எண்ண அலைகள்....

எந்தப் பருவத்தில்...

மனித வாழ்வில் பருவங்கள் பல உண்டு.
மனதில் அதை அறிந்துகொள்ளல் நன்று!

பிறந்த சிசுவினது செயலை, ஓர் ஆண்டு
நிறைந்த குழந்தை செய்தால், நகைப்பர்!

மூன்று வயது மழலையை, இன்னும் சில
ஆண்டுகள் சென்ற பின்னும் பேசலாகாது!

சிறுமியை அணைப்பதுபோல, அவள் ஒரு
குறும்புக் குமாரியான பின் செய்யலாகாது!

அன்னைக்கும், மனைவிக்கும் இடைப்பட்ட
ஆண்டுகளே படிப்பின் பருவம் எனக் கூறிட,

பழமொழி ஒன்று உள்ளது வட மொழியில்.
பழங்காலம் போல அல்லாது, இக்காலத்தில்,

கண்ணென விளங்கும் கல்வியைக் கற்றுப்
பெண்களும் உயர் நிலை எய்துவதால், இப்

பழமொழியைப் பெண்களுக்கும் கூறலாம்!
படிக்கும் காலம், அன்னைக்கும், அன்புள்ள

கணவனுக்கும் இடைப்பட்ட காலம், என்று!
கணமேனும் இதைப் பற்றிச் சிந்தித்து, நம்

இளைய தலைமுறை நடக்குமானால், ஓர்
இணையற்ற இந்தியா உருவாகிவிடுமே!


குறிப்பு:


பதின் பருவத்துப் பிள்ளைகள் பலர் காதலில் விழுந்து,

நல்ல எதிர்காலத்தையே இழக்கின்றார்கள். அந்த

வேதனையின்
பாதிப்பில் வந்ததே, இந்தப் பதிவு!
:pout:
 
Last edited:

வீடும், வீடு பேறும்!


இறை வழிபாட்டுக்கு இசை எளிய வழி;
இறை பற்றிப் பாட, வீடு பேறும் உறுதி!

புனிதமான இசை பாட இயலும் சிறுமி,
புதினமான இசை பாடி, அதில் காணும்

விரச பாவங்களை நன்கு வெளிக்காட்ட,
விவரமான நடுவர்கள் அதைப் பாராட்ட,

என் மனத்தில் மட்டும் வரும் நெருடல்
ஏன் என்றுதான் இன்று ஆராய்கிறேன்!

அது சரி! வீடு பேறு கிட்டுமா என்றறிய
ஏது வழி? இப்போதே என்ன கவலை?

கிடைக்கும் சந்தர்ப்பம் நழுவி விடாது,
கிடைக்கும் வீடு பற்றி எண்ணட்டுமே!


:first: . . . :popcorn:
 
புனிதமான இசை பாட இயலும் சிறுமி,
புதினமான இசை பாடி, அதில் காணும்
Superb Raji Maam!! அற்புதமான வார்த்தை ஜாலம்...வாழ்த்துக்கள்
 

நல்லிசை வடிவங்கள்!

நெஞ்சில் துன்பமும் இன்பமும் மாறி வரும்;
நெஞ்சம் நேற்று நிறைந்து; போனது சஞ்சலம்.

சிற்றின்பம் தரும் பாடல்கள் தந்த வருத்தம்,
பேரின்பம் தரும் பாடல்களால் நீங்கிவிட்டது!

கலியுகத்தில் இறையை அடைய எளிய வழி,
எளிதான நாம சங்கீர்த்தனமே என்றறிவோம்.

பஜனைப் பாடல்கள் புத்துயிர் பெறும் நாளில்,
பஜனைப் பாடல்களுக்கு வைத்த போட்டியில்,

சிறுமிகளும், இளம் பெண்களும் மட்டுமன்றி,
பொறுமைக்கு இலக்கணமான பூமித் தாயை

நம்பி வாழும் விவசாயிகளும் பாடிய சமயம்,
நம்பிக்கை வந்தது; நல்லிசை என்றும் பரவும்!

சிற்றின்ப உணர்வைத் தரும் விரசமே இன்றி,
பேரின்பமே தந்தன, அந்த பஜனைப் பாடல்கள்.

கற்கும் திறன் மிக்க இளவயதில், எல்லோரும்
கற்க ஊக்குவிப்போம், நல்லிசை வடிவங்களை!

:clap2:

 
Every one of us have different states of mind viz. wavering mind, focused mind and havering
mind. Normally for some, the state of mind is situation dependent owing to external stimuli and
internal control of mind. Some are imaginative and tends to create things that never existed.
The imaginative ones lead to newer thoughts and a new set of imaginations which sets the
process. As regards RR is concerned, her imagination is boundary-less. Hats off.

