கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
விகருணோ வனே (5)

"கருணையே இல்லாமல் என்னைக் காட்டில் தனியாக விட்டுச் சென்றாய் அல்லவா? உன்னை இப்போது யார் தொடுவாள் ?" என்று கோபத்துடன் கண்களில் கண்ணீர் வர ஒருத்தி தங்களைக் கண்டாள் அல்லவா?
 
இதி முதா3 ஆகுலை (6)

இவ்விதம் ஆனந்த பரவசர்களாகிய கோப ஸ்திரீகளுடன் யமுனைக் கரைக்கு வந்து குங்குமத்தால் விளங்குவதும் மிருதுவான ரவிக்கைகளால் உண்டு பண்ணப் பட்டதும் ஆன ஆசனத்தில் தாங்கள் வீற்றிருந்தீர்கள் அல்லவா?
 
கதிவிதா4 (7)

"கருணை என்பதில் எத்தனை விதம் உண்டு? சிலர் எல்லோரிடத்திலும் கருணை கொண்டால் சிலர் தங்களை ஆச்ரயித்தவர்களிடத்தில் மட்டும் கருணை கொள்கிறார்கள்.
சிலர் உங்களைப் போல ஆச்ரயித்தவர்களிடமும்
கருணை அற்றவர்களாக இருக்கின்றார்கள்!" என்று
அந்தப் பெண்கள் தங்களிடம் கூறினார்கள் அல்லவா?
 
அயி குமாரிகா (8)

"ஓ பெண்களே! பிரேமை அற்று விடுமோ என்று என்னிடத்தில் கடுமையை பற்றி சந்தேகப்படவேண்டாம். கண்ணில் இருந்து மறைந்தது உங்கள் மனம் என்னிடம் தொடர்பு கொள்வதற்காகச் செய்யப்பட்டது" என்று கூறினீர்கள் அல்லவா
?
 
அயி நிச'ம்யதாம் (9)

"ஓ பிராண நாயிகைகளே கேளுங்கள்! உங்களைப் போன்ற மிகவும் பிரியமான பந்து மித்திரர்கள் வேறு எவரும் எனக்கு இல்லை. ஆகையால் இந்த யமுனைக் கரையில் ரமணீயமான இரவுகளில் தங்கு தடை இல்லாமல் கிரீடை செய்யப்படும்"என்று நீங்கள் திருவாய் மலர்ந்து அருளினீர்கள் அல்லவா?
 
இதி கி3ராதி4கம் (10)

ஹே குருவாயூரப்பா! என்ற திருவாக்கினைக் கேட்டு, ராசக்ரீடையில் உற்சாகம் கொண்ட, மிகுந்த ஆனந்தத்துடன் கோகுலப் பெண்களுடன் விளையாடும் தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
 
images

Image courtesy kirtimukha.com

நாராயணீயம் தசகம் 69

ராஸக்ரீடா3 வர்ணனம்

கேச'பாச'த்3ருத (1)

ஹே சர்வேஸ்வரனே! கொண்டையில் தரிக்கப்பட்ட மயில்பீலிகளின்

வரிசைகளை உடையதும்; சலிக்கின்ற மகர குண்டலங்களை

அணிந்ததும்; முத்து மாலைகளாலும், வனமாலைகளாலும்

மனோஹரமானதும்; சந்தனப் பூச்சின் நறுமணம் கொண்டதும்;

மஞ்சள் பட்டாடையின் மீது கட்டப்பட்ட மேகலையால் அழகுற்றதும்;

காந்தி வீசும் இரத்தின சிலம்புகள் அணிந்ததும்; ராசக்ரீடைக்கென்றே

விசேஷமாக அலங்கரிக்கப்பட்டதும் ஆன தங்கள் மேனியை நாங்கள்

தியானிக்கின்றோம்.
 
images


Image courtesy kirtimukha.com

I consider the 69th Dasakam the best of the 100 dasakams of Sriman Naarayaneeyam.

So instead of reading 5 dasakams in one day once each,

we will read/study one dasakam five times a day

and enjoy the meter, the beauty and the music infused into these lines.

