• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


அக்ரஹாரத்தில் வாழ்ந்தோரும், பிராமணர் அல்லாத நண்பர்களும்

அக்கரையுடன் கூடிப் பேசி மகிழ்ந்தது கண் கொள்ளாக் காட்சிதான்! :dance:
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 7


வேளா வேளைக்குப் பசியாற உணவு கிடைத்தால்,
வேலை வேறு என்ன இருக்கும் தாய்க் குலத்திற்கு?

பட்டுப் புடவை சரசரக்க, தங்க நகைகள் பளபளக்க,
மெட்டி ஒலி டக் டக் எனக் கேட்க உல்லாச நடையே!

இத்தனை ஆண்டுகளில் எங்கள் கிராமத்திலே, நான்

இத்தனை சிரிப்பலைகளைக் கேட்டு ரசித்ததில்லை!

எங்கும் ஆனந்தம்; எங்கும் க்ஷேம நல விசாரிப்புகள்;

பொங்கும் மகிழ்ச்சி; கூடிப் பேசுவதில் மன நெகிழ்ச்சி!

குட்டிக் கோவில் கோபுரத்தைப் படமெடுக்க, அதைச்
சுற்றி வந்த சமயம், ஒரு கல்வெட்டைப் பார்த்தேன்!

என்னவரின் தந்தையார் பெயருடன், எம் குடும்பத்தில்
முன்னவரான சம்பந்தியின் பெயரும் பதித்திருந்தார்!

அழகாக வண்ணம் பூசப்பட்டுச் சிலைகள் மிளிர்ந்திட,
அழகான துணி அலங்காரம் பந்தலினுள் அமைந்திட,

என் காமராவுக்கு நல்ல வேலையே! அனைத்தையும்
என் ஆசை தீரக் கிளிக்கினேன், என் ஆல்பத்திற்காக!

மாலை 'ருக்மிணி கல்யாணம்' உபன்யாசம் செய்திட,
மாலைகள் பல வண்ண மணிகளில் அணிந்தவாறு,

உயர் திரு. முகுந்தாச்சாரியார் வருகை தர, அவரது
உயரிய சொற்களைக் கேட்கக் குழுமியது கூட்டம்.

கண்ணன் ருக்மிணியை மணந்த பொழுது, அவனுக்கு
எண்ணிப் பன்னிரண்டு வயதுதானாம்! அது விஷயம்!

சிறுவனாகக் கையில் வெண்ணையுடன் ஆடுகிறான்,
இரு தேவியரைத் தன்னருகிலே வைத்துக்கொண்டு!


தொடரும் .......................... :dance:

 
IMG_4148.JPG
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 8


ருக்மிணி கல்யாணம் கதையை ரசித்த பின், நாங்கள்

ருக்மிணி, சத்யபாமா மற்றும் நவனீத கிருஷ்ணனின்

விக்ரஹங்களுக்கு அடியில், நவரத்னங்களைப் பதித்து,
அக்கரையோடு அஷ்டபந்தனக் கலவையினை உருக்கி,

அழகாகப் பூசி மூடுவதை அருகில் கண்டு மகிழ்ந்தோம்.
எளிதாக்ச் செய்கின்றார் இந் நாட்களில் இந்த வேலை!

எங்கள் காலனி வினாயகர் கோவிலில் அஷ்டபந்தனம்
நாங்கள் இடித்துக் கொடுத்தது நினைவு வந்தது! இன்று

எட்டு விதப் பொருட்களையும் கலந்து காய்ச்சி ஆற்றி
அஷ்டபந்தனம் என்று திடப் பொருளாக விற்கின்றார்!

பீடத்தில் வைத்திடும் தெய்வச் சிலைகள் அசையாமல்

திடமாக நிற்க உதவுவதே அஷ்டபந்தனக் கலவையாம்!

கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், தேன்மெழுகு,
செம்பஞ்சு, ஜாதிலிங்கம், கற்காவி, எருமைப் பாலிலே


தயாரித்த வெண்ணை ஆகிய எட்டுப் பொருட்களினால்

தயாரிக்கின்றனர் இந்த அஷ்டபந்தனக் கலவையினை!

ஆலயங்களைக் காக்கும் அரசுத் துறையினர், அருகில்
ஆவலுடன் அமர்ந்து, குறிப்புக்கள் எழுதிக்கொண்டனர்.

விக்ரஹங்களைப் பதிக்கும் பணி முடிந்ததும், உத்சவ
விக்ரஹங்களைச் சயனம் செய்யக் கிடத்திவிட்டனர்!

அனைவரும் கூடிவிட்டோம்; பாடல்களை பாடினோம்;
அனைவரும் அறிந்த சில ராகங்களை நாதஸ்வரத்தில்

கலைஞர் இசைத்தார்; பூஜை செய்யும் மந்திரங்களிலே
கலை நயத்துடன் ராக வரிசை அழகாக வருகின்றதே!


தொடரும்....................
 

விக்ரஹங்களைப் பதிக்கும் பணி முடிந்ததும், உத்சவ
விக்ரஹங்களைச் சயனம் செய்யக் கிடத்திவிட்டனர்!


IMG_4137.JPG
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 9


உறங்க வைத்த உதசவ மூர்த்திகளுக்குப் பாடிய பின்
உறங்கச் சென்றோம் அனைவ்ரும் இனிய இல்லத்தில்!

வழியில் சிறுமி ஒருத்தி ரங்கோலி கோலம் இட்டிருக்க,
நொடியில் அவளைக் கோலத்துடன் சிறைப்பிடித்தேன்!

விடியலில் நீராடி, கோவிலை அடையும் வழியில், தன்
ஒளியில் ஒரு பகுதியைப் பெற்று ஒளிர்ந்தான் சந்திரன்.

ஹோமங்கள் துவங்கின; மந்திர கோஷங்கள் எழுந்தன;
ஹோமங்களால் முழு சக்தியுடன் கலசத்தில் தண்ணீர்.

குடமுழுக்கைப் படம் எடுக்க மாடியைத் தேர்வு செய்து
உடனே அதில் ஏற நான் முனைய, அர்ச்சகரின் மனைவி,

'நான்பிராமின் வீடல்லவா அது?' என்று என்னை வினவ,
'நான் பிராமின்தானே! பரவாயில்லை!' என்று அதில் ஏற,

என்னைத் தொடர்ந்து வந்தனர் மேலும் சிலர், அதுவரை
'என்னைத் தொடாதே' என்று ஒதுக்கியவரின் மாடிக்கு!

சிவாச்சாரியார் நீர்க்கலசத்துடன் கோவிலைச் சுற்றிட,
சில பக்தர்களும் அவரைத் தொடர்ந்து பணிவுடன் வர,

மூங்கிலால் அமைத்த ஏணிப் படிகளில் ஏறிச் சென்று,
பாங்குடன் விமான உச்சியை அடைந்திட, மந்திரங்கள்

ஜபித்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, கலச நீரினை
ஜனக் கூட்டத்தின் மீது தெளிக்க, ஆதவன் அதைக் காண

விழைவது போல எழுந்து வந்தான்; குல பேதமில்லாது
விழைந்தனர் அனைவரும் கண்ணனை தரிசித்து மகிழ!

முத்து அலங்காரத்தில், நவனீத கிருஷ்ணன், தேவிய
ர்,
முன் வரும் பக்தருக்கெல்லாம் நல்லருளை வழ்ங்கினர்.

தொடரும் .................
 
'நான்பிராமின் வீடல்லவா அது?' என்று என்னை வினவ,
'நான் பிராமின்தானே! பரவாயில்லை!' என்று அதில் ஏற,

என்னைத் தொடர்ந்து வந்தனர் மேலும் சிலர், அதுவரை
'என்னைத் தொடாதே' என்று ஒதுக்கியவரின் மாடிக்கு!

சிவாச்சாரியார் நீர்க்கலசத்துடன் கோவிலைச் சுற்றிட,
சில பக்தர்களும் அவரைத் தொடர்ந்து பணிவுடன் வர,

raji,

i think these type of stuff, has to fall on my eyes !

can you please explain the situation a little more elaborately, and how, in your own inimitable way, dealt with it. thank you good lady.
 
......... i think these type of stuff, has to fall on my eyes !

can you please explain the situation a little more elaborately, and how, in your own inimitable way, dealt with it. thank you good lady.
இப்போது உரைநடையில் 'அந்த' அனுபவம்!

கோவிலின் மேற்குப் புறத்தில் இருந்தது அந்த வீடு! அந்த மாடியை நான் கும்பாபிஷேகத்திற்கு முன் தினமே தீர்மானம்

செய்துவிட்டேன், என் 'காமரா'ப் பணியைப் பார்த்திட. அது யாருடைய வீடு என்று நான் அறியேன்; கேட்டு அறியவும்

விழையவில்லை!



சிவாச்சாரியார் கும்பத்துடன் புறப்பட, விரைந்து அந்த மாடிப் படிகள் அருகில் சென்றேன். கூட்டமாகச் சில மாமிகள்

என்னைக் கடந்து நடந்தனர். அவர்களின் ஒருவளான கோவில் அர்ச்சகரின் மனைவி, என்னை ஆச்சரியம் கலந்த

விழிகளுடன் பார்த்து, 'ராஜி மன்னி! அந்த வீட்டு மாடிக்கா போறேள்? எல்லாரையும் எங்காத்து மாடிக்கு அழைச்சிண்டு

போறேனே! நீங்களும் வாங்கோ!' என்று அழைப்பு விடுத்தாள். அவள் வீட்டு மாடியிலிருந்து படம் எடுக்கவே முடியாது!

நான் 'ஏன்?' என்று ஒற்றை வார்த்தை வினாவைத் தொடுக்க, 'அது நான்பிராமின் வீடு அல்லவா?' என்று புருவங்களை

உயர்த்திக் கூற, 'நான் பிராமின்தானே! அதனால் ஏறுவேன்!' என்று நான் சிரித்தபடி உரைத்து (எனக்கு ஒரு பெரியவர்

அறிவுறுத்திய 'ஜிலேபி சிரிப்பு'​​தான்!) மாடியில் ஏறிட, இன்னும் சிலர் என்னைத் தொடர்ந்து அதே மாடியில் ஏறினர்.

அந்த வீட்டில் என்ன உபசாரம், எங்களுக்கு!


மாடியிலிருந்து இறங்கும் முன், அந்த வீட்டில் இருப்பவர்களைப் படம் எடுக்க வேண்டும் என்று கேட்டேன். உடனே

உள்ளே சென்று, கேசத்தைச் சரி செய்து, போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர். Innocence என்பதன் முழு வடிவத்தை

அவர்களிடமே கண்டேன்! :cool:
 

என்னைத் தொடர்ந்து வந்தனர் மேலும் சிலர், அதுவரை

'என்னைத் தொடாதே' என்று ஒதுக்கியவரின் மாடிக்கு!

IMG_4187.JPG
 
இப்போது உரைநடையில் 'அந்த' அனுபவம்!

கோவிலின் மேற்குப் புறத்தில் இருந்தது அந்த வீடு! அந்த மாடியை நான் கும்பாபிஷேகத்திற்கு முன் தினமே தீர்மானம்

செய்துவிட்டேன், என் 'காமரா'ப் பணியைப் பார்த்திட. அது யாருடைய வீடு என்று நான் அறியேன்; கேட்டு அறியவும்

விழையவில்லை!



சிவாச்சாரியார் கும்பத்துடன் புறப்பட, விரைந்து அந்த மாடிப் படிகள் அருகில் சென்றேன். கூட்டமாகச் சில மாமிகள்

என்னைக் கடந்து நடந்தனர். அவர்களின் ஒருவளான கோவில் அர்ச்சகரின் மனைவி, என்னை ஆச்சரியம் கலந்த

விழிகளுடன் பார்த்து, 'ராஜி மன்னி! அந்த வீட்டு மாடிக்கா போறேள்? எல்லாரையும் எங்காத்து மாடிக்கு அழைச்சிண்டு

போறேனே! நீங்களும் வாங்கோ!' என்று அழைப்பு விடுத்தாள். அவள் வீட்டு மாடியிலிருந்து படம் எடுக்கவே முடியாது!

