• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

Hello RR Mam ,nice ,I Like your attitude (post 513) ,mam,but i explained it for Saroja devi mam follows this way. Yes all women should be simple,neat,decently dressed,either home maker ,or working or both. It remains me one on my doctor friend she will dress up very well when she is upset,hot discussion with her man ,were she told me it makes me feel much better at least change my mood so that attention given to some other issues than heat up the old issue ..My sweet grand ma told women should be neat and tidy even they are physically not well same formula,we can think better,feel better.
 

Dear Dr. Narayani,

Neat and simple life is always good! No need for heavy make up.

Just freshen up to avoid an 'eNNai kaththirikkAy' face! :D
 

தெரிந்த வேலை ஒன்றுதான்!

சமீபத்தில் வட இந்தியப் பயணம் சென்ற போது, Kufri என்ற இடத்தில் குதிரைச் சவாரி செய்தோம்! கற்கள் நிறைந்து

பரவிக் கிடக்கும் குறுகலான மலைப் பாதை. சில இடங்களில் வேலி என்ற பேச்சே கிடையாது! குதிரை கொஞ்சம் காலை

மாற்றி வைத்தாலும், செல்லுவோம் அதல பாதாளம் நோக்கி! மழை அடிக்கடி பெய்வதால், கற்களுக்கு இடையிலெல்லாம்

சேறு மண்டிப் போகிறது. 'க்ளக்' 'க்ளக்' என்று ஓசை எழுப்பியவாறு குதிரைகள் மேலே ஏறிச் செல்லப் படும் பாடு கொஞ்ச

நஞ்சம் அல்ல! சில பயணிகள் அதீத அளவில் இருப்பத்தால், அவர்களை ஏற்றிச் செல்லும் குதிரைகளின் நிலை மிகவும்

பரிதாபம்! ஒரு குதிரை அல்லது இரு குதிரைகளை வழி நடத்த ஒருவர். அவர் சொன்ன சொல்லை அவை மீறுவதே இல்லை.

அத்தனை பணிவு!



நாங்கள் (ராம் மற்றும் நான்) ஏறிச் சென்ற குதிரைகளை வழி நடத்திய ஒரு முதியவரிடம் பேச்சுக் கொடுத்தேன், எனக்குத்

தெரிந்த ஹிந்தியில்! 'ஏன் மலைப் பாதையை நன்றாக அமைக்கக் கூடாது? அப்படி அமைத்தால், குதிரைகள் மட்டுமல்லாது,

வழி நடத்திவோரும் சுகப்படலாமே!' என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் மனதை நெருடியது! 'நல்ல பாதை

அமைத்தால், குதிரையில் யார் ஏறுவார்கள், அம்மா? எல்லோரும் நடந்தே சென்றுவிடுவார்களே! நான் சிறுவனாய் இருந்த

சமயம் இந்த வேலையைக் கற்றேன். வேறு ஒன்றும் தெரியாது! படிப்பும் கிடையாது!' என்றார். அவரது குடும்பம் பற்றி

விசாரித்தேன். அவருக்கு மனைவி, பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் இருக்கிறார்களாம். பெண்கள் வீட்டில்தான்

இருப்பார்களாம். ஆண்கள் எல்லோருக்கும் குதிரையைப் பராமரிப்பதும், வழி நடத்துவதும் வேலையாம்!



'இந்தப் பாதையைச் சரி செய்துவிட்டால், எங்கள் வீடுகளில் அடுப்பு எரியாது!' என்று அவர் சொன்னதும், மனம் வருந்தியது

அவருக்காக மட்டுமல்ல; அந்தப் பரிதாபத்திற்குரிய குதிரைகளுக்காகவும்தான்! :pout:


 

கற்கள் நிறைந்து பரவிக் கிடக்கும் குறுகலான மலைப் பாதை.


way-to-kufri-on-a-horseback.jpg


Source: Pictures of Kufri
 

முதுமை கொடுமை!


இரு தினங்களுக்கு முன், ஒரு திருமணத்திற்குச் சென்றோம். மேடையின் மீது நாங்கள் ஏறும் சமயம், மணமக்களின் அருகே

நின்றவருக்கு, ஒரு பிரபல இசை மேதையின் அதே கண்கள்; ஆனால் முகத்தில் மாற்றம்! 'கண்டனன் சீதையைக் கண்களால்'

என்று கம்பர் எழுதியுள்ளார். அதாவது அசோக வனத்தில், சீதையின் உடல் இளைத்து, உருமாறி இருப்பினும், அவளது

மாறாத கண்களைப் பார்த்து அடையாளம் கண்டானாம் அனுமன்! இசை மேதையின் அதே கண்களாக இருப்பினும், எனக்கு

ஐயம். ஒரே போல ஏழு நபர்கள் உலகில் இருப்பார்கள் அல்லவா?



மேடையை விட்டு இறங்கியதும் விசாரித்தேன். அவர் அதே இசை மேதைதான்! Stroke இன் தாக்கத்தால் முகம் மாறிவிட்டது.

ஒரு காலத்தில் வீணா - வேணு - வயலின் என்று மூவர் குழு அமைத்து இசை மழை பொழிந்தவர் அவரேதான். அவரிடம்

சென்று அவரின் இசை ரசிகர்கள் நாங்கள் என்று அறிமுகம் செய்து, கோவையில் அவர் இள வயதில் வாசித்த கச்சேரிகள்

பற்றி உயர்வாகச் சொன்னோம். மிக ஆனந்தித்து, தன் விலாசத்தை அளித்து, தம் இனிய இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.



முதுமை எத்தனை கொடுமை என்பது மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது! :pout:
 

யார் இருப்பார்கள்?

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று எண்ணும் பிள்ளைகள் இன்றும் உள்ளனர்!

'அத்தையைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு வா!' - இது என் 'மிலிடரி' மாமாவின் கட்டளையாம், இளைய மகனுக்கு.

சிங்காரச் சென்னைக்கு மூன்று நாட்கள் அலுவலகப் பணி நிமித்தம் வந்தவன், இந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டான்!

நேற்று மாலை, எங்கள் இனிய இல்லத்தில் இருக்கும் அம்மாவைச் சந்திக்க வந்திருந்தான். நான் அவனைப் பார்த்து ஆறு

ஆண்டுகள் ஓடிவிட்டன; அம்மாஅவனைப் பார்த்து இன்னும் பலப் பல ஆண்டுகள். 'அவன் ஐந்து நட்சத்திர விடுதியில்

தங்குவான்; பத்து நிமிடத்திற்கு மேல் நேரம் கிடைக்காது; உங்கள் வீட்டில் உணவு உண்ண மாட்டான்' என்றெல்லாம் மாமா

பெரிய 'build up' கொடுத்திருந்தார் - மிலிடரி அல்லவா?



கொஞ்சம் தயககம் இருந்தாலும், நாம் சிறு வயதில் தூக்கி விளையாடிய தம்பிதானே; எல்லாம் சகஜமாக இருப்பான் என்ற

நம்பிக்கையில், பூரி மாவு பிசைந்து வைத்து (நம்ம ஸ்பெஷல் ஆச்சே!​), மசாலா, சாம்பார் சாதம், வடை மற்றும் தயிர்

சாதம் தயாரித்த பின், அவன் வருகைக்காகக் கார்த்திருந்தேன். மாலை வணக்கம் கூறியபடி மந்தஹாஸ வதனனாக எட்டு

மணிக்கு அவன் ஆஜர்!



அன்புடன் எங்களிடம் உரையாடினான்; தன் தந்தை சொன்னபடி நிறையப் பழங்கள் கொண்டுவந்தான். உணவு வேண்டாமே

என்று முதலில் மறுத்தவன், நான் கட்டாயப்படுத்த, சம்மத்தான். ரசித்து, ருசித்து உண்ட பின், பாராட்டினான்! இத்தனை

சாதுப் பிள்ளையைப் பற்றியா மாமா அத்தனை 'build up' கொடுத்தார்?



நிற்க! இளைய தலைமுறையைப் பற்றி அரட்டை திரும்பியது! அப்பா சொன்னதற்காக அவன் வந்ததைப் பற்றி
நான்

சந்தோஷித்தேன்! அவன் சொன்னான், 'அக்கா! நம் தலைமுறையில் இந்த எண்ணம் இன்னும் இருக்கிறது. ஆனால் என்

அண்ணனைப் பார்த்துவரச் சொன்னால், என் பெண் போக மாட்டாள்! அடுத்த தலைமுறையின் கண்ணோட்டம் மிகவும்

மாறிவிட்டது! தனக்குப் பயன் உண்டு என்றால் மட்டுமே யாரையும் சந்திப்பார்கள்.' இது ஒரு கசப்பான உண்மைதானே!



இன்னொரு கேள்வியால் நான் தடுமாறிப் போனேன்! இதுதான் அந்தக் கேள்வி. 'அக்கா! நம்மைப் பெற்றவர்களை கவனிக்க

நாம் இருக்கிறோம்; நம்மை கவனிக்க யார் இருப்பார்கள்?'


:confused: . . . :sad:

 

இப்படியும் ஒரு பெண்!


சமீபத்தில் ஒரு பூஜைக்காக, கிராமத்திற்குச் சென்ற சமயம்......உயர்ந்த, ஒடிசனான உருவம்; குதிரை வால் கொண்டை;

அதில் சிறு மல்லிச் சரம்; ஜரிகை போட்ட நூல் சேலை; அதற்கேற்ற ரவிக்கை; முகத்தில் புன்னகை - வீட்டிற்குள்ளே வந்த

பெண், நண்பரின் மகள் என்று நான் எண்ண, அவள் நேரே பின் கட்டுக்கு விரைந்தாள். காய்கறிகளை எடுத்து பாங்காக

வெட்டத் துவங்கினாள். 'ஓஹோ! இவள் சமையல் செய்ய வந்த பெண்ணா? இத்தனை ஒயிலாக இருக்கிறாளே', என்று

வியந்தேன்; பின் அறிந்தேன் அவள் கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவள் என்று! சமையற்கலையில்

வல்லவள் என்பதால், இந்த வேலைக்கு வருகின்றாளாம்! பாதி நாளில் முடியும் வேலைக்கு ஆயிரத்து ஐநூறு சம்பளம்.

மாதத்தில் எப்படியும் பதினைந்து நாட்கள் வேலை கிடைத்துவிடுமாம்! 'இந்த வருமானம் போதும். யாரிடமும் கைகட்டி

வேலை செய்ய வேண்டாம்; விதவிதமான உடைகளும் நகைகளும் வாங்க வேண்டாம்; எளிய அலங்காரம் போதும்;

வேலை செய்யும் இடங்களில் மதிப்பு
ம் நன்றாகக் கிடைக்கிறது', என்றாள்!


ஆபீஸ் வேலைக்கு ஆலாய்ப் பறக்கும் பெண்கள் மத்தியில், இவள் மிகவும் வித்தியாசமானவள்தானே! :thumb:
 
சில கதைகளைப் படித்த பின் வரும் தாக்கம், படிக்கும் சமயம் இருக்காது. திரு. ஜயகாந்தனின் 'யுக சந்தி' என்ற கதையின்

தாக்கத்தில் வந்த சிறுகதை இது! நிஜமும் கற்பனையும் கலந்த இதை ரசிப்பீர்கள் என
நம்புகின்றேன். நன்றி. :)


 
கருணைக் கொலை!