We can imagine the delightful dance in gay abandon by

Krishna and the Gopis in the surprising ratio of 1:1!!!
 
images

Image courtesy columbia.edu


தாவதே3வ க்ருத (2)

அப்போதே அலங்காரம் செய்துகொண்டவர்களும்; ரவிக்கைகள்

தரித்த ஸ்தன மண்டலங்களை உடையவரும்; கன்னங்களில்

அசைகின்ற ரத்தின குண்டலங்களை அணிந்தவரும் ஆன இளம்

பெண்களின் கூட்டம் மண்டலமாகச் சுற்றி நின்ற பொழுது; இரண்டு

இரண்டு பெண்களுக்கு இடையே சஞ்சரித்துக் கொண்டு லக்ஷ்மி

காந்தனே மனோஹரமான ராசக்ரீடையைச் செய்தீர்கள் அல்லவா?
 
th


Image courtesy lh4.ggpht.com

வாஸு தே3வதவ (3)

ஹே வாசுதேவனே! இவ்வுலகில், யமுனைக் கரையில் பிரகாசிக்கும்,

தங்களுடைய ராசக்ரீடையின் வைபவத்தை, வெகுதூரத்தில் இருந்த

நாரதர் கூறக் கேட்டு, வியப்புற்ற தேவர்கள் கூட்டம், வேஷம், பூஷணம்,

ஸ்ருங்கார சேஷ்டைகள் இவைகளால் அழகு பெற்ற, அநேகம் ஸ்திரீகள்

சூழ, விரைவாக சுவர்க்கத்தில் இருந்து ஆகாயத்துக்கு வந்தது அல்லவா?
 
Last edited:
images

Image courtesy forum.spiritualindia.org

வேணுநாத3க்ருத(4)

வேணு நாதத்தால் செய்யப்பட்ட பாட்டில் இனிய ஸ்வரங்களைக்

காண்பித்ததாலும்; இனிமையான பாட்டினாலும்; பல ராகங்களை

ஒன்றாக இணைத்ததாலும்; மிகவும் அழகிய மிருதுவான கால்களை

எடுத்து வைக்கும் தாளங்களின் சேர்க்கையாலும்; மனோஹரமாகக்

கைகளில் ஒலிக்கின்ற வளையல்களாலும்; தோள்களின் மீது

வைக்கப்பட்ட தாமரைக் கைகளாலும்; இடையில் அசையும்

வஸ்திரங்களாலும் அழகுற்ற ராசக்ரீடையின் கோலாஹலத்தை

சேவியுங்கள்.
 
ச்'ரத்3த4யா விரசிதானு (5)

பிறகு மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட பின்பாட்டில் மேலும் மேலும்

உச்சஸ்தாயியை அடைந்த மதுரமான ஸ்வரங்களாலும்; அழகான

அபிநயத்தால் அசையும் முத்து மாலைகளாலும்; இரத்தின

மாலைகளாலும்; நர்த்தனம் நடக்கும்போது பேரானந்ததுடன்

பூமாரி பெய்து, பார்க்கப் பேராவல் கொண்டு, பெண்களுடன் வந்திருந்த

தேவ சமூஹம் சைதன்ய ரூபியாகிய தங்களிடம் லயித்து மோஹம்

அடைந்தது.

 
Last edited:
கின்னஸன்னதனு (6)

அதன் பிறகு வியர்த்து விட்ட, சோர்வுற்ற, கொடி போன்ற சரீரம்

உடைய ஒரு கோபிகை, மிக அதிகமான களைப்பினால் கண்களை

மூடிக் கொண்டு தங்கள் தோள் மீது சாய்ந்துவிட்டாள் அல்லவா?

வேறொருத்தி அவிழ்ந்து அசையும் கூந்தலுடன், புதிய சந்தனக்

குழம்பின் நறுமணம் கொண்ட தங்கள் கையை, முகருவது போல

மயிர் கூச்செறியும் வண்ணம் நன்கு முத்தம் இட்டாள் அல்லவா?
 
காsபி க3ண்ட3பு4வி (7)

புண்ணியப் பெருக்குக்கு இருப்பிடமான ஒருத்தி தங்கள்

கன்னங்களில் அசைகின்ற குண்டலங்களை உடைய தன்னுடைய

கன்னத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தாங்கள் மென்ற தாம்பூல

ரசம் என்னும் அமிர்தத்தை அருந்தினாள் அல்லவா?

ராசக்ரீடையில் லக்ஷ்மி தேவியின் விலாசத்துக்கு இருப்பிடமும்

லோக சுந்தரனும் ஆன தங்களை அடைந்து சந்தோஷத்தால்

என்னென்ன அவஸ்தைகளை அனுபவிக்கவில்லை
அந்தப்

பெண்கள்
?
 
கா3னமீச'விரதம் (8)

ஹே கிருஷ்ணா! பாட்டு முடிவடைந்து, கிராமமாக வாத்தியங்களின்

இசையும் ஓய்ந்தது அல்லவா? ஸ்திரீகள் மட்டும் பிரம்மானந்த

ரசத்தில் மூழ்கி நர்த்தனம் செய்து கொண்டிருந்தனர். அது மட்டும்

அல்ல! அவர்கள் தங்கள் வஸ்திரங்களை
ப் பற்றியோ, கூந்தலைப்

பற்றியோ, ரவிக்கையைப் பற்றியோ ஒன்றுமே அறியவில்லை

அல்லவா? ஆகாயத்தில் நக்ஷத்திரக் கூட்டம் கூட அசைவன்றி

நின்றுவிட்டது! நான் வேறு என்ன சொல்வேன்!
 

