தாவத்த3த3ர்ச' (8)
எங்கும் நிறைந்து இருக்கும் ஈசனே! அதற்குள் மாடு பால் கறப்பதைப் பார்க்க ஆசை கொண்டவரும், சிறந்த பக்தனுடைய வரவை எதிர்பார்க்கின்றவரும், அண்ணனுடன் கூடியவரும், சித்த விருத்தியில் பிரம்ம ஞானத்தால் உண்டாகும் ஆனந்தக் கடலைப் பெருக விடுகிறவர் போலும் இருந்த தங்களை, அந்த அக்ரூரர் கண்டார் அல்லவா?
