18. தேக காந்தி
வாயு தேவன் விரும்பினான் மனதார
வாசு தேவன் போன்ற தேக காந்தியை.
ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.
காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.
“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”
வாயு தேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசு தேவனை ஆராதனை செய்தான்;
வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.
தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேககாந்தியை.
வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!
பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,
வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி