• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 2

சிற்றுண்டி வண்டியைத் தள்ளி இருவர் வந்திட,
உற்ற நேரத்தில் பசியாற்றுகிறாரே என எண்ணி

ஆசையுடன் மூடியைத் திறந்து பார்த்திட, அதில்
ஆறிப்போன இட்லியும், கொஞ்சம் உப்புமாவும்!

அந்த இட்லியை நாய் கூடத் தின்னாது! சிவப்பாக
அதன் மீது இருந்தது ருசியிலா மிளகாய்ப்பொடி!

வெண்ணெயும் ஒரு சிறு BUN - ம் கூட இருந்ததே
என்னைப் பசியிலிருந்து அன்று காப்பாற்றியது!

'க்ரீம்' பொடி கலந்த டீயும் ருசியில்லை! ஆனால்
கொஞ்சம் பழத் துண்டுகள் நாவிற்கு ருசித்தன!

தலை நகர் மீது வட்டமடித்துப் பறந்த விமானம்;
தரை தட்டி இறங்கியது; மனமும் நிம்மதியானது!

'பணிக்கர் டிராவல்ஸ்' அலுவலகம் செல்ல, அங்கு
பணிவுடன் வரவேற்றனர்; பின்னர் அருகிலிருந்த

விடுதிக்குச் சென்று, அறையில் செக் - இன் செய்து,
சடுதியில் புறப்பட்டோம் அக்ஷர்தாம் பார்த்து வர!

அருகில் இருந்தது மெட்ரோ ரயில்; அதில் பயணம்;
விரைவில் சேர்ந்தோம் அக்ஷர்தாம் நிலையத்தை!

சூரிய பகவான் கரிசனையின்றி தகித்திட, அருகில்
சீரிய ஓட்டத்துடன் இருந்தன சைக்கிள் ரிக்ஷாக்கள்!

இருபது ரூபாய் செலவு; அக்ஷர்தாம் நுழைவாயில்;
இரு நிமிடங்களில் உள்ளே செல்ல, போர்டுகளில்

எழுதியுள்ளது, 'காமரா, செல்போன், குடை, கைப்பை
எதுவுமே எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு', என்று!


:nono:

தொடரும் ......................
 

இருபது ரூபாய் செலவு; அக்ஷர்தாம் நுழைவாயில்...

The back pose of our rickshaw man!


IMG_4674.JPG
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 3


அத்தனையும் நான் வைத்துள்ளேனே! அவைகள்
அத்தனையும் பாதுகாப்பில் வைக்க எண்ணியும்,

அலை மோதும் கூட்டம் அவ்விடத்தை நிறைக்க,
நிலை குலைந்தது மனம் ஒரு நொடிப் பொழுதில்!

இத்தனை கூட்டத்தைத் தாண்ட நேரமாவதுபோல
அத்தனை நேரம் ஆகுமே அதனை மீட்டு எடுத்திட!

மறு நாள் ஆறு மணிக்கு ஷிம்லா பயணம் செல்லச்
சிறு ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே இருவரும்

அக்ஷர்தாம் அழகினை காமராவில் சிறைப் பிடித்து,
அங்கு சுற்றும் ஆவலை அடக்கி, ரயில் ஏறினோம்!

மாலை என்னவரின் தம்பி மகன் சின்ன ராம் வந்து,
சாலைகள் பலவற்றில் சுற்றி வந்து, தலை நகரின்

தலையாய இடங்களைக் காண்பித்து, அதன் பின்பு
அலை மோதும் கூட்டம் மிக்க உணவகம் சென்றிட,

எளிய சிற்றுண்டியான தோசை ஒன்று நூறு ரூபாய்!
வெளியேறினோம் ஆளுக்கு ஒன்று நாங்கள் உண்டு!

வேகமாய் விடுதி அறைக்கு வந்து சேர்ந்த பின், ஒரு
வென்னீர்க் குளியல் தந்தது சுகமான உணர்வினை!

அதிகாலை புறப்பட்டு குளு குளுப் பேருந்தில் ஏறிட,
அதனருகில் தமிழர் ஒருவர் பத்து ரூபாய் காபி தர!

