு மாமாவுக்கு இளகின மனசு. யாரு வந்தாலும், அது ஒரு வேளை பகவானே சோதிக்க அந்த ரூபத்திலே வருவானோ என்று மாமி அன்னம்மாளிடம் சொல்வார். அவரோட ஆவடை பாட்டி காலத்திலே(வெள்ளை தொரைகள் காலத்திலே) அவாள் கிராமத்திலே சாயரட்சை 6 மணிக்கு மேலே அடுத்த ஊருக்கு போக பஸ் கெடையாது என்பதால் ,வெளியூர் பிராமணர்கள் யாராவது எங்கே போவது, யாராத்திலே சாப்பாடு போடுவாள் என்று தவிப்பார்களாம். ஏதாவது ஒரு வீட்டு வாசல்லே சுண்ணாம்பு/சிமிண்டு பெஞ்சிலே தூங்கலாம். 8 /9 முழம் வேஷ்டியில் ஒரு பாதியை போத்திக்கலாம். ஆனால் வயறை காய போட முடியுமா? ஏகாதசி, அம்மாவாசைன்னு பட்டினி இருந்த அனுபவஸ்தர்களுக்கு கையடி பம்பில் வரும் தண்ணீரை குடிச்சா போதும்! இந்த மாதிரி அசௌகரியம் வரலாமேன்னுதான் அந்த காலத்திலே வெரதங்களை கொண்டு வந்ததாக பாட்டி ஆவடை சொல்வாளாம். மூக்கு முட்ட ஆடு மாதிரி அசை போடாததாலேயே ஆம்பளைகள் ஒடிசலா பானை வயிறில்லாமல் இருந்தாள். என்று பாட்டி நீட்டி மொழங்கனதிலே உண்மை இருக்குன்னு டாக்டர்கள் சொல்லறாளே!
நம்ம பாட்டன்-பூட்டி எவ்ளோ புத்சாலி எனபாள் பாட்டி. பாட்டி அந்தக்காலத்திலே எல்லா ஆம்களும் தரித்தனம் தானே! ஊருலே கல்யாணம்னா அங்கே பந்தியிலே ஒரு புடி புடிச்சு, ஜீரணமாக வெத்தலையிலே-சுண்ணாம்பு தடவி, கொட்டை பாக்கு சீவலை மாடு மாதிரி அசை போடுவாளாமே! பல்லுப் போனவா, வெங்கல சொப்பு ஒரல்லே இடிச்சு கொதப்புவாளாமே! போருண்டா, பெரியவா சேஞ்சா அதிலே ஒரு அர்த்தம் இருக்குமடா! பாட்டி, ஊத்த வாய் நாத்தம் இருக்காதோ. போடா போக்கிரிம்பாள். இப்போ இருக்குள அம்மங்குத்தி (வாக்சினேட்டரின் தமிழ் பேராம்) டாக்டரே கெடையாது. வாசல்லே வேப்பெலை கட்டி, தாயே போயிடுன்னா அம்மாவும்(அம்மை நோய் தெய்வம்) போயிடுவா! அயோக்யாளை மட்டும் கொன்னுடுவாள். ஆனனாப்பட்ட தன்னோட அசுரப்புள்ளையையே கொன்னவளாச்சே. இப்படி பாட்டியினாலே மூளை சலவைப்பண்ண பட்டதாலே, வெங்கிட்டு மாமாவும் வந்தவாளுக்கு காப்பி கொடுக்கச் சொல்வாராம்.

தீ இல்லை, புகை இல்லை, பால் இல்லை,காஃபி பொடி இல்லை என்ற அசௌகரியங்கள் இல்லை, காஃபி செலவு மிச்சம், ஒருமணி நேரம் ஊர் வம்பு-அரட்டை சுகம் கண்டவர்கள் எண்ணிக்கையும் கூடியது. ஆக வெங்கிட்டு மாமா வீடு'" மாமா காஃபி கிளப்பாச்சு'. மாமிக்கு எல்லாரும் நேரத்துக்கு வந்து, ஒரு வெங்கலப் பானை காப்பி குடிச்சான்னா சரிதான். சீதாப்பாட்டி, நாட்டுப் பொண்ணே கொஞ்சம் டிகாஷன் கூட விடு என்று சொல்வதால், தன்னை மற்றவர்கள் கஞ்சப்பேர் வழி என்கிறார்களோ என்று மாமிக்கு சந்தேகம். காப்பி கொட்டை விக்கற வெலைக்கு ஆளாளுக்கு தகுந்த மாதிரி காபி போட நான் என்ன அவாத்து மாட்டு பொண்ணா என்ற ஆதங்கம் உண்டு..