தளர்ந்த நடையுடன் தீவிர சிகிச்சிப் பிரிவின் வாசலில் வந்து நின்றாள் பொன்னம்மா. கண்ணடிக் கதவின் வழியே

அவளது பண்ணாடியைப் பார்த்தாள். அவரது உடலின் மூன்று துவாரங்களில் குழாய்ச் செருகல் - மூச்சு, உணவு,

நீர்க் கழிவு இன்னவற்றுக்காக. இடது கரத்தில் ஊசி வழியாக குளுகோஸ் சொட்டுச் சொட்டாக உடலுக்குள் சென்றது.

கட்டம் போட்ட கண்டாங்கிச் சேலையைச் சரி செய்தபடி, அறையின் வெளியில் அமர்ந்தாள்! கண்களை மூடியதும்,

எண்ண அலைகள் பின்
நோக்கிப் பாய்ந்தன.


'பொட்டப் புள்ளைக்கு என்ன படிப்பு வேண்டிக் கிடக்கு!' எனும் சமூகத்தில் பிறந்ததால், நான்காம் வகுப்புடன் பள்ளிக்கு

முழுக்கு! பணக்காரக் குடும்பம் என்பதால், கடின வேலைகளே கிடையாது. அவள் பூப்பு அடைந்ததும், அன்னப் பட்சி

வாகனத்தில் அமர்த்தி, ஊரை அழைத்து அமர்க்களம் செய்த கையோடு, பக்கத்து கிராமத்துப் பண்ணையாரின் மகனுக்குப்

பெண் கேட்டு ஆள் வந்துவிட்டது. அவளைவிடப் பதிமூன்று வயதுப் பெரிய, ஒரே மகனுக்கு வாக்குப்பட்டு, பண்ணாடிச்சி

ஆகிவிட்டாள்.



அடுத்தடுத்து ஆணும் பெண்ணுமாக மாற்றி மாற்றி, நாலு குழந்தைகளையும் பெற்றாள். பண்ணாடிச்சி சொல்லுக்கு மறு

பேச்சே கிடையாது. அவளது சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கு மிகவும் கட்டுப்பட்டவள். ஆனால், அவளுக்குச் சில

சடங்குகள் அறவே பிடிக்காது. அவளின் அத்தை மகளின் கணவன் இறந்தவுடன், மாமியார்க்காரி முன் நின்று நடத்திய

கோர சம்பவங்கள் அவள் மனதை நிலைகுலைய வைத்தது நிஜம்தான். 'பொஞ்சாதி போன பொறகு ஆம்பளைங்க எப்பவும்


போலவே
இருக்கறாங்க. பொட்டச்சிக்குதான் எல்லா அலங்கோலமும். வெள்ளைச் சேலயக் கட்டச் சொல்லி, ஊட்டுக்குள்ள

மொடக்கிப் போடுவாங்க! என்ன கெரகண்டா சாமி!', என்று அடிக்கடி எண்ணி வருந்துவாள். கூடவே, 'எண்ட்ற பண்ணாடி

நூறாயு
சு நல்லா இருக்கோணு! நான் அவருக்கு முந்தியே போகோணு!' என்று பல முறை அம்மனை மனசாற வேண்டுவதும்

உண்டு!



மருத்துவரின் காலடி ஓசையால் திடுமென விழிப்பு வர, நிகழ் காலத்திற்கு வந்தாள். அவளின் பண்ணாடிக்கு நினைவு போய்

பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. வெறும் கட்டையாய்க் கிடக்கும் இவருக்குத்தான் போன மாதம் எண்பதுவயதுக்

கொண்டாட்டம் நடந்ததா? நம்ப முடியவில்லையே! அவர் போய்விட்டால் தனக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்கள்

என்று அவள் நன்றாக அறிவாள். கிராமத்துத் திருவிழாக்கள் அனைத்திலும், அவள் ஜோடியாகச் சென்றால்தான் முதல்

மரியாதை கிடைக்கும் என்பதையும் அறிவாள்.