Balasubramanian
Ambattur
 

எப்படி உருவாக்க முடியும்?


இளைஞரின் பேச்சு திரைப்படங்களில் வருகிறதா,

இளைஞர்கள் திரைப்படம் பார்த்துக் கற்கின்றாரா?

கல்லூரிப் பிள்ளைகளின் மொழி, தரமும் தாழ்ந்து,
உள்ளூரத் தற்பெருமையையும் வளர்ப்பது நிஜமே!

எவரை கண்டாலும், நல்ல குணங்களைப் பாராது,
அவரது குறைகளைக் 'கலாய்ப்பது' பெருமையாம்!

கலகலப்பாக இருப்பதாக நினைத்து, இது போன்று
கலாய்க்கும் சமுதாயம் ஏன் உருவானது? முதலில்

இந்தச் சொல்லே எப்போது அகராதியிலே வந்தது?
இந்தச் சமுதாயத்தை அது சீரழிக்க முனைகிறது!

எல்லோரும் அழகாகப் பிறக்க முடியாது; அதுபோல்
எல்லோரும் ஒரே அளவில் வார்த்திருக்க முடியாது!

உயரம் அதிகமானால் 'மலை, நெடு மரம், கொக்கு!'
உயரம் குறைவானால் 'எலி, குள்ளமணி, ஆழாக்கு!'

கண்ணாடி அணிந்தால் 'சோடா புட்டி', பற்கள் ஒரு
பெண்ணுக்கு நீண்டிருந்தால் 'தேங்காய்த் துருவி!'

இப்படியே இளைஞர்கள் பேசிக்கொண்டு இருந்தால்,
எப்படி நல்ல சமுதாயத்தை உருவாக்கிட முடியும்?

இனிய உளவாக இன்னாத கூறாத பழக்கம் வந்தால்,
இனி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும்!


:angel:

 

மூன்று!

சங்கடம் தீர்க்கும் இறையின் திருநாளில்,
சங்கடம் தந்துவிட்டது, இந்த எண் மூன்று!

மூன்றெழுத்து சூப்பர் ஸ்டாரின் மருமகன்,
மூன்றெழுத்து நாயகனுக்கு, திறமை மிக்க

மூன்றெழுத்து உலக நாயகனின் மகளான,
மூன்றெழுத்து நாயகியே ஜோடியான படம்!

'கொல வெறி' பாட்டைப் பிரசித்தம் ஆக்கி,
இள வயதுக் குழந்தை முதல் பாடவைத்து,

சாதனை போல் சொல்லுவதைவிட, என்ன
சாதித்தது இது, என்று வியந்தே போனேன்!

பக்குவமில்லாத வயதிலே காதலில் மாட்டி,
பக்கத்தில் வந்துவிடச் சந்தப்பங்களை நாடி,

படிப்பு முடித்தவுடன், தாத்தாவின் சொத்தை
அடித்துக் கேட்கும் ஒரு இரு துருவ நாயகன்!

பிள்ளைகள் பற்றி ஏதும் அறியாத பெற்றோர்!
பிஞ்சில் பழுத்த, காதலைப் போற்றும் தங்கை!

அழகு இருப்பினும், இல்லாவிடினும், வதனம்
அழகாக உணர்ச்சிகள் காட்டாத இளம் ஜோடி!

பார்க்க ஆரம்பித்த கொடுமைக்காக, முழுதும்
பார்த்தேன், கதையின் முடிவினை அறிந்திட!

எளிதாகப் புரியும் விதமாய்க் காட்டினார்கள்,
தெளிவான கடைசிக் காட்சியால்! என்னவா?

கதையை ஆராயாதீர்கள்; அப்படி ஆராய்ந்தால்,
கதாநாயகன் செய்யும் கடைசி வேலை ஆகும்!


படம் பார்க்காதவர்களுக்குக் குறிப்பு:

கதாநாயகன், தானே தன் கழுத்தை அறுத்துக் கொள்கிறான், கடைசிக் காட்சியில்!
:violin:

 

மூன்று!

சங்கடம் தீர்க்கும் இறையின் திருநாளில்,
சங்கடம் தந்துவிட்டது, இந்த எண் மூன்று!

மூன்றெழுத்து சூப்பர் ஸ்டாரின் மருமகன்,
மூன்றெழுத்து நாயகனுக்கு, திறமை மிக்க

மூன்றெழுத்து உலக நாயகனின் மகளான,
மூன்றெழுத்து நாயகியே ஜோடியான படம்!

'கொல வெறி' பாட்டைப் பிரசித்தம் ஆக்கி,
இள வயதுக் குழந்தை முதல் பாடவைத்து,

சாதனை போல் சொல்லுவதைவிட, என்ன
சாதித்தது இது, என்று வியந்தே போனேன்!