"காப்பி குடித்திட வாரீர், கண்டு மகிழந்து பருகிட வாரீர்னு" -பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீரின் புனர் ஐன்மம் மாதிரி- இவா தொல்லை ஜாய்தியாயிண்டு வரது. ஒங்கம்மா என்னை பொண்ணாப் பாக்கறா, இவா என் மாமனார்-மாமியார்கள் மாதிரி படுத்தறாள். இதுல ஒண்ணு கூட ஒங்க பாட்டி சொன்ன பகவானாக இருக்கவே முடியாது. இவ குடிச்ச டபரா-டம்ளரை தேச்சே கால்ல வர்ற சேத்துப்புண் கைக்கும் வந்திடும் போல இருக்கே! இதுக்கு நோகாம நொங்கெடுக்கற வழியை பாருங்கோ, இல்லே நீங்களே கும்பகோணம் டிகிரி காஃபி மாஸ்டராகி விருந்து வையுங்கோ என்று குரல் கம்ம அன்னம்மாள் சொன்னது வெங்கிட்டு மாமாவை உலுக்கி விட்டது.
மாமா ஒரு படிக்காத இஞ்சினீயர். அன்னம் நாளைக்கு பாரு என்று கண்ணை மூடிண்டு ஒரு விஞ்ஞானி போல குரல் கம்ம பேசினார். அன்னம், நாளையிலே இருந்து நான் உன் பேர் சொல்லி கூப்பிடாதவரை, ரேழிக்கு (2ங்கட்டு) வரதே என்றார். அன்னம்மாள் சொன்னது வெங்கிட்டு மாமாவை உலுக்கி விட்டது. மறுநாள் கோபாலன், ராஜு, சேஷு, எச்சுமி நாலு பேரும் உற்சாகமா உள்ளே ரேழிக்குள் வந்தார்கள். அங்கே 8 பேர்உக்கார மாதிரி அர்த்த சந்திர வடிவில் ஒரு மேஜை முதன் முதலாக இருப்பதை பார்த்தார்கள். ஆனால் மேஜைக்கு அடியில் வெளிச்சமே இல்லை. அவர்கள் உட்கார்ந்ததும், பழய தையில் மிஷின் காலாட்டிபோலே இருந்த பெடலில் அவர்கள் கால் வைத்தார்கள். அது உடனே மேலும் கீழும் தானாக போக ஆரம்பித்தது. தாங்கள்தான் காலாட்டுகிறோமா, இல்லை ஆட்டவைக்கப் படுகிறோமா என்ற சந்தேகமும் வந்தது. கீழே வெளிச்சம் இல்லாததால் ஒன்றும் புரியவில்லை! ஆனால் ஓரக்கண்ணில் ஏதோ பெல்ட் சுற்றுவது போலவும் தோன்றியது.

"வெங்கிட்டுன்னு" ஏக சுதியில் அவர்கள் கூப்பிட, இதோ வற்றேன்னு குரல் கேட்டது. ஆனால் வெங்கிட்டுவை காணலை.

இதற்கிடையில், ஒலகு மாமி, ஐயப்பன், குஞ்சு மணியியும் வந்து கிடைத்த இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் காலடி தையல் மினின் பெடல்களும் அவர்கள் கால்வைத்ததும் மேலே கீழே அசைய ஆரம்பித்தது. ஏண்டா கோபாலா, அதுக்குள்ளே காபி குடிச்சு முடிச்சாச்சா என்று குஞ்சமணி கேட்டான். இல்லேடா எல்லாம் லேட்டாவே இருக்கு! வெங்கிட்டு குரல் கேட்டதே தவிர ஆளையே காணோம்! ஏதோ சதியா இருக்குமோ?