தன் பரிசோதனையை முடித்த மருத்துவர், பண்ணாடி மூச்சு விடுவது கடினமாகும் சமயம் 'வெ
ன்டிலேடரில்' வைக்குமாறு

நர்ஸிடம் கூறுவது அவளுக்கு நன்றாகக் கேட்டது. இன்னும் பல நாட்கள் இதே நிலையில் பண்ணாடி கிடந்து, படுக்கைப்

புண்கள் உடலில் தோன்றி, சீரழிந்து போகவேண்டுமா?



தள்ளாடி அறையின் உள்ளே சென்றாள்; நர்ஸ் வெளியேறும்வரை காத்திருந்தாள்; மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்;

ஆக்ஸிஜன் குழாயை மெதுவாக அகற்றிவிட்டு, பண்ணாடியின் வலது கரத்தைப் பற்றினாள்!
 
Last edited:
good one raji.

are the customs on widows more cruel than ours in the past..where we shaved the head and did cut off the thali chain and all that.

i am glad nowadays atleast in my family we did all this privately and discretely. when my young girl cousin was widowed in her early 30s, her parents and his parents were bereft. my mother, quietly on the 10th day, helped remove the thali and such, and quietly kept her away from nosy relatives who were looking forward to a 'show'.

...God am i glad we live in these times. and not a 100 years ago.
 
தாயம்மா.

இதுதான் அவள் பெயர். நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டில் பணி புரிந்த பெண்மணி - ஆம் பெண்களில் அவள் ஒரு மணிதான்.

எனக்கும், என் தங்கைக்கும் அவள் செய்த சேவைகள் ஏராளம். தலையில் இல்லாத பேனைத் தேடும் பாவனையில் அவள் ஈறுகொல்லியால்

கேசத்தைக் கோதுவது, இப்போதும் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது! அந்தக் கோ
துதலின் சுகத்திற்காக, நாங்கள் மறுப்புச்

சொல்லாமல் அதை அனுபவிப்போம். தன் குழந்தைகளாகவே பாவித்து எங்களைச் சீராட்டியவள்.



ஒவ்வொரு பொங்கல் வந்தாலும், கூடவே அவளின் நினைவும் வந்துவிடும். ஏன் தெரியுமா? மார்கழி மாதம் முழுவதும், வாசலில் இட்ட

கோலத்தின் நடுவில் அவள் வைக்கும் பசுஞ்சாணி உருண்டையும், அதில் வைக்கும் பரங்கிப் பூவும் கூரை மீது காய்ந்து கிடக்கும். அவற்றை

அள்ளிக் கொண்டு ஆற்றில் கரைக்கச் செல்லுவாள், காணும் பொங்கல் தினம். அந்த அக்கறை வியக்க வைக்கும்.


இந்த ஆண்டுப் பொங்கல் நன்நாளிலும் அவளை நினைவு கூர்ந்துவிட்டேன்! :)
 
இதோ ஒரு சாதனையாளர்!

அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒருவர், ரசாயனத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர். N. ரங்கனாதன்.


எங்கள் குடும்பத்தில் ஒருவரான இவரை 'ரங்கன்' என்று குறிப்பிடுவது வழக்கம். தன் சகோதரரின் மருமகன், சிறுநீரகம்

பழுதடைந்
து அகா மரணமுற்றதால் மிக வருந்தி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை வலுப்படுத்தும் ஒரு மருந்தைக்

கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ராமரின் வனவாச காலம் போல, பதினான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்து,

ஒரு மருத்தைக் கண்டுபிடித்து, வெற்றி பெற்றார். அமெரிக்
கா மற்றும் கனடா நாடுகளில் விற்பனையாகிறது இந்த மருந்து.

உலக சிறுநீரக நாளான மார்ச் பதிமூன்றாம் தேதி, பெங்களூர் நகரில் இதன் இந்திய விற்பனைத் துவக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


உலக மக்கள் நலனுக்காக உழைத்த இவரை எங்கள் குடும்பம் வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றது! :thumb:

மேலும் விவரங்கள்:
இங்கே
 

எறும்பிடம் நாமும் பாடம் கற்போம்!