உற்ற நேரம் குருக்ஷேத்திரம் போய்ச் சேர, முதலில்
சிற்றுண்டி வந்தது 'பணிக்கர் டிராவல்ஸ்' தயவில்!

பண்டங்கள் விற்கும் விலையிலே, காசு தராமலே
பண்டங்கள் தந்தால் நமக்குக் கசக்கவா செய்யும்?

:hungry: . . . :popcorn:

தொடரும் ....................
...
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 4


அழகிய, நல்ல அமைதியான கிருஷ்ணன் கோவில்;
அங்கு மனமுருகும் காட்சிகள் வெண் சிலைகளாக!

கண்களில் பீஷ்மரின் அம்புப் படுக்கை பட்டவுடனே
கண்கள் பனித்தன; கர்ணனிடம் பிக்ஷை கேட்பதோ

பனித்த கண்களில் நீர்த் துளிகளை உருவாக்கிடும்!
'ஏனிந்த வஞ்சனை கண்ணா!' என மனம் உருகிடும்!

ஒரு பெரிய ஹாலில் இமயமலைக் கோவில்களின்
சிறு மாதிரித் தோற்றங்களை அமைத்து உள்ளனர்!

அமைதியை இன்று இழந்த கேதார்நாத் கோவிலும்
அமைதியாகக் காட்சி தருவது நம் பிறவிப் பயனே!

வைஷ்ணோ தேவியின் கோவிலின் மாதிரி உண்டு;
வைக்கும் காலடியில் நீரோட்டம் மட்டும் இல்லாது!

வளைந்து செல்லும் இருண்ட பாதை; திடீரெனப் பல
பளபளக்கும் தேவியரின் திரு உருவங்கள் தெரியும்!

உடல் நோகாது வைஷ்ணோ தேவியரின் தரிசனம்!
உடன் சென்றோம் அருகிலிருந்த காட்சிகள் காண!

பகவத் கீதை உபதேசித்த ஆலமரத்தடியில், அந்த
பகவான் தேரோட்டியாக உபதேசிக்கும் ஒரு காட்சி!

வழிபட ஒரு ஆல மரமும் உண்டு; அதன் அருகிலே
வழிபட்டு மரத்தில் கட்ட சிவப்புக் கயிறு விற்பார்!

அந்தக் கயிற்றினை, நினைத்த காரியம் நிறைவேற,
அந்த மரத்தில் கட்டினால் போதுமாம்! எளிமைதான்!

மஹாபாரதக் கதையின் முக்கியக் காட்சிகள் பலவும்
மஹா சிரத்தையுடன் செய்த பொம்மைகளாக அங்கு!

:hail:

தொடரும் ..................................
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 5

முன்பு பார்த்த பிரும்மஸரோவர் தூய நீர்ப்பரப்பு;
இங்கு பார்த்த நீர்ப்பரப்பில் தூ
ய்மையே இல்லை!

அமைதியாகப் பரந்து கிடந்த பிரும்மஸரோவரில்,
அமைதி வேண்டிப் பிரார்த்திக்கிறார் அனைவருமே!

ஆசை தீரப் படங்களைச் சுட்டுத் தள்ளிய பின், மிக
ஆசையுடன் சென்றோம் ரோஜாத் தோட்டத்திற்கு!

ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்திரம்; அடுத்த
சண்டிகர் மாநிலத்தில் ஜாகீர் ரோஜாத் தோட்டம்!

நேருஜி ரோஜாப் பிரியராக இருந்திட, ஏன் இவர்கள்
ஜாகீர்ஜியின் பெயரில் அமைத்தாரோ நானறியேன்!

சுமார் ஐம்பதாயிரம் செடிகள்; முப்பது ஏக்கர் பரப்பு!
சுமார் ஆயிரம் வகையான ரோஜா மலர்ச் செடிகள்!

சூரியத் தாக்கத்தால், கரிய மலர்களே உள்ளன எனக்
கூறிய வழிகாட்டியின் புலம்பலைப் புறக்கணித்து,

நீண்ட பாதையில் நடக்க ஆரம்பிக்க, வழிகாட்டியும்
வேண்டா வெறுப்பாக எம்மைத் தொடர்ந்து வந்தார்!