பக்குவமில்லாத வயதிலே காதலில் மாட்டி,
பக்கத்தில் வந்துவிடச் சந்தப்பங்களை நாடி,

படிப்பு முடித்தவுடன், தாத்தாவின் சொத்தை
அடித்துக் கேட்கும் ஒரு இரு துருவ நாயகன்!

பிள்ளைகள் பற்றி ஏதும் அறியாத பெற்றோர்!
பிஞ்சில் பழுத்த, காதலைப் போற்றும் தங்கை!

அழகு இருப்பினும், இல்லாவிடினும், வதனம்
அழகாக உணர்ச்சிகள் காட்டாத இளம் ஜோடி!

பார்க்க ஆரம்பித்த கொடுமைக்காக, முழுதும்
பார்த்தேன், கதையின் முடிவினை அறிந்திட!

எளிதாகப் புரியும் விதமாய்க் காட்டினார்கள்,
தெளிவான கடைசிக் காட்சியால்! என்னவா?

கதையை ஆராயாதீர்கள்; அப்படி ஆராய்ந்தால்,
கதாநாயகன் செய்யும் கடைசி வேலை ஆகும்!


படம் பார்க்காதவர்களுக்குக் குறிப்பு:

கதாநாயகன், தானே தன் கழுத்தை அறுத்துக் கொள்கிறான், கடைசிக் காட்சியில்!
:violin:



"கதாநாயகன், தானே தன் கழுத்தை அறுத்துக் கொள்கிறான், கடைசிக் காட்சியில்!"

அது வரை படம் பார்பவர் கழுத்தை அறுக்கிறானோ...??


இது ஒரு படம்....இதற்க்கு... ஒரு விமர்சின புதுக் கவிதை....!!


கஷ்டம்டா சாமி...!!

Tvk





 
இது ஒரு படம்....இதற்க்கு... ஒரு விமர்சின புதுக் கவிதை....!!


கஷ்டம்டா சாமி...!!

Super Punch KK4646 Sir!! Whatever effort RR maam put in to write such a long note, has brought out the best in you in three lines!! Cheers.
 
Super Punch KK4646 Sir!! Whatever effort RR maam put in to write such a long note, has brought out the best in you in three lines!! Cheers.


"Whatever effort RR maam put in to write such a long note, has brought out the best in you in three lines!! Cheers."


ஆஹா....இதுதான் சிண்டு முடிதலா....?


ஆயிரம் முறை முயன்றாலும் ...


ஆதரவுதான் கிட்டாதே......!!


TVK

 
.......... இது ஒரு படம்....இதற்கு... ஒரு விமர்சின புதுக் கவிதை....!! கஷ்டம்டா சாமி...!!
நண்பரே!
கஷ்டத்தைப் பங்கு போட்டால் குறையும் அல்லவா? :grouphug:

அதற்குத்தான் இந்தப் பதிவு! இது எப்படி இருக்கு?
:lol:
 

மூன்று - தொடர்ச்சி .....


மூன்று, என்னை விடவில்லை; இரவில்
இரண்டரை மணி வரையில், விநாயகர்

ஊர்வலத்தை நடத்திய சிலர், வெடிகளை
ஊர் முழுதும் அதிர்ந்து முழங்க வெடித்து,

நித்திரா தேவியை எவரும் நாட விடாது,
நித்திரையைக் கலைத்துவிட்டனர்! பின்,

முடிவாகக் கண் அயரும் நேரம் கண்டது,
கடிகாரத்திலே அதிகாலை மணி மூன்று!

:yawn: . . . . . :clock:
 

மூன்று - தொடர்ச்சி .....


மூன்று, என்னை விடவில்லை; இரவில்
இரண்டரை மணி வரையில், விநாயகர்

ஊர்வலத்தை நடத்திய சிலர், வெடிகளை
ஊர் முழுதும் அதிர்ந்து முழங்க வெடித்து,

நித்திரா தேவியை எவரும் நாட விடாது,
நித்திரையைக் கலைத்துவிட்டனர்! பின்,

முடிவாகக் கண் அயரும் நேரம் கண்டது,
கடிகாரத்திலே அதிகாலை மணி மூன்று!

:yawn: . . . . . :clock:
மூன்று மணி நித்திரை வேளையிலே வந்ததோ ....


மூஞ்சுருதான் மூஷிக வாகனமாய் கனவினிலே... ??


முதுகு வலிக்க நாள்தோரும் தாங்குகிறேனே...


முக்காமல், முனகாமல் மூஷிகராய்த்தானே...


மூன்று மணிவரை கண் விழித்தேன்...


'முடியவில்லை' என கவி பாடும் அம்மணியே...


"மூன்று" எனும் திரைப் படத்தை காண்பீறே...