'வாழ்வே மாயம்' என்று தத்துவம் பேசித் திரிந்தாலும், இந்த மாய வாழ்வுக்கும் பணம் மிகத் தேவையாகின்றதே! பணத்தால்

மகிழ்ச்சி கிடைக்காது எனினும், போதிய பணம் இல்லையேல் பிறர் தயவை நாட வேண்டுமே!



எனக்குத் தெரிந்த, குழந்தை இல்லாத ஒரு தம்பதி. இளம் பருவத்தில் சரியாகப் பணம் சேர்க்காமல், வீடு வாசல் வாங்கிப்

போடாமல், தன் சுற்றம் எப்படியும் தனக்கு உதவும் என்று கவலையற்ற வாழ்க்கை நடத்திவிட்டனர்.
தனக்குத் தேவையான

சமயம், அவர்களின் சேவையைப் பெற்ற உறவினன் ஒருவன், தேவை முடிந்ததும் வீட்டை விட்டு விரட்டிவிட, வேறு

அன்புள்ளம் கொண்ட உறவினர்கள், வாடகை வீட்டில் அவர்களை அமர்த்தி, பண உதவியும் செய்துவந்தனர்.
எத்தனை காலம்

இப்படியே ஓட்ட முடியும்? விளையாட்டுப் போல ஒரு மாமாங்க காலமும் ஓடிவிட்டது. உதவும் உறவினர்களின் வயது ஏற ஏற,

சலிப்பு வருவது இயற்கைதானே!



முதியோர் இல்லத்தில் அமர்த்த முயன்றால், வசதியான இல்லத்தில் மாதச் செலவு சுமார் 25,000/ ஆகிவிடும், இருவருக்கும்!

சுமாரான செலவில் தேடினால், மருத்துவ வசதி கிடையாது.ஆதரவற்றவர் இல்லத்திலும் சென்று சேர முடியாது.
மிகவும்

இக்கட்டான சூழ்நிலைதான்! இவர்களின் நிலைமையைப் பார்த்துத்தான், திருவள்ளுவரின் வாக்கு நினைவில் நிழலாடுகின்றது,

''பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை''. ஆம்! 'அண்ணனென்னடா, தம்பியென்னடா' என்று இருக்கும் இவ்வுலகில்,

போதிய பொருட் செல்வம் இல்லையெனில், மகிழ்ச்சியும் காணமல் போய்விடும்!


மழைக்காலத்திற்கு உணவு சேர்க்கும் எறும்பிடம் நாமும் பாடம் கற்போம்! :popcorn:

 
உழைப்பே உயர்வு!

அவள் ஒரு நேபாளி பெண்; கணவன் பொறுப்பே இல்லாத 'குடி மகன்'! வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் அவளே பொறுப்பு!

மூன்று வயது மகனுடன் பாடுபட்ட அவளைக் கண்டுபிடித்து, தன் விருந்தினர் விடுதியைப் பர்ராமரிக்க அழைத்து வந்தார்

எங்கள் நண்பர். ஓயாது ஓடி உழைக்கும் அவளை எல்லோரும் விரும்புவார்கள்.


நாங்கள் வடகிழக்கு இந்தியப் பயணம் செய்த சமயம், அந்த விருந்தினர் விடுதியில் இரு நாட்கள் தங்கினோம். ஆங்கிலமும்,

ஹிந்தியும் நன்றாகப் பேசும் அவளிடம், எங்கள் தேவைகளைச் சொல்லுவது மிக எளிதாயிற்று. அவளின் மகனுக்கு இப்போது

ஏழு வயது. அழகாக தலையைக் குனிந்து எங்களுக்கு வணக்கம் சொன்னான். ஆங்கிலத்தில் யோசித்துச் சரியாக உரையாடினான்.

