மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
மெய்யாலுமே அருணகிரிநாதர் பாடின அநுபூதிக்குத்தாம்மா!:))

அவரது பங்களிப்பும் இதில் இருக்குன்னுதான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கீங்களே!
இருவருக்கும் என் வாழ்த்துகள்.
 
கந்தர் அநுபூதி சென்னைச் செந்தமிழிலா?
எண்ணிப் பார்க்கவே முடியவில்லையே !

மயிலை மன்னாருக்கும் அருணகிரியாரின்
மாண்புடைய அனுபூதிக்கும் உள்ள தொடர்பு? :blabla:
 
அவர் மயிலைப் பாடினார்!
இவன் மயிலையில் சொல்கிறான்!
:))
 
81. பொரளி = புரளி.

82. கிக்கு = போதை.


83. சரக்கு = பொருள்.

84. அய்கு = அழகு.

85.வுட்ரா = விடுடா.

86. ஒதிக்கறே = உதைக்கிறாய்.

87. ஒயுங்கா = ஒழுங்காக.

88. வவுறு = வயிறு.

89. கவுறு = கயிறு.

90. கய்தே = கழுதை.
 

91. பொய்து = பொழுது.

92. செரமொ= சிரமம்.

93. காபித்தண்ணி = காபி.

94. டீத்தண்ணி = டீ.

95. பொஸ்தகம் = புத்தகம்.

96. வாத்யாரு = தலைவர்.

97. ஸோக்கு = நாகரிகம்.

98. ஜகா வாங்கு = அந்தப்பக்கம் போ.

99. பக்கிரி = பொல்லாதவன்.

100. ஜெபி = சட்டைப் பை
 

101. ரப்பீஸ் = கட்டிடம் இடித்த துகள்


102. பய்ட்டு = வாளி (bucket).

103. அண்ணாத்த = அண்ணன்.

104. ஸர்தா(ன்) = சரிதான்.

105. கல்லீஜ்ஜு = அழுக்கு.

106. அப்பால = அப்புறம்.

107. காவா = கால்வாய்.

108. அடவு = அடகு.

109. கீஸிடு = கிழித்துவிடு.

110. இட்டுக்கினு = அழைத்துக்கொண்டு.
 
111. இட்டாந்தே(ன்) = அழைத்து வந்தேன்,

112. டவுசரு = காற்சட்டை (pant)

113. நிஜாரு = காற்சட்டை (pant)

114. இஸ்பீடு = வேகம்.

115. கம்முனு கெட = பேசாமல் இரு.

116. ஆப்ரிச(ன்) = அறுவை சிகிச்சை.

117. பேசாத போவியா = பேசாமல் போவாயா.

118. இஸ்கூலு = பள்ளிக்கூடம்.

119. பாயாசம் = பாயசம்.

120. பெனாத்து = உளறு
 
121. கொல்துக்கார் = கொத்தனார்

122. வுய்து = விழுகிறது


123. பூட்டா(ன்) = போய்விட்டான்


124. புட்டுக்கிச்சு = இறந்துவிட்டார்


125. பிச்சாத்து = கேவலமான


126. நாயம் = நியாயம்


127. ரீல் உட்டா(ன்) = பொய் சொன்னான்


128. டுபாக்கூரு = ஏமாற்றுக்காரன்


129. துட்டு = பணம்


130. ஃபீலு ஆனா(ன்) = வருந்தினான்



 
இணைச் சொற்கள் (இணை பிரியாச் சொற்கள்).

தமிழில் சில சொற்கள் எப்பொழுதும்
தவறாமல் இணைந்தே வருபவை!

அவற்றைப் பிரித்தால் ஜோடியின்
அழகு குன்றி விடுவது உண்மையே!
:hug:

இன்று முதல் இவற்றைக் காணுவோம்!
 

1. அண்டை அயலார்,

2. அந்தியும் சந்தியும்,

3. அல்லும் பகலும்,

4. அருமை பெருமை,

5. அறமும் மறமும் ,

6. அருளும் பொருளும்,

7. அடி தடி,

8. ஆடல் பாடல்,

9. ஆடியும் பாடியும்,

10. ஆடை அணி,
 
,
இணை பிரியாச் சொற்கள் இவை என்று சொல்ல முடியாது.