அவர் சொன்னது போலக் கரும் பூக்களும் இருந்திட,
கவர்ந்தன மனதைப் பற்பல வண்ண ரோஜாக்களும்!

பல வண்ணங்களைக் காமராவில் சிறைப் பிடித்து,
பல
நிமிடங்கள் சுற்றி, பயணத்தைத் தொடர்ந்தோம்!

அடுத்த நிறுத்தம் Rock Gardens! வண்ணக் கற்களை,
எடுத்து எறிந்த வீணான பொருட்களை எடுத்து, பல

அழகிய வடிவங்களை அமைத்துள்ளார் அவ்விடம்!
குறுகிய வளைந்த பாதையிலே நடந்து சென்றோம்!

தொடரும் ..................
 
Last edited:
hi RR madam,

i was posted in chandigarh for 4 years ....while i was serving Army...i used to visit rock gardens/rose garden in summer....

i used to stay in Kalka road....from chandigarh to shimla road...chandigarh is the BEST PLANNED CITY IN INDIA......nice weather..

capital of three states......very neat and clean...i like pondichery in south and chandigarh in north......
 

Dear TBS Sir,

Chandigarh city roads are clean and well planned. But the weather was hot and we sweated to death at the rock gardens! :(
 

முன்பு பார்த்த பிரும்மஸரோவர் தூய நீர்ப்பரப்பு.

IMG_4681.JPG
 

இங்கு பார்த்த நீர்ப்பரப்பில் தூ
ய்மையே இல்லை!

IMG_4700.JPG
 

....................................

அடுத்த நிறுத்தம் Rock Gardens! வண்ணக் கற்களை,

எடுத்து எறிந்த வீணான பொருட்களை எடுத்து, பல

அழகிய வடிவங்களை அமைத்துள்ளார் அவ்விடம்!
குறுகிய வளைந்த பாதையிலே நடந்து சென்றோம்!

தொடரும் ..................


சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 6


அரிய வடிவங்களைக் கண்டோம்; ஆனாலும் அதில்
பெரிய அழகு ஒன்றும் இல்லாதது சிறு குறைதான்!

பழைய பீங்கான் மின் பொருட்கள்; சோடா மூடிகள்;
பழைய வளையல்கள்; இன்ன பிற உபயோகத்தில்!

ஆயிரக்கணக்கான பொம்மைகளை செய்திருப்பது
அதிசயமான காட்சியாகவே கண்களில் விரிந்தது!

சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இதமாக ஓரிடத்திலே
கொட்டும் அழகிய செயற்கையான சிறு நீர்வீழ்ச்சி!

உடைகளை நனைத்தபடி இளவட்டம் அனைத்தும்
உல்லாசமாய் ஆடிப் பாடிச் சிரித்து ஆனந்தித்தனர்!

எத்தனை தண்ணீர் அருந்தினாலும் போதவில்லை;
அத்தனையும் வியர்வை ஆறாகவே வெளியேறின!

எல்லோருடைய சட்டைகளும் முதுகிலே ஒட்டின!
கால்களும் ஓட்டமும் நடையுமாகவே விரைந்தன!

அரை மணி நேரத்தில் ஒரு வட்டம் அடித்துவிட்டு,
விரைந்தோம் பசியாறிட உணவகத்தினை நோக்கி!

அடுத்த நிறுத்தம் அழகிய ஸுக்னா ஏரியின் அருகில்;
அடுத்த சில நொடிகளில் கரு மேகங்கள் சூழ்ந்து வர,

நொடிப் பொழுதில் தூறல் மழையாகத் தொடங்கியது
திடீரென மிகப் பெரிய மழையாகப் பொழியலானது!

ஏரியின் அழகையும், தொலைவில் தெரிந்த வெண்
வரிசைகளில் இருந்த வாத்துக்களையும் படமாக்கி

எடுத்துக் கொண்டு, குடைக்குள்ளே ஒடுங்கியபடியே
எடுத்தோம் ஒரு ஓட்டம் எங்கள் பேருந்தை நோக்கி!

தொடரும் ..........................

 

Latest ads

Back
Top