மூன்று முறைதான் என சபித்ததோ....?


Tvk






 
Last edited:
[/b]......... "மூன்று" எனும் திரைப் படத்தை காண்பீரே ...

மூன்று முறைதான் என சபித்ததோ....?
என்ன கொடுமையான சாபம்!
எண்ணவே மனத்தில் சோகம்!

ஒரு முறை காண்பதுவே அரம்!
மறு முறை பார்ப்பேனோ படம்!

தங்களது கவிதைக்கு நன்றி!
அங்கு எனக்கொரு சந்தேகம்!

'மூஷிகம்' என்றாலே மூஞ்சூறு!

'மூஷிக வாகனரே' பிள்ளையார்!

மூஷிகம் மூஷிகத்தில் ஏறுமா?
'மூஷிகர்' ஆவாரோ விநாயகர்?
 

'மூஷிக வாகன
ரே' பிள்ளையார்!

(எத்தனை கம்பீர வாஹனம்!)

97a3148c-1c62-4dbb-9209-72bb2d2ed71d


Picture courtesy: Google images
 
என்ன கொடுமையான சாபம்!
எண்ணவே மனத்தில் சோகம்!

ஒரு முறை காண்பதுவே அரம்!
மறு முறை பார்ப்பேனோ படம்!

தங்களது கவிதைக்கு நன்றி!
அங்கு எனக்கொரு சந்தேகம்!

'மூஷிகம்' என்றாலே மூஞ்சூறு!

'மூஷிக வாகனரே' பிள்ளையார்!

மூஷிகம் மூஷிகத்தில் ஏறுமா?
'மூஷிகர்' ஆவாரோ விநாயகர்?
'மூஷிகம்' என்றாலே மூஞ்சூறு!
'மூஷிக வாகனரே' பிள்ளையார்!

மூஷிகம் மூஷிகத்தில் ஏறுமா?
'மூஷிகர்' ஆவாரோ விநாயகர்?



நீங்கள் சொன்னதுதான் சரி...

தவறை சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி....

மாற்றம் செய்துள்ளேன்....

Tvk



 
Last edited:

திருமலையான் தீபத் திருநாள்.


பிறந்து வளர்ந்த ஊர் பெண்ணுக்கு எதுவாயினும்,

மணந்த பின்பு, கணவனின் ஊர்தான் சொந்த ஊர்!

ஆண்டுகள் உருண்டு போகப் போக, அங்கு போக
வேண்டும் என்கிற ஆவலும் வளருவது உண்மை!

திருமலையான் தீபத்தை, ஊர் முழுதும் அழைத்து,
பெரும் விழாவாக எடுத்தது ஒரு காலம்! அப்போது,

அக்ரஹாரவாசிகள் அனைவருமே வருகை தந்து,
அக்கறையுடன் நெய்யை விளக்கில் ஊற்றிடுவார்!

அரைப்படி நெய்யே எம்முடைய கணக்கு எனினும்,
ஒரு படி இன்னும் கூடிவிடும், மற்ற நண்பர்களால்!

விளக்கு மலை ஏற நள்ளிரவு நேரமாகும்! அதுவரை
விரதம் நோற்று இருப்பார், என்னவரின் பெற்றோர்!

காலம் மாறிவிட்டது! ஊரும் மாறிவிட்டது! அங்கே
காணும் நண்பர் குடும்பங்களும் குறைந்துவிட்டன!

விளக்கு, மதியமே மலை ஏறிவிடும்; ஆயின் என்ன!
விளக்கு வைத்துக் கொண்டாடுவது தொடர்கிறதே!

சாலிக்கிராம பூஜைகள் செய்து, ருத்ர ஜபத்தின் பின்,
ஒளி தரும் விளக்கு ஏற்றி, ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம்

நாமங்களும் உரைத்து, திருவேங்கடத்தானின் திவ்ய
நாமங்கள் கூறும் பாடல்களைப் பாடி, விருந்தினருக்கு

முதலில் உணவளித்து, அதில் மன நிறைவும் பெற்று,
உலகில் இந்தப் பேறு கிடைத்ததில் மகிழ வைத்திடும்,

அந்தத் திருநாளை எதிர்பார்த்திருப்பது இயற்கையே!
அந்தத் திருநாள் வருகிறது, அடுத்த புதன் கிழமையே!

சிங்காரச் சென்னையில் வாழும் அனைவரும் ஒன்றாக
அங்கே கூடி, கொண்டாடி மகிழ, நல்லதொரு சந்தப்பம்!

தினம் இறையை வேண்டினாலும், அந்தச் சிறப்பு மிக்க

திருநாளில் வேண்டுவது, நிறைவாக அமையுமன்றோ?


:pray: . . . :hail:
 
Back
Top