சதியும் இல்லை ,விதியும் இல்லை! அன்னம்மா பானையிலே காப்பி கொண்டுவரையா என்று வெங்கிட்டு மாமா குரல் கொடுத்தார். அன்னம்மா, ஒரு தவலை காஃபி கொண்டுவந்தாள். மாமா 8 டவரா டம்ளரோட வந்தார். எல்லோரும் ஓசி காஃபியை உற்சாகமாக உறிஞ்சினார்கள். இதற்குள் சீதாப்பாட்டி வந்து கடைசி சேரில் உட்கார்ந்தாள். அவல் கால்வைத்த பெடலும் மேலும் கீழும் சீசா போல போக ஆரம்பிச்சது. நாட்டு பொண்ணே, இங்கே என்ன மாஜிக் நடக்கறது? ஏன் என் கால்கள் தானகவே மேலுயும் கீழேயும் ஆடறது? பாட்டி மொதல்லே காஃபி குடியுங்கோ! அப்ப கொஞ்சம் டிகான் கொண்டு வாயேன் என்றாள். பாட்டி ஒரு 10 நிமிஷமாகுமே என்றாள் அன்னம்மா? ஏண்டி பொண்ணே?

இவரையே கேளுங்கோ என்றாள் அன்னம்மா. வெங்கிட்டு, என்ன புதிர் போடறா ஓன் ஆம்படையாள் என்று கொஞ்சம் கோப தொனியில் கேட்டாள் சீதா பாட்டி. பாட்டி, நேத்திக்கி கேஸ் தீந்து போச்சு. அப்ப சமைக்க காஃபி போட ஒரு எலக்டிரிக் அடுப்பு வாங்கினேன். அது பேட்டரியிலேதான் எரியும். அதுக்கா அங்கே மேலே ஒரு கார் பேட்ரி வைச்சிருக்கேன். அதுலே சக்தியேத்த ஒங்க காலடி பெடலை வைச்சான்.அது ஒரு பெல்டோட இணச்சு டைனமோவை ஓடவைக்கும். அப்ப பேட்டிரியிலே மின்சாரம் கொறையாது. அடுப்பும் எரியறது. இதை 8 காலடி குதிரை சக்திம்பாள். அதனாலேதான், நீங்க வந்து, காலாட்டி மின்சாரம் வந்தாதான் இனிமே காஃபி. நாளையிலே இருந்து சீக்கிரம் வந்துடுங்கோன்னார் வெங்கிட்டு மாமா. வந்தவர்கள்கருடனை கண்ட குருவிகள் மாதிரி பறந்தார்கள். சீத்தா பாட்டியும், ஒரு டம்ளர் காஃபி தந்துட்டு காசிலிலாமா எங்க காலை ஆட வச்சு இப்படியா மின்சாரம் எலவசமா உண்டாக்ரே! இனி ஒங்காத்து காஃபியே வேண்டாம்னு சிட்டாக பறந்தாள்.

வந்தவாளே ஒருத்தராவது கடவுளாக இல்லைங்கறது இப்போவாது புரிஞ்சுதோன்னா! வெங்கிட்டு மாமா புரிதலோடு, தன்னை மாமனார் ஏன் தன்னை மகாவிஷ்னு சொரூபாய என்று சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டார். அவன் கையிலே சக்கரம், என் கையிலே பேட்டிரி மின்சாரம். ஏகோ சக்தி பகு ரூபம்!
 
See Mr. Anadumar: Music and jokes are contegeous and every one will participate. You are now the center of Haasya Yoga Bhagavatar. Please share your jokes and proke other to join you. Haasya yoga is the least expensive yoga flooding the brain with Dopamine and makes people laugh heartily.
Thanks
 
See Mr. Anadumar: Music and jokes are contegeous and every one will participate. You are now the center of Haasya Yoga Bhagavatar. Please share your jokes and proke other to join you. Haasya yoga is the least expensive yoga flooding the brain with Dopamine and makes people laugh heartily.
Thanks
Sure Sir. Will share my next piece shortly! :) Thank you for the encouragement!
 
Thanks Hasya Shironmani:

There is another reason for my request to you. Poor people have more Haasyam since that is the only way they can face their difficulties. Indian comedians, Charlie Chaplin... all have had very poor background, thus their jokes saved them. That is, there are many poor in India, a smile on their face and a hearty laugh will brighten them. Please don't ask me that they read your jokes in this forum. But trickle down theory says, some one will steal(copy..) and share with them. Thus, you will be indirectly blessed making some poor to laugh.