கிரிகெட் விளையாட்டில் எல்லாம் அத்துப்படி. இந்திய பூகோளத்தை அறிந்துள்ளான். கணக்கிலும் படு சுட்டி! காலை வணக்கம்


கூற இரு நாட்களும் மாடிக்கு வந்துவிட்டான்! தனக்குப் பேனா தரமாட்டார்கள் என்று நெற்றி சுருங்கக் கூறியவுடன், நான்
என் புதிய

பேனாவை
அவனுக்குப் பரிசாகக் கொடுத்தேன்; மிக ஆனந்தித்து நன்றி கூறினான்.


அதிகாலை நாலரை மணிக்கு விடியலின் வெளிச்சம் வந்துவிடுவதால், அப்பொழுது முதல் இரவு ஒன்பது மணி வரை அந்தப் பெண்


வேலை செய்கிறாள். தோட்டம் பராமரிப்பது; வீட்டை
ச் சுத்தம் செய்வது; மகனுக்கும் விருந்தினருக்கும் தேவையான உணவு சமைப்பது;

கடைக்குச் சென்று தேவையானவற்றை வாங்குவது என்று அவளது வேலைப் பட்டியல் நீளுகின்றது.

உழைப்பே உயர்வு என்பதை நன்றாக அறிந்த அவளைப் பாராட்டினோம். கொஞ்சம் பணம் பரிசளித்து, நன்றி கூறி விடை பெற்றோம்!
 
முன்சாமி அண்ணன் இந்த இழையில் இட்ட ஒரு போஸ்ட் மெயிலில் வந்தது!

ஆனால் இங்கு காணலையே!! :spy:
 
கோல நாயகன்!

நளினமான நடை; கன்னம் குழியச் சிரிப்பு; காதுகளில் கடுக்கன்; உடை ஜீன்ஸ் + டீ ஷர்ட். மாப்பிள்ளையைப் பெண் வீட்டார்

மண்டபத்திற்குள் அழைக்கும்போது அவனும் உடன் நின்றான். பெண் வீட்டிற்குச் சொந்தமோ என்று நினைத்தேன்.
மண்டப

நுழைவாயிலில் அழகான பெரிய மாக்கோலம்! நெக்லஸ் வரிசைகளை வட்டமாக அடுக்கியது போல அத்தனை அழகு!
ஒரு

பெண்மணி சொன்னாள் அந்தக் கோலம் அந்த இளைஞன் இட்டது என்று! என்ன ஆச்சரியம்! இப்போது புரிந்தது அவன் நளின

நடையின் ரகசியம்.
அந்த மண்டபத்து ஆஸ்தானக் கோல நாயகன் அவனே!

அவனைப் பாராட்டி மகிழ்ந்தேன்! :clap2:
 
உலக நாயகன் போய் கோல நாயகன் வந்து அடுத்த நாயகன் யாரோ ?
 
ஒரு பலமான ஆக்க உந்துதலின் (creative urge which is irrepressible) விளைவு தான் ஒவியம் வரைதல், கோலம் போடுதல், இனிமையாக soulfull ஆகப்பாடுவது, கவிதை எழுதுவது, கதை எழுதுவது எல்லாமே. இவற்றை செய்ய முடிந்தவர்களெல்லாமே இறைவனருளுக்குப்பாத்திரமானவர்கள் தான்.

கோலம் மிக நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
 
ஒரு பலமான ஆக்க உந்துதலின் (creative urge which is irrepressible) விளைவு தான் ஒவியம் வரைதல், கோலம் போடுதல், இனிமையாக soulfull ஆகப்பாடுவது, கவிதை எழுதுவது, கதை எழுதுவது எல்லாமே. இவற்றை செய்ய முடிந்தவர்களெல்லாமே இறைவனருளுக்குப்பாத்திரமானவர்கள் தான்.

கோலம் மிக நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
:yo: Vaagmi Sir!
 

Latest ads

Back
Top