ஆனால், இவற்றில் முரண் தொடை என்று கூறக் கூடிய ஒன்றுக்கொன்று மாற்றான சொற்களும், ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்கும் ஆனால் இரு வேறு பொருளைத் தரும் சொற்களும் உள்ளன.
1. அண்டை அயலார் - இதிலே அண்மை என்பது அருகாமையையும், அயல் என்பது நெருக்கமற்ற, தொலைவிலுள்ள என்ற பொருளையும் தரும். ஆகவே, இது முரண் தொடையாகும்.

2. அந்தியும் சந்தியும், - அந்தி என்றாலே மாலைப் பொழுது என்று பொருள். சந்தி என்றால், அது இங்கே காலையைக் குறிக்கிறது. எனவே, இதுவும் முரண் தொடையாகும்.

3. அல்லும் பகலும், - அல் என்றால் இரவையும், பகல் என்பது பகற்பொழுதையும் குறிப்பன. சொல்ல வேண்டுமா, இதுவும் முரண் தொடை தானே?

4. அருமை பெருமை, - அருமை என்றால், அரிய, சிறந்த பண்பு என்று பொருள். பெருமை என்றால், உயர்ந்த பண்பு என்றும் பொருள். இச்சொற்றொடர், complement ஆக விளங்கும் இரு வேறு சொற்களை இணைக்கிறது.

5. அறமும் மறமும் - அறம் என்றால் தருமம் என்றும் மறம் என்றால் வீரம் என்று ஒரு பொருளும், அறமல்லாதது என்று ஒரு பொருளும் உண்டு. எனவே, இதுவும் முரண் தொடை ஆகும்.

6. அருளும் பொருளும், - அருள் என்பது இறைவனுடைய கருணையையும், பொருள் என்பது செல்வத்தையும் குறிப்பன. இது முரண் தொடை என்றும் கொள்ளலாம்; அல்லது செல்வம் என்பதன் இரு வேறு பொருள்களாகவும் கொள்ளலாம். (அருட்செல்வம், பொருட்செல்வம்)

7. அடி தடி - தடி இல்லாமல் அடி ஏது?

8. ஆடல் பாடல் - ஒன்றோடு ஒன்று இசைந்த இரு செயல்கள்.

9. ஆடியும் பாடியும்,- இதுவும் மேற்சொன்னது தான்.

10. ஆடை அணி, - ஆடை என்பது மானத்தைக் காக்கின்ற மேலாடையையும், அணி என்பது உடலுக்கு அழகு செய்யும் அணிகலன்களையும் சுட்டுவன. (அணி எல்லாம் ஆடையின் பின் தானே?)

As I remarked at the opening, the two words in each pair can occur separately too. Hence they are neither இரட்டைக்கிளவி nor அடுக்குத் தொடர்.
 
....
As I remarked at the opening, the two words in each pair can occur separately too. Hence they are neither இரட்டைக்கிளவி nor அடுக்குத் தொடர்.
Nice, thank you....
 
இரண்டு சொற்களும் அடுக்குத் தொடரும் அல்ல,
இரட்டைக் கிளவியும் அல்ல என்பதாலேயே அவற்றை;

இணைச்சொற்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
இணை பிரி
யாச் சொற்கள் என்பதைத் தவிர்த்து விடுவோம்!

பிரிக்கும் போதிலும் அவை பொருள் தரலாம்;
சேர்ந்து உள்ளபோது அவை complementary and supplementary

வார்த்தைகள் ஆக மாறி
ப் பொருளின் சுவையை மேலும்
வளர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது அல்லவா? :dance:
 