நான் 'ஏன்?' என்று ஒற்றை வார்த்தை வினாவைத் தொடுக்க, 'அது நான்பிராமின் வீடு அல்லவா?' என்று புருவங்களை

உயர்த்திக் கூற, 'நான் பிராமின்தானே! அதனால் ஏறுவேன்!' என்று நான் சிரித்தபடி உரைத்து (எனக்கு ஒரு பெரியவர்

அறிவுறுத்திய 'ஜிலேபி சிரிப்பு'​​தான்!) மாடியில் ஏறிட, இன்னும் சிலர் என்னைத் தொடர்ந்து அதே மாடியில் ஏறினர்.

அந்த வீட்டில் என்ன உபசாரம், எங்களுக்கு!


மாடியிலிருந்து இறங்கும் முன், அந்த வீட்டில் இருப்பவர்களைப் படம் எடுக்க வேண்டும் என்று கேட்டேன். உடனே

உள்ளே சென்று, கேசத்தைச் சரி செய்து, போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர். Innocence என்பதன் முழு வடிவத்தை

அவர்களிடமே கண்டேன்! :cool:

good one for you dear lady. :)
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 10


கண்ணனை தேவியரை மட்டும் ஆராதிப்பது போதாதே!
கண் போல கவனிக்கணுமே அதிகாரிகள் இன்ன பிறரை!

அரசு அதிகாரிகள், ஊர்ப் பெரியோர், காவல் துறையினர்,
புதிதாக அனுபவம் பெற்ற n c c மாணவர் தலைவர், என

பல நபர்களுக்கு மாலை, சால்வை மரியாதை தரப்பட்டு,
சில நொடிகளில் தொடர்ந்தது அன்னதானம், இல்லத்தில்.

ஆயிரம் பாக்கட் சர்க்கரைப் பொங்கலுடன், புளியோதரை
ஆயிரம் பேர்களுக்கு அமைதியாக வழங்கியது அருமை!

அக்ரஹாரத்து மக்கள் அனைவரும் பந்தி பந்தியாக வந்து,
அக்கரையுடன் தயாரித்த விருந்துச் சாப்பாட்டை உண்ண,

கோலாகல விழாவின் முதல் பகுதி அழகாக நிறைவேற,
கோலாகலமாகத் தொடங்கியது கச்சேரி ஒன்று இரவில்!

உச்ச ஸ்தாயியில் அனாயாசமாகச் சஞ்சாரங்கள் செய்து,
உன்னதத் திரை இசை வழங்கிய திரு t r மகாலிங்கத்தின்

குமாரத்தி ஸ்ரீமதி. சாவித்திரியின் இசை நிகழ்ச்சியே அது.
குரல்கள் ஆண், பெண் இருவருடையதும் அவரே பாடிட,

மயங்கினர் ஊர் மக்கள்; கரவோலிகள் அடிக்கடி எழுப்பித்
தயங்காமல் தம் ஊக்கத்தைத் தந்தனர்; நன்கு ரசித்தனர்!

பழைய பாடல்களும், தன் தந்தையார் பாடிய பாடல்களும்,
புதிய கண்ணன் பாடல்களும் நிகழ்ச்சியில் வலம் வந்தன.

டி எம் எஸ்ஸின் கணீர்க் குரலை நினைவுபடுத்திய ஒருவர்
டி எம் எஸ்ஸின் பல பாடல்களால் அசத்தி மகிழ்வித்தார்!

எங்கள் சிங்காரச் சென்னைப் பயணத்துக்கு நேரம் வந்திட,
எங்கள் வாழ்த்துக்களை ஜாடையால் கூறிப் புறப்பட்டோம்!

தொடரும் .....................
 

குல பேதமில்லாது
விழைந்தனர் அனைவரும் கண்ணனை தரிசித்து மகிழ!

IMG_4208.JPG
 

Latest ads

Back
Top