I was attending a marriage of a friend in Karaikudi ( I can not narrate hearsay and thus share only my personal experience here). After muhurtam there was absolute silence. A friend of mine looked at me and said, hey open your modern Harini katha kalashepam (Hari Katha is old fashioned, mostly male oriented according to him, Harini is better half and where is the story about her?) So, reluctantly I performed modern Seetha swamvaram and every one joined the mirth. Since I already got my Veshti and Thundu in their house, my performance was rewarded. A few months back the guy calls and said, you know how many people you made to assemble and enjoy! I said, thank God I am not in a category where "lalate kashmiram, nayne kajjalakala ..வாயில் தாம்பூலம், நெற்றியிலே காஷ்மீர குங்குமம், கண்களிலே மை.. அப்படி அம்பாளை ஆதி சங்கரர் வர்ணிக்கிறார்.. मुखे ताम्पूलम् ललाटे काश्मीरम्, नयने कज्जल कला." and tell that I am doing Anna thanam (not mention for my family) and collected money!.

The point is, there are more scholars in this forum to deal with heavy subject matters related to the Brahman society, but your are the light house of humor. I am not praising you to get any reward or Veshti, just to share that recalling our ancestors way of life and see the hidden humor is a nice way to remember , honor and cherish them. Even in poverty(most Brahmans and Harijans), they managed their life with happiness (at least outward). You need to continue that tradition and you are blessed with humor along with your high intelligence, like north Indian Sardarjis.
 
Thanks Hasya Shironmani:

There is another reason for my request to you. Poor people have more Haasyam since that is the only way they can face their difficulties. Indian comedians, Charlie Chaplin... all have had very poor background, thus their jokes saved them. That is, there are many poor in India, a smile on their face and a hearty laugh will brighten them. Please don't ask me that they read your jokes in this forum. But trickle down theory says, some one will steal(copy..) and share with them. Thus, you will be indirectly blessed making some poor to laugh.

I was attending a marriage of a friend in Karaikudi ( I can not narrate hearsay and thus share only my personal experience here). After muhurtam there was absolute silence. A friend of mine looked at me and said, hey open your modern Harini katha kalashepam (Hari Katha is old fashioned, mostly male oriented according to him, Harini is better half and where is the story about her?) So, reluctantly I performed modern Seetha swamvaram and every one joined the mirth. Since I already got my Veshti and Thundu in their house, my performance was rewarded. A few months back the guy calls and said, you know how many people you made to assemble and enjoy! I said, thank God I am not in a category where "lalate kashmiram, nayne kajjalakala ..வாயில் தாம்பூலம், நெற்றியிலே காஷ்மீர குங்குமம், கண்களிலே மை.. அப்படி அம்பாளை ஆதி சங்கரர் வர்ணிக்கிறார்.. मुखे ताम्पूलम् ललाटे काश्मीरम्, नयने कज्जल कला." and tell that I am doing Anna thanam (not mention for my family) and collected money!.

The point is, there are more scholars in this forum to deal with heavy subject matters related to the Brahman society, but your are the light house of humor. I am not praising you to get any reward or Veshti, just to share that recalling our ancestors way of life and see the hidden humor is a nice way to remember , honor and cherish them. Even in poverty(most Brahmans and Harijans), they managed their life with happiness (at least outward). You need to continue that tradition and you are blessed with humor along with your high intelligence, like north Indian Sardarjis.
Ha Ha ! Will do Sir! Will try my best!
 
This is an old piece I wrote on mamis. Not sure if you had read it.
https://tambrahmism.wordpress.com/2018/09/16/the-revenge-of-the-mamis/
Well done. If it is like a story - Seshu Mama and Ranganayagi mami chatting in Sanjay's kacheri and mami saying, summ alatigathengo. Unnai alla padinalum ahele Kalayanigarathale Muni emotion irukanume. Pallavi, anupallai and charangthi appadi ovonaa konduvantha enaa korancha poidum? Mama, Paru, vadiyar enna chollikodothurupaar- ragam, swaram, thalam, kirhanam, athile enge emotion kondu varuvan, avan enna Tirudadudurai Rajarathnma ille Nadswarem vasikirana? Summ irungo, Sanjayum thane ou Nadaswarawidwante patichaanm, oru nadaswara mimicry panalame.. Now, this is not finding fault, but the presentation was a convesation peie- your usual way of bringing out the hilarious moments, this would have shined like a diamond. But, finding diamond itself is a task, that comes out well. -- Maami Padmavathi, arataikacheri thalaivi, Pllavaram. hukum.
 

Latest ads

Back
Top