Last edited:
11. ஆதி அந்தம்,

12. ஆய்ந்து தேய்ந்து,

13. அன்பும் அருளும்,

14. இண்டு இடுக்கு,

15. இன்ப துன்பம்,

16. உடல், பொருள், ஆவி,

17. உண்டும் உடுத்தும்,

18. உருண்டு திரண்டு,

19. உருவும் திருவும்,

20. உற்றார் உறவினர்,
 
21. உற்றோரும் மற்றோரும்,

22. எலும்பும் தோலும் ,

23. ஏழை பாழை,

24. ஏற்ற தாழ்வு,

25. ஒட்டியும் ஒட்டாதும் ,

26. ஒப்பும் உயர்வும்,

27. கண்டும் கேட்டும்,

28. கண்ட துண்டமாக,

29. கண்ணும் கண்ணீருமாக,

30. கரடு முரடாக,
 
31. கண்ணீரும் கம்பலையுமாக,

32. காடும் மேடும்,

33. பணம் காசு,

34. கல்வியும் கேள்வியும்,

35. கள்ளம் கபடு,

36. கனவும் நனவும்,

37. கையும் களவும்,

38. குப்பனும் சுப்பனும்,

39. குறுக்கும் மறுக்கும்,

40. சட்ட திட்டங்கள்,
 
41. சின்னா பின்னம்,

42. சீரும் சிறப்பும்,

43. சுக துக்கம் ,

44. சுற்றும் முற்றும்,

45. திட்ட வட்டம்,

46. துணி மணிகள்,

47. தேடித் திரிந்து,

48. தொழுதும் அழுதும்,

49. தோட்டம் துரவு,

50. நகை நட்டுகள்,
 
Yes, Tamil is a wonderful language, not only children pronounce it wrongly,but also some elders doing it,may be thinking its fashion to talk like that.
It is easy to practice , if we start love our Mother tongue .
 
You are perfectly correct in your statement.

We can't do justice to anything we do, unless we really love doing them.

Love towards one's mother tongue should be as natural and as easy as

the love towards one's own mother and one's own mother country. :love:
 
51. நடை உடை,

52. நயந்தோ பயந்தோ,

53. நரை, திரை,

54. நல்லது பொல்லாதது,

55. நாயும் நரியும்,

56. நாயும் பேயும்,

57. நாளும் கிழமையும்,

58. நொண்டி சண்டிகள்,

59. நோய் நொடிகள்,

60. பட்டி தொட்டி,
 
யக்கா! ஒத்தக் கெய்வியோ, ரெட்டைக் கெய்வியோ, படா ஷோக்காக் கீது!

அட..... வலிய வந்து விழும் சென்னைச் செந்தமிழை, வலித்து எடுக்கிறேன்!

மிக நன்றாக உள்ள தொகுப்பு, இரட்டைச் சொற்கள்!

:yo: ராஜி ராம்
 
அன்புத் தங்காய்!
அது இரட்டைக் கிளவியும் அல்ல!
அது இரட்டைக் கிழவியும் அல்ல!
அது அடுக்குத் தொடரும் அல்ல!
அது உபயம் தமிழ் அகராதி! நன்றி!
அன்புள்ள அக்கா (வி.ர.) :fish2:
 
,
இணை பிரியாச் சொற்கள் இவை என்று சொல்ல முடியாது.
.............
7. அடி தடி - தடி இல்லாமல் அடி ஏது?
..............
நல்ல விளக்கங்களை அளித்தீர்கள். நன்றி.

ஆனாலும், தடி இல்லாத அடி உண்டு! சென்னைச் செந்தமிழில் 'கும்மாங்குத்து'!

தாங்கள், 'கன்னா பின்னா' என்ற சொற்களுக்குப் பொருள் தர முடியுமா? இந்தத் தொகுப்பில் இல்லை.

இது ஒரு தமிழ் இலக்கியத்திலும் பார்த்த ஞாபகம்!

வணக்கத்துடன்,
ராஜி ராம்
 
அன்புத் தங்காய்!
அது இரட்டைக் கிளவியும் அல்ல!
அது இரட்டைக் கிழவியும் அல்ல!
அது அடுக்குத் தொடரும் அல்ல!
அது உபயம் தமிழ் அகராதி! நன்றி!
அன்புள்ள அக்கா (வி.ர.) :fish2:

குப்பத்துக் குப்பனுக்குப் புரியவில்லை! நான் தெரிந்துகொண்டேனே!

அன்புடன்,
ராஜி ராம் :peace:
 
Status
Not open for further replies.
Back
Top