மோத3ஸீம்னி (9)

பிரபுவே! எல்லா பிரபஞ்சத்தையும் பரமானந்தத்தின் எல்லையில்

லயிக்கச் செய்து; ராசக்ரீடையையும் முடித்துக் கொண்டு; அதன் பிறகு

ராசக்ரீடையினால் நிர்மலமான அவயவங்களில் தோன்றிய புது

வியர்வைத் துளிகளால் அழகான மேனியை உடையவரும்; காமத்தைப்

பொறுக்க முடியாத மனதை உடையவர்களும் ஆகிய அந்த

கோபிகைகளின் புண்ணியத்தால் ஏவப்பட்டு; அத்தனை சரீரங்களைத்

தாங்களும் எடுத்துக் கொண்டு; அவர்களுடன் சரசங்கள் செய்தீர்கள்

அல்லவா?
 
images

Image courtesy Krishnastore.com

கேலிபே3த3பரி (10)

ஹே பிரபு!

ஆலிங்கனம் போன்ற கிரீடா விசேஷங்களால் மிகவும் சோர்வடைந்த; அதனால்

சீராட்டப்பட்ட; பெண்களின் கூட்டத்துடன் யமுனா நதியில் இஷ்டம் போல அழகான

ஜலக்ரீடை செய்தீர்கள் அல்லவா? வீசுகின்ற குளிர்ந்த இளங்காற்றினால், அழகிய

புஷ்பங்களின் நறுமணம் நிறைந்த வனத்தில், அந்தக் கட்டழகிகளுக்கு மயக்கம்

உண்டாகும் வண்ணம் விளங்கினீர்கள் அல்லவா?
 
காமினீரிதி ஹி (11)

சௌந்தரியத்தின் கடலே! தாங்கள் இவ்விதம் இரவுகளில் அந்தப்

பெண்களை; யோகிகளால் மட்டுமே அடையக் கூடியதும்,

இன்னதென்று சொல்ல முடியாததும் ஆன பிரும்மானந்த

சாகரத்தை அனுபவிக்கச் செய்து; பிரமன், சங்கரன்

முதலியவர்களைக் கூட கோபிகைகளை மதிக்கச் செய்தீர்கள்

அல்லவா? பக்த ஜனங்களால் மட்டுமே அறியப் படக் கூடிய

உருவத்தை உடையவரும்; எல்லோராலும் விரும்பப்படுபவரும்

ஆன ஸ்ரீ கிருஷ்ணா! என்னைக் நன்கு காப்பாற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 70

ஸுத3ர்ச'ன சா'ப மோக்ஷாதி3 வர்ணனம்

இதி த்வயி ரஸாகுலம் (1)

இவ்விதம் தாங்கள் ஆனந்த பரவசத்தில் இருக்கும்படிப் பெண்களை

இன்பமுறச் செய்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் கோபர்கள்

அம்பிகாவனத்தில் இருக்கும் ஒரு சிவன் கோவிலுக்குத் தங்களுடன்

சென்று; இரவில் சிறந்த உற்சவத்தை சேவித்து விட்டு சுகமாக

உறங்கினார்கள். அப்போது ஒரு கொடிய பாம்பு நந்தகோபரை விழுங்க

வந்தது அல்லவா?
 
Last edited:
ஸமுன்முக2ம் தம் (2)

கொள்ளிக் கட்டைகளால் பலமாக அடித்தபோதும் அது அவரை

விடவில்லை. அந்தகோபர்கள் "காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற

வேண்டும்!" என்று தங்கள் திருவடிகளில் வந்து விழுந்தனர். நீங்கள்

விழுங்கிக் கொண்டிருந்த பாம்பைக் காலால் தொட்டீர்கள். அந்தப்

பாம்பு உடனே தன் சுய வடிவை அடைந்து ஒரு வித்
தி
யாதரனாக

மாறியது அல்லவா?

 
ஸுத3ர்ச'னத4ர (3)

"ஸுதர்சனச் சக்கரத்தைத் தரிக்கின்ற பிரபு! நான் ஸுதர்சனன் என்ற பெயர் உடையவன்.

நான் ஒருநாள் முனிவர்களைப் பரிஹசித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக

மாற்றி விட்டார்கள். தாங்கள் திருவடியால் தொட்டவுடன் என் பாவங்கள் தொலைந்து

விட்டன!" என்று தங்களை வணங்கித் தன்னிடத்தைச சென்று அடைந்தான்.

கோபர்களும் சந்தோஷத்துடன் கோகுலத்துக்குத திரும்பிச் சென்றனர்.
 
Status
Not open for further replies.
Back
Top